Friday, December 23, 2011

ஒரு விளக்கம், ஒரு வேண்டுகோள், ஒரு அறிவிப்பு:


ஒரு விளக்கம், ஒரு வேண்டுகோள், ஒரு அறிவிப்பு.........................

மொதல்ல உங்க எல்லாருகிட்டயும் மன்னிப்பு கேட்டுகுறோங்க. அதாவது முன்ன மாதிரி பிளாக்கிங்க்கு பெரிய அளவுல நேரம் ஒதுக்க முடியுதுல்லங்க. என்னடா எவன பார்த்தாலும் இதையே சொல்லிக்கிட்டு இருக்காங்க, ஒரு வேல இதையே ஒரு பிளாக்கிங் ட்ரென்டா  ஆக்க பார்க்குறாங்களோன்னு யோசிக்காதீங்க சத்தியமா உண்மைங்க. வருஷ  கடைசி நம்ம ரெண்டு பேருக்கும்  ஒரே கெடுபுடியான காலம், முன்ன மாதிரி வேளைக்கு பதிவு போட முடியறதும் இல்ல, பதிவுகள படிக்க முடியறதும் இல்ல. ஒவ்வொருநாளும்  ப்லோக்கருக்கு போயி டாஷ்போர்டுல வழமையா தொடர்ச்சியா  பதிவு போடுற  பதிவர்களின்(சி.பி, விக்கி, நாஞ்சில்,தமிழ்வாசி,நிருபன், மற்றும் பல நண்பர்கள்)  புதுசா வார பதிவுகள ஓபன் பண்ணி வச்சிட்டு, படிச்சு ஒட்டு கமெண்ட்டு போடலாம்னு பார்த்தா ஏதாச்சும் வேல வந்து தொலைக்கும். அப்புடியே ஒரு மாதிரியா பதிவுகள படிச்சு முடிச்சிட்டு கமெண்ட்டு போட ரிப்ரெஷ் பண்ணினா அங்க புதுசா ஒரு பதிவே ஒக்காந்து இருக்கும். அப்புறம் முடிஞ்சு போன கல்யாணத்துக்கு எதுக்கு மேளம் அடிக்கனும்ன்னு கமெண்டு போடாம வந்திடுவோம், அப்புறம் செங்கோவி அண்ணனோட ப்ளாகுக்கு போனா அவரு பதிவுகள காணவும் இல்ல,யாரு பதிவுலயும்  அவரு காமேண்டையும் காணவுமில்ல, தொடராத பதிவுகள்ன்னு ஒரு பதிவ போட்டுட்டு அவரும் வேலைல பிசியாகிட்டாரு போல.   பன்னிக்குட்டி அண்ணன ரெண்டு மாசமா இந்த ஏரியா பக்கமே காணல.இப்பத்தான் ஒரு வாரமா ஆக்டிவ்வா இருக்காரு போல,  அவரு கடைசி பதிவ கூட வாசிசாச்சு ஆனா இன்னும் மொய் வைக்கல.  கொஞ்ச நாளா இதேதான் நடக்குது, இதுக்கு எதாச்சு தீர்வு இருந்தா சொல்லுங்கப்பா. நம்ம ரெண்டு பேர்(புட்டிபால் அண்ட் மொக்கராசு மாமா) மேட்டர் என்னனா....புட்டிபாலுக்கு ஜனவரி எண்டுல அப்புடின்னு சொல்லியிருந்த ஒரு ப்ரோஜெக்டோட டெட்லயின திடீர்ன்னு ஜனவரி அஞ்சுன்னு மாத்திட்டாங்க, அதுக்காக மாஞ்சு மாஞ்சு வேல பார்த்துகிட்டு இருக்காரு. அப்புறம் மொக்கராசுக்கும் ஒரு வருசமா இழுத்தடிச்சிக்கிட்டு இருந்த ஒரு வேலைய முடிச்சே ஆக வேண்டிய கட்டாயம். கெளம்பிட்டாரு. அதனால இனிமே ஒரு ரெண்டு மூணு வாரத்துக்காவது  பதிவுலக பக்கம் நம்ம நடமாட்டம் சுத்தமா இல்லாம போனாலும் போயிடும். ஆனாலும் யாரும் நம்மள மறந்துட கூடாதேன்னுட்டு, முன்னொரு காலத்துல எழுதி கடைசி கட்ட திருத்தங்களுக்காக ட்ராப்டுல வச்சிருந்த ஒரு ரெண்டு பதிவுகள இந்த வருஷ கடைசிகுள்ள வலையேத்த முயற்சி பண்ணுறோம். அங்கங்க நெறைய தப்புகள் இருக்கும், தமிழ் பொறுக்குமா இல்ல தெரு பொறுக்குமான்னு தெரியல. குத்தம் குறைகளை மன்னிக்கவேண்டி மீண்டும்  கேட்டுக்கறோம்.


டிஸ்கி: யாருமே இல்லாத கிளாஸ்ல யாருக்குடா பாடம் நடத்துறீங்க? உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா?ன்னு கேட்குறீங்களா? இல்லீங்க, ரெண்டு வாரமா பதிவே போடாட்டியும், எப்புடியும் ஒரு நாளைக்கு ஆவரேஜா 100 பேஜ் விவ்ஸாவது வருது. கண்டிப்பா அவுங்க என்ன எதிர் பார்த்து இங்க வர்றான்களோ அத கொடுக்க வேண்டியது நம்ம கடமை. வருஷ கடைசிகுள்ள அந்த டிராப்ட்ல இருக்குற ரெண்டு பதிவயும் போட்டுட்டு, 2012ல இருந்து புதுசா வர முயற்சி பண்ணுறோம்.

Friday, December 9, 2011

Transformers: Dark side of moon ஒரு தமிழ் சினிமாவாக இருந்திருந்தால்!

இந்த வருடம் ஜூன் மாதம் வெளிவந்த Tranformers 3 படம் பற்றி அறிந்திருப்பீர்கள். உலக அரங்கில் அதிக வசூல் பெற்ற படங்கள் வரிசையில் நான்காவது இடத்தில் இருக்கும் படம். முதல் மூன்று இடங்களில் இருப்பது அவதார், டைடானிக் மற்றும் ஹர்ரி போட்டர். படத்தின் நீளம் காரணமாகவும் இன்னும் சில குறைகள் காரணமாகவும் விமர்சன ரீதியாக வெற்றி பெறாத ஒரு படம். இந்த திரைப்படம் ஒரு தமிழ் படமாக இருந்திருந்தால் நமது விமர்சனம் எவ்வாறு இருந்திருக்கும் என ஒரு சிறு கற்பனை.


Transformers: அரை வேக்காடு. 

கோடி கோடியா பணத்த எப்படி குப்பையில கொட்டுறதுங்கறதுக்கு ஒரு சிறந்த உதாரணம் இந்த படம். சாதரணமான கார், ரேடியோ, லேப்டாப் போன்றவை ஜயன்ட் ரோபோட்ஸாக மாறினால் எப்படி இருக்கும் என்கிற கற்பனையை தவிர்த்து படத்தில் எதுவுமே ரசிக்கும்படியாக இல்லை. அதுவும் ஆடோபாட்சின் ஒரு தொழில்நுட்பத்தை கண்டறியவே மனிதனின் நிலாவுக்கான பயணம் நடந்தேறியது என்பது வரலாற்றை திரிப்பது. மனிதன் உண்மையில் நிலாவில் கால் வைத்தானா என்பதே விவாதத்துக்குரிய விடயமாக இருக்கும் போது கொஞ்சமும் அக்கறை அற்று இவ்வாறு சித்தரித்திருப்பது முட்டாள் தனத்தின் உச்சகட்டம். "ஸ்பேஸ் பிரிட்ஜ்" அப்பிடின்னு ஒன்னு, சார்பியல் தத்துவத்தின் வோர்ம்-ஹோல்ஸ்ல இருந்து அப்புடியே உருவியிருக்காங்க, இத பார்த்தப்போ சிரிக்கறதா இல்ல அழுறதான்னு தோனல. ஒரு விஞ்ஞான மாணவனா அது எவ்வளவு மொக்கைன்னு எனக்கு நல்லாவே தெரியும். இதுக்கு, முதல்பாகத்துல பென்டகனோட செக்யூரிட்டி பயர் வால்ல அஞ்சி நிமிசத்துல ஹாக் பண்றதா காட்டுறது எவ்வளவோ தேவல. ஒரு காட்சில லிங்கன் சிலைய உடைக்கிற மாதிரி காட்டியிருக்கறது தேசிய தலைவர்களுக்கு மிகப்பெரிய அவமதிப்பு. (இத கறுப்பின அமெரிக்கர்கள் மேல இயக்குனர் வச்சிருக்கற காழ்புணர்ச்சி, அரசியல் அவமதிப்பு அது இதுன்னு இன்னும் நிறைய விசயங்கள கோர்த்து போராட்ட லெவெலுக்கு கொண்டு போகனும்). நாலு பில்லர வச்சிக்கிட்டு, சென்டினல் ப்ரயிம் அவங்க நாகரீகத்துல ஐன்ஸ்டைன்னு சொல்றதுக்கு பதிலா பேசாம ஐன்ஸ்டைன தூக்குல போட்டிருக்கலாம்.


படம் முழுதும் அமெரிக்க மயம், அமெரிக்கர்கள்தான் உலகத்தையே காக்க பொறந்தவங்க மாதிரி பில்டப். தாங்கல. அதுலயும் மகா கொடும ஒரு காலேஜ் முடிச்ச பையன்  உலகத்தையே காப்பாத்துறது. ஏலியன் இனங்களுக்கு இடையில நடக்குற பிரபஞ்ச யுத்தத்த அசால்டா இவரு சமாளிக்கறதா சொல்றது பார்வையாளன முட்டாளாவே பாக்குற இயக்குனர்களின் மனப்பாங்கு. அவரு பண்றதா காட்ற ஆக்ஷன் காட்சிகள் லாஜிக் மீறலின் உச்சகட்டம். இன்னும் எத்தன நாளுக்கு இதையே பாக்க போறோம்? படத்தோட க்ளைமாக்ஸ்ல ஷாக் வேவ் வந்து ஒரு நகரத்தையே நாசப்படுத்துது, எவ்வளவு ரண களம் நடந்தாலும் அதுல எந்த கன ரக ஆயுதங்களும் இல்லாம சும்மா மாட்டிக்கிட்ட ஹீரோவுக்கோ, அவரோட கூட்டத்துக்கோ ஒண்ணுமே ஆகலியே அது எப்புடி? ஸ்பேஸ் ப்ரிட்ஜுக்கான கண்ட்ரோல் பில்லர சென்டினல் ப்ரயிம் ஒருவரால்தான் இயக்க முடியும்னு சொல்லிட்டு, க்ளைமாக்ஸ்ல வேறொருத்தர் இயக்குறாரு, இப்படி லாஜிக் மீரல்கள சொன்னா அதுவே தனி பதிவு போடுற அளவுக்கு வரும். ஒரு போலியான வரலாறா இருந்தாலும் எதோ பெரிசா சொல்லி தொடங்கின படம் க்ளைமாக்ஸ் அப்புடியே யூகிக்க கூடியதா இருக்குறது படத்துல உள்ள பெரிய்ய்ய குறை. படம் தொடங்கும்போதே தெரியும் அந்த சின்ன பையன் உலகத்தையே காப்பாத்த போறான்னு. அதுக்காக மூணு மணிநேரம் செலவழிச்சு படத்த பார்க்கணுமா?

அந்த சின்னப்பையன் நடிப்பு சகிக்கல, அவனுக்கெல்லாம் எவன்யா இந்த படத்துல நடிக்க சான்ஸ் கொடுத்தது? மேகன் பாக்ஸ தூக்கிட்டு ஒரு பிகர போட்டிருக்காங்க, சாயல்ல அப்புடியே காமரூன் டயஸ பாக்குறது மாதிரியே இருக்கு, கவர்ச்சி காட்றதா நெனச்சு அவ பண்ற கூத்துல நமக்கு வாந்திதான் வருது. மேகன் பாக்ஸ் எடத்துல வச்சு பார்த்தா கொமட்டிக்கிட்டு வருது. இயக்குனருக்கு என்ன ரசனையோ. படத்துல இருக்கற ஒரே ஒரு ஆறுதல் 3-D எபெக்ட் தான், ஆனா அதுக்காகவெல்லாம் தேட்டருக்கு போயி படம் பார்க்க முடியாது, திருட்டு VCD லதான் இந்த படம் பார்க்கணும். (3D எபெக்ட திருட்டு VCD ல எப்புடி பார்க்குறதுன்னு நீங்க கேள்வி கேக்க கூடாது, இவனுங்க படத்த எல்லாம் அப்புடி பார்க்குறதுதான் பொருத்தம்ன்னு கமெண்டு போடணும்) 

இவரு மூஞ்சிக்கு அவரைவிட ஒசரமான பிகரு கேக்குது.சிங்கம்டா நீ ...

மொத்தமா இது ஒரு சுத்த வேஸ்ட்டு படம், இத எடுத்தவன்தான் முட்டாள்னா இத பார்க்க போனவன் எல்லாரும் வடிகட்டின முட்டாள், அந்த படத்த பார்த்துட்டு அதுக்கு விமர்சனம் எழுதின புட்டிபால் உலக மகா முட்டாள். அப்புறம் அதஉட்காந்து இவ்வளவு நேரம் வாசிக்கிற நீங்க எல்லாம் ...............

அமெரிக்கர்கள் யாரும் இந்த படத்துக்கு ஏன் இப்புடி ஒரு விமர்சனம் இதுவரைக்கும் எழுதல்லன்னு யோசிச்சிட்டே இருந்தேன், திடீர்னுதான் தோணிச்சு, இந்த படத்த எடுத்தவங்க யாரும் நாங்க ஒரு மறைக்கப்பட்ட உண்மைய உலகுக்கு எடுத்து சொல்லியிருக்கோம்னோ, இந்த படத்த பார்த்தா உங்களுக்கு அமெரிக்கான்னு ஒரு திமிரு வரும்னு டிவில மணிக்கொருதரம் வந்து கூவல, இன்னொன்னு அமெரிக்க விமர்சகர்கள் விளம்பரத்த பார்த்துட்டு படத்துக்கு விமர்சனம் எழுதுறதும் இல்ல.

டிஸ்கி: சினிமா விமர்சனம் எழுதுறதுல நாலு வகை இருக்கு. ஒன்னு ஒரு படத்த பார்த்ததும் நம்ம மனசுக்கு பட்டத எழுதுறது. ரெண்டு நடுநிலையாகவே குறை நிறைகள சொல்றது, மூணு சினிமா இயக்குனர்கள் நடிகர்கள் எல்லாரும் முட்டாள்ன்னு நினைச்சு எழுதறது, நாலு தமிழ் சினிமா பாக்க போற ரசிகர்கள் எல்லாரும் முட்டாள்கள்ன்னு நினைச்சு எழுதறது. இது அஞ்சாவது வகை. 

ஆறுதல் பரிசு

இன்ஸ்பிரேசன்: இன்செப்சன் படம் பத்தி நம்ம நண்பர் ஒருத்தர் கூட பேசிக்கிட்டு இருந்தப்போ, படத்துல உள்ள திரைக்கதை ஒட்டைகள்ன்னு அவரு ஒரு பெரிய பட்டியலே போட்டாரு, அது முதல் இன்ஸ்பிரேசன். ரெண்டாவது, செங்கோவி அண்ணன், பழைய முதல் மரியாதைக்கு சமீபத்தில் விமர்சனம் எழுதியவர்.

