Monday, April 9, 2012

ஒரு கல் ஒரு கண்ணாடி: பர்ஸ்ட் ரிப்போர்ட்

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் ட்விட்டர் நண்பர்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.


ஒரு வழியா 2012 இன் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குள்ளான ஓகே ஓகே படம் இன்னக்கி ரிலீஸ் ஆகுது. ஏற்கனவே மிடில் ஈஸ்ட்ல ரிலீஸ் ஆகி செமத்தியான ரிபோர்ட். தமிழ் நாட்டுல திங்கள் கிழமை வரைக்கும் டிக்கெட் இல்லாம மொத்தமும் புக் ஆகிடிச்சு. இந்த படத்தப்பத்தி ஒரு சின்ன முன்னோட்டம் அண்ட் ஒரு பர்ஸ்ட் ரிப்போர்ட்.

ராஜேஷ் AS கேப்டன் ஆப் த ஷிப்
தமிழ் சினிமா இயக்குனர்கள் வரிசையில் ராஜேஷுக்கு என்றைக்குமே ஒரு தனி இடம் உண்டு. தலைவர் சந்தானத்தின் முழுத்திறமையையும் வெளிக்கொண்டுவரும் இயக்குனர் என்கிற வகையில் மட்டுமல்ல சிறந்த திரைக்கதை ஆசிரியர், இயக்குனர் என்கிற வகையிலும் அவருக்கு தனி இடம் உண்டு. தற்கால இளைஞர்களின் நாடி பிடித்து அதற்க்கு ஏற்ப படம் பண்ணுவதில் ராஜேஷ் எப்பவுமே கெட்டி. இவரோட படங்கள் இரண்டரை மணிநேரம் என்டேர்டைன்மென்ட் காரண்டி. ஏற்கனவே சிவா மனசுல ஷக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் ரெண்டுமே செம ஹிட். மூனாவதா ஓகே ஓகே செமையா வந்திருக்கு படம். ஹாட்ரிக் நிச்சயம்.

''இந்தப் படத்தின் கதை தமிழ் சினிமாவில் இதுவரை வராத கதை ஒன்றும் அல்ல .......... இந்த சிம்பிளான கதையை சொல்லியிருக்கும் விதம் தான் சினிமாவுக்கு திரைக்கதையே முக்கியம் என்பதற்கு இன்னொரு சாட்சி. சீனுக்கு சீன் சிரிப்பு வெடிகளுடன் ரகளையாக படத்தைக் கொண்டு சென்றுள்ளார் ராஜேஷ்." - செங்கோவி 

உதய் AS சரவணா...
தமிழ் சினிமாவின் சமத்துப் பிள்ளை அப்பிடின்னு பேரெடுத்த உதயநிதி ஹீரோவா அறிமுகமாகிராறு. இவரோட முதல் படம் அப்பிடிங்குரதால ராஜேஷும் கஷ்டப்பட்டு ரிஹெர்சல் எல்லாம் குடுத்து செமையா தயார் பண்ணியிருக்காரு. நம்ம ராஜேஷ் பலமே அவரு உருவாக்குற மிடில் கிளாஸ் ஹீரோக்கள் தான். இந்த படத்துல கூட உதயநிதி ஒரு பக்கத்து வீட்டு பையனா அசத்தியிருக்காருன்னு பட்சி சொல்லுது. உதய் சாதரணமாவே கல கல பார்ட்டி, அடுத்தவங்கள காலாய்க்கிறது மட்டுமில்ல தன்ன தானே கலாய்ச்சிக்கறது கூட அவருக்கு அசால்டா வரும். அதுனால இந்த படம் அவருக்கு சரியான லான்சிங் பாட் ஆக இருக்கும்.

"உதயநிதி தமிழ்சினிமாவுக்கு புதிய நல்வரவு. அதிகம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லாத கேரக்டரைத் தேர்ந்தெடுத்ததிலேயே பாதி ஜெயித்து விடுகிறார். .......... அதிகம் நடிப்புத் திறமை தேவைப்படாத, அடுத்த வீட்டுப் பையன் போன்ற கேரக்டரில் இயல்பாகப் பொருந்திப் போகிறார். டான்ஸ் ஆடவும் முயற்சி செய்கிறார். ......... நல்ல எதிர்காலம் உண்டு. ஓகே ஓகே-ல் உதயநிதி ஓகே!" - செங்கோவி 


ஹன்ஷிகா AS மீரா...

