Saturday, August 27, 2011

Avatar - குருவி படத்தின் தழுவலா? : பிரிச்சு மேயுறோம்


டிஸ்கி 1:  இந்த விஜய் பய (இது டைரக்டர் விஜய்) ஐ ஆம் சாம் படத்த அட்ட காப்பி அடிச்சாலும் அடிச்சாரு, கொஞ்ச நாளாவே இந்த பதிவுலக நண்பர்கள் தமிழ் சினிமா காப்பி பத்தி  நெறயவே எழுதுறாங்க. இந்த நேரத்துலதான் நமக்கு இப்பிடி ஒரு மேட்டர் மாட்டிச்சு. இது திருட்டு கலாசாரத்துக்கு எதிரான காத்திரமான பதிவு இல்ல. நம்ம பாணில களாய் கம் மொக்க பதிவு. "இது யார் மனதையும் காயப்படுத்துவதற்காக அல்ல".



2009 ம் ஆண்டு வெளியாகி உலகம் முழுக்க சக்க போடு போட்ட அவதார் படத்த பத்தி நான் சொல்லி உங்களுக்கு தெரிய தேவையில்ல. அதுக்கும் மேல வேணும்னா நான் அந்த படத்தோட கதை சுருக்கத்த நம்ம பாணியில சொல்லிடறேன். சுரங்கம் அகழ்வு தொழில் செய்யும் ஒரு கம்பெனி (கோச்சா அண்ட் கோ, ரெண்டுபேரு மட்டுமே இருந்து ஒரு கிரகத்தையே ஆட்ராங்கன்னு சொன்னா மொக்கயாகிடுங்குறதால  "கம்பெனி") விலையுயர்ந்த ஒரு கனிமம் (வைரக்கல்லுக்காக கிரகம் தாண்டி எல்லாம் போகமுடியாது, அதனால இது வேற "கனிமம்") இருக்கறத கண்டுபிடிச்சி வேற்று கிரகத்துக்கு போறாங்க (ஹை பட்ஜெட்ல படம் எடுக்கனும்னா கடப்பாவுக்கு போறதவிட வேற்றுக்கிரகம்தான் சரியா வரும்). அங்க இருக்கற மக்களை வேற இடத்துக்கு நகர வச்சாதான் அவங்களால அந்த கனிமத்த எடுக்க முடியும் (அங்க இருக்கறவங்கள கொத்தடிமைகளா பிடிக்க வேண்டிய அவசியம் இல்ல, ஏன்னா இது ஹை பட்ஜெட் படம், அவங்களுக்கிட்டயே நெறைய நவீன ஆயுதம் முதல் கருவிகள் வரை இருக்கு, ஆனாலும் பிரச்சின வேணுமில்ல அதுக்காகத்தான் நகர்த்துறது).  அப்பத்தான் நம்ம ஹீரோ கடவுள் மாதிரி வந்து கனரக ஆயுதங்கள அம்பு வில் கொண்டு (ஹாலிவூட்ல வெறும் கையால அடிச்சா ஏத்துக்க மாட்டாங்க அதனாலதான் அம்பு வில்லு) எதிர்த்து மக்களை காப்பாத்துவாரு. கொள்ளைகார கும்பல பூரா பேரையும் கிரகத்த விட்டே வெளியேத்துவாறு. இதுதான் கத சுருக்கம். இத எங்கயோ பார்த்த மாதிரி இருக்கா? 

அதுதாங்க நம்ம இளையதளபதி நடிப்பில், உதயநிதி ஸ்டாலின்  தயாரிப்பில், தரணி இயக்கத்தில் 2008 லையே வெளிவந்த குருவி படம். இத எப்பிடி லவட்டி இருக்காங்க பாருங்க. சுடச்சுட காப்பிங்குறது இதுதான். இந்த லட்சணத்துல இந்த படத்துக்காக பத்துவருஷம் தவமிருந்தேன்னு வேற பீலா. (யாருக்கிட்ட). கதையத்தான் சுட்டங்கன்னு பாத்தா கதைய மட்டுமில்ல காட்சிகள அப்பிடியே சுட்டிருக்காங்க. உதாரணமா நம்ம இளையதளபதி ஒரு பில்டிங் மேல இருந்து ஓடுற ட்ரயினுக்கு பாய்வாரே ஒரு ஆயிரம் அடிப் பாய்ச்சல், அத மட்டும் ரெண்டு எடத்துல வச்சிருக்காங்க, எங்கன்னு யோசிக்கறீங்களா? அதுதாங்க ஜாக் சாலி நூறடி ஒசரத்துல இருந்து நிலத்துக்கு குதிபாரே, பயிற்சிக்காக ஒரு தடவையும்

சண்டையில அடிபட்டு ஒரு தடவையும் (இதுல கொடும என்னனா நம்ம தளபதி சும்மாவே பாய்வாரு, ஆனா அத  நியாயப்படுத்துறேன் பேர்வழின்னு  நாவியோட எலும்பு பைபர், விழுந்தாலும் நொறுங்காது அது இதுன்னு ஜேம்ஸ் கேமரூன் கத விட்டுருப்பாரு). அப்புறம் இன்னொரு காட்சி, நம்ம தளபதி வில்லன் வீட்டுக்கு போறப்போ அங்க மாட்டிகிறுவாரு, அப்ப தேனிக்களோட எதிர்பாராத உதவி கெடச்சி தப்பிப்பாறு, அதே காட்சியதான் சண்டையில அடிபட்டு பின்வாங்குறப்போ வன விலங்குகளோட உதவி கிடைப்பது  மாதிரி மாத்தி வச்சிருப்பாங்க அவதார்ல. இப்படி கதையையும் சுட்டு காட்சியையும் சுட்டு படம் எடுக்கற இவன்(ஜேம்ஸ் கேமரூன்) எல்லாம் ஒரு மனுஷனா? இத தட்டி கேக்கவே யாரும் இல்லையா?


இனி இந்த ரெண்டு படத்துக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைய ஒரு அலசு அலசுவோம் 

குருவி படத்துல பிரதானமான பிரச்சினை வைரக்கல்ல அகழ்வு செஞ்சா அந்த எடத்துல நிலச்சரிவு ஏற்படும், இயற்கை சமநிலை பாதிக்கப்ப்படும்னுதான் மணிவண்ணனும் இந்திய அரசும் வைரக்கல் அகழ்வ எதிர்பாங்க, அதே பிரச்சினைதான் இங்கயும், கனிமத்த அகழ்றதால இயற்கை சமநிலை பாதிக்கப்படும்னுதான் போராட்டமே (இதுக்கு ஈவா, மரங்களுக்கிடயான நெட்வொர்கிங் அது இதுன்னு பந்தா வேறு. அப்புறமா மரம் செடி கொடில இருந்து மிருகங்கள் வரைக்கும் ஒரு லிங்காம், குருவியோட ஆரம்ப காட்சில நம்ம தளபதிக்கும் அவரு காருக்கும் இல்லாத லிங்கா?).

கதாபாத்திரங்களின் ஒற்றுமை
அப்புடியே இருக்கும் கதாபாத்திரங்கள்
  • குருவி/வேலு   - ஜாக் சாலி (அதே ரெண்டு ஷேடு - இன்னொருத்தர் பேருல கடப்பாக்குள்ள போற ஒரு பாத்திரம், குருவியா ஊர்சுத்துற ஒரு பாத்திரம் - இததான் ஆர்மியில இருந்தவர்னு மனுஷனாவும், அவதார இயங்குற நாவின்னும் வச்சிருக்காங்க)
  • கோச்சா -  பாகர் செல்ப்பிட்ஜ் (கார்பரேட் அதிகாரி, இவருதான் மெயின் வில்லன், இவரு சொல்றபடிதான் இந்த கூட்டமே இயங்குது, நம்ம சுமன், இது இந்தியாவுலயும் கெடக்குது அப்பிடின்னு வைரக்கல்ல வச்சி அடிக்கற அதே லெக்சர இவரு அந்த கணிமத்தோட ஒரு துண்ட கையில வச்சிக்கிட்டு அடிப்பாரு)
  • கொண்டா ரெட்டி/ கடப்பா ராஜா - கேர்னல் மில்ஸ் (பாதுகாப்பு உயர் அதிகாரி, எதுக்கு ரெண்டு வேற வேற பாதிரமுன்னு ரெண்டையும் ஒன்னாவே மாத்திட்டாங்க, இவங்கள கொல்றதுதான் மிக முக்கியமான போர்சன் படத்துலையே)
  • இளவரசு - த்ருடி (அதாங்க அந்த பொம்பள பைலட், ஒரே ஆம்புளங்களா இருக்குன்னு ஒரு பெண் கதாபாத்திரம், ரெண்டுபேருமே வில்லன்களுக்கு நெருங்கிய எடத்துல கையாள்களாக இருந்து ஹீரோவுக்கு உதவுறவங்க, ஆனா கடசில வில்லன்களுக்கு தெரியவந்து ரெண்டுபெரையுமே கொன்னுடுவாங்க)
சில மாற்றங்களுடன் இருக்கற கதாபாத்திரங்கள்
  • த்ரிஷா - நெய்த்திரி (வில்லன் தங்கச்சி ஹீரோயின் இங்க, மணிவண்ணன் கேரக்டர் பண்ணுபவரோட பொண்ணு ஹீரோயின் அங்க, நெய்த்திரி பாதி த்ரிஷா பாதி குருவி கலந்த கதாபாத்திரம், நம்ம தளபதி Zoro ஆக்ட் குடுத்து அங்கயும் இங்கயும் தாவுரத இந்த நாவி பொண்ணு பண்ணுது, அத பாத்து த்ரிஷா காதல் வயப்படுறத இதுல ஹீரோ பண்ணுறாரு, அதுதான் வித்தியாசம். அப்புறமா சென்னையில நம்ம தளபதி த்ரிஷாவ காப்பாத்துறது கம் வைரத்த எடுக்க முயர்ச்சிக்கிற சீனைத்தான் இந்த பொண்ணு வன விலங்குகள் கிட்ட இருந்து ஹீரோவ காப்பாத்துறது, ஹீரோகிட்ட இருந்து நாவிக்கள் போர் தந்திரத்தை  கத்துக்க முயர்ச்சிக்கிறதுன்னு வச்சிருக்காங்க)
  • விவேக் - நார்ம் ச்பெல்மேன் (இது காமெடிக்கு பயன்படல்லன்னாலும் விவேக்கோட பாத்திரத்ததான் கொஞ்சம் டெவலப் பண்ணி ஒரு ஆராய்ச்சியாளரா வச்சிருக்காங்க. இவரைத்தான் குடும்பத்த பாத்துகன்னு ஜாக் விட்டுட்டு போவாரு சாரி உள்ள இருந்து உளவுபார்க்கன்னு)
  • சரண்யா - Dr கிரேஸ் (சரண்யா காரக்டர் படு  மொக்கங்குரதால விஞ்ஞானி ஆக்கி டெவலாப் பண்ணியிருக்கராம் ஜேம்ஸ் கேமரூன். கெட்டவங்க கூட்டத்துல இருந்து ஹீரோக்கும் ஹீரோயினுக்கும் உதவி செய்யற ஒரு பொம்பள, குருவியில கணவனையே எதிர்த்து அப்பிடிங்குரத இங்க ஆராச்சிக்காக பணம் குடுக்கற கம்பனியையே எதிர்த்து அப்பிடின்னு திரிச்சிருக்காங்க)
  • கொண்டா ரெட்டி தம்பி - நாவி போராளி (இவரு முன்பாதில கொண்டா ரெட்டிதம்பி மாதிரி வில்லத்தனம் பண்ணுவாரு, த்ரிஷா கூட நடந்த நிச்சயதார்த்தம் கூட பங்கம் இல்லாம அப்பிடியே வச்சிருப்பாங்க, பின் பாதில அப்பிடியே ரிவேர்ஸ் அடிச்சு கடப்பா நண்பர்கள் கதாபாத்திரமா மாறியிருப்பாரு, இவரோட இன்னும் ரெண்டு மூணு கொசுறு பாத்திரங்கள் வேற) 