Tuesday, November 29, 2011

காதலில் சொதப்புவது எப்புடி?

இந்த காதல் இருக்கே காதல், அது ஒரு வீணா போனதுங்க, காதல் இல்லாத ஒரு தமிழ் சினிமாவ பாக்க முடியாது, ஏன் இந்திய சினிமாவே கெடயாதுன்னு சொல்லலாம். இந்த உலகத்துல பிறந்த எல்லா ஜீவராசிகளும் பண்ணுற ஒன்றுதான் இந்த பாழாப்போன காதல். காதல்ன்னா என்னாங்குற டவுட்டே நமக்கு இன்னும் தீரல, ஆனா நெறைய காதல் பஞ்சாயத்து மட்டும் நம்ம கோர்ட்டுக்கு அடிக்கடி வருது. இதுல பஞ்சாயத்து பண்ணி மூக்க ஓடச்சுக்கரதுக்கு நாம என்ன விமலகாசனா, அதனால நம்ம நண்பர்கள் எல்லாருக்கும் சேர்த்து காதல்ல எப்புடி சொதப்புரதுன்னு ஒரு பதிவு போட்டு அவுங்க வாழ்க்கைல ஒளி ஏத்தி வைக்கலாம்ன்னு முடிவு பண்ணி எறங்குனதுதான் இந்த பதிவு.


காதல்ல சொதப்புறதுக்கான வழிகள் நெறயவே இருக்கு, ஒவ்வொன்னா சொல்றோம், நல்லா கேட்டுக்குங்க மக்களே...

பேமானியா இருந்துக்கிட்டு அம்பானி பொண்ணுக்கு ரூட் விடுறது: நம்ம தகுதிக்கு மீறி ஆசைப்பட கூடாது. காதல்ங்குறது இயல்பா வரணும், ஒரு பொண்ணோட அழகையோ அந்தஸ்த்தையோ பார்த்து நாமாக வலிந்து ஏற்படுத்திக்க கூடாது, அப்புடி ஏற்படுத்திக்கிட்டோம்னா அது நிலைக்காது. பண்ணையார் பொண்ணுங்கள சினிமாவுல வேணும்னா வேலகாரன் காதலிக்கலாம் நிஜத்துல அது செட் ஆகாது. ஒததான் விழும்...

மொக்க பிகருக்கு நூல் விடுறது (சப்ப பிகருக்கு இல்லீங்க மொக்க பிகருக்கு): நானும் எப்படியாச்சு லவ் பண்ணனும்ன்னு அடம்புடிச்சி நெறயப்பேர் மொக்க பிகருங்களுக்கு நூல் விடுவாங்க, அப்புறம் லேட்டா புரிஞ்சுக்கிட்டு குத்துதே குடையுதேன்னு அலறுவாங்க, நம்ம சிம்பு சொல்ற மாதிரி காதல நாம தேடி போகக்கூடாது, அதுவா நடக்கணும், நம்மள தலைகீழா போட்டு திருப்பனும். உச்சந்தலைல நச்சுன்னு கொட்டனும்.

மொக்கயா நாலு பிரண்ட்ஸ கூட வச்சிகிட்டு லவ் பண்றது: கூட இருக்கறவன் எப்படிப்பட்டவன்னு தெரிஞ்சுக்காம லவ் பண்ண கூடாது. காதல்னாலே மேட்டர முடிக்கறதுன்னு சில பேர் நெனச்சிட்டு இருப்பாங்க, அது வேலை வெட்டி இல்லாதவன் பண்றதுன்னு சில பேர் நெனப்பாங்க, காதலே ஆப்புதான்னு சிலபேர் நினைப்பாங்க, இப்படி நினைக்கரவங்கள கூட வச்சிட்டு லவ் பண்ணினா நமக்கு எந்த ஆபத்தும் இல்ல, ஆனா நாம லவ் பண்ணின பொண்ணு நடு தெருவுலதான் நிக்கும்.


நாட்டாமைக்கு ஆள் சேர்க்குறது: லவ்வுல என்ன பிரச்சின வந்தாலும் அத நாம தனியாளாதான் ஹான்டில் பண்ணனும் நாட்டாமைக்கு ஆள் புடிக்க கூடாது, இதுக்கு பல காரணம் இருக்கு. ஒன்னு மின்சார கனவு மாதிரி ஆகிடலாம், இல்லனா அந்த பொண்ணு லவ்வ கூட சொல்ல தைரியம் இல்லாதவன் நம்மள எப்புடி வாழ் நாள் முழுவதும் வச்சு காப்பாத்த போறான்னு யோசிக்கலாம், நாளைக்கு ஒரு பிரச்சின வந்தா நாட்டாம தலையும் சேர்ந்து உருளும்,அப்புறம் அவன் வீணா நம்மள முறைப்பான்.

தெய்வீக காதல்னு பீலா விடுறது: ஒரு காதலுக்கு அடிப்படையே காமம்தான், அப்புறம் என்ன தெய்வீக காதல்? எந்த விடயத்தையும் உண்மையோட பார்த்தாதான் அது நிலைச்சு இருக்கும், சும்மா தெய்வீகம் அது இதுன்னு பீலா விட்டா அது சீக்கிரமா புட்டுக்கும். காதல் பண்ணிட்டு அந்த பொண்ண என்ன மியுசியத்துல இருக்கற பொம்ம கணக்கா பாத்துக்கிட்டு இருக்கவா போறீங்க, அப்புறம் என்ன தெய்வீக காதல், மண்ணாங்கட்டி காதல்?

வெட்டி பந்தா காட்டுறது: லவ்வர இம்ப்ரெஸ் பண்றதா நெனச்சு வெட்டியா பந்தா காட்டுறது, அப்புறம் லவ் பண்ண ஆரம்பிச்சதும் அத கண்டின்யூ பண்ண முடியாம விட்டிடுறது, பந்தாவ நம்பி வந்தவனா ரிலேஷன்ஷிப் அங்கேயே கட், இல்லன்னா இவன் ஒரு ஏமாத்து பித்தலாட்டக்காரனோன்னு ஒரு சந்தேகம் வரும், அது நீண்ட காலத்துல பெரிய பிரச்சினையா வெடிக்கலாம். ரஜினிதான் சிகரெட்ட மேல தூக்கி போட்டு பிடிக்கணும், மைக் மோகனுக்கு அது தேவையில்லாத வேல.


முனியம்மாவ லவ் பண்ணிட்டு எமி ஜாக்சன் லெவலுக்கு வர்ணிக்கறது: சுமாரான ஒரு பிகர லவ் பண்ண வேண்டியது, அவள இம்ப்ரெஸ் பண்ணறேன் பேர்வழின்னு கிளியோபேட்ரா ரேஞ்சுக்கு கவிதயாலையே வர்ணிக்க வேண்டியது, இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி அவளுக்கும் நாமதான் உலக அழகியோன்னு ஒரு நெனப்ப வரவைக்க வேண்டியது. அப்புறமா அவ பந்தா தாங்க முடியலடான்னு பிரெண்ஸ்க்கிட்ட புலம்ப வேண்டியது, இல்லனா அவளே நாம எதுக்கு இந்த சப்ப பையன் கூட இருக்கனும்ன்னு நெனச்சு ஒரு அலெக்சாண்டர தேடிப்போனா சட்டி சுட்டதடான்னு பாட வேண்டியது, தேவையா இந்த மானங்கெட்ட பொழப்பு

ரெண்டு மூணு பொண்ணுக்கு ஒரே நேரத்துல நூல் விட்டுகிட்டு, மாறி மாறி உளர்றது: நெறைய அப்பாவிங்க, அப்புறம் சில அடப்பாவிங்க பண்ணுற தப்புதான் இது. சீரியஸா பண்றோமா விளையாட்டா பண்ரோமான்னே தெரியாம மூணு நாலு பொண்ணுக்கு மாறி மாறி நூல்விட்டுட்டு, இங்க அனுப்ப வேண்டிய மெச்செஜ அங்க அனுப்புறது, அங்க சொல்ல வேண்டியது இங்க சொல்றதுன்னு சொதப்பிக்கறது. சுள்ளானுக்கு எதுக்கு மன்மதன் வேல..

லவ்வர கூட வச்சுக்கிட்டு கேத்ரீனா கைப் பத்தி பேசுறது: இந்த பொண்ணுங்க இருக்காளுங்களே ரொம்பவே எக்கோ புடிச்ச கழுதைங்க(அது எக்கோவா ஈகோவா, #டவுட்டு). தப்பி தவறியும் இன்னொரு பொண்ணு ரொம்ப அழகுன்னு சொல்லி வீண் வம்ப விலைக்கு வாங்கிடாதீங்க, ரொம்பவே உஷாரா இருக்கணும். ஒருத்திய கூட வச்சுக்கிட்டு இன்னொருத்திய அறிவுன்னு சொன்னாலும் தாங்கிக்குவாளுங்க ஆனா அழகுன்னு சொன்னீங்கன்னு வைங்க, உடனே இல்லாட்டியும் ரெண்டு நாள் கழிச்சின்னாலும் ரிவீட்டு கன்பர்ம். 

பட்டினில இருந்தவன் பிரியாணி பொட்டலத்த பார்க்குற மாதிரி பொண்ண வெறிக்க வெறிக்க பார்க்குறது: காதலுக்கு அடிப்படையே காமம்தான்னு சொல்லிட்டோம், ஆனா அதுக்காக மட்டுமேதான் பண்றதுன்னா அதுக்குன்னே வேற நெறைய விஷயங்கள் இருக்கு. பொண்ணுனா பூப்போல பாத்துக்கணும், அத விட்டுட்டு விழுங்குறாப்போல பாத்தா எந்த பொண்ணுக்குதான் கூச்சம் வராது, கூச்சம் எரிச்சலா மாற நெறைய நாள் இல்லிங்க, அதனால பாக்குறப்போ கூட கொஞ்சம் ஜாக்கிரதையாவே பாருங்க.


நான் வெஜ் சாப்பிட்டிட்டு அத பிரெண்ட்சுங்க கிட்ட சொல்றது: லவ் பண்றப்போ அப்பப்போ சின்னதா நான் வெஜ் சாப்ட்ரதெல்லாம் சகஜம்தானே, அதுக்காக அத போயி பிரெண்ட்சுங்க கிட்ட சொல்லி ஒங்க வீரதீரத்த காட்டமுற்பட்டீங்கன்னு வைங்க, ரெண்டு சிக்கல் இருக்கு. ஒன்னு அந்த பொண்ண பத்தி அவங்க பார்வையே ரொம்ப தப்பா இருக்கும். அப்புறம் எப்புடி அந்த பொண்ண கட்டிக்கிட்டு பிரெண்ட்சுங்க முன்னாடி தைரியமா நிக்கறது? சீரியஸா தான் நீங்க லவ் பண்ணினாலும் ஆட்டோமெட்டிக்கா அது மேட்டர முடிச்சிட்டு கழட்டி விடுற லவ்வா மாறிடும். இல்ல நீங்க சொன்னது எல்லாமே அந்த பொண்ணுக்கு தெரிய வந்திச்சின்னு வைங்க அதவிட பெரிய ஒரு துரோகத்த அந்த பொண்ணுக்கு நீங்க பண்ணிட முடியாது. அப்புறம் உங்க காதல் பெப்பே தான். 

சொந்தப் பேருல ப்ளாக் எழுதறது: இதுல பெருசா சொல்றதுக்கு என்னங்க இருக்கு, நாங்க சொந்த பேருல ப்ளாக் எழுதினா இப்புடி ஒரு பதிவு போட முடியுமா இல்ல போட்டுட்டுதான் ஒரு பொண்ண லவ் பண்ண முடியுமா?

சொல்றத சொல்லிட்டேம், இதுக்கும் மேல காதலிச்சு சொதப்பிக்கிட்டு தாடி வளர்க்கனும்ங்குறது உங்க தலையெழுத்துன்னா விமலகாசன் என்ன கமலகாசனால கூட உங்கள காப்பாத்த முடியாது 


டிஸ்கி 1: டைட்டில் "காதலில் சொதப்புவது எப்புடி?" என்னும் குறும்படத்தில் இருந்து சுட்டோம்,ஆனா அதுக்கும் இந்த பதிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல,, ஆனாலும் அந்த பட இயக்குனரு பாலாஜிக்கு நன்றியையும், அவரோட முதல் பட முயற்சிக்கு வாழ்த்துகளையும் தெரிவிச்சிகிறோம்.

டிஸ்கி 2: உடனுக்குடன் பல பாயிண்டுகள் எடுத்துக்குடுத்த அனுபவசாலி மொக்கராசு மாமாவுக்கு எப்புடி நன்றி சொல்றதுன்னே தெரியல, ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி. 

டிஸ்கி 3: போனஸா லவ் புரபோஸ் பண்றது எப்புடின்னு ரெண்டு வீடியோ தர்றோம், பார்த்துட்டு உங்களுக்கு எது செட் ஆகும்னு நீங்களே முடிவு பண்ணிக்குங்க...

Saturday, November 19, 2011

ஆணி ஜாஸ்தியானா - (சுய புராணம் I)

என்னன்னே தெரியலப்பா, ஹாலிடே சீசன் ஆபர்ன்னு ஒவ்வொரு நாளும் ஏழெட்டு ஈமெயில் மட்டும் வருது, ஆனா அந்த ஹாலிடேஸ் எப்பன்னே தெரியல, ஆபிஸ்ல வேல மட்டும் கொறஞ்ச பாடில்ல. ஊருக்குள்ள அவன் அவன் ஒரே ஒரு பாஸ வச்சிக்கிட்டே சங்க அத்துக்கிட்டு திரியறானுக, நாலு பாஸ் இருக்கற நான் படுற அவஸ்த இருக்கே..... 


கொலாபரேசன் வோர்க்குன்னுட்டு நாலு காம்பெனில இருந்து நாலு பாசு நமக்கு, அதுல ஒருத்தரு நம்ம மேல பிரியப்பட்டு ஒரு பார்டிக்கு கூப்பிட்டாரு, பார்ட்டின்னா அந்த பார்ட்டி இல்லங்க, வேல விசயமா எதோ ஒரு டிஸ்கஷனாம், அது முடிஞ்சதும் பார்டியாம்னு சொல்லியிருந்தாரு, மறந்துடாம இருக்கனும்ன்னு ஒரு மெமோ வேற அடிச்சு குடுத்திருந்தாரு. நமக்குதான் எந்த எடத்துக்கும் நேரத்துக்கு போற பழக்கம் இல்லையே, ஆனா பார்டிக்கு நேரத்துக்கு போயிரனும்ன்னு கூட வேல பாக்குற நம்ம நண்பருக்கிட்டையும் சொல்லி வச்சிருந்தேன். பார்ட்டி சரியா ராத்திரி எட்டு மணிக்கு ஆரம்பிக்குது, நாம போற எடம் ஒரு மணி நேர வண்டி ஓட்டம், சரி அப்போ ஆறு மணிக்கெல்லாம் புறப்படனும்னு சரியா நேரத்துக்கே வண்டில ஏறிட்டோம், எல்லாம் ஒரு முன்ஜாக்கிரததான்.

