Showing posts with label Co- Actors. Show all posts
Showing posts with label Co- Actors. Show all posts

Thursday, November 14, 2013

Krrish 3 சூப்பர் ஹீரோ ஒரு அலசல்

வார்னிங்: ஸ்பாய்லர்ஸ் உண்டு (படம் வந்து எம்புட்டு நாளாச்சி, இதுக்கப்புறம் ஸ்பாய்லர்ஸ் இருந்தா என்ன, இல்லாட்டி என்ன)

வலது பக்கமிருந்து மூணாவதா ஒக்காந்து இருக்கதுதான் நம்ம ஹன்சிகா ஆண்டி.

Koi mil gaya (2003), க்ரிஷ் (2006) வரிசையில் ராகேஷ் ரோஷன், ஹ்ரிதிக் ரோஷன் கூட்டணியின் மூன்றாவது சூப்பர் ஹீரோ படம். Marvel, DC  காமிக்ஸ்களின் சூப்பர் ஹீரோக்களுக்கு இணையான இந்திய சூப்பர் ஹீரோ நம்ம இந்த க்ரிஷ். முதல் படத்தில் ஒரு வேற்றுக் கிரக வாசிக்கு உதவி செய்து அதன் மூலமா சில பல அதீத சக்திகள் ரோஹித் மெஹ்ரா (ஹ்ரித்திக் ரோஷன்) என்னும் மூளை வளர்ச்சி குறைந்த இளைஞனுக்கு கிடைக்கிறது. இது அவனுடன் நின்று விடாது அவன் வழித்தோன்றல்களுக்கும் கடத்தப் படுகிறது. இரண்டாவது படத்தில் ரோஹித் மெஹ்ராவின் மகன் கிருஷ்ணா அதீத உடல் பலம், வேகம் போன்ற ஆற்றல்களுடன் இருக்கிறார். ஒரு தீவிபத்தில் இருந்து மக்களைக் காப்பாற்ற க்ரிஷ் அவதாரம் எடுக்கும் கிருஷ்ணா (கிருஷ்ணாவின் சுருக்கம்தான் இந்த க்ரிஷ்) அதன் பின்னர் தனது தந்தையை ஒரு ஆபத்தில் இருந்து காப்பாற்றுகிறார். இந்த இரண்டு படங்கள் அவை வெளியான காலங்களில் சக்கை போடு போட்ட படங்கள். இப்போ 2013, அதிகப்படியான சூப்பர் ஹீரோ படங்கள் ஹாலிவூட் திரையை துளைக்கும் போது, அவற்றுக்கு இணையாக இந்தியாவில் இருந்து ஒரு படமாக க்ரிஷ்  3 களம் இறங்கியிருக்கிறது. இனிமேல் இந்த படம் பற்றிப் பார்ப்போம்.


நம்ம ஹீரோ கிருஷ் இப்போ இந்தியாவுல மக்களால் கொண்டாடப் படும் ஒரு சூப்பர் ஹீரோ. அங்கங்கே சின்னதா நடக்கும் கொள்ளை, தீவிபத்து, விமான விபத்து என எது எங்க நடந்தாலும் அங்க ஆஜராகி மக்களை காப்பத்தறாரு. இது முழு நேர வேலை. பகுதி நேரமா வேறு நிறைய வேல செய்யறாரு, எங்கயுமே நிரந்தரமா தங்கறது கிடையாது, காரணம் வேலையில ஒழுங்கா கவனம் செலுத்தறது கெடயாது (spiderman - your friendly neighbourhood). திடீரென நம்ம 7 ஆம் அறிவு ஸ்டைல்ல உலகத்துல பல இடங்கள்ள மருந்தே கண்டுபிடிக்க முடியாத ஒரு "கொடிய நோய்" பரவுது. இதற்க்கு இடையில நம்ம Mystique அம்மணி தகவலளிக்க வந்த ஒரு சயின்டிஸ்ட போட்டு தள்ளிடறாங்க. அப்படியே கட் பண்ணினா Professor X  ஒரு வில்லன் வடிவத்துல வார்ராரு, இவரு கண்டிப்பா ஒரு telepath தான்னு நினைச்சா இல்ல, இவரு Jean மாதிரி telekinetic, அப்பப்போ Magneto மாதிரி அட்டகாசம் பண்றாரு, அப்புறம்தான் நமக்கு தெரியுது இவருதான் பிரதர் ஹூட் ஆப் ஈவில் மியுடன்ட் தலைவர்ன்னு. அவரு கூட்டத்துல நமக்கு பரிச்சயமான Toad உட்பட பல காரெக்டர்ஸ் இருக்கு. அப்புறம்தான் நம்ம தலைவர் அவரோட சக்தி எங்கிருந்து வந்துச்சி, அவரோட உடலை எப்படி முழுமையா செயல்பட வக்கிறது போன்ற உன்னதமான கேள்விகளுக்கு விடை தேட ஒரு ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்கறதாவும், அதுக்கு பணம் புரட்டத்தான் இந்த 7 ஆம் அறிவு வேலை செய்யரதாவும் தெரியவருது. அப்புறம் இவுங்க மும்பயில நோயைப் பரப்ப (இதற்க்கு கடவுள் நம்பிக்கையை அழிச்சுட்டு தானே கடவுள் ஆகிடனும்ன்னும் ஒரு வியாக்கியானம் வேற), நம்ம க்ரிஷ் மற்றும் ரோஹித் ஒரு ஆண்டிடோட் கண்டுபிடிச்சு அமேசிங் ஸ்பைடர்மேன் ஸ்டைல்ல ஒரு Dispersion  Device  மூலமா மொத்த மும்பையையும் ஓவர் நைட்ல காப்பாத்திடராங்க (இங்க இவருக்கு சிலை வைப்பு வைபவம்  வேற). அப்புறமா, நம்ம DNAல இருந்து மட்டும்தானே நம்ம வைரசுக்கு மருந்து வரலாம், இது எப்படி வந்திச்சுன்னு வில்லன் ஆராய அப்புறம் என்னவாச்சின்னு avengers, மேன் ஆப் ஸ்டீல் பாணியில விடை சொல்லி முடிச்சிருக்காங்க படத்த. 


ஹாலிவூட் பசங்களுக்கு சூப்பர் ஹீரோ படங்கள் எடுக்கறதுல ஒரு லாபம் என்னன்னா அவங்க கிட்ட நூறு வருஷத்துக்கு மேல பழமையான பல சூப்பர் ஹீரோ - சூப்பர் வில்லன்கள் இருக்காங்க, இன்னாரு இன்னாரு, இவருக்கு இன்ன இன்ன பவர் இருக்கு, அது இப்படித்தான் வந்திச்சுன்னு யாரும் ஒக்காந்து யோசிக்கவும் தேவையில்ல, எப்படிடா இவனால இதெல்லாம் முடியும்ன்னு ரசிகர்கள் கேள்வி கேக்கப் போறதுமில்ல. மேக் அப்,  காஸ்ட்டியூம்லையே இவரு இன்னருதான்னு சொல்லிடுவாங்க. நம்ம இந்திய சினிமாவுல அப்படி கெடயாது. நமக்கு ஒரே சூப்பர் ஹீரோ தலைவர் ரஜினிகாந்த் தான். இல்லையின்னா புராணங்கள புரட்டனும். அதுதவிர என்னன்னாலும் ஆரம்பம் இருந்து முடிவு வரை பார்வையாளனுக்கு விஞ்ஞானபூர்வமா விளக்கனும். கடந்த ரெண்டு படங்கள்லயும் சூப்பர் ஹீரோவ உருவாக்கற பணியில வெற்றி பெற்ற இந்த கூட்டணி, இந்த முறை சூப்பர் வில்லன்கள உருவாக்குறதுல நிச்சயம் தோல்விதான். ஹாலிவூட்ல ஸ்பைடர் மேன்னா  இவுங்க இவுங்க வில்லன், அயன்மேன்ன்னா இவரு இவரு ன்னு எல்லா சூப்பர் ஹீரோக்களுக்கும் வில்லன் இருக்கு, இங்க ராமருக்கு ராவணன் தவிர, க்ரிஷுக்கு எல்லாம் வில்லன் கெடயாதுங்கறது, நமக்கு சூப்பர் ஹீரோ படம் பண்ணுறதுல எப்பவுமே இருக்கற ஒரு சவால் தான். ஆனா அந்த சவால ஒரு Ra.One - G.One  ரேஞ்சுலயாவது கையாண்டு இருக்கலாம்.  அத விட்டுட்டு படம் முழுவதுமே ஒரு மார்வெல் யூனிவேர்ஸ்ல நொழஞ்சிட்ட பீலிங் வர்ரத தவிர்த்திருக்கலாம். அப்புறம் அடுத்தவனுக்கு உதவி செய்ய நினைக்கற மனம்தான் க்ரிஷ்ன்னு "we are robin hood" ஸ்டைல்ல வலிந்து திணிச்ச தீம் கொஞ்சம் நெருடலா இருக்கு. 