படத்தைதான் சுட்டாங்கன்ன போஸ்டரையும் விட்டு வாக்கல்ல, நாம மேல போட்டிருக்கற ரெண்டு ஒப்பீட்டு படங்களையும் நல்லா குறுகுறுன்னு உத்துப்பாருங்க, உங்களுக்கே புரியும். முதல் படத்துல நம்ம தளபதி சேத்துல இருந்து எந்திரிச்சு வாரதால அவரு முகத்துல ஓடுற கோடுகளகூட  அப்பிடியே வச்சிருக்காங்க (இது நாவிக்களோட ஒடம்புல இருக்கறதாம் அப்புடின்னு ஒரு வெளக்கம் வேற). அப்புறம் அந்த பாயுற படங்கள். மூணாவது படத்துல ஹீரோ ஹீரோயின்ன கொஞ்சம் முன்னுக்குப் பின்னுக்குன்னு ஆர்டர மாத்தி தப்பிச்சிருக்காங்க. அதுல கூட த்ரிஷா குடுக்கற லுக்கையும் கழுத்துக்கு முன்னால முடிய போட்டிருக்கறதையும் கூட விட்டு வக்கல.

குருவி படத்த சுடுறதுன்னு முடிவு பண்ணினதுக்கப்புறம் கதைய கொஞ்சம் டெவலப் பண்ணறதா நெனச்சி இவங்க இந்த கதைக்கு கொஞ்சம்  கிட்டவா வாற இன்னொரு தமிழ் படத்தோட (இது ஒரு மலையாளப்பட ரீமேக்) கதைய அப்பட்டாமா தழுவியும்  இருக்காங்கன்னு சில பதிவுகள் சொல்லுது. (1 2 )

இதுக்கும் மேல வேணும்னா நீங்களே ரெண்டு படத்தையும் எடுத்து பாத்துட்டு ஒரு முடிவுக்கு வாங்க. என்னதான் இண்டேளிஜண்டா பண்ண முயற்ச்சித்தாலும் எங்க கண்ணுக்கு என்னவோ குருவி படத்தோட அட்ட காபிதான் அவதார்னு படுது

அவதார் படம் எது எதோட தாக்கம்னு இயக்குனர் ஜேம்ஸ் கமரூன் இப்படிசொல்லியிருக்காரு "It owes a lot to good, old-fashioned, adolescent adventure storytelling like Rudyard Kipling's The Man Who Would Be King, Lawrence Of Arabia and John Carter Of Mars. There are also a lot of very recognizable archetypes in the story: the American frontier and the conflict between a technical, military civilization and a nature-aligned indigenous population" இதுல குருவி படத்தோட பெயரே இல்லைங்கிறது மிகவும் கவலை தருவது.

இந்த திருட்ட பத்தி  நாங்க உதயநிதி சாருக்கு tweet பண்ணி இருக்கோம். அவரு இத கண்டுக்கலனாலும் இந்தமாதிரி திருட்டுக்கள் ஒழியும்வரை இந்த முயற்சி தொடரும்.


டிஸ்கி 2 : ஒருவேள கிறிஸ்தோபர் நோலன் சொன்னதுபோல ஜேம்ஸ் கமரூன் கனவுல நம்ம ஆளுங்க புகுந்து அவதார் கதைய திருடினாலும் திருடியிருப்பாங்க (எதோ ஒரு வலைப்பூவில் முருகதாஸ் பற்றி இவ்வாறு படித்ததாக ஞாபகம் - நான் திருடலப்பா)

டிஸ்கி 3 : அவதார் படம் 1995 ல் வெளியான Pocahontas என்கிற காட்டூன் படத்தின் அட்ட காப்பின்னு fail blog கூறுகிறது.  இத வச்சிக்கிட்டு குருவி படம் அந்த கார்டூன் படத்தோட காபின்னு நம்ம பதிவுலக நண்பர்கள் சத்தியம் பண்ணி சூடம் ஏத்தினாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை. (வியட்நாம் காலனி தப்பிச்சுது, ஏன்னா இது 1992 வந்தது)

Real Santhanam Fanz குறிப்பு: இத படிச்சிட்டு இந்த திருட்டு கலாசாரத்துக்கு நாங்க ஆதரவாளர்கள் என்ற முடிவுக்கு வர வேண்டாம். எமது வலைப்பூவில் திருட்டுக்கு எதிரான போராட்டம் ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டது. விரைவில் இது பற்றிய ஒரு முழு நீள பதிவோடு உத்தியோகபூர்வ(???) யுத்தம் ஆரம்பிக்கும். வரவிருக்கும் முக்கிய படங்கள் மூணும் திருடப்பட்டவையாக இருக்கலாம் என்ற அச்சம் பதிவுலக நண்பர்கள் மத்தியில் இருக்கிறது, எதிர்கொள்ள நாங்களும் தயாராகிக்கிறோம்.

உங்கள் ஓட்டும் கமெண்டும்தான் எங்களுக்கான உற்சாக டானிக், so please VOTE&COMMENT.


Sunday, August 21, 2011

சந்தானத்தின் முதல் திரைப்படம் எது? வெளிவராத உண்மைகள், எக்ஸ்க்ளுசிவ்.

தலைவர் சந்தானம் கடந்த இரண்டு மூன்று வருஷமா தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாதவரா மாறிட்டாரு. இன்னைக்கு  ஒரு படத்திற்கு பூஜை போடும் தயாரிப்பாளரோ அல்லது இயக்குனரோ  ஹீரோ , ஹீரோயின், இன்ன பிற நடிகர்களை எல்லாம் டிசைட் பண்ணறதற்கு  முதல்லயே நம்ம சந்தனாத்திற்கு அட்வான்ஸ் குடுத்துடறாங்க. (அவரும் இதுதான் சான்ஸ்னு லட்சங்களை தாண்டி கோடிகளுக்கு போய்ட்டாரு). உடலை அஷ்டாங்கம் செய்யாம, கருத்து சொல்றேன் பேர்வழின்னு படுத்தி எடுக்காம அவருக்குன்னு டயலாக் டெலிவரில ஒரு புதிய ஸ்டைலை வச்சிக்கிட்டு வெற்றி நடை போடுறாரு. இவரது காமெடிக்கு ரசிகர்கள் பட்டாளம் ஒவ்வொரு நாளும் பல மடங்குல கூடிகிட்டு இருக்கு எங்குரதுக்கு பேஸ்புக் பக்கங்களே சாட்சி. அவ்வளவு ஏன்  நீங்க வாசிச்சிகிட்டு இருக்குற இந்த ப்ளாக்கே சந்தானத்தின் ரசிகர்களால் சந்தானத்தின்  ரசிகர்களுக்காக எழுதப்படற ஒரு ப்ளாக். இந்த பதிவுல அவர பத்துன ஒரு முக்கியமான உண்மைய, அதாவது இதுவரைக்கும் யாருக்கும் தெரியாத ஒரு உண்மைய சொல்ல போறோம்.

சந்தானத்திடம்  உங்கள் திரையுலக குரு யாருன்னு கேட்டா உடனே அவரு சிம்புவின் (STR) பேரை சொல்வாரு. அதுக்கு பல காரணங்கள் இருக்கு . முக்கியமான காரணம் மன்மதன். ஆமா அதுதான் சந்தானத்தை தமிழ் சினிமா அடையாளம் கண்டுகொண்ட முதல் படம். பொபி என்னும் கேரக்டரில் சந்தானம் முழு நீளகாமெடியனாக நடித்து வாயுள்ள பிள்ளை என தன்னை நிரூபித்த முதல் படம் (இந்த படத்தில் தலைவர் கவுண்டரும் இருக்காரு, ஆனா அவரு நடிச்ச சில சீன்களை சிம்பு வெட்டி போட்டுட்டாரு, அப்புறம் அது ஒரு பெரிய பிரச்சினையானது வேற கதை) . So இந்த படத்துல இருந்து சந்தானத்த ஆப்சேர்வ் பண்ண ஆரம்பிச்சவுங்க எல்லாம் சந்தானத்தின் முதல் படம் மன்மதன்னு நெனைசாங்க. இது 2004 தீபாவளிக்கு வெளிவந்த படம்.

ஆனா கொஞ்ச விவரம் தெரிஞ்சவர்கள், சந்தானத்தை பற்றிய நியூஸ்களை தேடி படித்தவர்கள், மற்றும் பேசாத கண்ணும் பேசுமே (ஹீரோ:மோனல், ஹீரோயின்:குணால்) என்னும் மொக்க படத்தை பார்த்தவர்கள் எல்லாம் சந்தானம் அதுல ஒரு துக்கடா கேரக்டரில் நடித்ததை அறிந்திருப்பார்கள். விக்கிபீடியால கூட இதுதான் இவரின் முதல் படமா குறிப்பிடபட்டு இருக்கு (அது யாரோ ஒரு புண்ணியவான் அவருக்கு தெரிஞ்ச விசயத்தை எடிட் பண்ணி போட்டு இருக்காரு, விக்கியை யாரு வேணும்னாலும் எடிட் பண்ணலாம்ங்க).   இந்த படத்தின் இயக்குனர் முரளி கிருஷ்ணா. இவரு 2001ல் பார்வை ஒன்றே போதுமே என்ற பாடல்களால் ஹிட் ஆன ஒரு படத்தை கொடுத்தவரு. பார்வை ஒன்றே போதுமே வெற்றியின் பின் அதே நடிகர்களை வைத்து அவசர அவசரமாக எடுத்த படம்தான் பேசாத கண்ணும் பேசுமே. இது ஒரு மொக்க படம். இந்த படத்துல இவரு செஞ்ச ஒரே ஒரு நல்ல காரியம் சின்ன பாப்பா பெரிய பாப்பா, காஸ்ட்லி மாப்பிளை மற்றும் சில விஜய் டிவி ப்ரோக்ராம்களில் தலைகாட்டியிருந்த ஒரு காமெடி நடிகருக்கு சின்னதா ஒரு ரோல் குடுத்து இருந்தாரு. அதுதான் நம்ம சந்தானம். இந்த படம் வெளிவந்த ஆண்டு 2002, பார்வை ஒன்றே போதுமே வெற்றியின் பின் அவசர அவசரமாக தயாரிக்கப்பட்டு ஒரு வருடத்திற்கும் குறைவான கால பகுதியில் ஷூட்டிங் முடிக்கப்பட்டு வெளிவந்த படம் இது. அப்புடி பார்த்தா சந்தானம் முரளி கிருஷ்ணாவை தானே தன்னோட திரையுலக குருன்னு சொல்லனும் அப்புறம் ஏன் அவரு சிம்புவை சொல்றாரு? இங்கதான் ஒரு முக்கியமான விசயமே இருக்கு.