வண்டில ஏறி நம்ம நண்பருக்கிட்ட மெமோவ பாத்து GPS ல அட்ரெஸ போடுப்பான்னு சொல்லிட்டு, வண்டிய கெளப்பிட்டேன். அவரும் நவிகேசன் எல்லாம் போட்டு வச்சாரா சரியா ஆறு நாப்பதுக்கெல்லாம் லோகேசன் போயிட்டோம். அது நம்ம பாஸோட ஆபிஸ், அங்க பார்த்தா பார்டிக்கான அடையாளம் எதுவுமே இல்ல. என்ன வம்பாபோச்சே நம்ம நேரத்துக்கே வந்துட்டம் போலிருக்கே, இப்போ என்ன செய்யலாம்னுட்டு சரி ஆபிஸ சுத்திப்பார்போம்ன்னு கொஞ்ச நேரம் சுத்தினோம், ஆபீஸ்ல செக்கியூரிட்டிய தவிர ஒரு ஈ காக்கா கூட இல்ல, அப்பத்தான் திடீர்ன்னு ஒரு ஞானம் வந்து அந்த மெமோவ எடுத்து பார்த்தேன். மெமோ ஸ்லிப்புல மேலே ஹெட்டர்ல இருக்கற அட்ரசுக்கு நம்ம மாப்ள நவிகேசன் போட்டிருக்கறது அப்பத்தான் தெரிஞ்சிச்சு, கீழே லோகேசன் அப்புடின்னு வேற ஒரு ஹோட்டல் பெயர் போட்டிருக்கு, மறுபடியும் அதுக்கு நேவிகசன் போட்டோம், ஒரு மணிநேர தூரம்ன்னு வந்திச்சு, நல்ல வேளை நேரத்துக்கே வந்ததுன்னு நெனச்சிக்கிட்டு, மறுபடியும் கெளம்பினோம்.



எப்படியும் எட்டு மணிக்கு கரெக்டா போயி சேந்திடனும்ன்னு , வேகமாவே வண்டி ஓட்டினேன், டான்னு எட்டு மணிக்கு ஹோடெல்ல, நாங்க போறப்போ எல்லாரும் சாப்பிட்டுட்டு இருக்காங்க, நம்ம பாஸூ நம்மள கேவலமா ஒரு லுக்கு விட்டுட்டு, வந்ததுதான் வந்துட்டீங்க சாப்பிடுங்கன்னு சொன்னாரு, என்னாடா இது நாம கரெக்டா நேரத்துக்கு வந்தும் இந்தாளு இப்படி சொல்றாரேன்னு யோசிச்சிக்கிட்டே சாப்டோம். அப்போதான் நம்ம நண்பர் சொன்னாரு, நாம லேட் ஆனதுல டிஸ்கசன சாப்பாட்டு அப்புறம் ஷிபிட் பண்ணிட்டாங்க போல அதுதான் பாஸ் கடுப்பா இருக்காருன்னு, அதுவும் சரிதான்னு நினச்சிக்கிட்டு, சாப்பிடவும் முடியாம விடவும் முடியாம இருந்த ஐட்டங்கள் ஒன்னொன்னா டேஸ்ட் பார்த்திட்டு வந்திட்டோம், அப்புறம் ஒம்பது மணி, பத்து மணி ஆகுது பார்ட்டில தான் இருக்காங்களே தவிர டிஸ்கஷன் பத்தி ஒரு தகவலும் இல்ல, அப்புறம் பதினோரு மணியும் தாண்டிரிச்சு, ஆளாளுக்கு கெளம்பி போய்க்கிட்டே இருக்காங்க, நடுவுல நம்ம பாஸும் கெளம்பிட்டாரு, சரி டிஸ்கசன் காலின்னு நெனச்சிட்டு நாங்களும் வண்டி ஏறிட்டோம். அப்போதான் நம்ம நண்பர் மறுபடியும் மெமோ எடுத்துப் பார்த்தாரு. அதுல

 Project Presentation             6.00 - 7.00
 Discussion on presentation  7.00 - 8.00
Dinner                                8.00-11.00

அப்புடின்னு போட்டிருந்திச்சு, அப்புறம்தான்யா வெளங்கிச்சு பாசு ஏன் நம்மள அப்படி மொறச்சு பார்த்தார்ன்னு. மெமோ நம்ம கையிலேயே ஒரு வாரமா இருந்திருக்கு, ஆனா தலையில இருந்தது எல்லாமே சாப்பாட்டு நேரம் மட்டும்தான், நாங்களும் கரெக்டா அந்த நேரத்துக்கே போய் சேர்ந்திருக்கோம். அப்புறம் உண்மைய எடுத்துச்சொல்லி நம்ம பாஸ சமாளிக்க நாங்க பட்ட பாடு இருக்கே..

 ஈ லோகத்தில் உள்ள பாஸூ எல்லாரும் பொறம்போக்கு பாஸு ஆயி.....  

டிஸ்கி: இந்த கொடுமைய மறக்க படம் பார்க்க போயி பட்ட கொடும அடுத்த வாரம்.  

சமந்தா பின்னாடி நிக்கறது நான்தான்னு சொன்னா நம்பவா போறீங்க...  

Sunday, November 6, 2011

நிர்வாண மிருக நேயமும் இளைய தளபதி பிளாட் ஜெனேரேட்டரும் -: கும்ப்ளிங் கும்ப்ளிங் 6/11/2011


PeTA, PeTA ன்னு ஒரு அமைப்பு இருக்கு. "பீபில் பார் எதிக்கள் ட்ரீட்மென்ட் ஆப் அனிமல்ஸ்" என்பதுதான் அதன் விரிவாக்கம். கொஞ்ச நாளுக்கு முன்னாடி நாய்களை தத்து எடுங்கள்ன்னு நம்ம திரிஷாவ வச்சு இந்தியாவுல ஒரு பெரிய காம்பைன் பண்ணினாங்க. அந்தம்மா மிருக நேயம் நெறஞ்சவங்க, அவங்க வளர்க்குற நாய் கூட தத்து எடுத்ததுதான்-பின்ன அவுங்க நாய பெத்தா எடுக்க முடியும்- அதனால அவங்கதான் இதுக்கு மிகப்பொருத்தமாக இருப்பாங்கன்னு சொன்னாங்க, த்ரிஷா பத்தி கிசு கிசு மட்டுமே எழுதற பலபேர் கூட அந்தம்மாவோட மிருக நேயத்த பாராட்டி கட்டுரயெல்லாம் எழுதினாங்க. என்னடா இது புதுசா இருக்கேன்னு யோசிச்சிட்டே இருந்தேம். அப்புறமாதான் நமக்கு  அவுங்க மிருக வதைக்கு எதிராக எல்லோரையும் வெஜிடேரியன் ஆகும்படி ஒரு காம்பைன் நடத்தின சில படங்கள பார்க்க கிடைச்சுது, அதுக்கப்புறமாதான் அவங்க காம்பைன் திட்டங்கள வாசிச்சா, பாதிக்கு மேல நிர்வாணத்த மையப்படுத்தியது. அது ஏன்னு ஒரு அழகான விளக்கம் குடுத்திருக்காங்க, "இலாப நோக்கமற்ற நிறுவனமான எங்களுக்கு விளம்பரம் செய்வதற்கு கோடி கோடியா பணம் கிடைக்கிறது கஷ்டம், ஆனா இவ்வாறான ஒரு காம்பைன் பண்ணினா இலவச விளம்பரம் கிடைக்கும், நாலு பேருக்கு நல்லது நடக்கும்னா எதுவுமே தப்பில்ல" அப்புடின்னு இருக்கு அந்த விளக்கம். இப்ப புரியுதா அவங்க எதுக்கு த்ரிஷாவ தெரிவு செஞ்சாங்கன்னு?

ஒஸ்தி படத்துல நடிக்கிற பொண்ணு..எவன்யா டைரக்டர்?
ஒஸ்தி படம் ரிலீஸ் மறுபடியும் தள்ளி போச்சாம், 11/11/11 க்கு வரும்ன்னு எதிர்பார்க்கப்பட்ட படம், அதேபோல  மயக்கம் என்னவும் 18/11/11தான் ரிலீஸ்ன்னு செல்வா சொல்லிட்டாரு. சித்தார்த்தோட தெலுங்கு படமான ஓ மை ப்ரெண்டு மட்டும்தான் இந்த டேட்டுக்கு வரும் போலிருக்கு. சிதார்த்தோட படம் பத்தி ஏன் சொல்றோம்னா அதுல ரெண்டு ஹீரோயின், ஒன்னு ஸ்ருதி, மத்தது ஹன்சிகா. வேலாயுதம் வெற்றிக்கு அப்புறமா ஹன்சிகா நமக்குதான்னு பதிவுலகத்துல ஒரு பெரிய நம்பிக்க துளிர் விட்டு இருந்தாலும் இந்த படம் ஜெயிச்சா மறுபடியும் தெலுங்கு வாலாக்கள் கொத்திக்கிட்டு போயிட வாய்ப்பு இருக்கு. ஏன்னா ஹன்சிகாவோட ஆகஸ்ட் வெளியீடு தெலுங்கு படம் kandireega பெரிய வெற்றி, அதே போல வேலாயுதமும் வெற்றி, அதனால ஒ மை பிரெண்ட் படத்துக்கு லக்கி சார்ம் ஹன்சிகாதான்னு சித்தார்த் சொல்றாரு.  அதுதான் எதுக்கும்னு சொல்லி வச்சுக்கறோம். என்னென்ன பூஜையெல்லாம் பண்ண இருக்கோ இப்பவே ரெடியாகுங்கப்பா.

எனக்கே எனக்கா?
வேலாயுதமும் ஏழாம் அறிவும் அசாசின் கிரீட் அப்புடின்குற ஒரு வீடியோ கேமோட காப்பின்னு ரெண்டு படமும் ரிலீஸ் ஆக முதல்லையே பெரிய கலவரமே நடந்திச்சு. இது என்னடா அநியாயமா இருக்குன்னு யோசிச்சுக்கிட்டே இருந்தோம், ஹாலிவூட் காரங்க மட்டும் நம்ம தமிழ் படங்கள காப்பி பண்ணலாம் நம்மாளுக பண்ண கூடாதா? ஏற்கனவே குருவி படத்த காப்பி பண்ணி வந்த ரெண்டு ஹாலிவூட் படங்கள பத்தி நாங்க பதிவு போட்டது எல்லாருக்குமே தெரியும், இப்போ புதுசா இன்னுமொன்னு, அதுதாங்க அந்த ஜானி இங்க்லீஷ் படத்துல நம்ம தளபதியோட சிவகாசி இன்ட்ரோடக்ஸன் சீன அப்புடியே காப்பி அடிச்சிருக்காங்க, தளபதி வெல்டிங் பீம் வச்சு கதவ அவரு ஷேப்புக்கே வெட்டி எடுத்து வெளிய வருவாரே, அதே தான் அங்க ஒரு கார் லேசர் பீம் வச்சு காரோட ஷேப்புக்கே கதவ வெட்டி வெளிய வரும். யாருக்கிட்ட, நாங்கெல்லாம் தளபதி படத்த இம வெட்டாம பாக்குறவங்களாச்சே, நம்மள ஏமாத்த முடியுமா, சூரியா படத்த பாலிவூட்ல ரீமேக் பண்றாங்கன்னா தளபதி படத்த ஹாலிவூட் காரங்க சுடுறாங்க, தளபதி மாஸ சொல்ல வேற எதனாச்சு வேணுமா? நிலைமை இப்புடி இருக்க இந்த அநியாயத்த கொஞ்சம் பாருங்க, இளைய தளபதி பிலாட் ஜெனேரேட்டர், இதுல படத்துல தளபதியோட பெயர், கூட நடிக்கற காமெடியன், தங்கச்சி பெயர் அப்புடி கொஞ்சம் விசயங்கள குடுத்தா படத்தோட கதை வர்ற மாதிரி பண்ணி வச்சிருக்காங்க. என்னா ஒரு எகத்தாளம்.அப்புறம் எதுக்கு ஜெயம் ராஜா,பாபு சிவன், பிரபு தேவா எல்லாம் இருக்காங்க?


கார்த்தி கார்த்தின்னு ஒரு மார்கட்டே இல்லாத தமிழ் சினிமா நடிகர் இருக்காராமே, அவரு எதோ சகுனின்னு ஒரு படம் நடிக்கராராமாம். அந்த படத்துல ஹீரோயின்னா ப்ரனிதா பொண்ணு நடிக்குதுன்னும், காமெடிக்கு தலைவர் சந்தானம் இருக்காருன்னும் உங்க எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும், இப்போ என்னடான்னா அந்த படத்துல புதுசா அனுஷ்கா வேற ஒரு முக்கியமான காரெக்டர் பண்றாங்களாம், ஏற்கனவே ராதிகா சரத்குமார், ரோஜா, மும்தாஜ்ன்னு ஒரு பட்டாளமே இருக்கு, போதும் போதாததுக்கு ஸ்ரேயா வேற நடிக்கறதா அரசல் புரசலா ஒரு கத இருக்கு. எதுக்குடா இம்புட்டு பெரிய பட்டாளத்த வச்சு நடிக்க வக்கிராங்கன்னு யோசிச்சிட்டே இருந்தோமா, நேத்துத்தான் அது எதுக்குன்னு வெளங்கிச்சு, ஒன்னுமில்லைங்க, இந்த கார்த்தி பய அவரோட மார்கெட் நிலவரம் தெரியாம தளபதியோட காவலன் படத்துக்கூட சிறுத்தைன்னு எதோ ஒரு படம் ரிலீஸ் பண்ணி அட்ரசே தெரியாம போச்சாமே, இப்பவும் சகுனி பொங்கலுக்குதான் வரும் போல இருக்காம், ஏற்கனவே நண்பன் பொங்கல் ரிலீஸ்னால ரொம்பவே பயந்து போயிதான் இப்படி நட்ச்சத்திர பட்டாளமா போட்டு நிரப்புறதா கோடம்பாக்கத்துல ஒரு பேச்சு இருக்கு. ஆனானப்பட்ட ரஜனிகாந்தே நண்பனுக்கு பயந்து ராணாவ தள்ளிப்போட்டப்போ, கார்த்தி என்ன கார்த்தி... (இத நீங்க நம்பினா முட்டாள், இல்லன்னா சைக்கோ எப்புடி வசதி?)


அழகே உன்பெயர்தான் சமந்தாவோ...


Tuesday, November 1, 2011

நாம் சுதந்திரம் பெற்றோமா அடிமைப் படுத்தப்பட்டோமா? - ஏழாம் அறிவு என்னுள் எழுப்பிய கேள்வி

பதிவுக்குறிப்பு: இது ஒரு ஒழுங்கு படுத்தப்பட்ட பதிவு அல்ல. நீண்ட நாளாகவே மனதிற்குள் விடை தெரியாது இருந்த சில கேள்விகள். ஏழாம் அறிவு படத்தினை பார்த்தபின்பு அவை மீண்டும் நினைவுக்கு வந்தன. உங்கள் முன் வைக்கிறேன். யாராவது பதில் தெரிந்தவர்கள், ஆர்வம் உள்ளவர்கள், அல்லது என்போன்றே கேள்விகள் உள்ளவர்கள் உங்கள் பதிவுகளில் இதை தொடர்ந்து, எனக்கும், என்னைபோன்ற பலருக்கும் தெளிவு ஏற்பட உதவும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.