பாசிடிவ் சைடுன்னா, VFX எக்ஸ்ட்ரா ஆர்டினரியா இருக்கு. ஹ்ரித்திக் ரோஷன் எப்பவும் போலவே படத்துக்காக ரொம்பவே உழைச்சிருக்காரு, க்ரிஷ்ன்னா இந்தாளுதான்யான்னு கன கச்சிதமா பொருந்திப் போறாரு. ரொம்ப நாளைக்கு அப்புறம் கங்கனா ரேனவாத்,  அப்புறம் தொட்டுக்க பிரியங்கா சோப்பரா. தொழில்நுட்ப ரீதியா படம் பட்டய கெளப்புது. அதே கவனத்த கதையிலும் செலுத்தியிருந்தா படம் சூப்பரா இருந்திருக்கும். நீங்க ஒரு மார்வல் பேனா இருந்தீங்கன்னா இந்த படம் உங்களுக்கு ஒரு வேலாயுதம் மாதிரி இருக்கும், படத்துல புதுசுன்னு சொல்லிக்க எதுவுமே இல்ல, எல்லாமே இதற்க்கு முன்னாடி நீங்க எங்கயாவது பார்த்த ஒன்னாதான் இருக்கும். இல்ல, மார்வல் யுனிவேர்சுக்கும் உங்களுக்கும் சம்பந்தமே இல்லையின்னு வச்சுக்கங்க, அப்பவும் இந்த படம் உங்களுக்கு ஒரு வேலாயுதம் மாதிரிதான்  இருக்கும். இந்திய சினிமாவுக்கு கொஞ்சமும் பழக்கம் இல்லாத கதைக் களம், மியுடன்ட்களின் விதவிதமான சக்தி, கலர் புல்லான ரெண்டு ஹீரோயின், பவர் புல்லான ஹீரோ, எக்ஸ்ட்ரா ஆர்டினரி மேக்கிங், லார்ஜெர் தான் லைப் ஆக்ஷன் சீக்குவன்ஸ்ன்னு செம இன்டரஸ்டிங்கான படம்.


டிஸ்கி 1: தீபாவளிக்கு மறுநாளே படம் பார்த்திருந்தாலும், படத்துக்கு விமர்சனம் எழுதற ஐடியா கொஞ்சமும் இருக்கல. என்னக்கி இந்த படம் இந்தியாவுல மட்டுமே இருநூறு கோடி வசூல தாண்டி, சென்னை எக்ஸ்பிரஸ் படத்தோட சாதனையை முறியடிக்கபோகுதுன்னு தெரிஞ்சிச்சோ, அன்னைக்கே இந்த படத்துக்கு விமர்சனம் எழுதணும்ன்னு முடிவு பண்ணிக்கிட்டேன். ஏன்னா வரலாறுல நம்ம பெயரும் வரனுமே.

டிஸ்கி 2: நீங்க ஒரு சூப்பர் ஹீரோ பட விசிறியா இருந்தா தயவு செய்து இந்த படத்த தவிர்த்துட்டு Thor: The Dark World பாருங்க. நம்ம பசங்க என்னதான் பண்ணியிருக்காங்க பார்ப்போமேன்னு க்ரிஷ் 3 பார்த்திங்கன்னா அதனால வார எந்த மன உளைச்சலுக்கும் கம்பெனி பொறுப்பேற்காது. சும்மா தமாசுக்கு ஒரு படம் பார்க்கணும்னா தாராளமா பாருங்க, தீபாவளி தமிழ் ரிலீசுக்கு இது எவ்வளவோ தேவல.  

டிஸ்கி 3: இந்தப் படம் ஒரு குடும்பப்படமான்னு சந்தேகமே வேணாம். கதை, திரைக்கதை, வசனம் இயக்கம், தயாரிப்பு அப்பா; ஹீரோ பையன், இசை சித்தப்பு, இதுக்கும் மேல ஒரு குடும்பப் படம் விசுவால கூட எடுக்க முடியாது. (டி ஆர் தவிர) 

Saturday, November 2, 2013

ஆரம்பம், ஆல் இன் ஆல் அழகுராஜா -இந்த தீபாவளிக்கும் இரட்டை விமர்சனம்.

தீபாவளியும் அதுவுமா தமிழ் படம் பார்க்கலைனா தெய்வ குத்தமாகிடுமேங்கற ஒரே காரணுத்துக்காக, பல தடைகளையும் கடந்து, ராசு மாமா பேச்சையும் மீறி, வழக்கம் போலவே மொக்க வாங்கிட்டு, நான் பெற்ற துன்பம் பெறுக  இவ்வையம்ங்கர தாரக மந்திரத்துக்கமைய உங்க உசுரையும் எடுக்கலாம்ன்னு ரொம்ப நாளைக்கு அப்புறமா ப்ளாக்கர் பக்கம் வந்திருக்கேன். இனிமே நம்ம விமர்சனத்த பார்க்கலாம்.

ஆரம்பம். 

ஒவ்வொருத்தர் வாழ்கையிலும் ஒரே ஒரு தடவைதான் தல தீபாவளி வரும், ஆனா தல ரசிகர்களுக்கு மட்டும்தான் ஒன்னுக்கு அதிகமா தல தீபாவளி கொண்டாடுற பாக்கியம் கெடைக்கும். இது அப்படி ஒரு தல தீபாவளி. அஜித்-விஷ்ணு-நயன் கூட்டணி, கூடவே ஆர்யா-தாப்சி-கிஷோர்-அதுல் குல்கர்னி-ராணா டகுபதின்னு ஏகப்பட்ட கூட்டம். மாஸ்க்கு அஜித்தும், காமெடிக்கு ஆர்யாவும், கண்ணுக்கு நயனும், மொக்கைக்கு தாப்சியும்ன்னு பார்ட் பார்டா பிரிச்சு கத எழுதியிருப்பாரு விஷ்ணுன்னு நினைக்கறேன். 

இப்பெல்லாம் தல கால் ஷீட் கெடச்சதும் மொத வேலையா, தல கையில ஒரு பைக், கார், அப்புறம் ஏதாவது இன்னுமொரு வண்டிய குடுத்து வேகமா ஓட்டவச்சு ஷூட்  பண்ணிக்கறாங்க, அப்புறம் அவர கொஞ்சம் தனியா நடக்கவச்சு, படத்துல இருக்கற மத்த ஒவ்வொரு நடிகர் கூடவும் தனித்தனியாகவும் கூட்டமாவும் சேர்த்து நடக்கவச்சி சூட் பண்ணிக்கறாங்க, அப்புறம் படத்துல வர்ர வில்லன் நடிகர், தலையோட தலையில துப்பாக்கி வச்சிருக்கறப்போ, தல ஒரு டயாலாக் பேசுற மாதிரி ஷூட் பண்ணிக்கறாங்க, கடைசியில அந்த ஒவ்வொரு சீனையும் பிரிச்சுப் பிரிச்சுப் போட்டு கொஞ்சம் காரம், ஸ்வீட் ஆங்காங்கே போட்டு எடிட் பண்ணி ஒரு படம்ன்னு ரிலீஸ் பண்ணிடறாங்க, இங்கயும் அதுவே நடந்திருக்கு. இருந்தாலும் ஒரு ஆர்டர்ல கரெக்டா அந்த சீன்ஸ் வர்ரதனாலயும், அங்காங்கே கதைன்னு ஒன்னு தல காட்டரதனாலயும், ஆர்யாவோட காமெடி, தலையோட எக்ஸ்ட்ரா ஆர்டினரி ஸ்க்ரீன் ப்ரெசென்ஸ் இருக்கறதனாலயும், அங்காங்கே எட்டிப் பார்க்கும் சில நிஜ சம்பவங்களும், அதை படத்துல கோர்திருக்கற விதமும் சேர்த்து, ஒருவேள படம் நல்லாத்தான் இருக்கோன்னு நமக்கே ஒரு டவுட்டு வாறமாதிரி ஒரு படம்.

படத்துல குறைன்னு சொல்றதுக்குன்னா ரெண்டே விஷயம், ஒன்னு நயன் கொஞ்சம் வயசா தெரியறாங்க, நயனுக்கு அழகே சுடிதார்தான், அது இங்க மிஸ்ஸிங். ரெண்டாவது அத்துல் குல்கர்னி போன்ற ஒரு எக்ஸ்ட்ரா ஆர்டினரி நடிகரையும், கிருஷ்ணா போன்ற ஒரு ரொம்ப கேப்பபில் நடிகரையும் கொஞ்சம் கூட ஈவு இரக்கமே இல்லாம வேஸ்ட் பண்ணியிருக்கறது. இன்னும் ஒன்னு சொல்லனும்ன்னா தமிழ் சினிமா VFX ஐ கொஞ்சம் ரொம்ப சீரியஸா எடுத்துக்க வேண்டிய நேரம் வந்திரிச்சு, குண்டு வெடிக்கற காட்ச்சிகள் VFX சுத்த சொதப்பல். மற்றும்படி இது கண்டிப்பாக மொக்கை இல்லை. கொடுத்த காசோ, செலவளிச்ச நேரமோ வேஸ்ட்டுன்னு சொல்லற படமும் இல்லை.  மிஸ் பண்ணிடாம கண்டிப்பா பாருங்கன்னு சொல்லற படமும் இல்லை. இந்த தீபாவளிக்கு தமிழ் படம் பார்க்கணும்னா ஆரம்பம் பாருங்க. அம்புட்டுத்தான் சொல்லலாம்.