சின்னக்குஷ்பு ஹன்சிகா ஹீரோயின்னா நடிச்சிருக்காங்க. ராஜேஷ் படங்கள்ல எப்பவுமே ஹீரோயினுக்கு ஒரு வெயிட்டான பாத்திரம் இருக்கும். (தமிழ் சினிமாவுல இப்போ இருக்கற வெயிட்டானா ஹீரோயினும் ஹன்சி தான்). வழக்கமா நம்ம சினிமாவுல ஹீரோயினுக்கு வெயிட்டான பாத்திரம்ன்னா ஒன்னு லூசா நடிக்க வைப்பாங்க, இல்லையின்னா படம் முழுக்க கிளிசரீன குடுத்துடுவாங்க, அதுவும் இல்லையின்னா இருக்கவே இருக்கு விலை மாது வேடம். இதை தவிர்த்து ஒரு நோர்மலான ஹீரோயின வெயிட்டா காட்டுறது நம்ம ராஜேஷ் தான். அந்த வகையில ஹன்சிகாவுக்கும் இது ஒரு முக்கியமான படமா இருக்கும்.

"பச்சை கோதுமை மாவு என்று படத்தில் சந்தானத்தாலும் வெளியில் நம்மாலும் வர்ணிக்கப்படும் ஹ..ஹ..ஹன்சிகா, இதிலும் அழகாக வருகிறார், போகிறார், சிரிக்கிறார். பெரிதாக நடிக்கத் தேவையில்லாத கேரக்டர் என்பதால் நாமும் தப்பித்தோம். இந்தப் படத்திற்காக ஹன்சிகா மெலிந்ததாக செய்தி வெளியானது. நமக்கென்னவோ இன்னும் உலக உருண்டை போல்தான் தெரிகிறார். - செங்கோவி 


சந்தானம் AS  பார்த்தசாரதி (பார்த்தா)
தலைவர் சந்தானம் படம் முழுதும் கிட்டத்தட்ட இன்னொரு ஹீரோவா வர்றாரு  (உதய் பாசையில சொல்லனும்னா சந்தானம்தான் ஹீரோ, உதய் ஒரு முக்கியமான காரெக்டர் பண்ணியிருக்காரு). உதய்க்கும்  தலைவருக்கும் கெமிஸ்ட்ரி செமையா வொர்கவுட் ஆகியிருக்குங்கறது ஆடியோ ரிலீஸ் பார்த்த எல்லாருக்கும் புரிஞ்சிருக்கும். அதனால இந்த படம் கண்டிப்பா காமெடி விருந்து. (சமீபத்துல வந்த படங்கள பார்த்து மெண்டலாகி சுத்திக்கிட்டிருக்கற தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ரட்சகன் இந்தப் படம்) தலைவர அடுத்த லெவெலுக்கு கொண்டுபோகப்போற படம். இந்த படத்து மூலமா நம்ம தலைவர் பாடல் ஆசிரியர் அவதாரம் கூட எடுத்திருக்காரு. வேணாம் மச்சான் வேணாம் பாடல் இப்போதே எல்லா ரேடியோ சானெலயும் ஆட்டிப்படைச்சிக்கிட்டு இருக்கு, சீக்கிரமாவே தொலைக்காட்ட்சிகளையும் ஆக்கிரமிக்கப் போகுது, ஏன்னா இந்த பாடலுக்கு நம்ம தலைவரும் டான்ஸ் ஆடியிருக்கராறு. டீசெருக்கே பலத்த வரவேற்ப்பு இருக்கு. இந்த படத்தோட சிறப்புகள இன்னும் அடுக்கிக்கிட்டே போகலாம். இந்த வருடத்தின் மிகப்பெரிய வெற்றி ஓகே ஓகே.

