ஒரு விளக்கம், ஒரு வேண்டுகோள், ஒரு அறிவிப்பு.........................
மொதல்ல உங்க எல்லாருகிட்டயும் மன்னிப்பு கேட்டுகுறோங்க. அதாவது முன்ன மாதிரி பிளாக்கிங்க்கு பெரிய அளவுல நேரம் ஒதுக்க முடியுதுல்லங்க. என்னடா எவன பார்த்தாலும் இதையே சொல்லிக்கிட்டு இருக்காங்க, ஒரு வேல இதையே ஒரு பிளாக்கிங் ட்ரென்டா ஆக்க பார்க்குறாங்களோன்னு யோசிக்காதீங்க சத்தியமா உண்மைங்க. வருஷ கடைசி நம்ம ரெண்டு பேருக்கும் ஒரே கெடுபுடியான காலம், முன்ன மாதிரி வேளைக்கு பதிவு போட முடியறதும் இல்ல, பதிவுகள படிக்க முடியறதும் இல்ல. ஒவ்வொருநாளும் ப்லோக்கருக்கு போயி டாஷ்போர்டுல வழமையா தொடர்ச்சியா பதிவு போடுற பதிவர்களின்(சி.பி, விக்கி, நாஞ்சில்,தமிழ்வாசி,நிருபன், மற்றும் பல நண்பர்கள்) புதுசா வார பதிவுகள ஓபன் பண்ணி வச்சிட்டு, படிச்சு ஒட்டு கமெண்ட்டு போடலாம்னு பார்த்தா ஏதாச்சும் வேல வந்து தொலைக்கும். அப்புடியே ஒரு மாதிரியா பதிவுகள படிச்சு முடிச்சிட்டு கமெண்ட்டு போட ரிப்ரெஷ் பண்ணினா அங்க புதுசா ஒரு பதிவே ஒக்காந்து இருக்கும். அப்புறம் முடிஞ்சு போன கல்யாணத்துக்கு எதுக்கு மேளம் அடிக்கனும்ன்னு கமெண்டு போடாம வந்திடுவோம், அப்புறம் செங்கோவி அண்ணனோட ப்ளாகுக்கு போனா அவரு பதிவுகள காணவும் இல்ல,யாரு பதிவுலயும் அவரு காமேண்டையும் காணவுமில்ல, தொடராத பதிவுகள்ன்னு ஒரு பதிவ போட்டுட்டு அவரும் வேலைல பிசியாகிட்டாரு போல. பன்னிக்குட்டி அண்ணன ரெண்டு மாசமா இந்த ஏரியா பக்கமே காணல.இப்பத்தான் ஒரு வாரமா ஆக்டிவ்வா இருக்காரு போல, அவரு கடைசி பதிவ கூட வாசிசாச்சு ஆனா இன்னும் மொய் வைக்கல. கொஞ்ச நாளா இதேதான் நடக்குது, இதுக்கு எதாச்சு தீர்வு இருந்தா சொல்லுங்கப்பா. நம்ம ரெண்டு பேர்(புட்டிபால் அண்ட் மொக்கராசு மாமா) மேட்டர் என்னனா....புட்டிபாலுக்கு ஜனவரி எண்டுல அப்புடின்னு சொல்லியிருந்த ஒரு ப்ரோஜெக்டோட டெட்லயின திடீர்ன்னு ஜனவரி அஞ்சுன்னு மாத்திட்டாங்க, அதுக்காக மாஞ்சு மாஞ்சு வேல பார்த்துகிட்டு இருக்காரு. அப்புறம் மொக்கராசுக்கும் ஒரு வருசமா இழுத்தடிச்சிக்கிட்டு இருந்த ஒரு வேலைய முடிச்சே ஆக வேண்டிய கட்டாயம். கெளம்பிட்டாரு. அதனால இனிமே ஒரு ரெண்டு மூணு வாரத்துக்காவது பதிவுலக பக்கம் நம்ம நடமாட்டம் சுத்தமா இல்லாம போனாலும் போயிடும். ஆனாலும் யாரும் நம்மள மறந்துட கூடாதேன்னுட்டு, முன்னொரு காலத்துல எழுதி கடைசி கட்ட திருத்தங்களுக்காக ட்ராப்டுல வச்சிருந்த ஒரு ரெண்டு பதிவுகள இந்த வருஷ கடைசிகுள்ள வலையேத்த முயற்சி பண்ணுறோம். அங்கங்க நெறைய தப்புகள் இருக்கும், தமிழ் பொறுக்குமா இல்ல தெரு பொறுக்குமான்னு தெரியல. குத்தம் குறைகளை மன்னிக்கவேண்டி மீண்டும் கேட்டுக்கறோம்.
டிஸ்கி: யாருமே இல்லாத கிளாஸ்ல யாருக்குடா பாடம் நடத்துறீங்க? உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா?ன்னு கேட்குறீங்களா? இல்லீங்க, ரெண்டு வாரமா பதிவே போடாட்டியும், எப்புடியும் ஒரு நாளைக்கு ஆவரேஜா 100 பேஜ் விவ்ஸாவது வருது. கண்டிப்பா அவுங்க என்ன எதிர் பார்த்து இங்க வர்றான்களோ அத கொடுக்க வேண்டியது நம்ம கடமை. வருஷ கடைசிகுள்ள அந்த டிராப்ட்ல இருக்குற ரெண்டு பதிவயும் போட்டுட்டு, 2012ல இருந்து புதுசா வர முயற்சி பண்ணுறோம்.
டிஸ்கி: யாருமே இல்லாத கிளாஸ்ல யாருக்குடா பாடம் நடத்துறீங்க? உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா?ன்னு கேட்குறீங்களா? இல்லீங்க, ரெண்டு வாரமா பதிவே போடாட்டியும், எப்புடியும் ஒரு நாளைக்கு ஆவரேஜா 100 பேஜ் விவ்ஸாவது வருது. கண்டிப்பா அவுங்க என்ன எதிர் பார்த்து இங்க வர்றான்களோ அத கொடுக்க வேண்டியது நம்ம கடமை. வருஷ கடைசிகுள்ள அந்த டிராப்ட்ல இருக்குற ரெண்டு பதிவயும் போட்டுட்டு, 2012ல இருந்து புதுசா வர முயற்சி பண்ணுறோம்.