ஆல் இன் ஆல்  அழகுராஜா

எல்லா பண்டிகையும் நமக்கு கொண்டாட்டமாவே அமைஞ்சுடுதா என்ன, எப்போவாவது குடும்பத்துல ஒரு பெருசு மண்டயப் போட்டோ, இல்ல நமக்கு ஒடம்பு சரியில்லாம போயோ, பண்டிக பனாலாகிடுறதில்லையா, அந்த மாதிரி ஒரு அசம்பாவிதம் தான் இந்த படம். இது நிஜமாவே ராஜேஷ் படமா, இல்ல ராஜேஷ்கிட்ட சரக்கு தீர்ந்திடிச்சான்னு என்ன ரொம்பவே யோசிக்க வச்ச படம் இது. ராஜேஷ் படத்துல இருக்கற எல்லாமே இருக்கு, ஆனாலும் இது ராஜேஷ் படம் மாதிரி இல்லாம இருக்கு, அது ஏன்னு எனக்கு கடைசிவர புரியவே இல்ல. படத்துல இருக்கற ஒவ்வொரு சீனும் நமக்கு போரடிச்சு போதை ஏறி அது தெளிஞ்சதுக்கு அப்புறமும் முடியாம ஜவ்வு மாதிரி இழுத்துக்கிட்டே போறதுதான் இந்த படத்தோட முக்கிய குறைன்னு நினைக்கறேன். நெறயவே ஸ்டார் காஸ்ட் இருக்கு படத்துல, எதுவுமே வேர்த்தியா இல்ல, தலைவர் கூட நெறைய இடங்கள்ள நம்மள கவுத்துடுராறு. படம் பார்கறவங்க பாதி நேரத்துக்கு மேல தேட்டர் ஸ்க்ரீன பார்க்காம அவுங்க மொபைல் ஸ்க்ரீனையே பார்த்துக்கிட்டு இருக்காங்க, படத்துல வார ஒவ்வொரு சீனுக்கும், தேட்டர் ஆடியன்ஸ்ல யாராச்சு ஒருத்தர் போதும்யான்னு சொல்லிக்கிட்டே இருக்காங்க.

அப்போ இந்த படத்துல பிளாஸ் பாயிண்டே இல்லையான்னு கேக்காதீங்க, இருக்கு. அதுல முக்கியமா ரெண்டு பாயிண்ட மட்டும் உங்களுக்கு சொல்றேன். ஒன்னு இந்தப் படத்த பார்க்கற ஒவ்வொருத்தருக்கும் அவங்களோட பள்ளி நாட்கள் கண்டிப்பா ஞாபகம் வரும், அதாவது "எப்படா கிளாஸ் முடியும், எப்படா வீட்டுக்கு போவோம்" ன்னு நாம தவிச்ச தவிப்பு இருக்கே, படம் ஓடுற மூணு மணிநேரமும் உங்க கண்ணு முன்னாடியே நிக்கும். ரெண்டாவது, திரை விமர்சனம்ங்கற  பேர்ல படத்தோட கதைய விலாவாரியா எழுதி ஒப்பேத்துற விமர்சகர்களுக்கு ராஜேஷ் சரியான சவால் விடுத்திருக்காரு, முடிஞ்சா படத்துல என்ன நடத்துச்சுன்னு சொல்லுங்கடா பார்க்கலாம்ன்னு நம்ம விமர்சகர்கள பார்த்து கேக்கற கேள்வி இருக்கே, சார் இந்த திமிரு, உங்கள எங்கயோ கொண்டு போகப்போகுது.

ஆன் ஏ சீரியஸ் நாட், படத்தோட ஒன் லைனர் என்னன்னா, அப்பன் செஞ்ச தப்புனால பிரிஞ்சு போன ரெண்டு குடும்பத்த மகன் எப்படி சேர்த்து வைச்சி அப்பன் செஞ்ச தப்ப திருத்திக்கறாருங்கறதுதான். இந்த ஒன் லைனருக்கு வழக்கம் போலவே செம இண்டரஸ்டிங்கான காரக்டர்ஸ் புடிச்ச ராஜேஷ், வழக்கம் போல இண்டரஸ்டிங்கான ஸ்க்ரீன் ப்ளே எழுதறத்துக்கு பதிலா, வெறும் மொக்க சீன்கள் மட்டுமே எழுதி அத தொகுப்பாக்கி ஒரு படமா குடுக்க ட்ரை பண்ணியிருக்காரு. இந்த பருப்பு உள்நாட்டுல மட்டுமில்ல, வெளிநாட்டுல கூட வேகாது பாஸ், சீக்கிரமே முழிச்சுக்கோங்க, இல்லையின்னா S.J சூர்யா நிலைமைதான் உங்களுக்கும். சொல்றத சொல்லிட்டோம், த சாய்ஸ் இஸ் யுவர்ஸ்.

Wednesday, November 21, 2012

துப்பாக்கி, ஜப் தக் ஹேய் ஜான் : இரட்டை பார்வை

பதிவர்னா ஒரு படம், அது தமிழோ, இந்தியோ, தெலுங்கோ, இங்கிலீஷோ இல்ல கொரியன், இந்தோநேஷியனோ, உடனே பார்த்து விமர்சனம் எழுதனும்கறது ஒரு சட்டம், அத மீறி படம் பார்த்துட்டும் விமர்சனம் எழுதலயின்னா சங்கத்துல இருந்து தள்ளி வச்சிடுவாங்கன்னு மொக்கராசு மாமா மிரட்டுனதால, இந்த தீபாவளி ரிலீஸ்ல நான் பார்த்த ரெண்டு படத்துக்கும் ஒரே பதிவுல விமர்சனம் எழுதி சங்க மெம்பர்ஷிப்ப காப்பாத்திக்கலாம்ன்னு இறங்கிட்டேன்.

முதல்ல ஷார்ட்டா துப்பாக்கி. துப்பாக்கிய பத்தி பலபேர் பல பதிவு போட்டு பல விமர்சனம் போட்டு படம் மெகா ஹிட்டுன்னு ஊரறிய அறிவிப்பும் குடுத்தாச்சு. இதுக்கு மேல இந்த படத்த பத்தி நான் என்ன சொல்றது? ரொம்ப நாளைக்கு அப்புறமா முழு திருப்தியோட ஒரு விஜய் படம் பார்த்தது இந்த தீபாவளிக்குத்தான். அண்ணன் பின்றாரு, நடிப்புல செம முதிர்ச்சி தெரியுது, ஆனா தோற்றதுல செம இளமை தெரியுது. முருகதாஸ் மொத்தமா நாலே நாலு சீன யோசிச்சிட்டு, அத விஜயோட உதவியால ஒரு முழுப்படமா குடுத்திருக்காரு, வழக்கம் போல ஹரிஷ் ஜெயராஜ் செமையா சொதப்பியிருக்காரு. படத்துல வில்லன காட்டறப்போ அந்த ஊ ஊ ஊ  BGM பழைய விஜயகாந்த் பட "பயங்கர வில்லன" ஞாபகப்படுத்தி தொலைக்குது. நாலு சீன விட்டா படத்துல சொல்லிக்கொள்ளும்படியா எதுவுமே இல்ல, ஆனா விஜய் நம்மள சீட்டோட கட்டிப் போட்டு வைக்கிறதால, படம் முடிஞ்சு வெளிய வாரப்போ, ஒரு முழுத் திருப்தி கெடைக்குது, நீண்ட நாளைக்கு அப்புறமா ஒரு செம மாஸ் என்டேர்டைனர் பார்த்த மாதிரி நமக்கு ஒரு பீலிங் வருது. துப்பாக்கி, இட்ஸ் ஆல் அபவுட் விஜய். கிங் ஆப் மாஸ்.


ஜப் தக்  ஹேய் ஜான்:


எட்டு வருஷங்களுக்கு பிறகு யாஷ் சோப்ரா படம் இயக்க வர்றாருன்னு சொன்னதுமே இந்த படத்துக்கான எதிர்பார்ப்பு தொத்திக்கிருச்சி.  "எ யாஷ் சோப்ரா ரொமான்ஸ்" எப்படி இருக்கும்ன்னு தெரிஞ்சவங்களுக்கு படத்தோட கதைய பத்தி எதுவுமே சொல்ல தேவையில்ல, கதைய விட பெர்போர்மான்ஸ் தான் எப்பவுமே அவரோட படத்துல USP.  வழக்கமான யாஷ் சோப்ரா ரொமான்ஸ் தான் படம். ஆனா ரொம்ப நாளைக்கு அப்புறமா பார்க்குறதால ரொம்ப ரீஃப்ரெஷிங்கா இருக்கு படம்.  ஷாருக்க  விட்டா ரொமாண்டிக் பிலிம்ல பெர்ஃபோம் பண்ணறதுக்கு வேற யார தேடுறது? ரொம்ப நாளைக்கு அப்புறமா ஷாரூக் ரொமாண்டிக் ஹீரோவா நடிக்கற படம்,  ரஹ்மான் சார் மியூசிக், முதல் முறையா ஷாரூக்கும் கத்ரீனா கய்ப்பும் ஜோடி சேரும் படம், ஆதித்யா சோப்ரா கதை வசனம்ன்னு சொன்னதுமே எதிர்பார்ப்பு பல மடங்காயிருச்சி. படம் முடிஞ்சு ஃபைனல் பிரிண்ட் வர்ரதுக்கு முன்னாடியே யாஷ்ஜீ திடீரென இறக்க, யாஷ் சோப்ராவோட கடைசி படம்ங்குற டைட்டில் வேற சேர்ந்துடுச்சு. இங்க படம் ரிலீஸ் முதல் நாள் முதல் ஷோவுக்கு முதல் ஆளா போய் நின்னுட்டேன். இனிமே படம் எப்பிடின்னு பார்க்கலாம்.

