Thursday, September 15, 2011

சந்தானம் பேட்டி: அவரையே கலாய்க்கிறோம்!! பகுதி -2

தலைவர் பேட்டியின் இரண்டாம் பாகம். காலதாமதத்துக்கு வருந்துகிறோம்(அதுக்கான காரணம் உங்களுக்கு தெரியும்). முதல் பாகத்தை காண இங்கு அழுத்தவும். இப்ப பேட்டிக்கு போலாமா?

கெமிஸ்ட்ரி கெமிஸ்ட்ரின்றாங்களே அது இதுதான்...  
01. ஹீரோக்களில் யாருடைய டைமிங் உங்களை பிரமிக்க வைத்தது?
 - ஜேப்பியார், போளூர். 
(RSF : ஜொள்ளு பிரியர், சாரி ஜேப்பியார் நீங்க எந்த டைமிங் பத்தி கேக்குறீங்க???)
பறவைகள் பலவிதம்... ஒவ்வொன்றும் ஒரு விதம்.... ஹீரோக்களும் பலவிதம். முதல் ஹீரோ சிம்பு முதல் இப்போது சேர்ந்துள்ள உதயநிதி ஸ்டாலின் வரை எல்லோருக்குமே டைமிங் இருக்கு. என் டைம் சரியா இருந்தா எல்லா ஹீரோக்களுக்கும் டைமிங் ரொம்ப நல்லா வரும். சூப்பர் ஸ்டாரின் டைமிங் காமெடி மட்டுமல்ல, ஷூட்டிங்கில் வரும் டைமிங் இன்னும் பிரமிப்பு.
(RSF: ஹீரோக்கள பத்தி கேட்டா பழைய பாட்டு பாடுறாரே இவரு ,ஒரு வேளை இதனால்தான் கெமிஸ்ட்ரி வோர்கவுட்டாகுதோ? #டவுட்டு)
 
02. வடிவேலு - விவேக் ஆகியோரை அடுத்து நீங்கள்தான் என பேசிக் கொள்கிறார்களே?
- சையது முகமது, சென்னை 93.
( RSF: கவுண்டருக்கப்புறம்னு சொல்லுங்க) 
நல்ல விஷயம்தானே? பேசட்டும்... பேசட்டும்... நான் வல்லவன் என்று பேசிக் கொள்பவர்களில் நீங்கள் இருந்தால் எனக்கு நல்லது.
(RSF: என்னாது நீங்க வல்லவனா?? பார்த்து சார் சிம்பு கோவிச்சுக்க போறாரு)
 
03. உங்கள் காமெடியில் அதிகமாக காமநெடி இருக்கிறதே?
- விஜய், கும்பகோணம்.
(RSF: இருந்துட்டு போகுது....)
 அப்ப மசாலாவை கம்மி பண்ணிக்கிறேன். 
(RSF: இவரு என்ன சக்தி மசாலா சமையலா பண்ணப்போறாரு, பஞ்சா பதில் சொல்வாருன்னு பாத்தா மொக்கையா பதில் சொல்றாரே)

04. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் பற்றி?
- குணா, திருக்குன்றம்.
(RSF: எத்தன பேர்கிட்டதான்டா இதயே கேப்பீங்க? இப்ப பாரு இவரும் கடமைக்கு ஒரு பதில சொல்வாரு)
எம்.ஜி.ஆரின் சினிமாக்களை டி.டி. சேனலில் பார்க்கத் தொடங்கியது முதல் இப்போது டி.வி.டி.க்களில் பார்க்கும் காலம் வரையிலும், அவர் பிரமிக்க வைத்துக் கொண்டே இருக்கிறார். "எங்கள் வீட்டு பிள்ளை' படத்தைப் பார்த்து "நான் ஆணையிட்டால்... ன்னு பாடி மாடிப் படிகளில் விழுந்திருக்கேன்.
"உலகம் சுற்றும் வாலிபன்' பார்த்து அவர் மாதிரியே கோட் சூட் வேணும்ன்னு அழுது அடம் பிடிச்சிருக்கேன். அப்ப நான் சின்ன பையன்தானே? கருத்து சொல்லும் பக்குவம் என்னிடம் இல்லை. மனிதன் தெய்வமானால் அது எம்.ஜி.ஆர். ஒ.கே.,வா?
(RSF: அப்ப தெய்வம் மனிதனானால் அது சூப்பர் ஸ்டாரா? என்னய்யா பதில் இது? ) 
காத தொளக்குறமாதிரி கேள்வி கேட்டுபுட்டன்களோ  
05. திரை காட்சிகளுடன் சொந்த வாழ்க்கையை ஒப்பிட்டு பார்ப்பது உண்டா?
- வளையாபதி, தோட்டக்குறிச்சி.
(RSF: ஆமா காட்டுபூச்சி ஸ்டைல்ல ஒங்க வூடு பூந்து திருட போறாராம் ஓகேவா ?) 
உன் வாழ்க்கை, என் வாழ்க்கை, பக்கத்து வீட்டுக்காரன் வாழ்க்கைன்னு எல்லாமும் சேர்ந்ததுதான் இந்த உலக வாழ்க்கை. ஆனால் அதையெல்லாம் சினிமாவுடன் ஒப்பிட்டு பார்க்க முடியாது. அது வேறு. இது வேறு. 
(RSF: என்ன ஒரு புரிந்துணர்வு,ஒடம்பு புல்லரிக்குது தலிவா)

06. நீங்களும் அரசியலுக்கு வந்து விடுவீர்களா?
- ரகு, குடவாசல்.
(RSF: ஏன், போராட்ட பந்தலில நின்னு நான் அடிச்சா தாங்கமாட்டன்னு பாடனும்னு எதிர்பார்கிறீங்களா?)
சினிமாவே அரசியல்தானே? எல்லோருமே அரசியலுக்குள்தான் இயங்கிட்டு இருக்கோம்.
(RSF:நீங்க இந்த நடிகர் சங்க அரசியல், தயாரிப்பாளர் சங்க அரசியல பத்தி சொல்லலயே?)

07. தங்களுக்கு வந்த வாய்ப்பை வேறு யாராவது தட்டிப் பறித்து இருக்கிறார்களா?
- பார்வதி, மயிலாடுதுறை.
(RSF: ஏன் வருஷத்துக்கு முப்பது படம் நடிக்கறாரே பத்தாதா?)
நிறைய பேர். ஆனால் தெய்வம் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது. 
(RSF:  விடுங்க பாஸ் பொழச்சி போகட்டும், நம்ம கையில படமா இல்ல)
  
08. வாழ வைத்த தெய்வம் என நம்புவது யாரை?
- ராஜசேகரன், மதுரை 10.
(RSF: முருகன், பிள்ளையார் ,அல்லா , ஜீசஸ்னு பதில் வராதுன்னு தெரியும், இருந்தாலும் சும்மா ஒரு இதுக்கு கேக்குறது இதெல்லாம்!! )
உங்களைத்தான். 
(RSF: இது டாக்குடர் ப்ரேன்ட் பதிலு, இது எதுக்கு நமக்கு )
சாருக்கு ரொம்ப கூச்ச சுபாபம். 

09. தங்களுக்கு மரம் நடுவதில் எந்த அளவுக்கு ஆர்வம் இருக்கிறது?
- ஆரோக்கியம், வடுகப்பட்டி.
(RSF: யோவ் காமெடி நடிகன்கிட்ட கேக்குறதுக்கு ஒங்களுக்கு வேற கேள்வியே இல்லையாய்யா?)
மரம் நடுவதை விட, இருக்கும் மரங்களை பாதுகாப்பதில் ஆர்வம் உண்டு. 
(RSF: இப்ப யாரச்சொல்றீங்க?? )

10. நீங்கள் நடித்ததில் "தெய்வத்திருமகள்' மிகவும் பிடித்திருந்தது? அதற்கான காரணத்தை கண்டுபிடியுங்களேன்?
- தீபன் சக்கரவர்த்தி, இராமநாதபுரம்.
(RSF: அந்த படத்துல இவரு மட்டும்தான் ஒரிஜினல், மத்த எல்லாமே திருட்டு அதுதானே?)
கொஞ்சம் நடித்திருந்தேன். 
(RSF: நல்லாத்தான் சமாளிக்கறாரு)