"உதயநிதிக்கு படத்தில் பில்டப் ஏதுமற்ற அறிமுகக் காட்சி தான். ஆனால் சந்தானம் தான் ஹீரோ மாதிரி அறிமுகம் ஆகிறார். ஏனென்றால் படத்தின் ரியல் ஹீரோவே அவர் தானே! ஒவ்வொரு நகைச்சுவை நடிகருக்கும் ஒரு பீக் பீரியட் வரும். அந்த நேரத்தில் அவர்களின் ஒவ்வொரு அசைவிலும், டைமிங்-லும் நகைச்சுவை பொங்கும். சந்தானத்திற்கு இது அப்படியான நேரம். உள்ளத்தை அள்ளித்தா - கவுண்டர், வின்னர்-வடிவேலு போன்று இந்தப் படத்தில் சந்தானம் கலக்கி எடுத்துவிட்டார்........
பல காட்சிகளிலும் தியேட்டரே சிரிப்பில் அதிர்கிறது. தற்போதைய சூழ்நிலையில் தானே நகைச்சுவையில் நம்பர்-1 என்று அழுத்தமாக நிரூபிக்கிறார். படத்தின் ட்ரெய்லரிலேயே பல காட்சிகள் வெளியாகிவிட்டதே, இனி படத்தில் என்ன இருக்கப் போகிறது என்று நினைத்துப் போனால், மனிதர் பட்டாசாக வெடித்துள்ளார். விடிய விடிய மிமிக்ரி செய்யும் காட்சி அதகளம். ஓகேஓகே-ல் சந்தானம் ஓகே ஓகே ஓகே ஓகே ஓகே ஓகே ஓகே ஓகே ஓகே ஓகே ஓகே ஓகே ஓகே ஓகே!" - செங்கோவி 






எல்லாரும் கண்டிப்பா தியட்டருக்கு போய் படம் பாருங்க, செமையா என்ஜாய் பண்ணுவீங்க அதுக்கு நாங்க உத்தரவாதம். புத்தாண்டினை குடும்பத்தோடு ஜாலியா கொண்டாடுங்க. 

டிஸ்கி: நீண்ட நாட்களுக்கு அப்புறம் பதிவுலகில் ரெண்டாவது இன்னிங்க்ஸ் ஆரம்பித்திருக்கும் செங்கோவி அவர்களுக்கு நமது மனமார்ந்த வாழ்த்துக்கள், அதுவும் ஓகே ஓகே விமர்சனத்துடன் ஆரம்பித்ததற்கு கோடி நன்றிகள். 