காதலை பிரிஞ்சு வாழ்றதும், தினம் தினம் செத்து பொழைக்கறதும் ஒண்ணுதான். நம்ம காதலிக்கறவங்க நல்லா இருக்கனும்கறதுக்காக பிரிஞ்சு வாழறதுக்கு பதிலா பேசாமா பினாயில வாயில ஊத்தி கொன்னுடலாம். இவ்வளவுதான் படத்தோட கதை. இந்த கதையை வச்சிக்கிட்டு ஆதித்யா சோப்ரா எழுதியிருக்கற திரைக்கதை முன் பாதி அற்புதம், "கடவுளுக்கு சத்தியம் பண்ணி பிரியற ஒரு காதல்" ன்னு ஒரு சின்ன லைன வச்சி ரொம்ப கன்வின்சிங்கா ஒரு திரைக்கதை எழுதியிருக்காரு, ரெண்டாவது பாதி, தொண்ணூறுகளின் மனம் சார்ந்த காதலுக்கும், ரெண்டாயிரங்களின் உடல் சார்ந்த காதலுக்கும் இடையிலான வித்தியாசம், முக்கோண காதல், காதல் தோல்வி, பெர்போர்மான்ஸ் ஸ்கோப்ன்னு ஏகப்பட்ட விஷயங்கள் இருந்தும் அம்னீசியா, நினைவு திரும்பி வரவழைக்கும் நாடகம்ன்னு 1980 சமாச்சாரத்த தொட்டு திரைக்கதை அமைச்சது படத்தோட நாம ஒன்றிப்போறத கொஞ்சம் கஷ்டமானதா ஆக்கிடுது. தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே, வீர்-சாரா, ரப் னே பனாதி ஜோடி, போன்ற படங்களை எழுதிய ஆதித்யா சோப்ரா இந்த அதர பழைய நாடகத்த தொட்டது கொஞ்சம் வருத்தம் தான், ஆனாலும் பெர்போர்மன்சும், யாஷ் சோப்ராவின் இயக்கமும், ஆதித்யா சோப்ராவின் வசனங்களும் பெருமளவு அதை ஈடு செஞ்சுடுது.


ஷாரூக் கான் ரொம்ப இளமையா இருக்காரு, ஒரு பணக்கார பொண்ணு தினக்கூலிய லவ் பண்ணுவாளான்னு யாருக்காவது டவுட்டு வந்தா அந்த தினக்கூலி இந்தாளு மாதிரி இருந்தா பணக்கார பொண்ணு என்ன தேவலோக ராணியா இருந்தாலும் லவ் பண்ணுவான்னு சொல்ற அளவுக்கு, அவருதான் தி கிங் அப் ரொமான்ஸ்ன்னு மறுபடியும் நிரூபிச்சிருக்காரு. ஆர்மி ஆபிசர் சமர் ஆனந்தா இருக்கட்டும், லண்டன்ல பஞ்சாபி பாட்டு பாடி ஆடுற தெருப்பாட்டு கலைஞரா இருக்கட்டும், ஹோட்டல்ல கொச்சை இங்கிலீஷ்ல பேசி சிரிக்க வைக்கற வெயிட்டரா இருக்கட்டும், குறிப்பா அனுஷ்கா ஷர்மா பந்தயம் கட்டிட்டு ஆத்துல எறங்கி குளிர்ல நடுங்கரப்போ காப்பாத்துற காட்சியிலா இருக்கட்டும், ஷாருக் கான் King Khan தான். ரொம்ப ஜாலியான ஒரு முகம், ரொம்ப இறுக்கமான போரிங்கான ஒரு முகம், ரெண்டயுமே செமயா வெளிப்படுத்தியிருக்காரூ, (ரப் னே பனாதி ஜோடி படத்துல ரெண்டு பாத்திரமும் ரெண்டு எக்ஸ்ட்ரீமா இருக்கும், அதையே சூப்பரா பண்ணியிருப்பாரு, இதுல ரெண்டும் ரொம்ப சட்டிலா இருக்கும், இத ரொம்பவே அற்புதமா தூள் பண்ணியிருக்காரு)

கத்ரீனா கைப், முதல் முறையா முழு நீள ரொமாண்டிக் படத்துல நடிச்சிருக்காங்க, லண்டன்ல வாழ்ற, தம் அடிக்கற, எனக்கு இந்திய மாப்ள வேணாம், அவங்க எல்லாம் கருப்பா இருக்காங்கன்னு ஜீஸஸ் கிட்ட வேண்டிக்கற, ஆனா அதே நேரம் இந்திய பண்பாடு விட்டுப்போகாத பொண்ணா கன கச்சிதமா பொருந்தி இருக்காங்க, இது வரைக்கும் ஒரு கிளாமர் டோலா மட்டுமே படத்துல வந்திட்டு போனவங்க, முதல் முறையா தன்னாலும் நடிக்க முடியும்ன்னு காட்டி இருக்காங்க, அந்த வகையில சுப்பர்.

ராப் னே பனாதி ஜோடி படத்துல பார்த்த அனுஷ்காவுக்கும்,  இதுக்கும் நூறு வீத வித்தியாசம். அந்த பாத்திரத்துக்கு அப்படியே நேர் எதிரா, மேக் அப் - பிரேக் அப் கலாசார இன்ஸ்டன்ட் காதல் உலகத்துல வாழுற, அடிக்கடி இங்கிலீசுல கெட்ட வார்த்த பேசிக்கற நவ நாகரிக பொண்ணா ரொம்ப கான்வின்சிங்கா இருக்காங்க. ப்ரீதி-ராணி, கரீனா-பிரியங்கா வுக்கு அப்புறமா தீபிகா-அனுஷ்கா தான் அடுத்த பாலிவுட் கிளாமர் கம் அக்டிங் ஹீரோயின்ஸ் ஜோடின்னு அடிச்சு சொல்றாங்க.

ரஹ்மான் சாரோட பின்னணி இசை ஒரு ரொமாண்டிக் படத்துக்கு உரிய விதத்துல இருக்கு. திரையில தெரியற காட்சி கண்ணுல தெரியுதா, காதுல தெரியுதான்னு புரியாத அளவுக்கு பின்னணி இசையும் ஒளிப்பதிவும் போட்டி போட்டுக்கிட்டு இருக்கு படம் முழுவதும். பாடல்கள் கேட்டதும் பிடிக்கும் ரகம் கெடயாது. ஆனா படம் பார்த்ததுக்கு அப்புறம் இருந்து இந்த ஒரு வாரமா ஜப் தக் ஹேய் ஜான் பாடல்கள்தான் கேட்டுக்கிட்டே இருக்கேன். சல்லா, சான்ஸ், ஹீரு, இஷ்க் சாவா, ஜியாரே எல்லாமே அற்புதம்.

இயக்குனர் யாஷ் சோப்ரா, தனக்கே உரிய பாணியில, ஒரு காதல் கதைய, ஆனா இன்றைய இளைஞர்களையும் கவரும் வகையில இயக்கி இருப்பது, அதுவும் தனது என்பதாவது வயசுல இவ்வளவு இளமையா ஒரு படத்த இயக்கியிருப்பது வியந்து பார்க்க வைக்குது. சமீபத்திய இந்தி படங்கள் எல்லாமே கொஞ்சம் மேற்கத்தைய கலாசாரத்தையும், முறை தவறிய காதல்களையும் மையப்படுத்தி வரும்போது, 90 களின் அதே பழைய காதல் கதையா கொஞ்சமும் சுவாரஷ்யம் குறையாமல் கொடுத்திருப்பது யாஷ் சோப்ராவின் அனுபவத்தை சொல்கிறது. இனிமேல் "எ யாஷ் சோப்ரா ரொமான்ஸ்" பார்க்க முடியாமல் போகுமே என்கிற ஏக்கம் எழுவதை ஏனோ தவிர்க்க முடியவில்லை.

ஜப் தக் ஹேய் ஜான் - A Yash Chopra Romance Dressed in Modern Outfits.

டிஸ்கி: என்னங்க இது? பதிவ எழுதி பப்ளிஷ் பண்ண பிறகு , திடீர் திடீர்ன்னு காணமா போகுது? "An error occurred while trying to save or publish your post. Please try again. Ignore warning"  ன்னு வருதே? 