அமேரிக்கா வந்த புதிதில் அமெரிக்க நண்பர் ஒருவருடன் நடந்த உரையாடல். அவர் என்னிடம் இந்தியாவின் சிறப்புகளையும் பெருமைகளையும் கேட்ட போது நமது கலாசாரத்தையும் குடும்ப உறவுகளையும் தவிர கூறுவதற்கு என்னிடம் எதுவும் இருக்கவில்லை. அதன் பின்னர் இந்தியாவில் இருக்கும் கனியங்களைப் பற்றி நண்பர் கேட்டார், என்ன சொல்வது, வாசனை திரவியங்கள், பட்டு என ஏதேதோ சொன்னேன். கேட்டுக்கொண்டிருந்தார். கடைசியாக என்னிடம் ஒரு கேள்வி கேட்டார், நாங்கள் வாசனை திரவியங்களோ பட்டோ பாவிப்பதில்லை, ஆங்கிலேயர் பாவிப்பதாக தெரியவும் இல்லை, பின்னர் கொலம்பஸ் எதுக்காக இந்தியாவை தேடி பயணம் புறப்பட்டு இங்கே வந்தார்? இந்த கேள்விக்கு அவரை திருப்திப்படுத்தும் எந்த பதிலும் என்னிடம் இல்லை. கூடவே ஒரு விடயம் கூறினார், இந்தியாவை தேடி அவர் ஒரு நீண்ட பயணம் புறப்பட்டாரியின் நிச்சயம் அங்கு எதோ ஒரு சிறப்பம்சம் இருந்திருக்க வேண்டும், ஆனாலும் அது என்ன என்பது இங்குள்ள யாருக்கும் தெரியாது. "India must have played a big role in something those days, but we seems to have lost that" இது கடைசியாக அவர் எனக்கு கூறியது. இந்த கேள்விக்கு இன்று வரை என்னிடம் பதில் இல்லை. 

தொலைத் தொடர்புகள் எதுவும் அற்ற, நாடு தாண்டிய பயணங்கள் அற்றிருந்த ஒரு காலத்தில் இந்தியாவை தேடி ஒருவர் பயணிக்கிறார் என்றால், இந்தியாவின் பெருமைகள் நிறையவே இருந்திருக்க வேண்டும் என்பது அவரது எண்ணம். இதுபற்றி சிந்தித்துக்கொண்டிருந்த போதுதான் ஒரு சந்தேகம் வந்தது. ராவணனிடம் இருந்ததாக கூறும் புட்பக விமானம், ஒரு வேளை நாம் கவனிக்க தவறிய ஒன்றா? ஒருவேளை நமது மூதாதையர்கள் பறக்கும் சக்தி கொண்ட வாகனங்களை உருவாக்கக் கூடியவர்களாக இருந்தார்களா? அது மூலமாக இந்தியாவில் இருந்து இங்கிலாந்து போயிருப்பார்களோ? அல்லது கற்பனையில் தோய்ந்துபோன ஒரு விடயமா அது? பத்து தலைநகரங்களை ஆண்டதாலே பத்துத்தலை ராவணன் என பெயர்வந்தது என்றும் ஒரு கருத்து இருக்கிறதே. இது எப்போதோ நடந்த ஒரு சம்பவத்தின் அடிப்படையில் தோன்றியது. 


சுமார் ஒரு ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரியில் காலடி எடுத்துவைத்த முதல் வாரம், சயின்ஸ் எஜுகேசன் என்றொரு பாடம் படிக்க நேர்ந்தது, அதில் நமது ஆசிரியர் கீழைதேய  விஞ்ஞானம் பற்றி கூறியது ரொம்பவும் பிரமிக்க வைத்தது. சித்த வைத்தியம், நாட்டு மருத்துவம், நமது கட்டடக்கலை, நீர்பாசனத் திட்டங்கள் அது இது என பல விடயங்கள் கூறினார். ஆங்கிலேய மருத்துவம் பற்றியும் கூறினார்.  நமது கலைகள் அதன் பெருமைகள், நம்மவர்கள் உணவு பதபடுத்தும் வித்தைகள் பற்றியும் கூறினார். கீழைத்தேய விஞ்ஞானம் என பொதுப்படையாக இருந்ததால் இந்தியா தவிர்த்தும் சில விடயங்கள் கூறினார். சீனாவில் ஒன்பது கற்களை  ஒரு வரிசையில் அடுக்கிய ஒரு எந்திரம் இருந்ததாம், அதில் கற்கள் விழுவதை வைத்து பூமி அதிர்வு ஏற்படுவதை முன்கூட்டியே அறிந்துகொள்ள முடியுமாம். புட்பக விமானம் பற்றிய நமது சந்தேகத்தை தூண்டிவிட்டதும் அவரே. அவர் கூறிய பல விடயங்கள் பிரமிப்பூட்டுவதாக இருந்தது. இவை எல்லாம் ஏன் இன்று நம்மிடையே இல்லை என்பது அப்போது வியப்பாகவும் அதே நேரம் கவலையாகவும் இருந்தது. 

கீழைத்தேய விஞ்ஞானம், மருத்துவம், கலைகள் என்பன எவ்வாறு திட்டமிட்டு அழிக்கப்பட்டு அவற்றிற்கு  மாற்றாக மேலைத்தேய மருத்துவம், விஞ்ஞானம் என வந்தது, நாம் எப்படி ஒரு சந்தையாக மட்டும் ஆக்கப்பட்டோம், நம்மிடம் இருந்து எது எதை எல்லாம் அவர்கள் எடுத்துச்சென்றார்கள் என்று அவர் விவரித்தபோது கொட்டாவிதான் வந்தது. அந்த பாடத்துக்கு பரீட்சை இல்லை, எனவே அப்போதே  அதை மறந்துவிட்டேன். இன்று அது பற்றி சிந்திக்கும் போது எனது அலட்ச்சியத்தை நினைத்து எதோ ஒரு குற்ற உணர்வு என்னுள் இருக்கிறது. 

தமிழர் வரலாற்றில் "நீண்ட இரவு" என்று ஒன்று இருக்கிறது. இது ஐரோப்பிய நாடுகள் இந்தியாவை ஆழ முன்பே உள்ள ஒரு காலகட்டம் (போதிதர்மன் வாழ்ந்ததாக கூறும் காலகட்டம்), அந்த காலகட்டத்தில் உள்ள எதுவும் நமக்கு தெரியவில்லை, என்ன நடந்தது என்பதை அறிய எந்தவொரு சான்றுகளும் நம்மிடையே இல்லை. (கஜினி படத்துல சூரியாவோட உடம்புல குத்தியிருந்த பச்சையை அழிப்பது போல யாரோ அளித்திருக்கிறார்கள், அல்லது அவை தாமாகவே அழிந்து போயிருக்கின்றன)


நோபெல் பரிசு பெற்ற விஞ்ஞானிகளுள் மூவர் தமிழர். Sir C V  ராமன் (பௌதீகவியலாளர்), சுப்பிரமணியம் சந்திரசேகர் (அஸ்ட்ரோ பிசிக்ஸ், CV ராமனின் உறவினர்), வெங்கடராமன் ராமகிருஷ்ணன் (Structural biologist). C V ராமனை தெரிந்த அளவுக்கு நமக்கு ஏனைய இருவரையும் தெரியாது, இவர்கள் இருவரும் முறையே 1983 மற்றும் 2009 களில் நோபெல் பரிசு பெற்றவர்கள். அவர்கள் பரிசுகள் பெற்ற போது நாம் அவர்களை கொண்டாடினோம், ஆனால் அவர்களுக்கு உரிய மரியாதையை நாம் வளங்கியிருக்கியிருக்குறோமா அல்லது அவர்கள் முயற்சிகளயாவது நாம் தொடர்ந்திருக்கிரோமா? (கஜினி சூர்யா போல ஷார்ட் டேர்ம் மெமரி லாஸ்ல தான் நாம இருக்கோமா?)

முன்னைய காலங்கள் போன்று இப்போது நேரடி யுத்தங்கள் நடப்பதில்லை,  ஆனால் பொருளாதார யுத்தம் நடக்கிறது. வளர்ச்சியடைந்த நாடுகள் எனப்படுபவை தமக்கென எதோ ஒரு துறையில் முன்னேறி அதனை சந்தைப்படுத்துவன் மூலம் மூன்றாம் உலக நாடுகளை அடிமை படுத்தி வைத்திருக்கின்றன. காகேநெட் ஆயிலில் காலஸ்ற்றால் இல்லை என்றும் அமெரிக்காவிலும் மேலை நாடுகளிலும் தயாரிக்கப்படும் சண் ப்லவேர் ஆயிலை பிரபலப்படுத்தவே இவ்வாறு ஒன்று கொண்டுவரப்பட்டது என்றும் ஒரு கருத்து இருக்கிறது. இவ்வாறே விஞ்ஞானம் எனும் பெயரால் நாமது ஏற்றுமதிப் பொருள்கள் பல முடக்கப்படுகிறது. கணணி சந்தை முழுதும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில், இப்போது இரண்டாவது பெரிய சந்தையான தொலைபேசிகளும் முழுதும் அவர்களின் கட்டுப்பாட்டில். எஜுகேசன் என்பது எப்போதோ அமரிகாவினதும் பிருத்தானினதும் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது என்பதை நாம் இன்னும் உணர்து கொள்ளாமலே இருக்கிறோம்.

பிருத்தானிய காலனிகளில் இருந்து அவர்கள் விட்டுச்சென்ற போது, சிவில் யுத்தங்களையும் சேர்த்தே விட்டுச்சென்றார்கள் என்றொரு குற்றச்சாட்டும் இருக்கிறது. இந்தியா, இலங்கை, அமேரிக்கா என்பவை இவற்றிற்கு சிறந்த உதாரணங்கள். பல சிறு மாநிலங்களை ஒரே நாடாக இணைத்து அங்கு பிரச்சனைகளை விட்டுச் சென்றார்கள் என்பது அந்த குற்றச்சாட்டு. சிவில் யுத்தத்தை முடித்து வெற்றிகண்ட ஒரே நாடு அமெரிக்காதான், அவர்களும் அவர்கள் பங்குக்கு ஏனைய நாடுகளில் சிவில் யுத்தங்களை தூண்டிக்கொண்டே இருக்கிறார்கள். நாம் மீண்டும் அடிமைப் படுத்தப்பட்டுக்கொண்டே இருக்கிறோம்.

இன்று நம்மை எடுத்துப்பாருங்கள், நம்மை சுற்றி உள்ள எத்தனையோ பொருட்கள் மேலைத்தேய நாடுகளின் பெயர்களைத்தான் சொல்லிக்கொண்டிருக்கின்றன. நமது பாடத்திட்டம், ஜனநாயக அரசியல், முகாமைத்துவம், தொலைதொடர்பு சாதனங்கள், மருத்துவம், கணணி அறிவு, போதாக்குறைக்கு உணவு வகைகளில் இருந்து ஆடைகள் வரை எதுவுமே நமக்கு சொந்தமானது இல்லை. "நமது" என பெருமைப்பட்டுக்கொள்ள நம்மிடம் எதுவும் இல்லை. மேற்கத்தைய கலாசாரம் சிறந்ததா இந்திய கலாசாரம் சிறந்ததா என சேலையையும் குட்டைப்பாவடயையும் வைத்து பட்டிமன்றம் நடத்தும் நிலையில்தான் நாம் இருக்கிறோம். இவற்றுக்கு நடுவே தொக்கி நிற்கும் ஒரு கேள்வி. வெள்ளைக்காரன் மட்டுமல்ல, ஐரோப்பாவில் இருந்து எத்தனையோ நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு ஏன் இங்கு வந்தன, அவை நம்மிடம் எதை விட்டுச் சென்றன? உண்மையில் நாம் சுதந்திரம் பெற்றோமா அல்லது அடிமைப்படுத்தப்பட்டோமா?

இந்த பதிவினை தொடருமாறு  பன்னிக்குட்டி ராம்சாமி அண்ணன், செங்கோவி அண்ணன், ரெவெரி, ஜீ மற்றும் நிரூபன் அண்ணனை அழைக்கிறேன்.  

Sunday, October 30, 2011

Ra.One எனது பார்வை (இது விமர்சனம் அல்ல)


ஷாரூக் கான் படம், நமக்கு ரொம்பவே பக்கத்துல இருக்கற தேட்டர் வரைக்கும் வந்திருக்கு, படம் பாக்கலைனா தெய்வகுத்தம் ஆகிடுமேன்னு நேற்று படம் பார்த்தேன். படத்துல நிறைய குறை நிறை இருக்கு, என்கூட படம் பார்க்க வந்த மூனுபேர்ல ஒருத்தருக்கு படம் பிடிக்கல, ஒருத்தர் தேட்டர்ல தூங்கிட்டாரு, இன்னொருத்தர் சிரிப்புசத்தம் இன்னொரு RR ஆ ஒலிச்சிக்கிட்டே இருந்திச்சு.. இதுதான் படம் பத்தி சொல்லக்கூடியது.. எனக்கு படம் பிடிச்சிருந்தது, ஏன்னா அது ஷாரூக் கான் படம், ஷாரூக்கோட மொக்க மொக்க படங்களே சுமார்ன்னு சொல்லுவேன், அப்புடின்னா இந்த படத்த  சூப்பெர்ன்னு தானே சொல்லுவேன், படத்துல இருக்கற குறைகள் ஆறறிவுக்கு பட்டாலும், ஷாரூக்கும், உள்ள இருக்கும் ஷாரூக் ரசிகனும் அத மிகைச்சிடிச்சு, அதனால எனக்கு இந்த படத்துக்கு விமர்சனம் எழுதற தகுதி இல்லன்னு நினைக்கிறேன். விமர்சன தர்மங்களில் முதலாவது நடுநிலைமை, இந்த படத்துல அத பேணமுடியாது என்பது நல்லாவே தெரியுது. அதனால ஜஸ்ட் எனது பார்வை.

கதை: மகனது உலகத்தில் மகனுக்கு சுப்பர் ஹீரோவா இருக்க நினைக்கிற அப்பா, அவனது ஆசைகளுக்காவே மிகவும் பலம் வாய்ந்த ஒரு வில்லனை உருவாக்கி ஒரு வீடியோ கேமை  வடிவமைக்கிறார். அந்த வில்லனுக்கு ஒரு செயற்கை அறிவு ஊட்டப்படுகிறது. அதன் மூலம் வில்லன் தானாக பல விடயங்களை கற்றுக்கொண்டு ஒவ்வொரு தடவையும் வேறுபட்ட சவால்களை இடக்கூடியதாக உருவாகிறது. இந்த வில்லனுக்கு அசைவுகளை கற்றுத்தருவதற்கு மனித அசைவுகளை சின்கரனைஸ் பண்ணும்போது அது அசைவுகள் மட்டுமல்லாது நாம் பேசுபவை முதல்கொண்டு  பலதையும் கற்றுக்கொள்கிறது. ஷாரூக் மகனுக்கு கேமினை அறிமுகப்படுத்தும்போது இந்த வில்லனை யாராலும் தோற்கடிக்க முடியாது என சொல்கிறார், வில்லன் அதையும் தனது மேமொரியில் போட்டுக்கொள்கிறது. முதல்நாள் கேமை லூசிபார் எனும் பெயரில் விளையாடும் ஷாரூக்கின் மகன் இரண்டு லெவல்களில் வில்லனை தோற்கடித்துவிட யாராலும் தோற்கடிக்க முடியாது என பதிவு செய்ததை நினைவில் கொண்டு வில்லன் லூசிபிரை கொல்ல வேண்டும் என அலைகிறது. தொலை தொடர்பு, தொலைக்காட்ச்சி, வானொலி  என பலவகைகளில் நம்மை சுற்றும் மின்காந்த (டிஜிடல் ராய்ஸ் என படம் கூறும்) அலைகளின் உதவியுடன் கேமிலிருந்து வில்லன் வெளியேறி லூசிபாரை கொல்ல அலைகிறது. வில்லன் தோர்கடிக்கப்பட்டானா மகன் காப்பாற்றப்பட்டான என்பதை தொழில்நுட்ப உதவியுடன் கூறி முடிகிறது படம்.