ஒரு கல் ஒரு கண்ணாடி காமெடி சரவெடிகள்


உதயநிதி:  பாண்டிச்சேரி போறோம். கல்யாணத்த நிப்பாட்டுறோம். பொண்ணத் தூக்குறோம். இதான் மச்சான் பிளான்.
சந்தானம்:  என்னது பொண்ணத் தூக்குறதா?…டேய்,அவங்க சீர்வரிசையா குடுக்கிற கட்டில் பீரோவக் கூட என்னாலத்  தூக்கமுடியாது. மீசை வளந்தா பெரிய பசங்களெல்லாம் சண்டைக்கு கூப்பிடுவானுவோனு பயந்துதான்  மீசையே வைக்காம இருக்கிறேன்.
உதயநிதி: டேய் என்னடா பன்னுவானுவோ..ஆளு வச்சி அடிப்பாங்களா? இல்ல போலீசுகிட்ட  போவாங்களாஎன்ன ஆனாலும் சரி ..எவன் குறுக்க வந்தாலும் சரி………………மச்சான் நீ பாத்துக்கோ..!
சந்தானம்:   ???????????
————————————————————————–
உதயநிதி: டேய் ..கல்யாணத்த நிப்பாட்ட கார் கேட்டா.. இதப்போயி எடுத்துட்டு வந்திருக்க.
சந்தானம்: ஏன் மச்சான் கல்யாணத்த நிறுத்திறதுக்குன்னே ஏதாவது புது மாடல் கார் விட்டிருக்காங்களா?
—————————————————————————
பூக்கடைக் காரரிடம்..
சந்தானம்: யோவ்ஏதாவது டிஸ்கவுன்ட் கொடுய்யா..
பூக்கடைக்காரர்:  டிஸ்கவுன்ட் எல்லாம் கிடையாது சார்வேணா  இந்தப் பூவ வச்சுக்கிங்க..
சந்தானம்:  காதுலையா?
—————————————————————————–
சிக்னலில் ஒரு பெண்ணிடம்..
உதயநிதி: எக்ஸ்கியுஸ்மி..ஒரு கப் காபி சாப்டலாமா?.ஏனா.எந்த நல்லக் காரியம் பன்றதுக்கு முன்னாடியும் காபி சாப்டனும்னு எங்க அம்மாசொல்லியிருக்காங்க.
பெண்: காபி சாப்டர பழக்கம் இல்லீங்க..
சந்தானம்: வாங்க அப்ப பீர் சாப்டலாம். ஏனா எந்த நல்ல காரியம் செய்யுறதுக்கு முன்னாடியும் பீர் சாப்டனும்னு எங்க ஆயா சொல்லியிருக்காங்க
பெண்: லெகரா.?..ஸ்ட்ராங்கா ?
—————————————————————————–
போலிஸ் நிலையத்தில்
(இரவு முழுவதும் சந்தானம் மிமிக்கிரி செய்து சோர்ந்து போனபின் )
உதயநிதி: என்ன மச்சான்  சிவாஜி சார் வாய்ஸ் எடுக்கிறியா
சந்தானம்: டே ராத்திரி பூரா மிமிக்கிரி பண்ணி பண்ணி அந்த ஆளு வாய்ஸ் மாறி ஆயிடுச்சுடா..
——————————————————————————-
(ஹன்சிகாவை சந்தானத்திடம் அறிமுகம் செய்யும் போது….)
சந்தானம்: பசங்க பாக்கனுன்னே பால்கனியில சுத்துராளுகளே
சந்தானம்: வாவ்
உதயநிதி: டேய் என்னடா உன் சிஸ்டர இப்படி பாக்கிற?
சந்தானம்:???????? .. இட்ஸ் ஓகே மச்சான்.. கேரி ஆன்
 ——————————————————————————–
 உதயநிதி: மனிதனாகப பிறந்தால் ஏதாவது ஒரு தீயப் பழக்கம் இருக்க வேண்டும்.அப்போதுதான் அவனது வாழ்க்கை முழுமையடையும்
சந்தானம்: இந்தப் பொன்மொழியை காலையில காலேண்டர் கிழிக்கும் போதுதான படிச்ச..?
———————————————————————————–
சந்தானம்:  டேய்மோந்து பாத்தாலே போதையாயிடுவாங்கனு கலாச்சிதாண்டா  பார்த்திருக்கேன்.ஆனா கண்ணெதிரே இப்பதாண்டா பாக்குறேன்.தமிழ் நாட்டுல பீர் தட்டுபாடு வந்தப்ப மொத பஸ்ஸ புடிச்சி பாண்டிச்சேரி போயி பீர் வாங்கி குடிச்சது யாரு?. நம்ம பயலுகதான். அப்படியாப்பட்ட மண்ணுல பொறந்துட்டு மோந்து பாத்து போதையாவிறியேடா..
 ——————————————————————————–
சந்தானம்:  ஏண்டா, சரக்குல ஆ.’.ப் போட முடியலுனு பேசுறதுல ஆ.’.ப் போட்டு பேசுறியா..
———————————————————————————–
 சந்தானம்: திட்டுறதுக்கு வார்த்தையில்லாம திட்டுற வார்த்தையையே திருப்பி திருப்பித் திட்டிகிட்டு இருக்கிற..
———————————————————————————–
சந்தானம்:  மச்சான்செட்டாகாத பிகரு பின்னால சேவிங் பண்ணிட்டு பிரண்டு ஒருத்தன் சுத்துறானா,கூட இருக்கிற பிரண்டு  தாண்டா உள்ள போயி கெடுக்கணும்.இதெல்லாம் பெருமையில்ல..கடமை..!.
————————————————————————————-
 ஹலோ ..அஞ்சி ஈ (5E) பஸ் வருமா..?.
சந்தானம்:  அழுகிப்போன பழம் மாதிரி மூஞ்ச வச்சிருந்தா,அஞ்சி ஈ இல்ல பத்து ஈ ,பதினஞ்சு கொசு, இருபது வண்டு கூட வரும்.
————————————————————————————-
உதயநிதி: உனக்கு விரலு சூப்புற பழக்கம் இருக்குனு உங்க அம்மா உன் விரலுல வேப்பெண்ணையை தடவி விடுவாங்க ,அப்ப நீ என் விரலதான சப்பின..
————————————————————————————–
 அய்யோ…. பார்த்தா(பார்த்தசாரதி) ஏன் இந்த காவி டிரஸ்?
சந்தானம்: காதல்ல தோத்தவன் காவி டிரஸ் போடாம, பின்ன நேவி டிரஸ்ஸா  போடுவான்?
—————————————————————————————
சாமிநாதன் : சீடா..
சந்தானம்:     இருடாஐயோ குருஜி
சாமிநாதன் : மீண்டும்  லவ்கீக வாழ்க்கை என்னும் குழியில் விழத்தான் போகிறீர்களா
சந்தானம்:   ஆமாம் குருஜி.
சாமிநாதன் : முதலில் அவள் உன்னை மெட்டி போட வைப்பாள் ..பிறகு முட்டி போட வைப்பாள்
சந்தானம்:  அவ என்னை  ஜட்டி போட வச்சாலும் பரவா இல்ல குருஜி!
—————————————————————————————–
சந்தானம் கேர்ள் பிரன்ட்:அந்த குருஜி ஒரிஜினல் இல்ல
சந்தானம்:அவரு ஒரிஜினலு இல்லாம அசெம்பல் செட்டா
——————————————————————————————
உதயநிதி: என் ஆளு மீரா ஏர் ஹோஸ்டஸ் டிரைனிங்க்காக சென்னை டு மும்பை போறாங்க..
சந்தானம்: அதுக்கு..முதல் முதல்ல பிளைட்ல போறதால பிளைட் டயருல எலுமிச்சப்பழம் வைக்கச் சொல்றீங்களா.. இல்ல மொட்ட மாடியிலிருந்து டாட்டா காட்ட சொல்றீங்களா?