Sunday, November 11, 2012

இந்திய சினிமாவின் நடன ஜாம்பவான்கள் : வீடியோ பதிவு/பகிர்வு

ஆடலும் பாடலும் இந்திய சினிமாவின் ரத்தத்தில் ஊறிப்போன ஒன்று. நாட்டிய பேரொளியில் தொடங்கி சாந்தனு, அதர்வா வரையில் நம்மை நடனத்தால் கட்டிப்போட்டவர்கள் பலர். கமல் ஹாசன், சிம்ரன், மாதுரி தீக்ஷித், கோவிந்தா, பிரபுதேவா, லாரன்ஸ் போன்ற பல காலத்தால் அழியாத நடனக் கலைஞர்களை கண்டது இந்த இந்திய சினிமா. இன்றைய காலகட்டத்தில் சிறந்த சினிமா நடனக் கலைஞர் யார் என்பது பல இடங்களில் ஒரு போட்டியாகவே நடந்து கொண்டிருக்கிறது. என்னை கவர்ந்த சிலரது நடனங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 

இளைய தளபதி:

ஷஹீத் கபூர்: 


ஹ்ரித்திக் ரோஷன்:


அல்லு அர்ஜுன்:


ஜூனியர் NTR:

ஸ்ரேயா சரண்:


லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்:




டிஸ்கி 1: சிம்பு, தனுஷ், பரத், ஜெயம் ரவி, வினீத், ரஹ்மான், பிரசாந்த், அர்ஜுன்,  நிதின், ராம், அனுஷ்கா ஷர்மா (இந்தி), இலியானா இன்னும் பல பேர் பட்டியலில் விடுபட்டிருக்கலாம். எல்லாரோட வீடியோவும் போட்டா அப்புறம் யூடியூப் எதுக்கு இருக்கு?

டிஸ்கி 2:  நெஞ்சுக்குள்ள ஒம்ம முடிஞ்சிருக்கேன் ரஹ்மான் பின்றாருப்பா....


விஷ் யூ ஆல் ஹாப்பி தீபாவளி!!

Monday, October 22, 2012

மாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]


ஒரு வாரமா எஸ்கேப் ஆகிட்டு இருந்த நான் போன வெள்ளிக்கிழமை நண்பர் ஒருவரின் வற்புறுத்தல் காரணமாக மாற்றான் படம் பார்க்கவேண்டிய துர்பாக்கிய நிலைமைக்கு ஆளானேன். நான் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம் என்னும் நல் எண்ணத்தில் கொஞ்சம் லேட்டா மாற்றான் பற்றிய எனது பார்வை இதோ உங்களுக்காக (சாவுடா...)

மாற்றான் படம் பற்றி ஒரு வரியில் சொல்லனும்னா.....

முதல் பாதி முற்று முழுதாக சூர்யா ரசிகர்களுக்கான விருந்து. இன்டர்வலுக்கு 10 நிமிடம் முதல் இருந்து இண்டர்வலுக்கு அப்புறம் வரும் 10 நிமிடங்கள் பேமிலி ஆடியன்சுக்காக. அதுக்கப்புறம் வருவது எல்லாம், இனிமேலும் இதுமாதிரியெல்லாம் படம் பார்க்க வருவீங்காளான்னு,  வந்த எல்லாருக்கும் சேர்த்து எலிக்கடி ட்ரீட்மென்ட். 

சூர்யா நல்லா நடிக்கறாரு, எந்த ரோல் குடுத்தாலும் நடிக்கரான்டான்னு தெரியாமா அசால்டா நடிக்கறாரு. ஒட்டிப்பிறந்த இரட்டையர்களாக பாடல் காட்சி, சண்டை காட்ச்சி அவுங்களுக்குள்ளேயே கட்டிப் புரண்டு சண்ட போடுறதுன்னு எதைக் குடுத்தாலும் கான்வின்சிங்கா பண்னறாரு, ஆனா அந்த ஒரே காரணுத்துக்காக அவர வச்சு இந்த இயக்குனர்கள் பண்ணற பரிசோதனையில செத்த எலி மாதிரி ஆகுறது அவரு மட்டுமில்ல, படம் பார்க்க போற நாமளும்தான்.





ஜெனெடிக் இன்ஜினியரிங், GM foods, விளையாட்டு வீரர்கள் ஊக்கமருந்து பாவிக்கறது, முடிக்கப்படாத விஞ்ஞான ஆராய்ச்சிகள பணம் சம்பாதிக்கரதுக்காக பாவிக்கறது, ரெட்டை சகோதரர்கள் போட்டி, பாசம் அது இது என ஒரு ஆயிரம் விசயத்த படத்துல சேர்த்து "என்னங்கடா உங்க கத?" ன்னு நம்மள மண்ணடைய பிச்சுக்க விட்டிருக்காரு இயக்குனர். எப்பவுமே இந்த "சராசரிகளுக்கான சராசரி சினிமாவுல" (உபயம் பிலாசபி) லாஜிக்கோ, விவாத கருவோ, கொள்கையோ பார்க்காத நமக்கு இந்த மசாலாவ எப்படி பரிமாறி இருக்காங்கன்னு பார்த்தா, கொஞ்சம் குழப்பம்தான் மிஞ்சுது. எது பிரதான கதைங்கற குழப்பம் நம்மள விட ஆனந்துக்கு அதிகமா இருந்திருக்கும்ன்னு தோணுது. ரெண்டாம் பாதி எனக்கு என்னமோ அயன் படத்த மறுபடியும் (ரீவைண்ட் காட்சிகள் இல்லாம) பார்குற பீலிங் தான். என்ன ஒரு வித்தியாசம் அது போர் அடிக்க முதல் முடிஞ்சிடுது, இது போர் அடிச்சு, போதை ஏறி, அப்புறம் அது தெளிஞ்சதுக்கப்புரமும் ஓடிக்கிட்டு இருக்கு. 

விசுவல் எபெக்ட், கிராபிக்ஸ் டிப்பார்ட்மென்ட் நல்லாவே வேலை செஞ்சி இருக்காங்க, ஒரு ரெண்டு காட்சிகள் தவிர ஒட்டு வேலைப்பாடு வெளியில தெரியல. (தசாவதாரம் க்ளைமாக்ஸ் சண்டை காட்சி எடுத்தவங்க கிட்ட கொஞ்சம் அட்வைஸ் கேட்டிருக்கலாம்). கஷ்டமான முதல் பாதி பாஸ் மார்க் வாங்குறதுக்கு முழுக்காரணமும் இந்த டீமும் சூர்யாவும்தான். ஹாரிஸ் ஜெயராஜ் கொஞ்சம் மெருகேறி இருக்காரு, வேகத்தடையா பாட்டுக்கள் இல்லை, பின்னணி இசை ஓகே. அந்த க்ளைமாக்ஸ் டங்கு டப்பா மியூசிக் தவிர. (அண்ணே ரஹ்மான் சிவாஜி படத்துக்கு அந்த இன்கம் டாக்ஸ் சீனுக்கு அந்த ம்யூசிக் போட்டாருன்னு நீங்க அயன்ல போட்டீங்க ஓகே, இன்னும் விடாம கண்டினியு பண்றீங்களே ஏன்?). மற்றும் படி ஹாரிஸ் படத்துக்கு ஒரு பிளஸ் தான். ஒளிப்பதிவாளர் திறமையானவர்தான், இரட்டையர் காட்சிகள், தீயே தீயே பாடல் இன்னும் பல கஷ்டமான இடங்களில் லைட் மாட்ச்சிங், கலர் மாட்சிங், இன்னும் இதர விதரங்கள் எல்லாம் பக்காவா இருக்கு, அவரால முடிந்த அளவு கேரி பண்ணி இருக்காரு, ஆனா பல இடங்களில் குருவி தலையில பனங்காய வச்சது தெளிவா தெரியுது. கஷ்டமான இடங்களில் ஸ்கோர் பண்ணறவரு லேசான இடங்களில், குறிப்பாக ஒத்த சூர்யா வரும் லாங் ஷாட்களில் (கால் முளைத்த பூவே பாடல்) கோட்டை விட்டிருக்கார். எல்லாமே அவுட் ஆப்  போகஸ். 


இயக்குனர் பல இடங்களில் ப்ரீ பிளானிங்ல அசத்தி இருக்காரு, நிறைய கஷ்டமான ஷாட் எல்லாம் யோசிச்சது மட்டுமில்லாம அத எப்படி திரையில கொண்டுவரலாம்ன்னு ரொம்பவே மெனக்கெட்டு இருக்காரு. அதுக்கு கண்டிப்பா பாராட்டுக்கள். ஆனா போஸ்ட் ப்ரோடக்ஷன்ல கோட்டை விட்டுட்டாரு. படம் ரப்பர் மாதிரி இழுவையா இருக்கறது கொஞ்சம் கூடவா உங்க கண்ணுக்கு படல சார்? (படம் திரைக்கு வரும் முன் ஒரு முழு படமா தேவையான காட்சி எது தேவையில்லாத காட்சி எதுன்னு பார்க்காம படம் ரிலீஸ் பண்ணி விமர்சனம் பார்த்துட்டு ட்ரிம் பண்றதுன்னா நீங்க எதுக்கு, எடிட்டர் ஒருத்தரே போதுமே). சூர்யா இல்லாம படத்துல வரும் காட்சிகளில் சச்சின் கடேக்கார் காட்சிகள் தவிர வேறு எதுவுமே கான்வின்சிங்கா இல்லை, எல்லாமே ரெண்டாம்பு பசங்க ஸ்டேஜ் டிராமா போட்ட கணக்கா செயற்கையா ஒட்டாம இருக்கு. இதனால்தான் சூர்யா நோ சொல்லியிருந்தா இந்த படத்த பண்ணி இருக்கமாட்டேன்னு சொன்னீங்களா? (நானும் எதோ இப்போ அதுதான் பாஷன், அதனாலதான் சொல்றீங்கன்னு நினைச்சேன்).