ஷாரூக் இறக்கும் வரை படத்தில் காமெடிக்கு பஞ்சமே இல்லை. இடை வேளைக்கு முதலே ஷாரூக் இறந்துவிட மிகுதி நேரத்தை சூப்பர் ஹீரோ ஷாரூக் பார்த்துக் கொள்கிறார். எந்த சூப்பர் ஹீரோவும் இவ்வளவு காமெடி பண்ணியதில்லை என தேட்டரையே சிரிப்பில் ஆழ்த்துகிறது படம். தெரிஞ்சு வந்தாங்களா தெரியாம வந்தாங்களான்னு யோசிக்க வச்ச இரு கறுப்பின அமெரிக்க பெண்கள் படம் முழுவதும் சிரித்தது ஷாரூக்கின் காமெடியை பறை சாற்றியது. ஜானி இங்க்லீஷ் ரீபோர்ன் படம் பார்த்த போது கூட தேட்டரில் இவளவு சிரிப்பொலி கேட்கவில்லை, அந்த படத்துக்கு மொத்தமே பத்துபேர்தான் வந்திருந்தாங்கங்குறது வேற விஷயம். காமெடின்னு சொல்லிட்டேன் அப்புறம் நமக்கு படம் புடிச்சிருந்திச்சின்னுவேற தனியா சொல்லனுமா? கிராபிக்ஸ் சில இடங்களில் அருமை, சில இடங்களில் கமலஹாசனின் விக்ரம் பட ரேஞ்சுக்கு செம சொதப்பல்.

இம்புட்டு செலவு செய்த படத்தை பற்றி சில குறிப்புக்கள் 

1. ரொம்ப தின் லைனா இருந்தாலும் குட் ஓவர் ஈவில் என்பது மிக அழகாக குழந்தைகளுக்கு புரியும் வண்ணம் சொல்லப்பட்டது நல்ல விடயம். உதாரணமாக "வில்லன்ஸ் ஆர் ராக்கிங், தே ஹேவ் நோ ரூல்ஸ்" ன்னு பையன் சொல்லும்போது வில்லன் கெட்டவன், நல்லவன்தான் ஜெயிக்கனும்ன்னு ஷாரூக் சொல்லுவது, எவ்வளவு பெரிய, அழிக்கவே முடியாத பலசாலி வில்லனாக இருந்தபோதும், வில்லன் அளவுக்கு பலம் இல்லாத நல்லவனான G.One வில்லனை வெற்றிகொள்ள வேண்டிய தேவையை மிகவும் அழகாக சொன்னது. ஈவில் ட்ராயம்ப்பை சாதரணமாக காட்டக்கூடிய காலகட்டத்தில் (உதாரணம் ஷாரூக்கின் டான்), குழந்தைகளுக்காக படம் எடுக்கும் போது மிகக்கவனமாக இதை கையாண்டது.

2. கேம் உருவாக்கிய எவருமே முழுதாக பரீட்சிக்காது கேம் லான்ச் பண்ணுவது  பெரியவே ஒரு லாஜிக் ஓட்டை, லான்ச் பண்ணுவதற்கு முதல் டெவெலப்மென்ட் ஸ்டேஜ்லையே ஷாரூக்கின் மகன் விளையாடுவது போல் எடுத்திருக்கலாம். செமி பைனல்ல தோத்து, பைனல் ஆடி சாம்பியன் ஆன படத்தையே ஒரு காமேர்சியல் லேண்ட் மார்க் படமா சொல்லிக்கிட்டு இருக்கோம், இது பெரிய விசயமான்னு கேக்கலாம், ஆனாலும் பெரிய விசயம்தான். விஞ்ஞான நம்பகத்தன்மையை மொத்தமா சிதைக்குற இடம் இது. ஒழுங்கா டெஸ்ட் பண்ணினா கேம்ல அப்புடி ஒரு பெரிய பிழை வந்தத தடுத்திருக்கலாம்,  தொழில் நுட்ப வளர்ச்சி முழுதும் ஆபத்தே என சொல்பவர்களுக்கு இந்த டெஸ்டிங் போன்ற சில விடயங்கள்தான் விஞ்ஞானத்த இன்னும் தாக்கு பிடிக்க வச்சிக்கிட்டு இருக்கு. மொத்த படமுமே இந்த லாஜிக் ஓட்டயிலதான் தங்கி இருக்குன்னும் போது பெரிய விசயமா இல்லையா?


3. கிராபிக்ஸ் சில இடங்களில் மொக்கையாக இருந்தாலும், முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தில் இப்படி ஒரு படத்தை எடுத்தது. வெளிநாட்டு தொழில் நுட்பத்தில் மொக்கையா எடுக்கறத (ஹி ஹி ஏழாம் அறிவு) விட நம்ம தொழில் நுட்பத்தில் மொக்கையா எடுக்கறது எவ்வளவோ மேல். (இதுல என்ன இருக்குன்னு புரியாம கேள்வி கேக்கறவங்களுக்கு, கிராபிக்ஸ் அனிமேசன் என்பதன் பயன்பாடு ரொம்ப பெரியது, ஆனால் அதன் வளர்ச்சிக்கு கோடி கோடியாக பணம் தேவை, அந்த பணம் கேமிங்கிலும், பிலிம் மேகிங்கிலும் இருந்துதான் கிடைக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பெரும்பாலான முதலீடு இங்குதான் இருக்கிறது, நமது முதலீட்டில் வேறொருவன் ஆராய்ச்சி செய்வதை விட நம்மவரே ஆராய்ச்சி செய்வது நல்லவிசயம் தானே, என்ன நான் சொல்றது?). ட்ரைன் சீகுவேன்ஸ் எந்திரனின் ட்ரைன் சீகுவேன்ச மிஞ்சும் கிராபிக்ஸ். இந்தியன்னு பெரும பட்டுக்கலாம்.

4. நான் இந்தில தான் படம் பார்த்தேன், அதனால ஷாரூக் கானோட சேகர் சுப்பிரமணியம் காரெக்டர், காமெடி, உள்ளேயே வாழும் கலாசார உணர்வு எல்லாத்தையும் தாண்டி சில இடங்களில் கொஞ்சம் நெருடலா இருந்தது. இம்புட்டு பெரிய படம், உலகம் முழுக்க பல மொழிகள்லயும் பல தேட்டர்கள்ளையும்  வெளியிடப்படும் போது இன்னும் கொஞ்சம் கவனமா இருந்திருக்கலாம், இந்தியாவின் தலை சிறந்த டெக்னீசியான்ஸ் தமிழ் நாட்டுலதான் இருக்காங்கன்னு பேட்டிகள்ள ஒத்துக்கொண்டதோட மட்டுமில்ல அத படத்துலயும் பதிவு செய்ய நினைத்தது பாராட்டப்பட வேண்டியது. ஆனாலும் அவ்க்வர்ட் பிஹேவியர் உள்ளவரா அவரும் அவரது பக்கத்து வீட்டுக்காறரா வரும் சதீஷ் ஷாவும் மட்டுமே இருப்பது அந்த நோக்கத்தையே மழுங்கடிப்பது.

5. டார்கெட் ஆடியன்ஸ் யார்ன்னு குழம்பிப் போனது போல உருவாக்கி இருக்கும் படம். பெரியவர்களுக்கு படம் கொஞ்சம் சின்னபுள்ள தனமா இருக்கும். குழந்தைகளுக்கு கொஞ்சம் ஓவராவே கவர்ச்சி இருக்கும்.  ஒருவேள மனதளவில் குழந்தைகளாகவும் செயல்பாடுகளில் முத்தல்களாகவும் இருக்கும் நம்ம மொக்கராசு மாமா போல உள்ளவங்களுக்காக இந்த படத்த எடுத்திருப்பாங்களோ?


பாட்டம் லைன்: ஷாரூக் ரசிகராகவும், காமெடி பிரியராகவும் என்டேர்டைன்மண்டுக்காக மட்டுமே படங்கள் எனும் எண்ணத்தில் இருப்பவராகவும் இருந்தால் உங்களுக்கு படம் பிடிக்கும். இதுல ஏதாவது ஒன்னு குறைஞ்சாலும் படம் மொக்கையா தெரியலாம். குழந்தைகளுக்கு படம் பிடிக்கும். (சில காட்சிகளை தவிர) குழந்தைகளுக்கு பரிந்துரைக்கக்கூடிய படம். வேலாயுதம் (ஹன்சிகா காட்சிகள்) குழந்தைகளுக்கு ஓகேன்னு சொன்னீங்கன்னா இது டபுள் ஓகே.

***********************************

சொல்ல மறந்த கதை: அது என்னமோ தெரியல ஷாரூக் கான் படம்னா மொக்க பிகர் கூட சூப்பர் பிகரா தெரியுது. கரீன கபூர் சூப்பரா இருக்காங்க, நல்லா காட்றாங்க திறமையையும் நடிப்பையும். ஷாரூக் கானோட மகனா நடிக்கற பையன் நல்லாவே நடிச்சிருக்காரு, சில காட்சிகளில் கரீனாவை தூக்கி சாப்பிடும் நடிப்பு, சில காட்சிகளில் ஷாரூக்கிற்கே சவால் விடும் நடிப்பு. அர்ஜுன் ரம்பால் ஓகே, ஆனா அந்த கெட்-அப்ல என்ன இருக்குன்னு அம்புட்டு ரகசியமா வச்சிருந்தாங்கன்னு தெரியல. விஷால்-சேகர் பின்னணி இசை நல்லா இருக்கு. மூணு பாட்டுதான் படத்துல (ஏழாம் அறிவு டீம் நோட் திஸ்), அக்கான் பாட்டு இன்ஸ்டன்ட் ஹிட். கேமெரா நன்று.

ஒப்பீடு: இந்த படத்த எந்திரனோட ஒப்பிட தேவையில்லங்குறது என்னோட சொந்த கருத்து. அதையும் தாண்டி கொஞ்சம் சொல்லுடான்னு மொக்கராசு மாமா கேட்டுக்கொண்டதால சொல்றேன். விசுவல் எபக்ட், என்டேர்டைன்மென்ட் ரெண்டுலயும் எந்திரன். பட்ஜெட்டுக்கு தக்கதா என்டேர்டைன்மேண்ட தவிர எதாச்சும்னா Ra.One.  என்னதான் சொல்லுங்க ரஜனி ரஜனிதான், எந்திரன்தான்.


டிஸ்கி: ஆறு மணிக்கு 3D ஷோ. டான்-2  ட்ரெய்லர் மிஸ் பண்ணிட கூடாதேன்னு அஞ்சு மணிக்கே தேட்டேருக்கு போனேன், ப்ரொஜெக்டர் பழுது 8 மணிக்கு நோர்மல் ஷோ போடுவோம் பாருங்கன்னு சொல்லிட்டாங்க, அங்கயும் டான்-2 ட்ரெய்லர் போடுவாங்கன்னு பார்த்தா அதையும் கண்ணுல காட்டல, நமக்கு இந்த ராசி போகாது போலிருக்கே.(நீதி: அமேரிக்காலயும் ப்ரொஜெக்டர் பழுதாகும் மக்களே.)



Thursday, October 27, 2011

ஏழாம் அறிவு - திரை விமர்சனம் (செமி போஸ் மார்டம்)




அப்பாடா, பல தடைகளையும் தாண்டி ஒரு பாடா படத்த பார்த்தாச்சு. நம்ம ராசு மாமா படம் பார்க்க முடியாதுன்னு  சொல்லிட்டாரு. நமக்கோ படம் பார்க்கணும்னா மூணு மணிநேரம் வண்டி ஓட்டனும், அதாவது கிட்டத்தட்ட இருநூறு மைல் தூரம் போகணும் தேட்டேருக்கு. அதுக்கு படம் ஒர்த்தா இல்லாயான்னு பார்க்கலாமேன்னு ராத்திரி பூரா ஒக்காந்து மாங்கு மாங்குன்னு பதிவுகள படிச்சா மிக்ஸ்ட் ரிவீவ். கொஞ்சம் பேரு ஆகா அற்புதம்ன்றாங்க, கொஞ்சம் பேரு ஒரு வாட்டி பார்க்கலாம்ங்குறாங்க, இன்னும் கொஞ்சம் பேரு மொக்கயின்னு சொல்றாங்க. எது உண்மையின்னு ஒண்ணுமே புரியல. எதுக்கு வம்பு படத்த பார்த்திடுவோமேன்னு முடிவெடுத்து ஒரு வழியா பார்த்தும் ஆச்சு. இதுவரைக்கும் உங்க எல்லோருக்கும் படத்தோட கதை என்னன்னு அக்குவேறு ஆணிவேரா தெரிஞ்சிருக்கும். இருந்தாலும் விமர்சன தர்மத்துக்காக மிகச்சுருக்கமா சொல்லிடறோம்.

ஒன் லைனெர்: "இந்தியாவுல, அதுவும் தமிழர்கிட்ட இருந்து போன மருத்துவமும், தற்காப்பு கலைகளும், நாம மொத்தமாக மறந்துவிட்ட நிலையில் நமக்கே எதிரியா திரும்பினா என்ன ஆகும்?"

பிளாட்: மருத்துவ ரீதியா இந்தியாவ அடிமைப்படுத்த சீனா பயோ-வார் ஆராம்பித்து, அதை செயல்படுத்த ஒரு மார்சியல் ஆர்ட்ஸ் அண்ட் நோக்கு வர்மம் எக்ஸ்பெர்ட இந்தியாவுக்கு அனுப்புது. கூடவே ஸ்ருதி ஹாசன கொல்லச்சொல்லியும் ஆர்டர். இது எதுக்குன்னா போதிதர்மன் பற்றிய அவரது மருத்துவ ஆராய்ச்சி. ஸ்ருதி மருத்துவ ஆராய்ச்சியில் வெற்றி பெற்றாரா? சீனாவின் திட்டம் தோற்கடிக்கப்பட்டதா என்பதை, தமிழர்களின் பாரம்பரியம், நமது அறிவியல் மகிமைகள் என்பவற்றின் பின்னணியில் கூறி முடிகிறது படம்.

ஜானர்: இந்த படம் "செமி ஹிஸ்டோரிகால் சயன்ஸ் பிக்ஷன். கூர்ந்து கவனிக்கவும் "பிக்ஷன்" இது "டிராமா" அல்ல. ஒரு அர்தண்டிக் (?) வரலாற கையில வச்சுக்கிட்டு நிகழ்காலத்த பிக்ஷன் ஆக்கி அதுல டிராமா கலந்து, சயன்ஸ் கலந்து ஒரு கலவையா ஆக்கியிருக்காங்க. இத வச்சுக்கிட்டு எப்புடி ஒரு கதைய பின்னியிருக்காங்க, அத எப்புடி காட்சிப்படுத்தி திரையில கொண்டுவந்திருக்காங்க, அதுல வெற்றி பெற்றிருக்காங்களா இல்லாயான்னு இனி பார்க்கலாம்.


போதிதர்மர் தான் கதையின் அடி நாதம். போதிதர்மன் தற்காப்பு கலை நிபுணர் மட்டுமல்லாமல் சிறந்த மருத்துவரும் கூட என்பது வரலாற்றுக் குறிப்பு. நம்ம யாருக்குமே இவர தெரியாது, எனவே இவர் யார்ன்னு சொல்லாம கதைக்குள்ள போக முடியாது, எனவே படம் ஆரம்பிக்க முதல்ல இருபது நிமிஷம் போதிதர்மர் எபிசோட். படத்தோட பெரிய ஹைலைட் இதுதான், நடிப்பாக இருக்கட்டும், காட்ச்சிப்படுத்தலாக இருக்கட்டும், கிராபிக்ஸாக இருக்கட்டும், சூப்பர். சூப்பர். சூப்பர். ஆனா இதுவேதான் படத்தோட மைனசும். அது எப்புடின்னு பிறகு பார்ப்போம்.