ஆமா சந்தானம் முதல் முதலாக தமிழ் சினிமாக்காக கமெரா முன்னுக்கு நின்ன படம் இது ரெண்டும் இல்ல, அது வேற. ஆமாங்க சிம்புதான் சந்தானத்தின்  குரு. சிம்பு மட்டும் இல்ல, அவுங்க அப்பா டீ.ஆரும்  குருதான். அது எப்புடின்னு கேக்குரவுங்களுக்கான பதில் கீழ உள்ள படத்தில இருக்கு.



ஆமாங்க. டி. ஆர் அவரு மகன் சிம்புவை ஹீரோவாக அறிமுகப்படுத்துவதற்காக இயக்கி, தயாரித்து, எழுதி, ஒளிப்பதிவு செஞ்சி, இசை அமைத்து  அப்புறம் இருக்குற எல்லா வேலைகளையும் செஞ்சு எடுத்த படம்தான் காதல் அழிவதில்லை. இந்த படத்தின் ஷூட்டிங் 2001ன் முற்பகுதியிலேயே தொடங்கிவிட்டது. இந்த படத்துக்காகத்தான் சந்தானம் முதல் முறையா கமெரா முன்னாடி நின்னாரு. ஆனா இந்த படம் ரிலீஸ் ஆனது 2002 தீபாவளிக்கு. அதாவது பேசாத கண்ணும் பேசுமேக்கு பிறகு. ஆனாலும் சந்தானம் கமெரா முன்னாடி நின்ன படம்ங்குற வகைல இதுதான் அவரின் முதல் படம். அப்புறம்தான் மன்மதன். என்னா ஷாக்கா இருக்கா? அதுதான் Real Santhanam Fanz. இந்த படத்தில் முதல் காட்சி முதல் எண்டு கார்டு வரை  சில காலேஜ் சீன்களில் சந்தானம் சிம்புவின் நண்பராக வருவார். அனால் இந்த படத்தில் இவருக்கு பெருசா டாக்கி போர்ஷன்ஸ் இல்லை. சும்மா வந்து நிப்பாரு, சிரிப்பாரு, உட்காருவாரு, போவாரு, அதாவது பத்தோட பதினொன்னு, அத்தோட இது ஒன்னு மாதிரி கேரக்டர்.
இன்னும் சில படங்கள், உங்களுக்காக எக்ஸ்க்ளுசிவ்:










அதாவது, பட ரிலீஸ் படி பார்த்தல் முதல்படம்: பேசாத கண்ணும் பேசுமே. ரெண்டாவது படம்: காதல் அழிவதில்லை. மூணாவது படம்: மன்மதன்.
ஷூட்டிங் ஆர்டர் படி பார்த்தல்: முதல்படம்: காதல் அழிவதில்லை. ரெண்டாவது படம்: பேசாத கண்ணும் பேசுமே. மூணாவது படம்: மன்மதன்.
எப்புடி  பார்த்தாலும் இது வரலாற்றில் விட்டு போன ஒரு விஷயம். நாங்க எங்க சந்தானம் ரசிகர்கள் மற்றும் ப்ளாக் வாசகர்களுக்காக அறியத்தருகிறோம். இந்த மேட்டருக்காக கண்டிப்பா நீங்க ஓட்டு போடுவீங்கன்னு தெரியம், அதுக்கு இப்பவே அட்வான்ஸ் தேங்க்ஸ். ஹி ஹி.

டிஸ்கி:இந்த விசயத்த நாங்க இப்ப விக்கிபீடியால எடிட் பண்ணி எழுதி இருக்கோம். WIKI SANTHANAM LINK
டிஸ்கி  2: இந்த நன்றி கடன்களுக்காக தான் சிம்பு எப்ப டேட் கேட்டாலும், சந்தானம் கொடுப்பாரு(வரிசையா வானம், ஒஸ்த்தி, வேட்டை மன்னன் ). அது மட்டுமில்ல டி.ஆர் இன் காவியமான வீராசாமியில் சந்தானம் நடித்ததுக்கும் இதே நன்றி கடந்தான் காரணம்.


Tuesday, August 16, 2011

ஜெயிக்கபோறது விஜய்யா, அஜித்தா, சூர்யாவா? - ஒரு எக்ஸ்க்ளுசிவ் அலசல்



நம்ம எல்லாருக்குமே தெரியும் கடந்த மூணு நாலு வருஷமா நம்மள ஏமாத்தாத தமிழ் சினிமா நட்சத்திரங்கள் மூணே பேருதான். முதலாவது சூப்பர் ஸ்டார், ரெண்டாவது சூர்யா அப்புறம் லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் நம்ம தலைவர் சந்தானம். மத்தவங்க எல்லாருமே நம்ம பீலிங்க்ஸ்சோட வெளயாடுரதையே பொழப்பா வச்சிட்டிருக்காங்க. சிலம்பரசனும், கார்த்தியும் சமீபத்துல நம்மள ஆச்சர்யப்படுத்துனாங்க. அவங்க மட்டுமில்ல நாங்களும் இருக்கம்னு இந்த வருஷம் தலையும் தளபதியும் சொல்லியிருக்காங்க (மங்கத்தாவையும் வேலாயுதத்தையும் தான் சொல்றோம்). இந்த நேரத்துலதான் சூர்யாவோட ஏழாம் அறிவு மாட்டிகிரிச்சு. வாரணம் ஆயிரத்துக்கு அப்புறம் இவரோட தெறமய நிரூபிக்க இந்த படம் தான் வருது. இந்த நேரத்துலதான் நம்ம தல ரசிகர்களும் தளபதி ரசிகர்களும் சூர்யாவுக்கு எதிரா போர்க்கொடி தூக்கியிருக்காங்க. இந்த முக்கியமான சூழ்நிலையில நாம ஒரு பிளாஷ் பாக் போடலாம்னு முடிவு பண்ணியிருக்கம். இது பின்னணி பற்றிய ஒரு அலசல். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பதிவு. சினிமா பற்றிய புரிதலுக்கான ஒரு தொடர் பதிவின் ரெண்டாவது பதிவு. தேவை கருதி கொஞ்சம் சீக்கிரமாவே போடுறம்.

இந்திய சினிமாவுல ரெண்டு வகையான ஹீரோக்கள் இருக்காங்க, ஒன்னு ஆக்டர் இன்னொன்னு ஸ்டார். நம்ம MGR ஒரு ஸ்டார், சிவாஜி சார் ஒரு ஆக்டர். அப்புறம் சூப்பர் ஸ்டார் ஒரு ஸ்டார், உலக நாயகன் ஒரு ஆக்டர். இந்தி சினிமாவுல பாத்தீங்கன்னா ஆமீர் கான் ஒரு ஆக்டர், சல்மான் கான் ஒரு ஸ்டார். இப்பிடி ரெண்டு வேறுபட்ட ஹீரோக்கள் இருந்துக்கிட்டேதான் இருப்பாங்க, அந்த வரிசையில்தான் நம்ம இளையதளபதி ஒரு ஸ்டாராவும் அஜித் குமார் ஒரு ஆக்டாராவும் உருவாகிட்டு வந்தாங்க. படையப்பாவுக்கு அப்புறம் சூப்பர் ஸ்டார் குடுத்த வெற்றிடம் தெனாலி தவிர உலக நாயகன் குடுத்த தலைவலி காரணமா தல - தளபதி காம்பினேஷன் சூப்பர் ஹிட் ஆச்சி. அவங்க அவங்க, அவங்க அவங்க வேலைய சரியா செஞ்சிட்டு இருந்தாங்க. இந்த எடத்துலதான் நம்ம சூப்பர் ஸ்டாரோட பாபா படம் வந்திச்சு. யாருமே எதிர்பார்க்காத ஒரு தோல்விய சந்திச்சிச்சு. உடனே தல தளபதில தொடங்கி அதுக்கு அடுத்த தலைமுறையும் ரெடி அப்பிடின்னு நாம நெனச்ச சிம்பு தனுஷ் காம்பினேசன் வரைக்கும் எல்லாருக்கும் சூப்பர் ஸ்டார் நாற்காலி மேல ஆச வந்திச்சு. இந்த போட்டில எல்லாருமே ட்ரை பண்ணிக்கிட்டு இருந்தப்போ இளைய தளபதிதான் ஜெயிச்சாரு. கொஞ்சம் லேட்டவே புரிஞ்சிக்கிட்டாலும் நமக்கு எதுக்கு வீண் வம்புன்னு கொஞ்சம் ஒதுங்கியே இருந்த தலயும் அப்பப்ப ஹிட் குடுத்துக்கிட்டே இருந்தாரு.