காஜல் அகர்வால், ரொம்ப குண்டாகி, வயசாகி ஆன்டி மாதிரி இருக்கா. டிரெஸ்ஸிங் சென்ஸ் கொஞ்சம் கூட சரி இல்ல, இன்னும் ஸ்டாண்டர்ட் எக்ஸ்பிரஷன்ஸ் எதையுமே மாத்தல. செம பிகரா இருக்கப்போ தெலுங்கு படமா நடிச்சிட்டு மொக்க ஆன்டியா ஆனதுக்கப்புறம் மட்டும் ஏந்தான் தமிழ் படம் நடிக்க வாராங்கன்னு தெரியல. (இந்த பொண்ணுக்காக நான் டார்லிங், பிருந்தாவனம், சாந்தமாமா, ஆர்யா 2 ன்னு பல தெலுங்குப்படம் பார்த்தேன்னு வெளியில சொன்னா என்ன கேவலமா பார்க்க மாட்டாங்களா?)

சூர்யா, எத்தன நாளைக்குத்தான் இவரு நல்லா நடிகாராருன்னு மட்டுமே சொல்லிக்கிட்டு இருக்கறது. அகிலன் கரெக்டர் செம, முன்பாதியில ரொம்ப கான்வின்சிங்கா அகிலன், விமலன்னு வித்தியாசம் காட்டின நீங்க ஏன் ரெண்டாவது பாதியில கோட்ட விட்டுட்டீங்க? அகிலன் மட்டும் உசிரோட இருந்தா படம் முழுக்க நீங்க அகிலன தானே கொன்டினியு பண்ணியிருக்கணும் அது ஏன் பாதியில விமலனா மாறி, அப்புறம் சூர்யாவா மாறிடுது? ஒரே ஆள்தான் மிச்சமிருக்கான் எப்படி பண்ணினாலும் ஒண்ணுதான்னு நினைச்சிட்டீங்களா? 

திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தி, படத்துல இருக்கற படு மொக்க காட்சிகள் இல்லாம பண்ணியிருந்தா ஒரு ஜாலியான சினிமா கெடச்சிருக்கும். படத்தோட மெயின் கதை என்னாதுங்குற குழப்பத்துனால பல நல்ல காட்சிகள் இருந்தும் வீரியம் இல்லாம இருக்கு. தேவையே இல்லாத பல மொக்க காட்சிகளுக்கு அதிக நேரம் செலவழிக்கப்பட்டு இருக்கு. அதெல்லாம் தவிர்த்து விட்டு பார்பதா இருந்தா படம் ஓகே. (ஒரு வேளை அந்த 23 நிமிஷம் ட்ரிம் பண்ணின புதிய படம் ஓகே வா இருக்கலாம்).
மற்றும் படி மொக்க படம் கெடயாது, சூப்பர் படமும் கெடயாது.

நம்ம ரேட்டிங்: 6/10.
டிஸ்கி: மெயின் ஸ்ட்ரீம் படங்கள்ல கதை என்கிற வஸ்துவ தேடுற கெட்ட பழக்கம் இல்லாததனால அத பத்தி எதுவும் பேச தேவையில்லைன்னு நினைக்கிறேன். படம் ரொம்ப நீளமா இருக்கறது எடிட்டர் தவறா, இயக்குனர் தவறான்னு தெரியல அதனால எடிட்டிங் பத்தியும் பேசல.


டிஸ்கி: கொடுத்த காசுக்கு படம் நஷ்டமில்ல. சூர்யா, டெக்னாலஜி, விசுவலைஷேஷனுக்காக ஒரு வாட்டி பார்க்க வேண்டிய படம், DVDல பார்க்குறது பெட்டர், போர்வார்ட் பட்டன் கைல இருக்கும்ல.



தொடர்புடைய பதிவுகள்

சூர்யா என்கிற சரவணன்: பிறந்தநாள் ஸ்பெஷல் பதிவு
ஏழாம் அறிவு - திரை விமர்சனம் (செமி போஸ் மார்டம்)
குள்ளப்பயலும் அவனது குள்ள நரித்தனமும்: ஒரு குட்டி கதை  
சூர்யாவின் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி: ஒரு பார்வை 

Saturday, September 1, 2012

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வாரா இளையதளபதி?

இணையத்தளங்களில் அதிகம் கலாய்க்கப்படும் நடிகர் இளையதளபதி விஜய். ஏன் நாமே கூட நெறைய பதிவுகளில் அவர கலாய்சிருக்கம். இது ஏன்னு நம்ம பார்வையில் ஒரு அலசல்.


ரொம்பத்தான் யோசிக்கிறாரு, கண்டிப்பா கோட்டைய புடிச்சிருவாரு.
இணையத்தளங்களில் விஜய் கலாய்க்கப்படுவதற்கு வேறுபட்ட மூன்று காரணங்கள் இருக்கின்றன

1. பப்ளிசிட்டி - விஜயை கலாய்த்து ஒரு பதிவு போட்டால் நிச்சயம் ஹிட்ஸ் எகுறும். பின்னூட்டப் பெட்டி நிரம்பி வழியும். இலகுவாக பிரபலம் அடையலாம். இது பதிவுலகில் உள்ள அனைவருக்கும் தெரிந்த ஒன்று.  இது ஏன் என யோசிப்பவர்களுக்கு புரியக்கூடிய ஒரு விடயம் விஜய் ஆதரவாளர்களும் விஜய் எதிரிகளும் ஏறக்குறைய சம அளவில் இருப்பதும், மிக அதிக அளவில் இருப்பதும். (ஊரு ரெண்டுபட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் தானே)

2. விஜய்  பண்ணும் அரசியல் - ரசிகர்களை பகடைக்காய்களாக்கும்  அரசியல் அண்ணன்கிட்ட நெறயவே இருக்கு. இதில் முக்கியமாக அப்பா - நம்ம அப்பா இல்லீங் தளபதியோட அப்பா, இந்த அப்பா, மகன் சம்பாதித்த கோடிக்கணக்கான ரசிகர்களை வைத்து பண்ணும் டிராமா. இது பலபேருக்கு பிடிப்பதில்லை. இங்கேயும் நஷ்டம் நம்ம தளபதிக்குதான்.

3. தளபதி கொடுத்த சமீபத்திய படங்கள்: இதுல ரெண்டு வகை இருக்கு. ஒன்னு பனமரம் படுத்தா பம்ப் அடிக்கற வகை. இன்னொன்னு நிஜமானா அன்பின் காரணமாக வருகிற ஏக்கம் (இந்த வசனத்த எழுதினவன் ஒரு கமல் ரசிகன் போல). நேத்து பேஞ்ச மழைக்கி இன்னக்கி மொளச்ச காளான் எல்லாம் ஹிட் குடுக்கறப்போ இவருக்கு  என்னாச்சிங்குற கவலை.

இது மூணும்தான் இளையதளபதி இணையத்தளங்களிலும், வலைப்பூக்களிலும்,  சோசியல் நெட்வர்க்களிலும் அதிகம் கலாய்க்கப்படுவதற்கு காரணமே. முதல் காரணத்துக்கு நாம ஒன்னும் பண்ண முடியாதது. ஒருவரின் பிரபலத்தில் ஒட்டிக்கொண்டு அவரை போற்றியும் தூற்றியும் பிரபலமாவது தமிழனுடைய மரபு, கலாசாரம். அது மாற்றப்பட முடியாத ஒன்று. இரண்டாவது காரணத்தை அலச நாம் அரசியல் பதிவர்கலில்லை, அந்த வேலைய வேறு நல்ல பதிவர்கள் கையில விட்டுட்டம். நாம நமது பிரச்சினைய மட்டும் விலாவாரியா பேசுவம். (அடங்கொக்காமக்கா, மறுபடியும் ஆரம்ம்பிச்சுட்டானுகளா, ச்சே  இந்த பதிவு இன்னம் முடியலியான்னு யோசிக்கறவங்க தயவு செய்தது ஒரு காப்பி குடித்துவிட்டு தொடரவும்) 