ஸ்ருதியோட மருத்துவ ஆராய்ச்சி DNA சம்பந்தப்பட்டது. இதுதான் படத்தோட பிக்சன் பகுதி. மரபனுக்களுக்குள் ஒரு மெமரி இருக்கு. இதுல உடல் அமைப்பு, உடல் கோளாறுகள், உயரம், தலைமுடி அமைப்பு போன்றவை புதைந்திருக்கும், இது பரம்பரை பரம்பரையாக கடத்தப்படும். அவற்றில் ஆட்சியான இயல்புகள், பின்னடைவான இயல்புகள் என இரு வகை இருக்கும், ஆட்சியான இயல்புகள் வெளிப்படும், பின்னடைவான இயல்புகள் புதைந்து போகும். இதுவே உயரமான தந்தைக்கும், குட்டையான தாய்க்கும் பிறக்கும் குழந்தை உயரமானவரா குட்டயானவரா என்பதை தீர்மானிக்கும். இது அறிவியல். ஆனா ஒருவர் உருவாக்கிக்கொண்ட இயல்புகள், ஆற்றல்கள், திறமைகள் என்பனவும் DNAவில்  பதியப்படும், என்பதும்  பின்னடைவான நிலையில் இருக்கும் இந்த இயல்புகளை தூண்டுவதன் மூலம் அந்த ஆற்றல்களை திரும்பக்கொண்டுவரலாம் என்பதும் கற்பனை, இந்த ஆராய்ச்சி பற்றிய குறிப்புகள்தான் போதிதர்மர் நமக்கு வழங்கிச்சென்ற (நாம் தொலைத்து விட்ட) சுவடியில் இருந்து ஸ்ருதிக்கு கிடைப்பதாக கூறப்படுகிறது. இதுவே நமது கடந்த காலத்துக்கும், நிகழ்காலத்துக்கும் உள்ள இணைப்பாக படத்தில் வருகிறது.  போதிதர்மனின் DNA மாதிரி அவரது  வழித்தோன்றலான அரவிந்தனது மாதிரியுடன் 80 சதவீதம் ஒத்துப்போகிறது எனவே அரவிந்தனின் DNA வை தூண்டுவதன் மூலம் போதிதர்மனின் ஆற்றல்களை, மருத்துவத்தை திரும்ப பெறலாம் என்பது ஸ்ருதியின் கணக்கு. அது நடைபெறும் இடத்தில் தனது திட்டம் தவிடு பொடியாகிவிடும் என்பது சீனாவின் கணக்கு. இதற்கிடையில் நடைபெறும் போராட்டமே ஏழாம் அறிவு.


ஆரம்ப இருபது நிமிடங்கள் படத்தின் மீது மிகப் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்குகிறது. கதை நிகழ்காலத்துக்கு வரும் போது விரியும் காதல் காட்சிகள் அந்த எதிர்பார்ப்புக்கு தீனி போடும் விதத்தில் இல்லை. இந்த இருபது நிமிட காட்சிகள் படத்தின் ஆரம்பத்தில் வராது, ஸ்ருதி சூர்யாவிடம் நமது பெருமைகளை விளக்கும் அந்த மியுசியம் காட்சியின் போது வந்திருக்குமானால் தொய்வு தவிர்க்கப்பட்டிருக்கும். திரைக்கதையில் இருக்கும் சொதப்பல் இதுவே. ஒரு பிரமாண்டமான மிகவும் கருத்து செறிவான ஒரு விடயத்தை ஆரம்பத்திலேயே காட்டி பார்வையாளனின் எதிர்பார்ப்பை உச்சத்துக்கு கொண்டு சென்று பின்பு சாதாரணமான காதல்காட்ச்சிகளையும் (ஒப்பிடும்போது) மிகவும் சாதரணமான பாடல்களையும் இட்டு நிரப்பும் போது படத்தில் ஸ்ருதி சொல்லும் "உன்னோட காதல குப்பையில போடு" டயலாக்தான் நமக்கும் வருது. ஒரு வேள அந்த எபக்ட தான் முருகதாஸ் நம்மக்கிட்ட இருந்து எதிர்பார்த்தாரான்னு தெரியல. அப்புடியிருந்தாலும் அந்த முயற்சி இந்த படத்துக்கு கை கொடுக்கல. செமி ஹிஸ்டோரிகள், சை பை மெடிகல் த்ரில்லர்ல டிராமா மிக்ஸ் பண்ணினது வொர்கவுட் ஆகல.

படத்துக்கு தேவையே இல்லாத வலிந்து திணிக்கப்பட்டது போன்ற (சிறப்பாக ஒளிப்பதிவு செய்யப்பட) பாடல்கள், குறைந்தது ஒரு பாடலையாவது வெட்டியிருக்கலாம், இந்தமாதிரி ஒரு படத்துக்கு மூன்று நிமிடத்துக்கு மேல ஒலிக்கும் பாடல்களை கம்போஸ் பண்ணினது எந்த மடயன்னு கேக்க தோணுது, பாடல்களின் நீளம் மிகவும் அதிகம். (முதல் இருபது நிமிடம் தவிர்த்து) பின்னணி இசை படு சுமார். ஹாரிஸ் ஜெயராஜ் கவனிக்க வேண்டிய முக்கியமான இடம்.


அறிவியல் பகுதிகளை ரொம்பவே எளிமைப்படுத்தறதா நினைச்சு கன்பியுஸ் பண்ணாம இருந்திருக்கலாம். DNA வில் புதைந்திருக்கும் இயல்புகளை தூண்டுறதுன்னு கான்செப்ட் சொல்லிட்டு, போதிதர்மரோட ஆவிய புகுத்துறது போல உணர்வு தரக்கூடிய, போதிதர்மரையே திரும்ப கொண்டு வருவதான வசனங்களை தவிர்த்து, போதிதர்மரின் இயல்புகளை பெறலாம் என அழுத்தம் திருத்தமாக கூறியிருக்கலாம். (அறிவாளிகள் கவனத்திற்கு: ஸ்ருதியின் கையில் போதிதர்மர் DNA இல்லை, அவர் இணையத்தில் கிடைத்த DNA மாதிரியின் கட்டமைப்பு விளக்கப்படத்துடன் ஒப்பிட்டே எத்தனை சதவீதம் பொருந்துகிறது என்பதை அறிந்து கொள்கிறார். நம்மாளு சேம்பிள அவுங்க டேட்டா பேசுக்கு அனுப்பி ஒப்பிட்டு கொள்கிறார் என்று வைத்துக்கொள்வோம். எனவே போதிதர்மரின் DNA வை "புகுத்தி" என படத்தில் வரவில்லை என்பதனை கவனத்தில் கொள்க). ப்ரீ க்ளைமாக்ஸ் சண்டைக்காட்ச்சியில் வாகனங்கள் பறக்கும் கிராபிக்ஸ்ஸில்  இன்னும் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம்.

கதையா தேர்வு செய்து நடித்த சூர்யாவுக்கு பாராட்டுக்கள். கதை முழுக்க முழுக்க வில்லனையும், ஸ்ருதியையும் சுற்றி பின்னப்பட்டது. சூரியா ஒரு கருவி, இந்த மாதிரி ஒரு படத்த அதுவும் ஹீரோவ விட அறிவான ஹீரோயின்னும் பலசாலியான வில்லனும் உள்ள கதையில் ஒரு நடிகனாக மட்டுமே நடித்தது பாராட்டுக்குரியது. அதற்க்கான உழைப்பும் மிக அபாரம். போதிதர்மன் வரலாற்று பதிவு, கிளைமாக்ஸ் சண்டை, போஸ்ட் க்ளைமாக்ஸ் டிவி இண்டர்வியு மட்டுமே சூர்யாவுக்கு ஹீரோயிசம் காட்ட சந்தர்ப்பங்கள், மனிதன் பின்னுராறு. அரவிந்தன் கதாபாத்திரம், பாரம்பரியத்தை தொலைத்துவிட்ட சாதாரண நவீன தமிழ் இளைஞன், அதுக்கு என்ன தேவையோ அதையே பண்ணியிருக்காரு, அளவான நடிப்பு. நடனத்துல ராபர்டிக்ஸ் மூமென்ட் இன்னும் கொஞ்சம் குறைச்சுக்கனும். ஜோ தவிர மத்த ஹீரோயின்கள் கூட கூச்சப்பட்டு ஒதுங்காம இன்னும் கொஞ்சம் ரொமான்ஸ் பண்ணலாம்.


ஸ்ருதி, சமீபத்துல சூரியாவுக்கு ஹீரோயின்னா நடிச்சவங்க லிஸ்டிலேயே அழகா தெரிஞ்சது, கதாபாத்திரமா நிலைச்சது இவங்க மட்டுமே, அதுவே முதல் வெற்றி. கொடுக்கப்பட்ட வேலை பெரியது, அதை சொதப்பாம கஷ்டப்பட்டு கேரி பண்ணியிருக்காங்க. தமிழ்ல அறிமுகப்படத்துக்கு இந்த பெர்போமான்ஸ் ஓகே. ஆனா வாயிஸ் மடுலேசன், எக்ஸ்பிரசன்  இன்னும் வரணும். அழகா இருக்காங்க, கமல் பொண்ணுன்னு பாக்காம, ஸ்ருதின்னு பாருங்க ரசிக்கலாம்.

முருகதாஸ், ஒரு நல்ல படம் கொடுக்க முழு முயற்சியாக ஈடுபட்டமைக்கு பாராட்டுக்கள். ஒரு பரீட்சார்த்த முயற்சி, காண்டேன்ட் வைஸ் படம் அபாரம், எக்ஸிகியுசன் கொஞ்சம் சறுக்கல். திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம், இயக்கம் பெரும்பகுதியான இடங்களில் அபாரம், சில இடங்களில் கோட்டை. போதிதர்மர் பற்றிய வரலாறினை எதிர்பார்ப்பு இல்லாமல் திரையரங்குக்கு வரும் சாதாரண ரசிகனுக்கு சுவாரஷ்யம் குறையாமல் கொடுத்தமைக்கு பாராட்டுக்கள்.

ஜானி, மனுஷன் குடுத்த காசுக்கு மேலையே வேலை செஞ்சிருக்காரு, தமிழ் சினிமாவின் முதலாவது பலம் வாய்ந்த, இடைவேளைக்கு அப்புறம் ஹீரோக்கு அடங்கிப்போகாத வில்லன். இவர சமாளிக்க முடியாம ஹீரோவே திணறிப்போறது அழகான யதார்த்தம், அவரது கலைகளே ஹீரோவோட மூதாதையர் கத்துக்குடுத்ததுதான்னு தெரியும் போது அதுவே வலியுடன் கூடிய எதார்த்தமும்.


ரவி கே சந்திரனின் கமெரா அற்புதம், விழலுக்கு இறைத்த நீராக பாடல்கள் கொடுமை.  எடிட்டிங், இன்னும் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம். ராஜீவனின் கலை ததுரூபம். குறிப்பாக முதல் இருபது நிமிடமும் யம்மா யம்மா பாடல் காட்ச்சியில் வரும் ரயில்வே ஸ்டேசனும்.

ஒப்பீடு: தமிழில் சில நாட்களுக்கு முன் வந்த இரண்டு பிக்சன் கதைகள், தசாவதாரம், ஆயிரத்தில் ஒருவன். இரண்டையும் விட ஒப்பீட்டளவில் இதன் பலங்கள் அதிகம், பலவீனகள் குறைவு. தமிழ் சினிமா முன்னோக்கி போகிறது.

பாட்டம் லைன்: நல்ல முயற்சி, ஒரு மிகச்சிறந்த படமாக அமைய சகல தகுதிகளையும் கொண்டுள்ள படம், சிறு சிறு ஓட்டைகளால் மெல்லவும் முடியாது, துப்பவும் முடியாது நிலையில் இருக்கு. ஆறு மணி நேர வண்டி ஓட்டத்துக்கும், குடுத்த காசுக்கும் படம் வஞ்சனை இல்லை. 

நம்ம ரேடிங்: 7 /10 (பரீட்ச்சார்த்த முயற்சி என்பதால் சில குறைகள் மன்னிக்கப்படுகிறது)


**********************************


பதிவுக் குறிப்பு: நீங்கள் சூர்யா எதிரி இல்லையாயின், ஹாலிவூட் படங்களே உலகப்படங்கள் எனக்கூறும் மொத்த படித்த மேதாவி இல்லையாயின், ஒரு தமிழ் படத்த நல்லம்ன்னு சொன்னா நாம கட்டிக்காத்த இமேஜ் கெட்டுப்போகும்னு அடம்பிடிக்காதவராயின், அதிகப்படியான விளம்பரங்களை சகித்துக்கொள்ளும் பக்குவம் இருப்பின் ஏழாம் அறிவு உங்களுக்கும் பிடிக்கும். கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம். ஒரு முறையா பலமுறையா என்பது உங்களை பொறுத்தது.

டிஸ்கி: படத்தின் லாஜிக் மீறல்கள் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. காரணம், ஒன்று, படம் பிக்ஷன் ஜோனர், இரண்டாவது, ஒரு திரைப்படத்தில் எல்லா விடயங்களையும் காட்ட வேண்டும் என்றில்லை. உதாதரனமாக சிஸ்டம் பற்றி விவாதிக்க விருப்பமில்லையாயின், நூறு போலிஸ கொண்னப்புரம் ஏன் போலீஸ் ஒன்னும் செய்யலன்னு கேள்வி கேக்க தேவையில்லை. போலீஸ் எதுவும் செய்ததாக காட்டவும் இல்லை, செய்யாததாக காட்டவும் இல்லை. இது சினிமா விதிகளில் ஒன்று. படத்தின் பிளாஸ் பற்றியும் அதிகம் குறிப்பிடவில்லை. (இன்னொரு பதிவு தேத்தனும்ல).

டிஸ்கி: ஒரு நல்ல முயற்சி தவறான விமர்சனங்களால் வீண் போய் விடக்கூடாது என்பதற்காக சற்று ஆணிகளை ஒதுக்கிவிட்டு விரிவான ஒரு பதிவு. நீண்ட நாள்களுக்கு பின் தமிழர் பாரம்பரியம், போதிதர்மன் வரலாறு, அழிந்துபோன அல்லது அளிக்கப்பட கலைகள் போன்ற பல விடயங்களை விவாதிக்கக் கூடிய ஒரு படம். படம் பார்த்தவர்களின் ஆக்கபூர்வமான கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன. சம்பந்தமே இல்லாது அரசியலை இழுப்பதையும், படமே பார்க்காது இது நொட்ட அது நோசக்கு என சொல்வதையும்  தவிர்த்தால் கூடுதல் மகிழ்ச்சி.

டிஸ்கி: சனி அல்லது ஞாயிறு ரா.1 விமர்சனத்துடன் சந்திப்போம்.


Wednesday, October 19, 2011

நாட்டாமை பண்ணுவது எப்படி?


ஊருக்குள்ள ஒவ்வொரு  மனுஷனுக்கும் ஆயிரம் பிரச்சின இருக்கு, இதுல பெரிய பிரச்சின நாட்டாம பண்றது. அடடா நாலு பேரு நம்மகிட்ட வந்திட்டாங்களேன்னு உடனே, "நீ அவனுக்கு ஒரு குட்டு குட்டு, நீ அவனுக்கு ஒரு மிட்டாய் குடுங்குற"  ரீதியில நாமளும் நாட்டாம பண்ணிட முடியாது. இது எப்பவுமே புலி வால புடிச்ச கதைதான். அதனால இன்னிக்கு நாட்டாம பண்றது எப்புடின்னு பாப்போம். 