11. சந்தானத்துக்கு சமூகத்தில் தற்போது கிடைத்துள்ள அந்தஸ்து பற்றி?
- சத்ரபதி, சென்னை.
(RSF: இப்புடி உசுப்பேத்தி உசுப்பேத்தியேதான் நெறைய பேர அழிசீங்க)
ரொம்ப மரியாதை கொடுத்திருக்காங்க. சுதந்திர தினத்துக்கெல்லாம் என் பேட்டியை போடுறாங்க. பள்ளிக்கூடம், காலேஜ்ன்னு கூப்பிட்டு பேச சொல்றாங்க. அதுக்கெல்லாம் உண்மையா நடந்துக்கணும்ன்னு உண்மையா உழைக்கிறேன்.
(RSF: அப்புறம் நம்ம அடுத்தகட்ட திட்டம் என்ன பாசு?) 


என்ன கேட்டீங்க, அடுத்தகட்ட திட்டமா? கெட்-அப்ப பாத்தா தெரியல?
12. இரட்டை அர்த்த வசனங்களை தவிர்த்தால் எல்லோரும் ரசிப்பார்களே?
- பிரபு, தஞ்சாவூர்.
(RSF: ஒரே கேள்விய எத்தன தடவய்யா கேப்பீங்க?) 
டைரக்டர்களிடம் சொல்லி குறைத்து விடலாம்.
(RSF: நிஜமாவா, அப்பிடின்னா அதுக்கும் உங்களுக்கும் சம்பந்தமே இல்லையா?) 

13. உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத நகைச்சுவை எது?
- ரமேஷ்குமார், நாகப்பட்டிணம்.
ஆதித்யா சேனலில் வரும் எல்லாமும்.
(RSF: ஏன் நீங்க இந்த சிரிப்பொலி எல்லாம் பார்க்குறது இல்லையா, கலிஞ்சரோட எதுனாச்சும் கோவமா?)

14. பரபரப்பான சூழலில் "லொள்ளு சபா' வாழ்க்கையை நினைத்து பார்ப்பதுண்டா?
- பாக்யராஜ், கீழ்வேளூர்.
(RSF: பழச மறந்துட்டாரான்னு பாக்க பொடி வக்கிறத பாரு..)
பார்ப்பேன். நினைக்கும் சந்தர்ப்பத்தை அதைச் சார்ந்த மனிதர்கள் உருவாக்கித் தரும் நேரங்களில்.
(RSF: ஏன் இப்பிடி சொல்றாரு, ஒருவேள நெறைய அடி வாங்கியிருப்பாரோ?)
ஐ ஆம் பொதுஜனம் ஸ்பீகிங்.... 
15. என்.எஸ்.கே., சுருளிராஜன், சந்திரபாபு, நாகேஷ் ஆகியோரது காமெடிகளில் யாருடையதை ரசிப்பீர்கள்?
- கருப்பன், கரூர்.
எல்லாவற்றையும் ரசிப்பேன்.
(RSF: கிரேட் எஸ்கேப்)

16. நடிகர்கள் சூர்யா - ஆர்யா பற்றி இரண்டு வரிகளில்?
- புவனா, காரைக்குடி.
(RSF: ஏன் விஜய், அஜித், சிம்பு, தனுஷ் பத்தியெல்லாம் கேக்க மாட்டீங்களா?)
சூர்யா அண்ணன். ஆர்யா நண்பன்.
(RSF: நடிப்ப பத்தி கேட்டா வயசப்பத்தி சொல்லுது பாரு)

17. பட உலகில் ஒவ்வொரு காமெடி நடிகருக்கும் ஒரு கால கட்டம் இருக்கும். அது முடிந்ததும் காணமல் போய் விடுவார்கள். அப்படியில்லாமல் நெடு நாள் புகழோடு நீடித்து இருக்க ஏதேனும்  புதிய யுக்தி வைத்துள்ளீர்களா?
-சுப்பிரமணியன், ஆழியூர்
(RSF: என்னாது காணமால் போய் விடுவார்களா? ஒஹ் நீங்க அவர சொல்றீங்களா? ஆமா அவரு இப்ப எங்க இருக்காராம் சென்னைலயா இல்ல மதுரலயா)
ஆமா சார், புலியூர் பூசாரியிடம் மந்திரிச்சு தாயத்து கட்டியிருக்கேன்.... நீங்க வேற.... தலையில் இருக்கும் முடி, புகழ் இரண்டும் நிரந்தரமானதல்ல. இன்னொருவர் வந்தாலும் ரசிக்க காத்திருக்கேன்.
(RSF: நீங்க கவலபடாதீங்க பாஸ், கவுண்டர் எப்புடி இன்னைக்கும் மக்கள் மனசுல இருக்காரோ அதேமாதிரி நீங்களும் இருப்பீங்க)