துப்பாக்கி வரட்டும்,  ஒங்கட டங்குவார அத்துபுடுறேன்
தளபதியோட படங்கள்ல நாங்க அதிகம் பார்த்த படம் காதலுக்கு மரியாதையோ, சிவகாசியோ கில்லியோ இல்ல, மாறாக வசீகராவும், சச்சினும்தான். வசீகரா தளபதி ஆக்ஷன் ஹீரோவா முழுசா ஜெயிக்கறதுக்கு முதல் வந்த படம். ரோமன்டிக்கா, ஆக்ஷனான்னு யோசிக்கிட்டு இருந்தப்போ வந்தது. சச்சின் இவரு ஆக்ஷன் ஹீரோவா சக்க போடு போட்டுக்கிட்டுரிந்தப்போ வந்தது. தளபதி பீக்ல இருக்கற நேரம் வந்தது. . சச்சின் (நான் என்ன பண்ண, இது மனுபாக்ச்சரிங் டிபாக்ட் - இந்த டயலக மறந்தவங்க இதுக்குமேல இந்த பதிவ படிக்காம இருக்கறது நலம்) நம்ம தளபதி ரொம்பவே நம்பிக்க வச்சி நடிச்ச படம், அந்த படம் வந்தப்போ தளபதி என்ன சொன்னார்னா "இந்த கதைக்காகதான் நான் இவ்வளவு நாளும் காத்துக்கிட்டிருந்தேன்" (இதேதான் வேட்டைக்காரனுக்கும் சொன்னாரு, சுறாக்கும் சொன்னருங்கிரீங்களா? சரி, டீல்ல விடுங்க). ஆனா அந்த படத்தோட ஒன்லைனர் குஷி படத்தோட ஒன்லைனரா இருந்ததாலேயும், ஸ்க்ரீன்ப்ளே நெறைய ஒற்றுமைகள கொண்டிருந்ததாலேயும் மக்கள் அந்த படத்த ஏத்துக்கல, ஆனா நிஜமாலுமே தளபதியோட காமெடி நடிப்பில் இந்த படம் ஒரு மயில் கல். ஆனா அத நம்ம தளபதி தப்பா புரிஞ்சுகிட்டாரு. மக்கள் நம்மள ஆக்ஷன் ஹீரோவா மட்டும்தான் பாக்குறாங்க ரொமாண்டிக் ஹீரோவா இனிமே நாம நடிக்கவே கூடாதுன்னு முடிவு பண்ணிட்டாரு. தொடர்ச்சியா ஆக்ஷன் படங்கள் குடுத்தாரு, இதுல சிவகாசி சரவெடி.. அப்புறமா ஒரு சறுக்கல், மறுபடியும் போக்கிரி, அப்புறம் சில சறுக்கல்கள், சமீப காலாமாகவே சிவகாசி மாஜிக் மறுபடியும் வர்க்அவுட் ஆகாதான்னு அதே பாணில தொடர் சறுக்கல்கள். அப்புறமா மறுபடியும் ரொமாண்டிக் ஹீரோ சப்ஜெக்ட்ல ஒரு கம்பாக் படம். சச்சின் தோல்வியில தளபதி எடுத்த தப்பான முடிவு இன்னம் அவர பாதிச்சிட்டு இருக்கு. காவலன் படம் பாத்திங்கன்னா இது புரியும், சச்சின்ல இருந்த துள்ளலும், இளமையும், குசும்பும் நிஜமா சொன்னா காவலன்ல இல்ல, கொஞ்சம் பயத்தோடயேதான் ஆக்ஷன் இமேஜ விட்டுகுடுத்திருப்பாரு. இதுதான் ஹிஸ்டரி.

சூப்பரு... தளபதியோட ஹேர் ஸ்டைல சொன்னேன்... 
ஜியாக்ரபி என்னனா (குருவி, வில்லு, வேட்டைக்காரன், சுறா) இதெல்லாம் சரியா ஓடாததுக்கு உண்மையான காரணம் எப்பிடி படம் நடிச்சாலும் ஓடும்னு நெனச்சிட்டு நடிப்புலயும் ஏன் நடனத்திலையும் கூட காட்டின போடுபோக்குதனம்தான். படத்துக்கு ஸ்கிரிப்ட், ஸ்க்ரீன்ப்ளே, டைரக்சன் (இதெல்லாம் எங்க விக்கிது?) முக்கியமே இல்ல நான் ஸ்க்ரீன்ல வந்து பஞ்சு டைலாக் பேசி ஆறு சண்ட போட்டா படம் ஓடும்னு நெனச்ச ஓவர் கான்பிடன்ஸ் (இதனால்தான் தல ஓவர்கான்பிடன்ஸ் ஒடம்புக்கு கெடுதின்னு சொன்னாரோ!). இதுக்கெல்லாம் மேல விஜயின் அரசியல அவரு படங்களுகுள்ளையும் ஓடவிட்டது. "தளபதி" அப்பிடின்குற இமேஜ் இருக்கற மாதிரியே பாத்து பாத்து கதைகள தேடினது, தேவையே இல்லாம அரசியல் அடித்தளம் போட தொடங்கினது இப்படின்னு அடுக்கிகிட்டே போகலாம். விஜயின் தோல்விகளுக்கு காரணம் அவரே ஒழிய வேறில்லை.

இப்ப நீங்க சச்சின் படத்தையும் சுறா படத்தையும் எடுத்து பாத்திங்கன்னா ஒங்களுக்கு புரியும். அக்ஷன் காட்சியா இருக்கட்டும், ரொமாண்டிக் காட்சியா இருக்கட்டும், காமெடியா இருக்கட்டும், நடனக் காட்சிகளா இருக்கட்டும், பாடல்களா இருக்கட்டும், நடிப்பா இருக்கட்டும் எதுலயுமே சச்சின்ல இருக்கற தரம், நேர்த்தி, உழைப்பு இவரோட அண்மை கால படங்கள்ல இல்லைங்குறது மறுக்கமுடியாத உண்மை. மீண்டும் நமக்கு அந்த துடிப்பான விஜய் வேண்டும், அது வரும் வரைக்கும் நாங்க அவர கலாய்க்கிறது தொடர்ந்துகிட்டே இருக்கும் (இது அன்புக்கலாய்).

காவலன், வேலாயுதம், நண்பன் வரிசைகள்ள "துப்பாக்கி"  அவற்றையும் தாண்டி  ஒரு மாபெரும் ஹிட் ஆகி விஜயோட தலையெழுத்த மாத்தும், அவரோட மட்டுமில்ல, தமிழ் சினிமாவோட, ஏன் குளிர்விட்டு போனதால ஆட்டம்  போடும் வேறு சில நடிகர்களோட தலையெழுத்தையும் சேர்த்து தீர்மானிக்கும்,  என்னும் நமது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வாரா  இளையதளபதி?

Monday, July 23, 2012

சூர்யா என்கிற சரவணன்: பிறந்தநாள் ஸ்பெஷல் பதிவு

இன்னிக்கி தேதில ஒரே சமயத்தில அதிகம் பேருக்கு  அதிகம் பிடித்தவரும் அதிகம் பேருக்கு அறவே பிடிக்காதவருமான ஒரே தமிழ் சினிமா பிரபலம் சூர்யா. அண்ணன் பத்தி நமக்கு பிடிச்ச, பிடிக்காத, சில விடயங்களின் தொகுப்பே இந்த பதிவு. அண்ணனோட பிறந்தநாள் சிறப்பு பதிவா இன்னிக்கி போடுறோம்.



சூர்யா மேல நமக்கு எப்பவுமே ஒரு சாப்ட் கார்னர் உண்டு. அதுக்கு என்ன காரணம்ன்னா சூர்யாவ விட சரவணன் என்கிற தனிமனிதன் சாதித்து காட்டிய ஒரு விஷயம்தான். எல்லாரும் ஒவ்வொருத்தர் கிட்டயும் ஒவ்வொரு திறமை ஒழிஞ்சிருக்கும், அது என்னன்னு கண்டுபிடிச்சு,வளர்த்து அதன் வழியே போறவன் ஜெயிப்பான்னு சொல்லுவாங்க. திறமை என்பது பிறப்பினால் வருவது என்பதே அனைவரும் ஏற்றுக்கொண்ட உண்மை. உழைப்பு அந்த திறமையை மெருகேற்றும் என்பதே அனைவரும் ஏற்றுக்கொண்ட ஒரு விடயம். ஆனால் திறமை என்பது வளர்த்துக்கொள்ளக்கூடியது மட்டுமல்ல உழைப்பினால் உருவாக்கிக் கொள்ளக்கூடியதும் என்று சாதித்துக் காட்டியவர் சூர்யா என்னும் சரவணன்.