முதலாவதா எந்தெந்த பிரச்சினைகள்ள நாட்டாம பண்ணலாம் எதேதுல பண்ணக்கூடாதுன்னு தெளிவா புரிஞ்சிக்கணும்.

  1. காதல் பிரச்சினையில நாட்டாம பண்ணவே கூடாது: இதுல கைய வச்சோம்னா நம்ம பாடு திண்டாட்டம்தான். ரெண்டு பேர சேர்த்து வச்சோம்னு வைங்க, சந்தோசமா இருந்தாங்கன்னா நம்மள கண்டுக்கவே மாட்டாங்க, எதாச்சி பிரச்சினைன்னு வந்திச்சு, நம்ம தலைதான் உருளும். சிலபேர் வலிய வந்து அத்து விடுங்கம்பாங்க, நாமளும் போராடி அத்து விடுவோம், அப்புறம் எப்போ ஒட்டிக்குவாங்கன்னு தெரியாது, ஒட்டிக்கிட்டாங்க நம்மள வாரு வாருன்னு வாரிடுவாங்க, அப்போ அவன் உன்னப்பத்தி அப்புடி சொன்னான், இப்புடிச்சொன்னான்னு போட்டுகுடுத்து நம்ம தாலிய அத்திடுவாங்க, நாம பொது எதிரி ஆயிடுவோம். இந்த சட்டம், நட்புக்குள்ள வாற பிரச்சினையில இருந்து கணவன் மனைவிக்கிடயில இருக்கறது வரை பொருந்தும்.  
  2. திருமண வரன் பாக்கிறப்போ: அந்த பய்யன் உன்னோட பிரெண்டுதானே, ஆளு எப்புடின்னு கேள்வி கேட்டாங்கன்னா உசாராகிடுங்க, இதுல வீணா கருத்து சொல்லபோய் செம்ப நெளிச்சுக்காதீங்க. ஒருத்தங்க திருமணத்துக்கு முன்பு எப்புடி, பின்பு எப்புடின்னு யாராலையும் கணிக்க முடியாது. உங்க கருத்த நாசூக்கா சொல்லிட்டு எஸ்கேப் ஆகிக்காங்க, அதுதான் சேப்டி. (நம்ம காட்டுப்பூச்சிக்கு பொண்ணு பாக்குறப்போ சர்டிபிகேட் குடுத்தா நம்ம நிலைமை என்னாகும்னு யோசிச்சு பாருங்க, புரிஞ்சிடும்)
  3. ஒருவரது நம்பிக்கை சார்ந்த கருத்துக்களில்: இத தெளிவா சொன்னா என்னோட செம்பு நெளிஞ்சிடும், அதனால நாசூக்கா ஒரு உதாரணம் சொல்றேன் கேளுங்க, தலைவர் சந்தானம்தான் டாப் காமெடியங்குறது எல்லாருக்கும் தெரியும், இதுல யாராச்சி வந்து இல்ல இன்னாருதான்னு சொல்றாங்கன்னு வைங்க, அந்த பஞ்சாயத்த தீர்த்து வைக்க வந்தவர புழல்லையோ இல்லன்னா ஜி.ஹெச்  லயோதான் பார்க்கணும்.  
  4. நம்ம அறிவுக்கு எட்டாத விசயத்துல அல்லது நமக்கு சம்பந்தமில்லாத விசயத்துல: உதாரணமா நீங்க ஒரு கண் டாக்டர்ன்னு வைங்க, நானும் விண்டோஸ் கம்பூட்டர் பாவிக்கறேன்னு சொல்லிக்கிட்டு சாப்ட்வேர் இன்ஜினியருக்கு  ப்ரோக்ராமிங்க்ல விளக்கம் குடுக்க போயிடாதீங்க, மண்ட காஞ்ச்சிடும். இந்த விசயத்துல தேவையில்லாம நாட்டாம பண்ணி நம்ம சவக்குழிய நாமளே தோண்டிக்கக்கூடாது. பெரிய விசயமா இருந்தா பெரியவங்க கையில ஒப்படைச்சிட்டு ஒதுங்கிடனும். ஜட்டியே போடாவதவன் ஜட்டி விளம்பரத்த பத்தி பேசக்கூடாது. 
  5. அழையாதவிடத்துல சம்பந்தமே இல்லாம ஆஜராகி நாட்டாம பண்ண கூடாது: இது ரொம்ப முக்கியமானது எல்லாருமே மறந்து போயிடுறது, நம்மள யாருமே கூப்பிடாதவரை எந்த விசயத்துக்கும் நாட்டாம பண்ண போக கூடாது. அது வேலில போற ஓனான வேட்டிக்குள்ள விட்ட கதையாயிடும்.


இதையும் மீறி ஒரு விசயத்துல நாட்டாம பண்றதுன்னு இறங்கிட்டோம்னு வைங்க, முக்கியமா கவனிக்க சில விஷயங்கள் இருக்கு. 

  1. பிரச்சினை என்னன்னு தெளிவா புரிஞ்சிக்கணும், இல்லனா தலைவலின்னு வந்தவனுக்கு கால்ல ஆப்ரேசன் பண்ணின கதையா போயிடும். ஒரு நாணயம்னா ரெண்டு பக்கம் இருக்கும்னு சொல்வாங்க, ரெண்டு பக்கத்தையும் முதல்ல நல்லா அலசி ஆராஞ்சிக்கணும்.  முடிஞ்ச வரைக்கும் நுனிப்புல் மேயுற பழக்கத்த விட்டுட்டு பிரச்சினையின் அடிப்படை வரை போய் ஒரு தெளிவ ஏற்படுத்திக்கணும். 
  2. பிரச்சினை என்னன்னு புரிஞ்சுக்கிட்டோமா, அடுத்த கட்டமா நம்ம நிலைப்பாடு என்னன்னு ஒருவாட்டி மறு விசாரண செஞ்சிக்கனும், ஒன்னுக்கு நாலுதரம் யோசிச்சி உறுதிப்படுத்திக்கிட்டு பிரச்சினையின் தீவிரத்தோட ஒப்பிட்டு நாட்டாம பண்ணலாமா வேணாமான்னு முடிவெடுக்கணும். நம்ம தலைவர்  ரசிகர்தான்னு வந்ததுக்கப்புறம், சிறந்த காமெடியன் யார்ன்னு நாட்டாம பண்ணக்கூடாது. 
  3. இப்போ பிரச்சினயோட நடுநிலைமை பார்வை என்னன்னு பார்க்கணும். இருபத்தஞ்சி வருசத்துக்கு மேல வாழ்ந்த எந்த ஒரு மனுசனும், ஒரு பிரச்சினைய அலசி ஆராயுரப்போ, தனது சொந்த அனுபவங்களின் அடிப்படையில, தனது சொந்த நிலைப்பாட்டதான் எடுக்கறான். நடுநிலைமை பார்வை வரணும்னா அந்த நாணயத்தோட ரெண்டுபக்கத்துலயும் நம்மள வச்சிக்கிட்டு யோசிக்கணும். உதாரணமா தலைவர் காமெடிதான் சிறந்ததுங்குறது மறுக்கமுடியாத உண்மை, ஆனா பிரேம்ஜி ரசிகர்களுக்கும் தலைவர் ரசிகர்களுக்குமிடையில் நாட்டாம பண்ணுமிடத்து, அது இல்ல நடுநிலைமை பார்வை, பிரேம்ஜி ரசிகர்களுக்கு அவரோட காமெடி, தலைவர் காமெடியவிட சிறந்ததா தெரியும், நாம தலைவர எப்புடி விட்டுக்குடுக்க மாட்டோமோ அவங்க பிரேம்ஜிய விட்டுக்குடுக்க மாட்டாங்கங்குரதுதான் நடுநிலம பார்வை. "இல்ல நல்லா யோசிச்சு பாரு, தலைவருக்குத்தான் ரசிகர்கள் அதிகம், அவரு காமெடிக்குத்தான் நிறையபேர் சிரிக்கறாங்க, அவருக்கிட்ட கேளு, இவருக்கிட்ட கேளு, நடுநிலமயா யோசிக்கரவனுக்கு இது புரியும்ன்னு" நாட்டாம பண்ண போனமுன்னா நமக்கு ஜி ஹெச் தான்.
இந்த மூணு விஷயத்தையும் கவனிச்சீங்கன்னா, நாட்டாம பண்ண வாற கேசுல பத்துல ரெண்டுக்குத்தான் நாட்டாம பண்ண முடியும்கறது உங்களுக்கே தெளிவா தெரியும். அதுக்கப்புறம் என்ன உங்க தீர்ப்ப சொல்ல வேண்டியதுதான். அத விட்டுட்டு அம்மா வாங்க அய்யா வாங்கங்க நானும் தீர்ப்பு சொல்றேன்னு தொடங்கினீங்க, செம்பு நெளியறது நிச்சயம். 

அது என்ன மாயமோ மந்திரமோ தெரியல, சின்ன வயசுல இருந்து நாங்க ரொம்ப நல்லவங்கங்களாவே வளர்ந்துட்டோம்.

கருத்துச்சொல்லும் போதும் நாட்டாமை பண்ணும் போதும் கவனத்திலிருத்த வேண்டியது: "யாகாவாராயினும் நாகாக்க"


டிஸ்கி: ஒரு காதல் விவகாரத்தில் நாட்டாமை பண்ணப்போய் நொந்து போன அன்பு நண்பன் விமலஹாசனுக்கு இந்த பதிவு சமர்ப்பணம். பதிவின் நோக்கத்தை திசைதிருப்பும் வண்ணம் பின்னூட்டம் இடவேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.


Thursday, October 6, 2011

ஸ்டீவ் ஜொப்ஸ், ஐபோன், கிண்டில் பாயர், முப்பொழுதும் உன் கற்பனைகள் - கும்பளிங் கும்பளிங் 06/10/2011

ஸ்டீவ் ஜாப்ஸ்.
ஒரு ஆளுமைக்கு பிரியாவிடை: 
ஸ்டீவ் ஜொப்ஸ் அதுதாங்க ஆப்பில் காம்பெனியின் ஸ்தாபகரும் முன்னாள் பிரதான நிறைவேற்று அதிகாரியும் (CEO)ஆ இருந்து சில நாட்களுக்கு முன்னாடி ஓய்வு பெற்றாரே, அவுரு நேற்று (புதன்கிழமை)  இறைவனடி எய்தினார். ஆப்பில் காம்பெனியின் தயாரிப்புகள் பற்றியும் அவற்றுக்கு உள்ள மவுசு பற்றியும் உங்களுக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கும், அத்தனைக்கும் காரணமான ஒரு மிகப்பெரும் ஆளுமை.  நவீன உலகின் லியனாடோ டாவின்சி என வர்ணிக்கப்பட்ட ஒருவர். இனிமேல் அவரது சேவையும் ஆற்றலும் நமக்கு என்றைக்குமே கிடைக்கபெறாவிட்டாலும், தொழில்நுட்ப உலகின் ஒரு மிகப்பெரும் ஆளுமைக்கு நமது மரியாதையும் செலுத்திக்கொள்வோம். 2005 ஆம் ஆண்டு உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களுள் ஒன்றான ஸ்டான்பெர்ட் பல்கலைக்கழகத்தில் அவர் ஆற்றிய உரையினை நேரமிருந்தால் கேட்டுப்பாருங்கள்.     


iPhone 4S

என்னதான் இருந்தாலும் இந்தவாரம் ரொம்பவே எதிர்பார்த்து ஏமாந்து போனது இந்த ஆப்பில் காறங்ககிட்டதான். ஐபோன் 5 அறிவிப்பாங்கன்னு நெனச்சி பார்த்திட்டு இருந்தா அவங்க ஐபோன் 4S அப்புடின்னு போட்டு நெறயப்பேர ஏமாத்திட்டாங்க, ஆனா இனிமே ஐபோன் வாங்குற பசங்களுக்கு செம கொண்டாட்டம், அதாவது ஐபோன் வாங்கினா ஒரு என்றும் பதினாறு பெர்சனல் செக்ரட்டரி இலவசமாம். "சிரி"ன்னு பேரு, உங்களுக்கு போரடிச்சா அந்த பொண்ணுகூட ஹாயா பேசிக்கிட்டு இருக்கலாம். நீங்க கேக்குற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லும், இனிமே நிரூபன் சாருக்கு எத்தன வயசின்னு நாம மண்டைய பிச்சுக்க தேவையில்ல, சிறிகிட்ட கேட்டா சொல்லிடுவா. அத விடுங்கங்க, நான் இன்னிக்கி குடை கொண்டுபோகனுமா? அப்புடின்னு கேட்டா காலநிலைய சரி பார்த்து மழை பெய்யுமா பெய்யாதான்னு சொல்லிடுவான்னா பாத்துக்கங்களேன். விக்கிபீடியா மற்றும் வூல்பார்ம் அல்பா துணையோட உங்களுக்கு வாற பொது அறிவு சந்தேகங்கள்ள இருந்து விஞ்ஞானம், கணிதம் வரைக்கும் எல்லா சந்தேகத்தையும் தீர்த்து வைப்பா. இனிமே எந்த பொண்ணுங்களும் நீ ஐபோனையே கட்டிக்க அப்புடின்னு திட்ட முடியாது, அடுத்த பதிப்புல அந்த அப்சனும் வந்திடும்னுதான் தோணுது.


ஆப்பில் நம்மள ஏமாத்தினாலும் அமேசான் நம்மள கைவிடல, அவங்களோட கிண்டில்  ஈ-ரீடர், புதிய வரிசய அறிவிச்சிருக்காங்க. இலத்திரனியல் மை தொழில்நுட்பத்துல வெளிவந்து சக்க போடு போட்ட ஈ-ரீடர் இப்போ டச் ஸ்க்ரீன் தொழில்நுட்பத்தோட மின்னுது. அது இல்ல இப்ப மேட்டர், அவங்க வரிசையில   கிண்டில் பாயர் அப்புடின்னு ஒரு கலர் ஸ்க்ரீன் மல்டி டச் அன்ட்றாய்ட்  டேப்லெட்  இருக்கு. இது நெறைய டேப்லெட் கம்பனிகளுக்கு பீதிய கெளப்பி விட்டிருக்கு. கிண்டில் புத்தகங்கள் மட்டுமல்ல, pdf, doc முதலிய வற்றையும் வாசிக்கலாம், இசை, வீடியோ உள்பட சில்க் வெப் பிரௌசெர்,  அன்ட்றாய்ட் ஆப்ளிகேசன்ஸ், கேம்ஸ் என பல வசதி இருக்கு. ஈ-ரீடர் எங்குரத தாண்டி இது ஒரு முழு டேப்லெட். விலையும் ரொம்ப கம்மியா இருக்கறதால டேப்லெட் சந்தைய ஒரு கலக்கு கலக்கும்னு நிபுணர்கள் எதிர்பார்குறாங்களாம். என்ன ஒரு குற, மெமெரி கொஞ்சம் போதாது, 8GB. என்னதான் சொல்லுங்க ஐபாடுக்கு ஒரு போட்டி ரெடி.      