கனவெல்லாம் தொலைநோக்கு பார்வையோட இருக்கனும்ன்னு சிம்போலிக்கா சொல்லறாரு போல.   
18. நீங்கள் அடிக்கடி காணும் லட்சிய கனவு எது?
-கார்த்திக், காரைக்கால்.
(RSF: பெருசா என்ன, அடுத்த CM, முடிஞ்சா பிரதமர் அப்புடியே ஜனாதிபதி அதுதானே?)
தூக்கமே இல்லாதபோது கனவு எப்புடி வரும்?
(RSF: அதுதான் ஒரு நாளைக்கு அஞ்சு பத்து லட்சம்னு கொட்டி குடுக்குறாங்களே அப்புறம் எதுக்கு பாஸ் கனவெல்லாம்)

19. பிடித்த அரசியல் தலைவர் யார்?
-மணிகண்டன், சன்னாநல்லூர்
(RSF: நாட்டுல ஒன்னு ரெண்டு தலைவர்களா இருக்காங்க? பட்டுன்னு பதில் சொல்ல)
நெல்சன் மண்டேலா.
(RSF: என்ன ஒரு சமயோசிதம், கூட நடிக்கற ஹீரோக்கள் கோவிச்சுக்க கூடாதில்ல)

20. சிந்திக்க வைக்கும் காமெடி, சிரிக்க வைக்கும் காமடி. எது பெஸ்ட்?
-ஜாக்கி, நெய்வேலி.
(RSF: நீங்கதான்யா டிசைட் பண்ணனும்)
நிறைய பேரை சிரிக்க வைக்கணும். ஒரு சிலரை சிந்திக்க வைக்கணும். சிந்திக்க வைப்பதை விட சிரிக்க வைப்பதுதான் கஷ்டம்.
(RSF:  கேப்பு கெடக்கிறப்போவெல்லாம் ஆப்பு வக்கிறியே சந்தானம்)



ஓகே, கெளம்பலாமா?
டிஸ்கி: யப்பா, இது வெறும் என்டேர்டைன்மென்ட்டுக்கு, அப்புறம் கோத்துவிடுறோம், கொலபண்ணுறோம்ன்னு சொன்னீங்க மூஞ்சில பூரா விட்டுருவோம் ஆமா.


18 comments:

  1. அசத்தலான பேட்டி..பல இடங்களில் சிந்திக்கும் பதிலை கொடுத்துள்ளது மன ஆறுதலை தருகிறது..வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. சிந்திக்க வைக்கும் காமெடி, சிரிக்க வைக்கும் காமடி. எது பெஸ்ட்?
    -ஜாக்கி, நெய்வேலி.
    (RSF: நீங்கதான்யா டிசைட் பண்ணனும்)
    நிறைய பேரை சிரிக்க வைக்கணும். ஒரு சிலரை சிந்திக்க வைக்கணும். சிந்திக்க வைப்பதை விட சிரிக்க வைப்பதுதான் கஷ்டம்.
    (RSF: கேப்பு கெடக்கிறப்போவெல்லாம் ஆப்பு வக்கிறியே சந்தானம்)

    இதத்தான் நானும் சொல்ல வந்தன் நகைச்சுவையோடு கலந்த சிந்திக்க வைக்கும் பதிவு கலக்குறீங்க சகோ வாழ்த்துக்கள் .வாருங்கள் என் தளத்திற்கும் ......

    ReplyDelete
  3. // மதுரை சரவணன் said...
    அசத்தலான பேட்டி..பல இடங்களில் சிந்திக்கும் பதிலை கொடுத்துள்ளது மன ஆறுதலை தருகிறது..வாழ்த்துக்கள்//

    நன்றி சார், எம்புட்டு நாளைக்கித்தான் அவரும் மொக்க காமெடியே பண்ணிக்கிட்டு இருப்பாரு..