இந்த எடத்துலதான் நந்தா படத்துக்கப்புறம் ஒரு நடிகன்குற அந்தஸ்த பெற்ற சூரியாவும் ஒரு ஆர்வத்தில "ஸ்ரீ" அப்பிடின்னு ஒரு படம் நடிச்சாரு, ஊத்திகிச்சு. ஆனா அவரு ஒடனே சுதாகரிச்சிட்டு சைலண்டா அவரோட கேம ஸ்டார்ட் பண்ணினாரு. இவர போலவே விக்ரமும். சூப்பர் ஸ்டார் நாற்காலி போட்டி ஒரு பக்கம் இருக்க இவங்க ரெண்டுபேரும் ஆக்டர் நாற்காலிய குறி வச்சு சைலண்டா முன்னேறிகிட்டே இருந்தாங்க. புதுசு புதுசா கத பண்றது, படத்துக்கு படம் வித்தியாசம் காட்டி நடிக்கிறது, அப்பிடி இப்படின்னு ஜமாய்ச்சிக்கிட்டு இருந்தாங்க. ஒருபக்கம் இளையதளபதி சூப்பர் ஹிட் குடுத்துகிட்டு இருந்தாரு, இன்னொரு பக்கம் இவங்க குடுத்துக்கிட்டு இருந்தாங்க. இந்த நேரம் பாத்து நம்ம தல ரேஸ்ல கார் ஓட்ட போயிட்டாரு. இந்த போட்டியில இடையிலேயே விக்ரமும் லேசா ஸ்லிப் ஆக சூர்யா மேல வந்தாரு. பாபா படத்தோட தோல்வி உருவாக்கி விட்ட ஸ்டார் வெற்றிடத்த இளைய தளபதி நிரப்பிகிட்டு இருந்தாலும், நம்ம உலக நாயகன் ஸ்டார் ஆக்டர்ங்கிற மூணாவது வகைய உருவாக்க (அதுதாங்க ஷாருக் கான் வகை) ட்ரை பண்ணிக்கிட்டு இருந்தாரு (நீண்ட நாளா உலக நாயகனுக்கு ஸ்டார் கனவு இருந்திச்சி, ஆனா சூப்பர் ஸ்டார் கூட அந்த விசயத்துல போட்டி போடுறது கஷ்டம்குறத நல்லாவே தெரிஞ்சு வச்சிருந்தாரு). நம்ம தலையும் அப்ப அப்ப இதேமாதிரி படங்கள் குடுத்துட்டு இருந்தாரு. இப்பிடியே போய்கிட்டு இருந்தப்போதான் சூப்பர் ஸ்டார் சிவாஜி மூலமா திரும்பி வந்தாரு. சிவாஜி படத்த பாத்திங்கன்னா அதுல வெறும் ஸ்டார் மட்டும் தெரிய மாட்டாரு, ஒரு நடிகனா ரஜினி சாரோட உழைப்பும் தெரியும். (ஒரு ஸ்டார் எப்பிடி நடிச்சாலும் படம் ஓடும்குற மாயையைய பாபா உடைச்சி விட்டுருந்துச்சு). Rajini is Back அப்பிடின்னதும் தளபதி மார்கட் ஆட்டம் காண தொடங்கிச்சு. இதுக்கு சிவாஜி படத்துல ஸ்டார் என்பதை தாண்டி தெரிஞ்ச ரஜனியோட உழைப்பும், படத்துல உள்ள நேர்த்தியும் தளபதி படங்கள்ல மிஸ் ஆனதுதான் முக்கிய காரணம். உலக நாயகனும் சூப்பர் ஸ்டாரும் ரெண்டு மூணு வருஷத்துக்கு ஒரு படம்தான்னு சுருங்கிப்போயிட்டப்புறம் தமிழ் சினிமாவின் முழு அடையாளமும் சூர்யாதான் அப்பிடின்குற ஒரு மாயை உருவாக தொடங்கிச்சு. இதுக்கு வாரணம் ஆயிரம் படமும், இந்தி கஜினியோட வெற்றியும் முக்கிய காரணங்கள். இந்த எடத்துல ஒரு உண்மைய சொல்லி ஆகணும், சூர்யாவோட இந்த முன்னேற்றத்துக்கு எப்படி அவரோட கடின உழைப்பு காரணமோ அதே அளவுக்கு விக்ரம், அஜித், மற்றும் தளபதியோட தோல்விகளும் காரணம்.
இந்த கால கட்டத்துலதான் அயன் அப்பிடின்னு ஒரு பெரிய வெற்றிப்படம் வந்திச்சு. இப்போ சூர்யாவுக்கு இன்னுமொரு பொறுப்பும் வந்திச்சு, அது என்னன்னா எல்லா தரப்பினருக்கும் லாபம் சம்பாதிச்சு குடுக்கற படங்கள் குடுக்கனும்குற பொறுப்புதான் (இதுல பட தயாரிப்பு, விநியோகம் அப்பிடின்னு பிலிம் பிசினெஸ் தொடர்புடைய அரசியல் காரணங்கள் நெறயவும் இருக்கு, அது நமக்கு தேவ இல்லாதது). அது வரைக்கும் அந்த பொறுப்ப ஏத்துகிட்டு இருந்தவுங்க நம்ம சூப்பர் ஸ்டாரும் இளைய தளபதியும்தான். அந்த பொறுப்பு வந்ததும், இவரு ஒரு படம் குடுத்தாரு, ஆதவன் அப்பிடின்னு, அது ஒரு ரவிகுமார் படம். ரவிகுமார் படத்துல நம்ம என்ன எதிர்பார்பமோ அது இருந்திச்சி, ஆனா சூர்யாவுக்கு அது ஒரு பொருத்தமில்லாத படம். ஆக்டரா இருந்த சூரியாவுக்கு ஸ்டார் சாயம் பூசி ஸ்டார்-ஆக்டர் அக்கின படம். தளபதி ரசிகர்களுக்கு சூர்யா மேல கோபம் வாரத்துக்கு காரணமா இருந்த படம். அடுத்தபடம் சிங்கம். படத்துலயும் அவரோட பெர்போர்மான்ஸ் நல்லா இருந்ததால படமும் ஓடிச்சு. தளபதி ரசிகர்கள் இன்னமும் கடுப்பாகிட்டாங்க. இது நமக்கு சரிப்பட்டு வராதுன்னு புருஞ்சிக்கிட்ட சூர்யா அவரோட பழைய ரூட்டுக்கே திரும்பிட்டாரு. ரத்த சரித்திரம்னு ஒரு படம் பண்ணினாரு, ரிசல்ட் அவ்வளவு நல்லா வரல, ஆனா நிஜத்த சொல்லணும், சூப்பரா நடிச்சிருந்தாரு சூர்யா. நான் விஜய்க்கு போட்டி இல்லன்னு சொல்ல ரொம்பவே ட்ரை பண்ணியிருந்தாரு. அதோட எழாம் அறிவு, மாற்றான் அப்பிடின்னு ரெண்டு மாறுபட்ட படங்கள் கையில.

இப்பதான் நம்ம எந்திரன் சார் வந்தாரு. இந்தப் படத்துல ஒரு நல்லது நடந்திச்சு. எந்திரன் படத்த எடுதிக்கிட்டீங்கன்ன அது ஒரு ஸ்டார் படமே இல்ல, சிவாஜி படத்தைவிட அதிகமானதும் கடினமானதுமான உழைப்ப கொட்டியிருந்தாரு சூப்பர் ஸ்டார். இது சுப்பர் ஸ்டார் நாற்காலிக்கு போட்டி போட்டுக்கிட்டுருந்தவங்களுக்கு ஒரு முக்கியமான செய்திய சொல்லிச்சு. அது என்னன்னா, ரஜினியோட கடைசி மூச்சி இருக்க வரைக்கும் யாரும் அந்த நாற்காலிய தொட்டு கூட பாக்க முடியாதுங்குறதுதான். அதோட சேர்த்து, ஒரு குடும்பத்தையோ ஊரையோ நாட்டையோ காப்பத்துற மாதிரி கதைய அமைச்சு பதினாறு மெகா வில்லனையும் இருநூறு கொசுறு வில்லனையும் அடிச்சிட்டு விரல சொடுக்கி தொடைய தட்டி பத்து பதினஞ்சு பஞ்ச் டயலாக் பேசிட்டா மட்டும் சுப்பர் ஸ்டார் ஆகிட முடியாதுன்னும் கத்து குடுத்துச்சி.



இப்பதான் தமிழ் சினிமாவுலையே ரொம்பவும் ஆரோக்யமான ஒரு திருப்பம் வந்திச்சு. சூப்பர் ஸ்டார் பாபா அப்பிடிங்கிற தோல்விக்கப்புறம் எப்பிடி பின்னுதைத்தாரோ (அதாங்க Bounce Back) அதேபோல (கொஞ்சம் லேட் ஆ இருந்தாலும் லேட்டஸ்டா நம்ம தளபதிவும் காவலன்னு ஒரு சுமார் ஹிட் படம் குடுத்தாரு. விக்ரமுக்கு தெய்வத் திருமகள், தலைக்கு மங்காத்தா வருது. அதேபோல வேலாயுதம் மேலயும் பலத்த எதிர்பார்ப்பு இருக்கு. அது மட்டுமில்ல தளபதியோட அடுத்த படம் நண்பன், யோஹன்னு இப்பவே கள கட்டுது. தலைக்கு பில்லா இரண்டாம் பாகம், விக்ரமுக்கு ராஜ பாட்டை, கரிகாலன். இப்ப அந்த தலமுற நடிகர்கள் எல்லாரும் அவங்க அவங்க ரூட் எதுன்னு தெளிவா புரிஞ்சுக்கிட்டங்க, இனிமே நிச்சயமா பட்டய கெளப்புவாங்க. இளைய தலமுறைகிட்ட(ஆர்யா, விஷால், ஜீவா அண்ட் கோ) இருந்த இந்த புரிதலும் நட்பும் இப்ப இந்த தலைமுறைகிட்டையும் வந்திருச்சு. கண்டிப்பா இவங்க கிட்ட ஈகோ கிடையாது, ஆரோக்கியமான போட்டி மட்டுமே இருக்கு. 


இதுதான் சூர்யாவுக்கு நெசமான சவாலே, இப்ப இவரு ஒரு ஆதவன் நடிச்சாருன்னா நிச்சயமா ஊத்திக்கும், அது அவருக்கும் நல்லாவே தெரியும். இனிமே இவருக்கு இன்னொருத்தர் வேலையையும் சேர்த்து செய்ய வேண்டிய அவசியம் இல்லை, செய்யவும் முடியாது. தல தளபதி மாஸ் முன்னாடி போட்டி போடறதும் ரொம்ப கஷ்டம்னு தெரிஞ்சு வச்சிருக்காரு. எழாம் அறிவு வேலாயுதத்துக்கு போட்டி இல்ல, மங்காத்தா எழாம் அறிவுக்கு போட்டி இல்ல, இந்த மூணு படமும் வேற வேற ஜோனர், அந்த வகையில மூணுமே பெஸ்ட்டா இருக்கும்குறது நம்ம நம்பிக்கை. ஆனா தொடர் தோல்விகளால துவண்டு போயிருந்த தல-தளபதி ரசிகர்கள் சூர்யா மேல உள்ள கோபத்த தீர்த்துக்க இதத்தான் சரியான தருணமா பாத்துட்டு இருக்காங்க. நம்ம பார்வை என்னனா சூர்யா ஸ்டார்-ஆக்டர்ங்குற இமேஜ விட்டுட்டு ஆக்டர்ங்குற இமேஜ் மட்டுமே உள்ள படங்கள்ல நடிக்கணும். தளபதிதான் ஸ்டார், தலைதான் ஸ்டார் ஆக்டர், சூர்யாதான் ஆக்டர் இந்த கூட்டணி சரியா அமைஞ்சா தமிழ் சினிமாவோட மூணு கான்கள் இவங்கதான் (தூண்கள்னுதானே சொல்லுவாங்க இது என்ன கான்கள்னு யோசிக்காதிங்க, இது சல்மான் கான், அமீர் கான், ஷாருக் கான்). அப்ப விக்ரம்ன்னு கேக்குறீங்களா, அவரு அஜய் தேவ்கன். (அப்புறமா நம்ம இளைய தலமுற அதுதாங்க ஆர்யா, கார்த்தி, ஜீவா, ஜெயம் ரவி, சிம்பு, தனுஷ், பரத் எல்லாம், ரித்திக் ரோஷன், ஷஹிட் கபூர், இம்ரான் கான், ரான்பீர் கபூர், ஜான் ஆப்ரஹாம், அந்த லிஸ்ட்டு)

இவங்க மூணுபேர் படமும் ஜெயிக்கணும் (அதுக்கு அவங்க நல்ல படம் குடுக்கனும்னு சொல்ற ஒங்க மைன்ட் வாயிஸ நாங்க கேட்ச் பண்ணிட்டோம், அதுதான் எங்க ஆதங்கமும் ), அப்பத்தான் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நல்லது, அப்புறம் நடிகர்களே ஈகோ எல்லாத்தையும் விட்டுட்டு நடிக்கறாங்க, பழகிக்கறாங்க, ரசிகர்கள் நாம அடிச்சுக்கனுமா? எப்பிடியும் நாம சினிமா ரசிகர்கள்தான், யாரு நல்ல சினிமாவ குடுத்தாலும் ரசிப்பம், முக்கியமான ஒரு விஷயம், நீங்க யாரு ரசிகரா இருந்தாலும் பரவாயில்லை, தயவு செய்து மறுபடியும் எப்பிடி நடிச்சாலும் இவரு படம் ஓடும்ங்கிற எண்ணத்த மட்டும் யாருக்கும் உருவாக்கி விட்டுறாதீங்க, அப்புறம் நமக்கு சுறாவும், அசலும், ஆதவனும், அருளும்தான் மிஞ்சும்.


டிஸ்கி: இவனுக யாரு ரசிகர்கள் அப்பிடின்னு குழம்பி போயிருக்கற ஒங்களுக்கு மறுபடியும் சொல்றோம், நாங்க தலதளபதி (சந்தானம்) பான்ஸ். நல்ல சினிமாவை ஆதரிப்போம் கெட்ட சினிமாவை களாய்ப்போம், அது யாரு படமா இருந்தாலும் சரி, பாகுபாடே பார்க்க மாட்டோம். இதுதான் கொள்கை விளக்கம். 


டிஸ்கி 2: உங்களோட கமேன்ட்சும் ஓட்டும்தான் எங்களுக்கு பூஸ்ட். ஒங்களுக்கு என்ன தோணுதே, அத அப்புடியே கீழ பதிவு செஞ்சிட்டு போங்க சார்.