கடந்த ரெண்டு வாரமா, ஒளியைவிட வேகமா பயணிக்கற துணிக்கைகள் அப்புடின்னு முகப்புத்தகத்த நாறடிச்சுட்டாங்க, அப்புறமாதான் அது என்னன்னு பாக்கலாமேன்னு ஐன்ஸ்டைன் சார்புத்தத்துவத்த கூகிள் கிட்ட கேட்டோம். அதுவும் கான்செப்ட் அப் சைமல்ட்டேனிட்டி அப்புடின்னு என்னமோ காட்டிச்சு. அது என்னன்னா நேரம்ங்குறது நிலையானது இல்ல, பாக்குறவன் கண்ண பொறுத்து வேறுபாடும் அப்புடிங்குரதுதான். அதாவது, ஒரு ஓடுற ட்ரைன்ல முனாடியும் பின்னாடியும் ஒரே நேரத்துல ஒரு மின்னல் தாக்குதுன்னு வைங்க, ட்ரைன்ல இருக்கறவங்களுக்கு  முன்னாடி தாக்கினது முதல்ல தாக்கினதாவும் பின்னாடிதாக்கினது சற்று நேரம் கழிச்சு தாக்கினதாவும் தோணுமாம். வெளில இருந்து பாக்குறவங்களுக்கு ரெண்டுமே ஒரே நேரத்துல தாக்கினதா தோணுமாம். இது ரெண்டுல எது உண்மைன்னு கேட்டா, ஐன்ஸ்டைன் ரெண்டுமே உண்மைன்னு சொல்றாரு. ஏன்னா பூமி கூட சுத்திக்கிட்டுதான் இருக்கு, அப்போ பூமிக்கு வெளில இருந்து பாக்குற ஒருவருக்கு அது வேற மாதிரி தெரியும், ட்ரைனுக்கு எதிர்த்திசையில ஓடுறவருக்கு அது வேற மாதிரி தெரியும், பாக்குறவங்க பார்வைய பொறுத்து சம்பவம் வேறுபாடும். இதுதான் சரியானதுன்னு ஒன்னு இல்ல, அவரவர் பார்வை கோணத்த பொறுத்துதான் இருக்கு அப்புடிங்குரதுதான் அந்த "கான்செப்ட் அப் சைமல்டைனிட்டி". அட இதைத்தானே நம்ம மகாபாரதமும் சொல்லுது. "கர்ணன் நகர்வலம் போனப்போ பாக்குறவனெல்லாம் நல்லவனா தெரிஞ்சான், துர்யோதனனுக்கு எல்லாருமே கெட்டவனா தெரிஞ்சான்" அப்புடின்னு. மகாபாரத காலத்துலேயே இந்தியர்கள் சார்புத்தத்துவம் தெரிஞ்ச்சு வச்சிருந்திருக்காங்கப்பா.

இன்னிக்கி எல்லாமே ரொம்பவே சீரியஸ் மொக்கையா இருக்கேன்னு கடுப்பாகிடாதீங்க, இருக்கவே இருக்காரு நம்ம ஜீவீ பிரகாஷ். முப்பொழுதும் உன் கற்பனை படத்துல இருக்கற "ஒரு முறை" பாடல் கேட்டுட்டீங்களா? இல்லன்னா கேட்டுக்கங்கோ இதோ.. உங்களுக்காக முதல் முறையா.. Akkon குரலில்.


தமிழில் கேட்க விரும்புபவர்களுக்கு : முப்பொழுதும் உன் கற்பனை : ஒரு முறை

மின்னல்கள்  கூத்தாடும் மழைக்காலம் பாடலுக்கு அப்புறம் மறுபடியும் akkon தயவில் இன்னொரு பாட்டு. இதுக்கும் மேல இந்த ஆள நம்புறதுக்கு நாம என்ன மாங்காயா இல்ல மடையனா. ஆமா நமக்கு ஒரு டவுட்டு, இதுக்கு காபி பேஸ்ட் பாட்டுன்னு சொல்லலாமா?


டிஸ்கி: ஸ்டீவ் ஜொப்ஸ் பற்றிய தகவல் கடைசி நேர இணைப்பு, அவரது சேவைகள் பற்றி பின்னர் ஒரு பதிவில் பார்போம். 


டிஸ்கி: வேல கொஞ்சம் ஓவரானா இப்புடியும் உங்க உசிர எடுக்க தோணும்.. அடுத்த வாரம் ஜாலியான மொக்கைகளோட சந்திப்போம். 






         

Monday, October 3, 2011

தமிழ் சினிமாவின் தடைகளும் சந்தானத்தின் பங்களிப்பும்


வர்றேண்டா, இனிமேதான் ஆட்டமே கள கட்டபோகுது..
சினிமா என்பது நம் மக்களிடையே ஊறிப்போன ஒன்று. அந்தவகையில் இந்த சினிமா கலாசாரம் ஆரோக்கியமானதாக உள்ளதா என்கிற கேள்வி தவிர்க்க முடியாதது. தற்போதுள்ள சினிமா கலாசாரம் கண்டிப்பாக ஆரோக்கியமானதல்ல என்கிற பதிலையே வருத்தத்துடன் தெரிவிக்கவேண்டிய கட்டாயம் இருக்கிறது. தமிழ் சினிமா பெரும்பாலும் பொழுது போக்கு வட்டத்துக்குள்ளேயே அடைக்கப்படுகிறது. மாஸ் என்டேர்டைனர்ஸ் என்பதே தமிழ் சினிமாவின் உச்சகட்டம். இது நாயகன் விம்பத்தின்பால் கட்டமைக்கப்பட்டது. ஒரு கதாநாயகனை சுற்றி பின்னப்படும் கதை, அவனது வீர தீர சாகசங்களை சொல்லி முடிக்கும், அல்லது அவனது வாழ்க்கைப் போராட்டத்தை சொல்லி முடிக்கும். தமிழ் சினிமாவின் முதல் எதிரி நம் முன்னோர்கள் கட்டமைத்த இந்த கதாநாயகன் விம்பமும் அதை அரசியலுக்கான அடித்தளமாக எண்ணி நம் கதாநாயகர்கள் செய்த தகிடு தத்தம்களுமே.

நமது தமிழ் சினிமாவின் கதைக் களத்தை  உற்று நோக்கினால் அது ஒரு குறுகிய வட்டத்துக்கு உள்ளேயே அடைக்கப்பட்டிருக்கிறது. ஒரு கதாநாயகன் கதாநாயகி. இவர்களுக்கிடையே உள்ள காதல், அல்லது குடும்ப செண்டிமெண்ட், அல்லது ஒரு வில்லனை கதாநாயகன் எதிர்ப்பது. தமிழ் சினிமாவின் ஆரம்ப நாட்களில் இருந்து இன்று வரை உள்ள வழிமுறை இதுவே. நாயகன், நாயகி, வில்லன் தவிர வரும் அனைத்து பாத்திரங்களும் பலவீனமானதாகவே இருக்கும். இது கமெர்ஷியல் திரைப்படங்களில் இருந்து யதார்த்த திரைப்படங்கள் என அழைக்கப்படும் திரைப்படங்கள் வரை காணப்படும். கதாநாயகன் அதி புத்திசாலியாக இருப்பார், அல்லது மகா நல்லவராக இருப்பார், அல்லது உருப்படாத கழுதையாக இருப்பார், அதில் எந்த குறையும் இல்லை, ஆயினும் அவர் சார்ந்த அனைத்து கதாபாத்திரங்களும் மழுங்கடிக்கப்பட்டதாகவே இருக்கும். இதுதான் தமிழ் சினிமாவின் முதல் வரையறை.

இந்த எளவு எங்க போய் முடியப்போகுதோ.. நாமதான் ஏதாச்சும் பண்ணனும் போலிருக்கு.
காலா காலமாக திரையில் தோன்றும் கதாநாயகர்கள் நம்மை காக்க வந்த கடவுளாகவே சித்தரிக்கப் பட்டு வருகிறார்கள். சினிமாவில் கதாநாயகனாக நடிக்கும் ஒருவர் தமிழ் நாட்டின் அடுத்த முதல்வருக்கான தகுதியை கொண்டிருக்கவேண்டும் எனவே ரசிகனும் எதிர்பார்க்கிறான், அதனையே நாயகர்களும் உருவாக்க நினைக்கிறார்கள். இதனால் தான் அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்தாலும் நம் நாயகர்கள் கருத்துச்சொல்ல வேண்டும், காவிரி நீர் பிரச்சினையாக இருந்தாலும் இவர்கள் தீர்த்து வைக்க வேண்டும், ஈழப் பிரச்சினையாக இருந்தாலும் இவர்கள் தலையிட வேண்டும். நம் நாயகர்களோ ரசிகர் மன்றங்களாக ஆரம்பித்து பின்னாளில் அதனை ஒரு அரசியல் கட்சியாக மாற்றி, அரசியல் வாதிகளாகும் நோக்கத்துடனேயே தந்திரமாக செயற்படுகின்றனர், அல்லது அரசியலுக்கு வருவேன் வரமாட்டேன் என உள்ளே வெளியே ஆட்டம் ஆடுவார்கள். ஒரு சினிமாவுக்கான பட்ஜெட் தொழில்நுட்ப குழு, கதை அனைத்தும் நாயக நடிகரையும், அவரது இமேஜ், அவருக்கு உள்ள வெறித்தனமான ரசிகர்கள்  அதனால் உள்ள வியாபார மட்டம் போன்றவற்றை அடிப்படையாக வைத்தே தீர்மானிக்கப்படுகின்றது. 

இந்த வட்டத்துக்குள் கதை சொல்ல ஆரம்பிக்கும் இயக்குனருக்கு நிச்சயமாக படைப்பு சுதந்திரம் இல்லை. யதார்த்தமாக படம் எடுக்க முடியாது. இந்த எழுதப்படாத விதியை மீற பலபேருக்கு துணிவில்லை, சில இயக்குனர்கள் இதில் சற்று மாறுபட்டு "கதாநாயகன்" அல்ல "கதையின் நாயகன்" என்கிற விம்பத்தை பதிக்கிறார்கள். இங்கும் ஒருவர், அவரை சுற்றிய கதையே திரைப்படம் ஆகிறது. படம் பார்கச்செல்லும் ரசிகனும், படத்தில் ஒரு நாயகனையே காண்கிறான். நாயகனை உயர்த்துவதற்காக அவன் சார்ந்த ஏனைய கதாபாத்திரங்கள் மழுங்கடிக்கப்படுகிறது. உதாரணமாக நாயகனின் நண்பர்கள். பெரும்பாலும் இவர்கள் காமெடி செய்யவே பயன்படுவார்கள். சில வேளைகளில் கதையின் ஓட்டத்துக்கு உதவுகிறேன் பேர்வழி என நம்மை வறுத்து எடுப்பார்கள். இந்த கதாபாத்திரங்கள் நாயகனை மிகைத்திடாதவண்ணம் மிகக் கவனமாக கையாளப்படும். பிற கதாபாத்திரங்கள் நாயகனை மிகைக்க முடியும் என்கிற நிலை தோன்றும் வரை படைப்பு சினிமா என்பது நமக்கு எட்டாக்கனி. அதுவரை இந்த நடிகர்கள் கொடுமையை நாம் அனுபவித்தே ஆகவேண்டும். இதற்கு தீர்வு இருக்கிறதா? ஆம், இரண்டாயிரத்து நான்காம் ஆண்டு மன்மதன் என்கிற திரைப்படம் மூலம் அறிமுகமானது அந்த தீர்வு. எங்கள் தலைவர், நகைச்சுவை அரசர் சந்தானம் தான் அந்த தீர்வு.

என்னா அக்கப்போரு பண்ணினீங்க, இனி வேடிக்க மட்டும் பாருங்க..
என்ன நல்லாதானே போய்கிட்டு இருந்திச்சு ஏன் இப்ப தீடீர்னு மொக்க ஸ்டார்ட் பண்ணிட்டங்கன்னு பாக்கிறீங்களா, இது மொக்க இல்லீங்க, நிஜம். வழக்கமாக நாயகனிடம் அடங்கிப்போகும் மக்கு நண்பன் போலல்லாமல், நாயகனை சீண்டும், அறிவுரை வழங்கும், உதவிசெய்யும், நாயகனை வழிநடத்தும் நண்பராகவும் ஒரு காமெடி நடிகன் இருந்து ஜெயிக்க முடியும் என்பதை சாதித்துக்க் காட்டியவர். பாஸ், sms, சிறுத்தை, தெய்வத்திருமகள் போன்ற படங்கள் இதற்க்கு எடுத்துக்காட்டு. இயல்பான நட்பு வட்டத்தை திரையில் தோற்றுவிக்க முடியும் என்பதையும் எடுத்துக்காட்டியவர். எதர்க்கெடுத்தாலும் நாயகனுக்கு ஜால்ரா தட்டும் நண்பராக அல்லாமல், நாயகனது குறை நிறைகளை உணர்த்தக்கூடிய, அந்த கதாபாத்திரத்துக்கு முழுமை சேர்க்கக்கூடிய (காம்ப்ளிமென்ட்) நிஜ வாழ்க்கை நட்பை திரையில் கொண்டுவருவதற்கு ஒரு தூண்டுகோலாக இருக்கிறார். மிகை நடிப்பு, அங்க சேஷ்டைகள், உதைப்பது அல்லது உதை வாங்குவது, கருத்து சொல்லி வறுத்தெடுப்பது அல்லாமல், இயல்பாக, நிஜ வாழ்கையில் நடக்கக்கூடிய விடயங்களை திரையில் செய்து கைதட்டல் வாங்கியவர். நாயகனை மிகைக்கும் அல்லது நாயகனுக்கு சமனான கதா பாத்திரங்களையும் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என எடுத்துக்காட்டியிருக்கிறார். நாயகனுக்கு இணையான புட்டேஜ் இன்னொரு கதாபாத்திரத்துக்கும் வழங்கலாம் என்பதை தெளிவு படுத்தியிருக்கிறார். 

தலைவர் பல இயக்குனர்களுக்கு தைரியம் அளித்திருக்கிறார், கதாநாயகனை வைத்து மட்டுமல்லாமல் கதாபாத்திரங்களை வைத்து கதை பின்னும் சுதந்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறார். பல பெரிய நடிகர்களின் படங்களே சந்தானத்தை நம்பித்தான் இருக்கு, எந்த நகைச்சுவை நடிகருக்கும் இல்லாத ஆன்லைன் ரசிகர் வட்டம், சில சமயங்களில் சில கதாநாயகர்களை மிஞ்சும் ரசிகர் வட்டம் தலைவருக்கு  இருக்கு. இது தமிழ் சினிமாவுக்கு ஒரு மிகப்பெரும் வெற்றி. நிஜமான சினிமா ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரும் வெற்றி. நாங்க சந்தானம் ரசிகர்களா இருக்கிறதும், தலைவருக்கு ஆன்லைன் ரசிகர் மன்றம் வச்சிருக்கிறதும் நியாயமா இல்லையான்னு இப்ப சொல்லுங்க சார்.


டிஸ்கி 00: இது காபி பேஸ்ட் பதிவோ மொழிபெயர்ப்பு பதிவோ அல்ல, சோ, எந்த தயக்கமும் இல்லாமல், கூகிளிடம் விசாரிக்காமல் காமென்ட் போடலாம் என தைரியமாக தெரிவித்துக்கொள்கிறோம்.

டிஸ்கி 01: தமிழ் சினிமாவுக்கு தலைவரின் முக்கியத்துவத்தை இந்த முக்கியமான பதிவில் எடுத்துக்கூறியிருக்கிறோம். பதிவுலக வராற்றிலேயே ஒரு முக்கியமான பதிவு, அட எங்களுக்கு முக்கியமான பதிவு சார். அதாவது எங்களது ஐம்பதாவது பதிவு.


சந்தானம் 50 அல்ல,  பதிவு எண் 50.