    ReplyDelete
  4. //அம்பாளடியாள் said...

    இதத்தான் நானும் சொல்ல வந்தன் நகைச்சுவையோடு கலந்த சிந்திக்க வைக்கும் பதிவு கலக்குறீங்க சகோ வாழ்த்துக்கள் .வாருங்கள் என் தளத்திற்கும் ......//

    நன்றி சகோ, கருத்துக்கும் வாழ்த்துக்கும்,

    ReplyDelete
  5. தெய்வத் திருமகள் சந்தானத்திற்கு முக்கியமான படம் தான்.

    ReplyDelete
  6. சூப்பரா கலாய்ச்சிருக்கிறீங்க பாஸ்..

    ரசித்தேன்...

    ReplyDelete
  7. //செங்கோவி said... தெய்வத் திருமகள் சந்தானத்திற்கு முக்கியமான படம் தான்.//

    ஆமாங்கண்ணே.. தமிழ் சினிமாவுக்கும் அது ஒரு முக்கியமான படம்தான், மொக்க காப்பி எனும் வகையில்....

    ReplyDelete
  8. //நிரூபன்said...சூப்பரா கலாய்ச்சிருக்கிறீங்க பாஸ்..ரசித்தேன்...//

    அவர கலாய்கிறது கொஞ்சம் கஷ்டம்தான், எதோ கொஞ்சம் ட்ரை பண்ணோம்.....நன்றி!!

    ReplyDelete
  9. சகலகலா பேட்டி
    அருமை !!

    அப்புறம் அந்த கலா யாருன்னு கேக்கப்படாது ஹா ஹா ஹா

    ReplyDelete
  10. சூப்பர் நல்ல பதிவு..நம்ம தலையையும் ஒரு இடத்தில் கலாச்சு இருக்கீங்க...ஆனாலும் ரசிக்க வைக்கின்றது....

    ReplyDelete
  11. ஹா ஹா ஹா ஹா கலக்கல் பாட்டி சீ ச்சே பேட்டி....!!!

    ReplyDelete
  12. கலக்கீட்டீங்க போங்க.......சூப்பர்

    ReplyDelete
  13. கலகலப்பான பேட்டி சார்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  14. ///ஜ.ரா.ரமேஷ் பாபு said...சகலகலா பேட்டி..அருமை !!அப்புறம் அந்த கலா யாருன்னு கேக்கப்படாது ஹா ஹா ஹா///
    என்னா சார் இப்புடி சொல்லிடீங்க? கலாவ தெரியாம தமிழ் நாட்டுல இருக்க முடியுமா?

    பேலன்ஸ் இல்லாம காலு பண்ணுவேன்! காலே இல்லாம பேலன்ஸ் பண்ணுவேன்!! கலா மாஸ்டரே கைய தூக்கி கிளாப் அடிப்பாங்க ஜி

    ReplyDelete
  15. //ஸ்டைல் நாராயணன் உரிமையாளர் கஞ்சிபஜார் said...சூப்பர் நல்ல பதிவு..நம்ம தலையையும் ஒரு இடத்தில் கலாச்சு இருக்கீங்க...ஆனாலும் ரசிக்க வைக்கின்றது....//
    கலாய்கிறதுன்னு வந்தப்புறம் உங்க தல எங்கதலன்னு எல்லாம் பார்க்குறது இல்லேன்ங்க... எல்லாருக்கும் சேம் ரூல் தான்...

    ReplyDelete
  16. //MANO நாஞ்சில் மனோ said...ஹா ஹா ஹா ஹா கலக்கல் பாட்டி சீ ச்சே பேட்டி....!!!///
    வணக்கமுங்க.....பாட்டியா???? ஊர்ல பாதி பேரு ஆண்டி பண்டாரமா இருக்காங்கே.. இவரு பாட்டி பண்டாரமா இருக்காரே!!

    ReplyDelete
  17. //K.s.s.Rajhsaid..கலக்கீட்டீங்க போங்க.......சூப்பர்///

    வயித்தையா?? நன்றிங்க...

    ReplyDelete
  18. //ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmwsaid...கலகலப்பான பேட்டி சார்! வாழ்த்துக்கள்!//
    நன்றி சார்!!!

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்!!