Thursday, August 11, 2011

மங்காத்தா ட்ரெய்லர்: சந்தானம் பேன்ஸ் விமர்சனம்

உங்கள்ள பாதிபேர் ஏற்கனவே மங்காத்தா ட்ரைலர பார்த்து இருப்பீங்க. வெளியான ஒரே மணித்தியாத்துல கிட்டத்தட்ட 5000 ஹிட்ஸ் வாங்கிருச்சு(ரிலீஸ் ஆனது ராத்திரி 12மணிக்கு ). அப்புடி பார்காதவுங்க கீழ ட்ரைலர பார்த்துட்டு பதிவுக்கு போங்க.



இந்த ட்ரைலர் எழுப்பற அதிர்வலைகள பாத்தா இது நிச்சயம் ஒரு ஹிட்டுன்னு தெரியுது. ஹட்ஸ் ஆப் டு வெங்கட் பிரபு அண்ட் டீம். தமிழ் சினிமாவின் ஆழகான ஹீரோ அஜித் குமார் சமீபத்துல அழகாக இருக்கும் படம் இதாதான் இருக்கும்னு தோணுது (என்னடா நரச்ச முடி கெட் அப்புக்கு இந்த பில்டப்புன்னு யோசிக்காதீங்க நெஜமாவே தல சுப்பரா இருக்காரு). இந்த ட்ரைலர பாக்குறப்போ ரொம்ப சந்தோசமா இருக்கு, அதுக்கு காரணம் அல்டிமேட் ஸ்டாரும் அக்ஷன் கிங்கும் இருந்தும் பந்தா இல்லாம இருக்கு. தமிழ் பட இயக்குனர்கள் மட்டுமில்ல மூத்த நடிகர்கள் கூட ஆரோக்யமான பாதையில்தான் போய்கிட்டு இருக்காங்கங்குறதனால வர்ற சந்தோஷம் அது. இது தல ரசிகர்கள் சொல்ற சூப்பர் ட்ரைலரோ இல்ல சில தளபதி ரசிகர்கள் சொல்ற மாதிரி மொக்க ட்ரைலரோ இல்ல, நட்சத்திர பட்டாளமே இருந்தும் இந்த ட்ரைலர்லையே இயக்குனர் தெரியறாரு, அதுதான் இந்த படத்தோட முதல் வெற்றின்னு தோணுது. குடுக்கற காசுக்கு வஞ்சகம் இல்லாம படம் இருக்குமுன்னு தோணுது.

ட்ரைலர பாக்குறப்போ சில படங்கள் நினைவுக்கு வந்து தொலைக்கிறத தடுக்க முடியல. அதுல முக்கியாமான ஒன்று நம்ம மாதவன் நடிச்ச டீன் பட்டி (Teen Patti) அப்பிடின்குற படம். அது ஒரு அக்ஷன் படம் இல்லங்கிறதையும் நிச்சயமா இந்த படம் அந்த படத்தோட தழுவல் இல்லங்கிறதையும் நாங்க அடிச்சு சொல்லுறோம். அப்புறம் நெறைய பெயர் மறந்துபோன ஹாலிவூட் படக் காட்சிகள் எல்லாம் ஞாபகம் வந்து தொலைக்கிது. இது வெங்கட் பிரபு படம், ஏ.எல் விஜய் படம் இல்ல அதனால கண்டிப்பா இது எது மாதிரியும் இல்லாத புது மாதிரியான படம்னு மட்டும் நமக்கு உறுதியா சொல்ல முடியும். வெங்கட் பிரபு ஏற்கனவே    ஹாலிவூட்ல சக்க போடு போடுற  நெறைய ஜோனர்கள முதல் முறையா தமிழுக்கு அறிமுகப்படுத்தியிருக்காரூ  (அதுதானே அவரோட வெற்றி) இதுவும் அந்த மாதிரி ஒரு முயற்சிதான், (நல்ல வேள இதுல தல நடிச்சாரு, வேற யாராச்சும் நடிச்சிருந்தா  பிரபு தேவாவோட நெலமதான் நம்ம வெங்கட் பிரபுவுக்கும் வந்திருக்கும்).  


தல அஜித்துக்கு வாலி,வில்லன், வரலாறு, பில்லாக்கு அப்புறமா ஒரு ரியல் வெற்றி படமா இந்த மங்காத்தா இருக்கும் என்பதில் எந்த டவுட்டும் இல்லை. தேங்க்ஸ் டு வெங்கட் பிரபு அண்ட் டீம். கலக்குங்க பாசு. 

தல  ரசிகர்களை திருப்தி படுத்துற அதேவேளையில் ஒரு மல்டி ஸ்டாரெர் படமாக , திரைக்கதைக்கு  முக்கியத்துவம் உள்ள, எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் படமாக , முக்கியமாக ஒரு இயக்குனர் படமாக  இது இருக்கும் என்னும் நம்பிக்கையை தருது இந்த ட்ரெய்லர்.

It's  Venkat Prabhu's and Ajith's f**king  GAME!!


டிஸ்கி: தளபதிய கலாய்குறானுக தலையோட பட ட்ரைலருக்கே பதிவு எழுதுராணுக, சரியான தல ரசிகர்களா இருப்பானுக போலன்னு நெனக்கிறவங்களுக்கு ஒன்னு சொல்லிகறோம், நாங்க எப்பவுமே தலதளபதி ரசிகர்கள், அதாவது தமிழ் சினிமா ரசிகர்கள். நாங்க ஏன் சில நேரங்கள்ல தளபதிய கலாய்குரங்கிறத சொல்ல ஒரு பதிவு தயாரகிட்டிருக்கு.  அதுவரக்கும் 2010 மே மாதம் பதிவிலிடப்பட்ட  விஜய் என்ன செய்ய வேண்டும்? என்கிற கட்டுரையை வாசிக்கவும் (நன்றி வெப்துனியா.காம்) . மேலும் தளபதியின் நேர்மையை பாராட்டி நாம ரெண்டு நாள் முன்னாடி போட்ட பதிவு இங்கே: வேலாயுதம் சுட்ட படமா? சுடாத படமா?


டிஸ்கி 2: Santhanam Fanzக்கும் மங்காத்தாவுக்கும் என்ன சம்பந்தம்னு நெனக்கிறவங்க இந்த வீடியோவ பார்க்கவும் 




Sunday, August 7, 2011

தெய்வத்திருமகள் மறுபடியும் ஒரு பதிவு


தெய்வத்திருமகள் படம் பற்றி ஏற்கனவே நம்ம பார்வையை இங்க பதிவு செஞ்சிருந்தோம் (தெய்வதிருமகள் : ஒரு சந்தானம் ரசிகனின் மாற்று பார்வை) . நாம அது ஒரு மொக்க படம் (மூணாவது வகை - இண்டலக்சுவல் சீட்டிங் - தமிழ் சினிமா நேர்மையான புரிதல்) அப்பிடின்னு தெளிவா சொன்னபோது நம்ம வாசகர்கள்ள பலபேர் கோபப்பட்டிருக்கலாம் (உண்மைய வேற எப்பிடித்தான் சொல்றது?). உயிர்மை ஆகஸ்ட் இதழ்ல பிரபல இசை விமர்சகர் ஷாஜி எழுதிய தெய்வத்திருமகள்: இது நகல் அல்ல போலி அப்பிடின்குற விமர்சனத்த மிக அண்மையில்தான் அவரது ப்ளாகில் வாசிக்க முடிந்தது. இவரது பதிவு நூத்துக்கு தொன்னூத்தி எழு விழுக்காடு நம்ம கருத்தோட ஒன்றிப்போகுது . தமிழ் சினிமா அபத்தங்கள புரிந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள் நேரமிருந்தா இவரது நீண்ட பதிவ வாசித்து பாருங்கன்னு கேட்டுக்கொள்கிறோம் (லிங்க்தெய்வத் திருமகள் நகல் அல்ல. போலி!

இப்ப மிச்சமுள்ள மூணு விழுக்காடுகளுக்கு வருவோம். இவரு நம்ம தலைவர் சந்தானம் வக்கீல்கள அவமானப்படுத்துற மாதிரி நடிச்சிருக்கருன்னு சொல்றாரு. இவரோட விமர்சனத்த வாசிச்சிட்டு வக்கீலுங்க போராட்டம் நடத்தினாங்கள இல்ல அவங்க போராட்டம் நடத்தினதுக்காக இவரு இப்பிடி எழுதினாரான்னு தெரியல. ஆனா நாம நமது விமர்சனத்துல ஒரு விஷயம் சொல்லியிருந்தம். தலைவரோட நடிப்புதான் இந்த படத்த காப்பதுதுன்னு, இப்ப அதுக்குரிய உண்மைப் பொருள சொல்லவேண்டிய தருணம் வந்திருச்சி. தலைவர் நடிப்புதான் இந்த படத்த நூறு விழுக்காடு அபத்தம்ங்குறசீடிங்) வகையறால இருந்து முப்பது விழுக்காடு சென்சிபெல் என்டேர்டைனர் எங்கிற வகையராவுக்கு சமீபத்துல கொண்டுவந்து வக்கிதுங்குரதுதான் நாம அன்னக்கி சொன்ன அந்த உண்மை. அந்த வகையில பாக்குறப்போ ஒரு நடிகரா நம்ம தலைவர் மேல வைக்கிர அந்த விமர்சனத்த நம்மால ஒத்துக்க முடியாது, (இது பத்தின ஒரு விரிவான பதிவு இங்கே)


இதுக்கும் மேல விக்ரம் சுப்பரா நடிச்சிருக்காரு தேசியவிருது நிச்சயம் அவருக்கு கெடக்கணும் அப்பிடின்னு யாரவது நெனச்சிங்கன்னா நாம ஒங்ககிட்ட ஒரு விசயம் கேக்கணும். ஒங்கள்ள எத்தனைபேருக்கு  ரெண்டு தடவக்கி மேல இந்த படத்துல இருக்கற விக்ரம் - சாரா மட்டும் வாற ப்ளாஷ் பாக் காட்சிகள முழுசா பாக்குற தைரியம் இருக்கு? இன்றைய தேதில கமல் சாருக்கு அப்புறம் விக்ரம்தான் பெஸ்டுன்னு நெனச்சிங்கன்னா ஒங்ககிட்ட ஒரு கேள்வி. ஒங்கள்ள எத்தன பேர் சித்தனுக்காக பிதாமகனும் க்ரிஷ்ணாவுக்காக தெய்வதிருமகளும் பாப்பீங்க?  அதே நேரம் ஒங்கள்ள எத்தன பேர் சக்திக்காக பிதாமகனும் சின்னாவுக்காக பேரழகனும்  பாப்பீங்க? இதுக்கு மேல நீங்களே முடிவு பண்ணிக்கங்க. 



லேட்டஸ்ட் பின்னிணைப்பு.: மக்களே எல்லாரும் நெட்ல நல்லா தேடி பாருங்க, ஐஆம் சாம்இன் ரெண்டாம் பாகம் எதுனாச்சும் வந்து இருக்குதான்னு? ஏன்னா டைரக்டர் விஜய் இந்த படத்தின் ரெண்டாம் பாகத்தையும் எடுக்க போறாராம் 2013ல.
http://www.filmics.com/tamil/Tamil-Movie-News-in-tamil/director-vijay-said-deivathirumagal-part-ii-soon.html

வேலாயுதம் சுட்ட படமா? சுடாத படமா?