———————————————————————————————–
உதயநிதி: டேய் புன்னகை அரசிடா…!
சந்தானம்: நான் என்ன புழுங்கல் அரிசின்னா சொன்னேன்.
 ———————————————————————————————-
சந்தானம்: DC சார் எதுக்கு.. நாட்டு கோழி முட்டையை நல்ல பாம்பு பாக்கிற மாதிரி அப்படி பாக்குறீங்க..
———————————————————————————————–
சந்தானம்: டேய்மொட்டையப்பாத்து இது வெய்யிலுக்கு அடிச்ச மொட்டையா வேளாங்கண்ணிக்கு அடிச்ச மொட்டையானு சொல்ற ஆளு நானு.உன் முழிய பாத்தாலே தெரியுது நல்ல மூடுல இருக்க.பிரண்ட்சிப் பத்தியெல்லாம் பேசி ரியாக்சன கெடுத்துக்காத.
———————————————————————————————-
ஹைலைட்டான பிளைட் காமெடி.
(ஏர்போர்டில் )
சந்தானம்:எக்ஸ்கியுஸ்மி.. நீங்க கிங் பிசர்ல ஒர்க் பண்ணுறீங்களா..
                   எஸ்…….
சந்தானம்: எந்த ஒயின் ஷாப்பிலும்  உங்க கம்பெனி பீர் கூலிங்காகவே  கிடைக்க மாட்டேங்குது.இது விசயமா உங்க எம் டி கிட்ட நான் கொஞ்சம் பேசமுடியுமா?
 (பிளைட்டில்….)
ஏர் ஹோஸ்: ஹலோ இங்க என்ன பிரச்சனை.
உதயநிதி:    வாழ்க்கையே பிரச்சனைதாங்க.நான் நினைச்சது எதுவுமே கிடைக்க  மாட்டேங்குது.லவ்வும் செட்டாகுல..அட்லீஸ்ட் இந்த ஜன்னல் சீட்டாவது எனக்கு குடுங்க.
ஏர் ஹோஸ்: நீங்களாவது கொஞ்சம் விட்டுக் கொடுக்கலாமே.
சந்தானம்:  என்னது.. டிபன் சாப்றது ஒருத்தன்.டிப்ஸ் வக்கிறது ஒருத்தனா. அதுலாம் முடியாது.
உதயநிதி:  அப்ப.. இதெல்லாம் ஒத்துவராது. நான் .’.புட்போர்ட் அடிச்சசிகிறேன்.
ஏர் ஹோஸ்: என்னது  பிளைட்ல புட் போர்டா ? அது மாதிரி எல்லாம் பண்ண முடியாது.
உதயநிதி:  என்னங்க நீங்க..ஜன்னல் சீட்டும் இல்லங்கிறீங்க..’.புட்போர்டும் முடியாதுங்குறீங்க.பின்ன என்ன டிரைவர் சீட்லயா ஒக்காருறது?
ஏர் ஹோஸ்: என்னது டிரைவர் சீட்டா?
சந்தானம்: அப்ப.. உங்க சீட்ல ஒக்கார வச்சுகிங்க
(ஒரு வழியா சமாதானம் ஆகி… )
உதயநிதி: எப்படியும் சாப்டறதுக்கு வழியில கேண்டீன்ல நிப்பாட்டுவீங்களே….  அப்ப மாறி ஒக்காந்துக்கலாம்.
ஏர் ஹோஸ்: என்னது கேண்டீனாசார்.. நாங்க கேண்டீன்ல எல்லாம்  நிப்பாட்டுரதில்ல.
சந்தானம்: ஓ..அப்ப பாய்ன்ட் டு  பாய்ண்டா
ஏர் ஹோஸ்: இல்ல சார் எல்லாமே இங்கேயே கிடைக்கும்.
——————
ஏர் ஹோஸ்:  சார்.. இட்ஸ் டைம் டு  டேக் ஆ.’.ப் .கேன் யு பிளீஸ் பாஸ்டன் யுவர் பெல்ட் .
உதயநிதி: பெல்டாநான் ஆல்ரெடி வீட்லே  போட்டுட்டு வந்துட்டேனே.
ஏர் ஹோஸ்:  நான் அந்த பெல்ட்ட சொல்லல ..சீட் பெல்ட்ட சொன்னேன்.
உதயநிதி: அய்யய்யோ நான் சீட் பெல்ட் எல்லாம் எடுத்துட்டு வரலியே
——————————-
உதயநிதி: ஹலோ மேடம். என் பெல்ட்ட அவுத்து விடுங்க.நான் டிரைவர பாக்கானும்.எனக்கு அவரு மேல டவுட்டா இருக்கு.
ஏர் ஹோஸ்: என்னது டிரைவரா ?
சந்தானம்: அப்ப கிளீனர வர சொல்லுங்க
——————————-
ஏர் ஹோஸ்: உங்களுக்கு எதுவும் ஆகாது.பயப்படாதிங்க.அப்படியே எதுவும் ஆனா நாங்க உங்களுக்கு பாராசூட் தருவோம்.
சந்தானம்: ஏங்க.. உயிர் போற நேரத்தில தேங்கண்ணெய வச்சி நாங்க என்ன பன்றது?