பெரும்பாலும் இந்த பதிவ படிக்கிற நீங்க எல்லோரும் சூர்யா நேருக்கு நேர் படத்துல அறிமுகமான நாள்ல இருந்து அவர வாட்ச் பண்ணிக்கிட்டு இருக்கறவங்களாதான் இருக்கும். உங்களுக்கே தெரிஞ்சிருக்கும் சிவகுமார் குடுத்த மூஞ்சிய தவிர சூர்யா நடிக்க வந்தப்போ அவருக்கிட்ட எதுவுமே இருக்கல.  சரவணன் என்கிற தனி மனிதன் ரஜினி, விஜய், அஜித் போன்ற Born as Super Star கெடயாது, கமல், விக்ரம் போன்ற பிறப்பிலேயே நடிகனும் கிடையாது. உண்மைல சொல்லப்போனா பிலிம் இண்டஸ்றிகின்னு பிறந்த ஒருத்தர் கிடையாது. இன்னும் சொல்லப்போனா தம்பி கார்த்திதான் அந்த Born Star. சரவணன் இயல்பிலேயே ஒரு ரிஸர்வ்ட் பேர்ஸனாலிட்டி. தோல்விகளை கண்டு துவண்டு போகக்கூடியவர். தோல்விகளுக்கு அஞ்சியே எதயும் தொடங்க பயப்படும் ஒருவர். வாழ்கையை பற்றி ஒரு சரியான புரிந்துணர்வோ திட்டமிடலோ இல்லாதவர். சுருக்கமா சொன்னா எந்த வகையிலும் சினிமா துறைக்கு லாயக்கே இல்லாத ஒருத்தர். இன்னிக்கி இருக்கற சூர்யா என்கிற நடிகர பார்க்குறவங்களுக்கு அந்த சரவணனா இதுன்னு ஒரு ஆச்சர்யம் வரும். இது எல்லாமே சரவணனின் உழைப்பினால் வந்தது, தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்தும் தேடலினால் வந்தது.


நடிக்க வந்ததப்புறம்  தனது வாழ்கையில் வந்த ஒவ்வொரு தோல்வியையும் ஒரு பாடமா எடுத்துக்கிட்டு மறுபடி மறுபடி பல படிகள் முன்னேறிக்கொண்டிருக்காரு சூர்யா. நீ தெரிவு செய்த துறையில் உன் முழு ஈடுபாடுட்டுடன் உழை, வெற்றி உன்னை தேடி வரும் என்பதே சரவணன் நமக்கு கற்றுத்தந்த பாடம். யார் வேணும்னாலும் எந்த துறையில் வேணும்னாலும் சரியான பயிற்சியுடன் முழு ஈடுபாட்டுடன் உழைத்தால் வெற்றி பெறலாம், தனெக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொள்ளலாம். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு ஆசை இருக்கும், ஆசையும் திறமையும் சேர்ந்து வரும்போதே வெற்றியும் வரும். கண்டிப்பாக வெற்றி என்பது அதிர்ஷ்டத்தால் வருவதே. அந்த அதிர்ஷ்டத்தையும் உழைப்பால் உருவாக்கிக் கொள்ளலாம் என்பது சரவணனது வாழ்க்கை நமக்கு சொல்லும் பாடம். இந்த காரணமே சூர்யா என்கிற நடிகர் மீது நமக்கு ஒரு சாப்ட் கார்னர் இருக்க ஒரே காரணம். 

சமீபத்துல முடிவுக்கு வந்த நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி, சூர்யாவோட இன்னுமொரு பக்கத்த காட்டிச்சு(இது தொடர்பான நமது பழைய பதிவு ஒன்று). கார்த்தியோ, இல்ல இன்னுமொரு நடிகரோ, ஏன் சிவகார்த்திகேயனோ கூட அந்த ப்ரோகிராம பண்ணியிருந்தா அந்த ப்ரோக்ராம் ஒருவேள இன்னும் ஜனரஞ்சகமா அமைஞ்சிருக்கும், ஆனா சூர்யா அந்த ப்ரோக்ராம் பண்ணிததாலதான் தமிழ் நாட்டுல எதோ ஒரு மூலையில வாழுற மனிதர்கள் பத்தி, அவங்க வாழ்கைய பத்தி நமக்கு ஈசியா தெரிஞ்சு கொள்ள கூடியதா இருந்தது. அந்த ஷோ ஒரு பெரிய ஸ்டார் நடத்திய ஷோவாக இருந்த போதும், ஒவ்வொரு எப்பிஸோடிலும் கலந்து கொண்ட ஹாட் சீட் கான்ட்டஸ்டன்ஸே உண்மையான ஸ்டார்ஸாக வெளியே தெரிஞ்சதுக்கு சூர்யாவே ஒரு பெரிய காரணம்ங்கறது எனது தனிப்பட்ட கருத்து. அதோட மட்டுமில்லாம செலிப்ரிட்டி எப்பிஸோட் முடிவுல ஜெயிச்ச பணத்த வழக்கம் போல முதியோர் இல்லத்துக்கோ, அநாதை ஆசிரமத்துக்கோ குடுக்காம கல்விக்கும், வைத்தியத்துக்கும் பயன்படச் செய்த்ததிலும் சூர்யா பங்கு அதிகம் இருக்கும் என்பது எனது கருத்து.  இனிமே சூர்யாக்கிட்ட நமக்கு பிடிக்காத விடயங்கள பார்க்கலாம். 



அண்ணனோட சினிமா வெற்றி முழுக்க முழுக்க அண்ணனோட உழைப்பினால வந்ததே ஆனாலும், luck favors the brave என்பதற்கமைவாக அண்ணனோட வெற்றிக்கு அண்ணனோட போட்டி நடிகர்கள் சறுக்கினதும் ஒரு காரணம். இது பத்தி முன்பே ஒரு பதிவுல விரிவாக அலசி இருக்கோம். இந்த மேட்டர கொஞ்ச நாளாவே  அண்ணன் சுத்தமா மறந்துட்டாரு. அது நமக்கு அறவே பிடிக்கல. சமீப காலமா ட்ரெண்டு மாறிக்கிட்டு இருக்கு அண்ணாத்தே. இப்போ நீங்க உஷாராகலன்னா நீங்க இவ்வளவு நாளும் பண்ணினது எல்லாமும் வீணா போயிடும். கமல்ஹாசனிற்கு நடந்தது கூட உங்களுக்கு நடக்கலாம். கொஞ்சம் பார்த்துக்கங்க.  அப்புறம் இப்பொல்லாம் நீங்க நானும் நடிச்சிருக்கேன், நானும் நடிச்சிருக்கேன்னு கொஞ்சம் ஓவராவேதான் அலட்டிக்கறீங்க. அத கொஞ்சம் குறைச்சிக்காங்க. இந்த வாட்டியும் மாற்றான் பட ப்ரோமோஷன் அது இதுன்னு டிவில வந்து, இந்த படத்துல நடிக்கறதுக்காகா வியட்நாம் போனேன், அந்தார்ட்டிக்கா போனேன், அந்த தாய்லாந்து ட்வின்சு என்னோட கனவுல வந்து கோச்சிங் குடுத்தாங்க, ,தமிழ் சினிமா ரசிகனின் ரசனையை இந்த படம் ஒசத்தும்ன்னு கத விட்டீங்க கொல வெறி ஆயிடுவேன். 

இன்னுமொரு மேட்டர், இது அண்ணாத்தே பத்தி கெடயாது, அவரோட விசிறிகள் பத்தி. நிஜமா அண்ணனூட விசிறிகள்ள பாதிப்பேருக்கு மேல முன்னொரு காலத்துல தல அல்லது தளபதி விசிறிகளா இருந்தவங்கதான், இவங்கதான் அடிக்கடி இந்த தல தளபதி விசிறிகள சீண்டிப் பாக்குறவங்க, நீங்க கொஞ்சம் பக்குவமா இருந்துக்கங்க, இல்லன்னா உங்களாலேயே இப்போ அதிகம் பேருக்கு அண்ணாத்தைய புடிக்காம போயிருச்சு, இது நீண்டுச்சுன்னா, இப்போ தல தளபதி இருக்கற பார்முக்கு சூர்யா ரொம்ப கஷ்டப்பட்டு போயிருவாரு, பார்த்துக்கங்க. அப்புறம் சூர்யாவ கேவலமாக கலாய்க்கிற தல தளபதி பான்ஸ், சூர்யா என்கிற தனி மனுஷன், நடிப்புல தல தளபதிக்கு போட்டியா இருந்தாலும், சினிமாவ தாண்டி அவருக்கிட்டையும் எடுத்துக்குறதுக்கு நாலு விஷயம் இருக்கு, அதுக்காகவது கொஞ்சம் மரியாத குடுங்க.


அப்புறம் அண்ணனுக்கு ஒரு சின்ன ரிகுவெஸ்ட், உங்க ஷக்தி(பிதாமகன்), சின்னா(பேரழகன்), பாலையா(மாயாவி) காரெக்டர்ஸ் இன்னும்  அப்புடியே மனசுல நிக்குது, சீக்கிரமா அது போல ஒரு ஜாலி கேரக்டர் பண்ணுங்க சார். ரொம்ப நாளா காத்துக்கிட்டு இருக்கோம். 

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சூர்யா. மாற்றான் வெற்றிக்கும், தொடர்ச்சியான வெற்றிகளுக்கும் வாழ்த்துக்கள். 

டிஸ்கி: என்னோட வாழ்கையில நான் ஆசைப்பட்ட ஒரு துறைய தெரிவு செய்து ஒரு கட்டத்துல தவறான முடிவ எடுத்துட்டோமோ, நமக்கு இந்த துறையில திறமை இல்லையோன்னு யோசிக்கிட்டு இருந்தப்போ சூர்யாவோட வாழ்கதான் ஒரு பெரிய திருப்பு முனையா இருந்திச்சு, அதுக்கு என்றென்றும் கோடி நன்றிகள் சூர்யா.