இன்னிக்கு டேட்டுக்கு தமிழ் நாட்டுல இருக்குற அத்தன பேருக்கும் இருக்கும் பெரிய கேள்வி இதுதான். அதாவது வேலாயுதம் சுட்ட படமா? இல்ல  சுடாத படமா?னு(எவன்டா சொன்னது, எங்களுக்கு எல்லாம் வேற வேல இல்லன்னு நெனச்சியா? அப்புடின்னு கேக்காதீங்க). ஒவ்வொரு பத்திரிகையாளர்களும்  ஒவ்வொரு மாதிரி எழுதிகிட்டு இருக்காங்க. சிலர் ஆசாத் படத்தோட ரீமேக் அப்புடிங்குறாங்க. இன்னும் சிலர்  இல்ல இல்ல இது Assassin's Creed வீடியோ கேம்மின் அப்பட்டமான காபினு சொல்றாங்க. என்னடா நடக்குது இங்கன்னு யோசிச்சி யோசிச்சே மண்ட காஞ்சி போயி ஒக்காந்து இருக்குறப்போதான் நேத்து குமுதம் கண்ணுல பட்டுச்சு. அதுல டைரக்டர் ராஜாவோட ஒரு பெரிய பேட்டி. அந்த பேட்டிய அப்புடியே காபி பண்ணி போடுறதுக்கு பதிவு ஒலகத்துல நிறைய பேர் இருக்காங்க, நமக்கு எதுக்கு வேண்டாத வேல? ஆனா அதுல ஒரு  முக்கியமான பதில மட்டும் இங்க தர்றோம்.

ஆசாத் என்கிற தெலுங்குப் படத்தின் ரீமேக்தான் இது என்கிற சர்ச்சை பரவுதே...

‘‘நேர்மையா சொல்லணும்னா அந்தப் படத்தின் கதையை பணம் கொடுத்து வாங்கிவிட்டோம். மையப்புள்ளியை வெச்சுக்கிட்டு புதுசா சீன்களை எழுதி விஜய்க்காக இன்னும்  அழகா மெருகேற்றியி ருக்கோமே தவிர அந்த படத்தை அப்படியே எடுக்கலை. 15 வருஷத்துக்கு முன்னால வந்த அந்தப் படத்தை இப்ப பார்க்க முடியாது. திரு ப்பதிசாமியின் மூலக்கதை என்பதை மறுக்கல. நாம சேர்ந்து ஒரு படம் பண்ணலாம்னு விஜய் சார் என்னைக் கூப்பிட்டு பேசினப்ப ரெண்டு பேருக்கும் பொதுவான ஒரு  கதையாயிருந்தால் ஈஸியா இருக்குமேன்னுதான் இந்த ஐடியா பண்ணினோம். ஆறு படம் எடுத்த எனக்கு ஏழாவதா ஒரு படம் எடுக்கத் தெரியாதா?’’


வர்றே  வா.. இதுதாண்டா பதில். என்னா ஒரு பதில்?அதாவது அந்த படத்த தழுவிதான் நா படம் எடுக்க்குறேன்னு நேர்மையா ஒத்துக்கிட்டு இருக்காரு , ராஜா M. 


இங்கிலிஸ் படத்த சீன் பை சீன் காப்பி பண்ணிட்டு ஒம்போது வருசமா நா ஒக்காந்து யோசிச்சு எழுதுனேன்னு ஒரு டைரக்டர் சொல்றாரு, அந்த இங்கிலீஸ் படத்துல நடிச்ச நடிகர பார்த்து அப்புடியே காபி அடிச்சிட்டு  எனக்கு இந்த படத்துக்கு தேசிய விருது கெடச்சா சந்தோசம்னு ஒரு நடிகர் சொல்றாரு. இவிங்க எல்லாம் நேர்மையே இல்லாம அலையுற இதே கோடம்பாக்கத்தில் இப்புடி ரெண்டு நல்லவுங்களா? னு நாம அப்புடியே  அதிர்ச்சி அடஞ்சிட்டோம் (நம்ம தளபதியும் ராஜா M உம் தானுங்க.).

பட் விஜய் & ராஜா M. ஒங்க நேர்ம எங்களுக்கு புடிச்சிருக்கு!!!

டிஸ்கி: Santhanam fanz எதுக்கு ஒங்களுக்கு இதுன்னு நீங்க கேக்குறீங்க. இதுக்கும்  நமக்கு  சம்பந்தம் இருக்கு. அந்த படத்துல சந்தானம் ஒரு முக்கிய ரோல்ல நடிச்சிருக்காரு (அது அப்புடியே ப்ரெஷ் ஸ்கிரிப்ட்) அதுக்கும் மேல நம்ம பழைய பதிவுகள பார்த்துட்டு நாங்க எதோ விஜய்க்கு எதிரானவர்கள்னு நெறய பேர் நெனசிட்டாங்க( அடேய் அடேய் ஏன்டா புளுகுற, இது ஓவர் ) சோ நாங்க அப்புடி இல்ல நடுநிலையாளர்கள்னு ஜஸ்டிபை பண்றதுக்கும் சேர்த்துதான் இந்த போஸ்ட்.

Saturday, August 6, 2011

தற்கால தமிழ் சினிமா பற்றிய ஒரு நேர்மையான புரிதல்!!

இந்திய சினிமா உலக சினிமாவில் இருந்து பல வகையில் வேறுபட்டது (உலக சினிமான்னா ஹாலிவூட் படங்கள் மட்டும்னு  நினச்சிக்காதீங்க, ஈரானிய சினிமா, கொரியன் சினிமா போன்றவையும் இருக்கு, அகிரா குரசோவா போன்றவர்களது படங்களும் இருக்கு, இது நிறைய பேருக்கு தெரிஞ்சி இருந்தாலும் நமக்கும் தெரியும்னு சொல்றோம்). சினிமா என்பது நாவல்கள், சிறுகதைகள் போன்ற ஒரு ஊடகம், இது கட்புலன் ஊடகம் அந்தவகையில் சினிமா ஒரு சக்தி வாய்ந்த ஊடகம். படைப்பாளிகளிடம் சினிமா தொடர்பாக இரு வேறுபட்ட நியாயப்பாடு உள்ளது, ஒன்று சினிமாவை ஒரு ஜனரஞ்சக பொழுதுபோக்கு ஊடகமாகப்ப் பார்ப்பது, இரண்டாவது சினிமாவை ஒரு சக்திவாய்ந்த படைப்பு ஊடகமாக பார்ப்பது. தமிழ் சினிமாவில் உள்ள பெரிய இயக்குனர்கள் எப்பொழுதும் அதனை ஒரு பொழுதுபோக்கு ஊடகமாகவே பார்த்து வந்துள்ளனர். இதற்கு உதாரணமாக ஷங்கர், ரவிக்குமார் போன்ற இயக்குனர்களை கூறலாம். இன்னும் சிலர் படைப்பு முயற்சியில் இறங்கியும் உள்ளனர், பாலு மகேந்திரா, பாலா போன்றவர்களை இங்கு குறிப்பிடலாம். இவர்கள் தரமான சினிமாவின்பால் ஈர்ப்பு உடையவர்கள். எனினும் சினிமாவில் ஒரு முக்கியமான சிக்கல் உள்ளது, இது பல கோடி ரூபாய்கள் சம்பத்தப்பட்ட ஒரு விடயம், எந்த ஒரு மனிதனும் தான் போடும் பணத்தை மீட்டித்தரக்கூடிய சினிமாவையே எடுக்க முயற்சி செய்வான், எனவே சினிமாவில் சில விட்டுக்கொடுப்புகள் தேவைப்படுகிறது. இதனை நாம் நினைவில் கொள்ள வேண்டும். பணத்தினை திரும்பப் பெற நமது படைப்பாளிகள் சில விடயங்களை உருவாக்கி உள்ளார்கள்.  நட்சத்திர அந்தஸ்து, வளைய வரும் பெண்கள், சண்டைக்காட்சிகள், கவர்சிப்பாடல்கள், தனியான நகைச்சுவை பகுதி போன்றவற்றை உதாரணமாக குறிப்பிடலாம்.  

இன்றைய தேதியில் தமிழில் மூன்று வகையான திரைப்படங்கள் வருகின்றன, முதலாவது  வகை தூய பொழுதுபோக்கு திரைப்படம். இரண்டு விதமான பொழுதுபோக்கு திரைப்படங்கள் வருகின்றன. ஒன்று மசாலா திரைப்படம் என பரவாலக அறியப்படும் வகை. சிங்கம், ஆறு, சிறுத்தை, குருவி போன்ற திரைப்படங்கள். இவை பார்முலா படங்கள் எனவும் அறியபடுபவை. ஆறு பாட்டு, ஐந்து சண்டைக்காட்சி, ஒரு ஹீரோ ஒரு வில்லன், இறுதியில் வில்லனை ஹீரோ ஜெயிப்பது, இந்த அம்சங்களை முக்கியத்துவப்படுத்தியே இவற்றின் கதையம்சம் பின்னப்படுகிறது, இதில் வரும் பெண் கதாபத்திரத்துக்கு ஹீரோவின் காதலி என்ற அந்தஸ்தே இருக்கும், பெரும்பாலும்  கவர்ச்சி பொம்மையாகவே பாவிக்கப்பட்டிருப்பார். ஹரி, லிங்குசாமி போன்றவர்கள் இதில் கை தேர்ந்தவர்கள். படம் பார்க்கவரும் ரசிகன் தேட்டருக்குள் வர முதலே, இந்த படத்தில் என்ன இருக்கும் என்ன இருக்காது என்பதை கணித்து விடக்கூடிய படங்கள். இரண்டாவது  வகை பொழுதுபோக்கு படங்கள் சென்சிபிள் என்டேர்டைனர்ஸ்(sensible entertainers  எனப்படுபவை. கவுதம் மேனன், கே. வீ ஆனந்த், முருகதாஸ் போன்றவர்கள் இதில் கைதேர்ந்தவர்கள். காக்க காக்க, அயன் (பெரும்பாலான சூர்யா படங்கள்), சந்தோஷ் சுப்பிரமணியம், சுப்ரமணியபுரம், சரோஜா போன்ற படங்களை குறிப்பிடலாம். இவை பொழுதுபோக்கு படங்களாக இருப்பினும் இதில் ஒரு நேர்மை இருக்கும். யதார்த்தை மீறாமல் படம் அமைக்கப்பட்டிருக்கும். இவற்றின் கதை அல்லது கரு பார்வையாளனின் விமர்சனத்தை தூண்டுபவையாக இருக்கும், ஆயினும் இப்படங்களின் USP பெரும்பாலும் படைப்பு நேர்த்திக்கு அப்பால் பட்ட ஒரு விடயமாகவே இருக்கும்.  இந்த இரண்டு விதமான பொழுதுபோக்கு படங்களையும்  சம விகிதத்தில் கலந்த படங்களும் வருவதுண்டு, உதாரணமாக ரவிகுமார், ஷங்கர், நம்ம ராஜேஷ்.எம் போன்றவர்களின் படங்களை குறிப்பிடலாம். 