சந்தானத்தின் தத்துவங்கள்
  • தண்ணியடிக்கிற  பழக்கம் என்பது தலையில வர்ற வெள்ள முடி மாதிரி.. ஒன்னு வந்துட்டா போதும். ஜாஸ்தியா ஆகுமேத் தவிர கம்மி ஆகவே ஆகாது.
  • நீ கரக்ட் பண்ற பொண்ண விட உன்ன கரக்ட் பண்ணுற பொண்ணுதான் ஒர்க் அவுட் ஆகும் .
  • ஏரி உடைஞ்சா மீனு ஏரியாவுக்கு வந்துதானே ஆகணும்.
  • கேக்கிறவன் கேனையனா.. கேரம்போர்ட கண்டு பிடிச்சது கே.எஸ்.ரவிக்குமாரு சொல்வியா?
  •  FACT..FACT..FACT..இந்தப் பொண்ணுங்க ஒருநாளைக்கு பத்து பேருக்கு ஓகே சொன்னா.. பத்தாயிரம் பேரை கழட்டி விடுறாங்க.
  • டேய் ஆணவத்தில ஆடாதடா. ராணுவத்தில அழிஞ்சவங்கள விட ஆணவத்தில அழிஞ்சவங்கத்தான் அதிகம்.
  • அயன்  பன்றவங்க அழக் கூடாது.
  • பொண்ணுங்களோட ரத்தமும் சிவப்பு.பையன்களோட ரத்தமும் சிவப்பு.அப்பறம் ஏன் பொண்ணுங்களோட எண்ணம் மட்டும் கருப்பா இருக்கு.?
  • டேய்நான் மொடாக் குடிகாரனுவ கூட சேர்ந்துக் குடிப்பேன். ஆனா மோந்துப் பாக்குறவன் கூடெல்லாம் குடிக்க மாட்டேன்.