இரண்டாவது வகை, இன்று மாற்று சினிமா என பரவலாக அறியப்படுவது. இந்த வகை சினிமாவில் வியாபாரம் சார்ந்த சில காம்ப்ரமைஸ் இருந்தாலும், தீவிர அல்லது படைப்பு சினிமாவினை நோக்கிய பயணமாக இருக்கும்.  (இது பாலா படம் அல்ல அப்பிடின்னு அவரே பல இடங்கள்ள சொல்லிட்டதால அவன் இவன் தவிர்த்து மற்றைய) பாலாவின் படங்களை இங்கு குறிப்பிட்டு கூறலாம், இன்றைய தேதியில் தமிழ் சினிமாவில் மாற்று சினிமாவுக்கான ஒரு தேடல் மேலோங்கி உள்ளதாகவே படுகிறது. புதிதாக களம் இறங்கிய இயக்குனர்கள் இதனை கையில் எடுத்துள்ளனர், பாலாஜி சக்திவேல், வெற்றிமாறன், சேரன், வசந்தபாலன், எஸ். பி ஜனநாதன் போன்றவர்களை குறிப்பிடலாம். இவ்வகையான சினிமாவில் உள்ள பொதுவான போக்கு என்னவென்றால், விவாதத்துக்கு எடுக்கப்பட்ட கரு தெளிவாகவும் நேர்த்தியாகவும் முன்மொழியப்பட்டிருக்கும் அல்லது கதாபாத்திரங்களும் அவற்றை சுற்றிய வாழ்வும் மிகைப்படுத்தல்கள்  இல்லாமல் பதிவு செய்யப்பட்டிருக்கும். வியாபாரம் கருதிய விட்டுக்கொடுப்புக்களால் இவை பெரும்பாலும் தீர்வு சொல்ல முயற்சிக்கும்,
அவ்வகையான தீர்வு ஜனரஞ்சக சினிமாவினை போன்றதாக இருக்கும். நட்சத்திர அந்தஸ்த்து, ஹீரோ வேர்ஷிப் போன்ற விடயங்களை துச்சமாக தூக்கி ஏறியக்கூடியவையாக இருக்கும். பெண் கதாபாத்திரம் கவர்ச்சியாக அல்லது சுப்பர் மாடல் போன்று அழகாக இருக்கவேண்டுமென்கிற கட்டுப்பாடு கிடையாது, கதாபாத்திரங்கள் அவற்றுக்கே உரிய இலட்சணங்களோடு இருக்கும்.  யதார்த்தம் மேலோங்கி இருக்கும். மாற்று சினிமாவுக்கும் சென்சிபெல் என்டேர்டைனர்ஸ் வகைக்கும் இடைப்பட்ட படைப்புக்களும் உண்டு.  சசிகுமார், ராதா மோகன், சுஷீன்தரன் போன்றவர்களை இங்கு குறிப்பிடலாம். மாற்று சினிமா மேலோங்கியுள்ளதற்கான காரணங்களை இன்னொரு பதிவில் பார்க்கலாம். 


மூன்றாவது மேல்கூறப்பட்ட இரண்டிலும் அடைக்க முடியாதது, ஆபத்தானது. இன்டலக்சுவல் சீட்டிங் வகையை சார்ந்தது. தமிழ் சினிமாவின் தரத்தினை உயர்த்தவும் முயற்சிக்கிறது  (அப்படி நம்புவோமாக), அதே நேரத்தில் பொழுது போக்கு சினிமாவாகவும் இருக்கவேண்டுமென நினைக்கிறது, இது ஒரு சிறந்த போக்கு அல்ல, உதாரணமாக தசாவதாரம், ரோஜா போன்ற திரைப்படங்களை குறிப்பிடலாம். இந்த வடிவத்தை கையில் எடுத்த சில இளம் தலைமுறையினரும் இருக்கிறார்கள், இந்த திரைப்படங்களில் உள்ள பொதுவான போக்கு என்னவென்றால் ஒரு கரு விவாதத்துக்கு எடுக்கப்பட்டிரும், ஆயினும் படங்கள் அது பற்றி பேசாது அல்லது விவாதக்கரு நேர்த்தியாக வெளிப்படாது.  காஷ்மீர் பிரச்சினை (ரோஜா), மனவளர்ச்சி குன்றிய தந்தைக்கும் மகளுக்குமான உறவு (தெய்வத்திருமகள்) போன்றவற்றை உதாரணாமாக குறிப்பிடலாம். இவ்வகையான படங்களில் படம் எடுத்த நான் அறிவாளி, பார்க்கிற நீ முட்டாள் என்கிற ஒரு போக்கு இருக்கும். இவ்வகையான சினிமா பார்வையாளனை முட்டாளக்குவதில் தீவிர கவனம் செலுத்துகிறது. போர்முலா படங்களை பார்வையாளன் ரசிக்கிறான், நம்புவதில்லை, அவை அவனது ரசனை மட்டத்தை கேலி செய்கிறது, ஆயினும் அவனது அறிவோடு விளையாடுவதில்லை. இந்த வகையான படங்கள், பார்வையாளனின் அறிவு மட்டத்தை கேலி செய்கிறது. பார்வையாளனின் அறிவை பாவிக்காது தடுப்பதற்காகவென்றே சில உத்திகள் கையாளப்பட்டிருக்கும், இதற்க்கு உதாரணமாக தசாவதாரம் பேசும் கயாஸ் கோட்பாடு அல்லது கன்னத்தில் முத்தமிட்டால் மாதவன் கூறும் ஈழத்து கவிதை போன்றவற்றை குறிப்பிடலாம்.  இந்த மாதிரியான படங்களில் கருவானது ஒரு மாயையை உருவாக்கும், இந்த மாயையை தவிர்த்து விட்டு பார்த்தல் இவற்றுள் பெரும்பாலானவை போர்முலா படங்களாகவே இருக்கும், சில சென்சிபிள் என்டேர்டைனர்ஸ் (தெய்வத் திருமகள்) அல்லது இரண்டையும் கலந்து கட்டியவயாக (தசாவதாரம்) இருக்கும். கமல்ஹாசன், மணிரத்தினம்  இருவரும்  தமது திறமைகளை ஏற்கனவே நிரூபித்துவிட்டார்கள் அதில் மறு பேச்சுக்கே இடம் இல்லை, மாற்று சினிமாவுக்கான தேடலை தூண்டியதில் இவர்கள் இருவருக்கும் மிகப்பெரிய பங்கு உண்டு. ஆயினும் இந்த வகை படங்களை எடுப்பவர்களிடம் இன்னும் கொஞ்சம் நேர்த்தி தேவை என்பதே எமது கருத்து.

 டிஸ்கி: தற்கால தமிழ் சினிமா கதாநாயகர்கள் பற்றிய ஒரு நேர்மையான  புரிதல்!! எனும் பதிவு விரைவில் பதிவிடப்படும். அதுவரை இதற்க்கு ஆதரவு தருக.

Tuesday, August 2, 2011

நடிகர் சந்தானத்திற்கு எதிராக வக்கீல்கள் போராட்டம்

இன்னைக்கு காலைல இருந்து எல்லா வெப்சைட்லயும் ஒரு நியூஸ்.அது என்னன்னா நடிகர் சந்தானத்திற்கு எதிராக வக்கீல்கள் போராட்டம்




அடப்பாவிகளா!!! ஒங்கள எல்லாம் எப்புடிடா திருத்துறது? நீங்க எல்லாம் என்னடா நெனச்சிக்கிட்டு இருக்கீங்க. இது ஒரு படம் இந்த படத்துல சந்தானம் ஒரு வக்கீலா நடிச்சிருக்காரு. இதுல எங்கடா ஒங்கள அவமான படுத்துனாரு?. இன்னிக்கு டேட்க்கு பிரபலமா யாரு யாரு இருக்காங்களோ, அவங்கள எதிர்த்து உப்பு சப்பு இல்லாம ஒரு ஆர்பாட்டத்த நடத்தி நீங்க பேமஸ் ஆகலாம்னு பார்க்குறீங்க?.

ஏற்கனவே இந்த படத்துக்கு எதிரா கண்ட கண்ட எழவு எடுத்த ஜாதி பிரசினைய கைல எடுத்து என்னென்னமோ பண்ணாங்க, ஆனா அந்த பிரசினைய ஒத்த எழுத்த மாத்தி சிம்பிளா தீர்த்து படத்த வெளியிட்டு ஹிட் ஆக்கியும் காட்டிட்டாங்க. சரி அவிங்க தான் படிக்காதவன்க ஜாதி வெறி புடிச்ச மிருக ஜாதி மனுசங்கனா, நீங்க வக்கீல்கள்தானே? நல்லா படிச்சவங்கதானே? அப்புறம் எதுக்குடா இப்புடி நடந்துக்றீங்க? எதோ ஒங்க பின்னால ஒரு சங்கம் இருக்குங்குற தைரியத்துல எதுக்கு வேணும்னாலும் போராட்டம் ஆர்ப்பாட்டம் செய்வீங்களாடா? இல்ல தெரியாமதான் கேக்குறேன், இப்ப இதுக்கு சந்தானம் மன்னிப்பு கேட்டுடார்னா ஒங்களுக்கு என்னடா கெடைக்க போகுது? மரமண்டைக.

உண்மைல இந்த படத்துல சந்தானம் வக்கீல்களுக்கு சார்பாதான் நடிச்சிருக்காரு. எழும்பூர் கோர்ட்டு பக்கம் போனா பாருங்க, பாதி பேர் கேஸ் கெடைகாதா கெடைகாதானு அலஞ்சிகிட்டு வெட்டியாதான் இருக்காங்கே. அந்த மாதிரி ஒரு கதாபாத்திரதுல தான் சந்தானம் நடிச்சாரு. அதுவும் வாதாடி தோத்து போன வக்கீல கொலை பண்ண ரவுடி தாதாவ பார்த்து வக்கீல்களுக்கு சார்பா தான் பேசுவாரு. "புடிங்ங்க சார் அவன, வக்கீலையே கொலை  பண்ணுவானாம், காட்டுமிராண்டி, புடிச்சு ஜெயில்ல போடுங்க சார் அவன "னு ஒரு தாதா பயலுக்கு எதிராதான் பேசுவாரு. நியாயமா பார்த்த ஊர்ல இருக்குற ரவுடி , தாதா பயலுகதான் ஆர்பாட்டம் பண்ணனும்(ஆனா அவிங்க பண்ண மாட்டங்க ஏன்னா அவிங்களுக்கு சங்கம் இல்ல). ஆனா வக்கீல் தொழில்ல இருக்கும் கஷ்டங்கள காமெடியா சொல்லி, அத மக்களுக்கு புரியவச்சி, ஒரு வக்கீல் ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு எந்த விதமான பிரதி உபகாரமும் பார்க்காமல் எப்புடி எல்லாம் உதவி பண்றார்னு வக்கீல் தொழில பத்தி உயர்வா காட்டுனா உடனே ஆர்பாட்டம்  அது இதுனு கெளம்பிடுவீங்க, ஏன்னா ஒங்க பின்னாடி ஒரு சங்கம் இருக்குங்குற தைரியம்.

ஏன்டா அறிவு கெட்ட வக்கீல்களே;

சிங்கம்புலி படத்துல ஜீவா ஒரு பெண் சபலிஸ்ட் வக்கீலா வருவாரு, அவர விட்டுருங்க.
எதோ ஒரு படத்துல வக்கீல் வண்டுமுருகன்கிற பாத்திரதுல வடிவேல் அசட்டு வக்கீலா வருவாரு, அவரையும் விட்டுருங்க.
இதே படத்துல நாசர் , அப்புறம் விதி படத்துல இன்னும் பல படங்கள்ள வக்கீல வில்லனா காட்டுவாங்க அதையும் விட்டுருங்க.


ஆனா இன்னிக்கு பீக்ள இருக்குற சந்தானத்துக்கு எதிரா ஆர்பாட்டம் பண்ணி நீங்க பேமஸ் ஆக பார்க்குறீங்க. போங்கட போயி புள்ளகுட்டிகள படிக்க வைங்கடா.


Related post:
வளரும் சந்தானமும் ஒழிக்க நினைக்கும் சில தமிழ் சினிமா இணையங்களும்

ஹாசினி பேசும் படம்: விமர்சனத்துக்கு ஒரு விமர்சனம்

டிஸ்கி 1: வழமையா நாங்க மொக்கதான் போடுவோம், ஆனா இன்னைக்கு கொஞ்சம் சீரியஸா ஒரு பதிவு.

அண்மைக் காலமாகவே எனக்கு ஹாசினி பேசும் படம் பார்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இது கடந்த நான்கு வருடங்களாக ஒளிபரப்பப்படும் ஒரு நிகழ்ச்சி, இருநூறு எபிசோட்களை கடந்து வந்திருக்கிறது. இவர் பல படங்களை விமர்சனம் செய்திருந்தாலும், சமீப காலம் வரை நான் எதையுமே  பார்த்ததில்லை.ஆனால் நமது தல சந்தானம் நடித்த இரண்டு படங்களின் விமர்சனத்தை நான் மிக அண்மையில்தான் பார்த்தேன், அதுவரை சுகாசினி ஒரு நல்ல விமர்சகர் என்கிற பதிவே என்னுள் இருந்தது. பாஸ் என்கிற பாஸ்கரன், மற்றும் சிறுத்தை படங்களுக்கான விமர்சனங்களே அவை. அவை இரண்டையும் பார்த்த பின்பே மற்றைய படங்களைப் பற்றி அவர் என்ன விமர்சனம் செய்கிறார் என்று பார்கவேண்டுமேன்கிற எண்ணம் தோன்றியது, அதன் பின்னரே இணையத்தளங்களில் கிடைக்கப்பெற்ற ஏனைய படங்களின் விமர்சனங்களை பார்த்தேன். அவை பற்றிய ஒரு பதிவே இது. மொதல்ல நம்ம சந்தானம் பற்றி சுகாசினியின் விமர்சனத்துக்கு வருவோம்.

தமன்னாவ வாடி போடின்னு கூப்பிடறார்ங்குறது  அந்த அம்மாவோட கவலை, காட்டுப்பூச்சி அப்பிடி கூப்பிடல்லன்னாதான் அது சொதப்பலா இருக்கும். தமன்னாவ மட்டும் இல்ல கார்த்திய அதவிட கேவலமாவேல்லாம் சொல்லறாரு. எத்தனையோ படத்துல ஹீரோவ கலாய் கலாயின்னு கலாச்சிருக்காரு. இந்தம்மா சொல்றத பாத்தா இவங்க இன்னம் கதாபத்திரங்கள பாக்குற அளவுக்கு முதிர்ச்சியடயலன்னு தான் தோணுது. இவங்க இன்னமும் நடிகர்கள்தான் திரையில பார்கிறாங்க. பேரழகன் படத்துல சூரியாவ அசிங்கம்னு விவேக் சொல்லுவாரு, அதவிட எவ்வளவோ கேவலமாவேல்லாம் சொல்லுவாரு, ஆனா பாஸ் என்கிற பாஸ்கரன்ல நயன்தாரவ சூப்பர் பிகருன்னு சொன்னது மோசம்ங்குறாங்க, வானம் படத்துல பிரம்மானந்தம் "நான் சிங்கத்தைவிட ஒசரம்னு" சொல்லுவாரு (வானம், இந்தம்மாவோட விமர்சனத்துக்கு பிறகு வந்த படமா இருந்தாலும்), இந்தம்மா என்னடான்னா நீங்க ஹீரோக்கள பத்தி பெர்சொனலா கமெண்ட் அடிச்சு பாருங்களேன்னு சவால் விடுது. இந்தம்மா தமிழ் படங்கள் கூட பாக்குறதில்ல போல. இப்ப முந்தி மாதிரி இல்ல, ஆணாதிக்க சினிமா, ஹீரோ வேர்ஷிப் எல்லாம் எல்லா சினிமாவுலயும் கிடையாது. நீங்க இன்னம் கொஞ்சம் வளரனும் (வேணும்னா காம்ப்ளான் குடிச்சி பாருங்க). அப்புறம், கும்பகோணத்துல எந்த பிசிக்ஸ் ப்ரோபெசர் இப்பிடி இருப்பாங்கன்னு கேக்குறாங்க, ஏன் கும்பகோணத்துல அழாகான பொண்ணுங்களே இருக்கக்கூடாதா? ராவணன் படத்துல காட்டுக்குள்ள கூட ஐஸ்வர்யா ராய் மேக்கப் போட்டமாதிரி பளிச்சின்னு இருப்பாங்க (ஒரு வேள அது ஐஸ்வர்யா ராய் அப்பிடித்தான்னு சொல்லுவாங்க போல, அப்ப நயாந்தாரா மட்டும் என்ன மொக்க பிகரா?, ஐயோ நான் மரியாத இல்லாம பெர்சனலா கமென்ட் அடிச்சுட்டேனே), எந்த நாட்டுல தீவிரவாதி மேக்கப் போட்டு வெள்ள வேளேரன்னு அழாக இருந்தாங்கன்னு தில்சே(உயிரே) படத்துல மனிஷாவ பார்த்து இவங்க கேப்பாங்களா?

அய்யா வாசகர் மகா ஜனகளே, இதுக்கு மேல நான் ஹாசினி பேசும் படம் பத்தி விமர்கிக்க போறன். கொஞ்சம் ஒவேரவேதான் இருக்கும். சுகாசினிய விமர்சிக்கறது பாலை கருப்புன்னு சொல்ற மாதிரி இருக்கும் அப்பிடின்னு யாராவது நெனச்சீங்கன்னா தயவு செய்து இந்த பதிவ இதுக்கு மேல படிக்காத்திங்க. 

முதலாவதாக ஹாசினி பேசும் படம் ஒரு reviewஆ அல்லது critiqueஆ என்பது புரியவில்லை. நமக்கு எல்லாமே விமர்சனம் தானே, சுஹாசினியும் அப்படியே எண்ணிக்கொண்டார் போலும். இவரது விமர்சனம் ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளேயே சினிமாவினை பார்க்கிறது. சுகாசினி நல்ல படங்களுக்கு சில அளவு கோல் வைத்திருக்கிறார். 
  1. குட் ஓவர் இவில்
  2. களம் நகர்புறம் சார்ந்ததாக இருக்க வேண்டும் 
  3. Protagonist நல்லவாராக மட்டுமே இருக்கவேண்டும் (தமிழ் சினிமாவின் அடிநாதமான ஹீரோ, வில்லன் கான்செப்ட்)
  4. படத்தில் ஒரு பெரிய கதை இருக்க வேண்டும் 
  5. கதாபாத்திரங்கள் டைப் காஸ்ட் பண்ணபட்டிருக்க வேண்டும் நல்லவர்கள், கெட்டவர்கள்
  6. Protagonist  அல்லது அவரை சுற்றி வருபவர்கள்  பெண்களை மதிப்பவர்களாக, கலாசாரக்க் காவலர்களாக, சமூகத்தால் அங்கிகரிக்கப்பட்ட விடயங்களை மட்டுமே செய்பவர்களாக இருக்க வேண்டும். 
  7. வாழ்கையில், சமுகத்தில் வெற்றி பெற்றவர்களின் கதையாக மட்டுமே திரைப்படக்கதை இருக்க வேண்டும் 

இன்னும் பல அளவுகோல்கள் இருக்கிறது, அந்த பட்டியல் மட்டுமே மிகவும் நீண்டதாக ஆகிவிடக்கூடாது. இந்த விமர்சனங்களைப் பார்த்தபோது சுஹாசினிக்கு உலக சினிமா மற்றும் தமிழ் சினிமா பற்றிய போதுமான புரிதல் இருக்கிறதா என்பதே கேள்விக்குறியாகி விடுகிறது. ஹாலிவூடில் பாண்டசி, பிக்சன், சுப்பர் ஹீரோ படங்கள் என சில படங்கள் வெளிவரும், இந்தவகையான படங்கள் பொழுதுபோக்கு ஒன்றை மட்டுமே குறியாக கொண்டிருக்கும், நடக்க முடியாத அசாத்தியாமான விடயங்களே இவற்றில் காணப்படும்.  (சயின்ஸ் பிக்சன் என்பது சிலவேளைகளில் ஒரு விதிவிலக்கு) இந்த மாதிரியான படங்களுக்கு உள்ள தமிழ் வடிவமே நமது மாஸ் திரைப்படங்கள். ஆரம்ப நாட்களில் இவை சுப்பர் ஹீரோ படங்களாக மட்டுமே இருந்தன, பின்னைய நாட்களில் பாண்டசி, பிக்சன் போன்றவையும் சேர்ந்து கொண்டன. இவற்றின் கதயையோ அல்லது கதைக் களத்தையோ யாரும் விமர்சிப்பதில்லை, இந்த படங்களில் கையாளப்பட்டிருக்கும் தொழில் நுட்பம், படமாக்கலின் நேர்த்தி போன்ற விடயங்களே விமர்சிக்கப்படும். இவற்றின் கதை, யதார்த்த மீறல் என்பவை taken for granted இவ்வகையான படங்களுக்கு critique அவசியமில்லை, review வே எழுதப்படும். நம்ம சுகாசினி அவர்கள் தமிழில் வெளிவரும் போர்முலா திரைப்படங்களுக்கும் கதை நேர்த்தி எதிர்பார்க்கிறார் அவற்றையும் critisize செய்கிறார். அதே போன்று காமெடி, ரொமாண்டிக் காமெடி, டீன் மூவீஸ் என சில வடிவமும் வெளி வரும். இவற்றில் கதை என்று ஒன்று இருக்காது, ஒன்றரை மணி நேரம் நமது அறிவை அடகு வைத்துவிட்டு சிரிப்பதற்காகவே இந்த படங்கள் வரும். ஹங் ஓவர் போன்ற படங்களை குறிப்பிடலாம். இவற்றின் மறு வடிவமே பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற படங்கள். இவை ஜாலியான படங்கள். அனுபவிக்கனும் ஆராயக்கூடாது வகையறாவை சேர்ந்ததுதான் இதுவும். 

விமர்சனத்துக்கு உள்ளாக்க கூடிய படங்கள் வரிசையில் இருப்பவை மாற்று சினிமாவுக்கான முயர்ச்சியும் சென்சிபிள் entertainers  வகையை சார்ந்தவையும் தான். TRP rating கிற்காக புதிதாக வெளிவந்து வெற்றிபெற்ற எல்லா படங்களையும் ஒரே அளவுகோலினை வைத்து விமர்சிப்பது முறையாகாது.  சிறுத்தை சிறுத்தை தான், ஆடுகளம் ஆடுகளம் தான், இரண்டையும் ஒரே நியாய தராசில் வைத்து பார்க்க முடியாது. இதை அவர் புரிந்து கொண்டு விமர்சனம் செய்வார் என்றால் நல்லது. 

தமிழ் சினிமாவினை பற்றிய ஒரு புரிந்து கொள்ளலை நமது இன்னுமொரு பதிவில் விரைவில் பார்ப்போம். 


டிஸ்கி 2: டிஸ்கி 1ல எதோ சீரியஸ் பதிவுன்னு சொன்னியே? எங்கடா அது? இதுவும் மொக்கதான்டானு சொல்றீங்களா? ஓகே டீல்.