Friday, December 28, 2012

2012 டாப் 10: தமிழ் காமெடி படங்கள்

வருஷம் பூரா பதிவு போடுறோமோ இல்லையோ, ஆனா  வருஷ கடைசில "டாப் 10"கள் போட வேண்டியது ஒரு பதிவரோட முக்கிய கடமைகளில் ஒன்னு. இந்த பிளாக்ல ஒன்னுக்கு ரெண்டாவே பதிவர்கள் இருக்கோம், அப்புறம் இது கூட போடலான்னா வருங்காலத்துல நம்ம பழைய போஸ்ட்ஸ தேடி படிக்க போற(!)  சின்னஞ்சிறுசுக நம்மள பத்தி எவ்வளவு கேவலமா  நினைக்குங்க. ஆனா வெளிவர்ற எல்லா படத்தையும் பார்க்குற மக்கு பசங்க இல்ல நாங்க, கொஞ்சமாவது படத்துல என்டர்டேய்ன்மென்ட் இருக்குன்னு தெரிஞ்சா மட்டும்தான் அந்த படத்த கொஞ்சம் லேட்டானாலும் பார்போம். என்டர்டேய்ன்மென்ட்ங்குற கேட்டகரில மாஸ், ஆக்ஷன், யாரு ஹீரோ, யாரு ஹீரோயின் ப்லா ப்லான்னு நிறைய இருந்தாலும் எப்பவுமே காமெடிக்குதான் முதலிடம்.

எதுக்காக இவ்வளவு மொக்க போடுற? மேட்டர சீக்கிரமா சொல்லுங்குறீங்களா!!! ஓகே பாஸ். 2012ல வந்த படங்கள்ல, நாங்க பார்த்த படங்கள்ல காமெடி நல்லா இருக்குன்னு நமக்கு தோணுன சில படங்கள டாப் 10 ரேன்க் பண்ணுறோம். அம்புட்டுத்தேன்.(டாப் 10 காமெடி படங்கள்ன்னு லிஸ்ட் எடுத்தா, ரெண்டு மூணுதான் தேறும், அதுனால காமெடி காட்சிகள் டாப்பா இருந்த படங்களின் தரவரிசை). அப்புறம், ஜஸ்ட் காமெடி மட்டும்னதுனால, செம மாஸ் ஹீரோக்களின் சூப்பர் டூப்பர் ஹிட் படங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள படவில்லை.


10.நீதானே என் பொன் வசந்தம்/ மிரட்டல்
ரெண்டு படமுமே பெருசா ஒன்னும் சொல்றதுகில்ல. ஆனா சந்தானத்தின் கவுன்டர்ஸ் பல இடங்கள்ல ரசிக்கிற மாதிரியும், சிரிக்கிற மாதிரியும், போரிங்கான படத்துக்கு கொஞ்சம் பூஸ்ட்டாவும் இருந்துச்சு. சந்தானமும் இல்லன்னா மிரட்டல் பார்க்குறது  கொஞ்சம் கஷ்டம்தான். நீ.எ.பொ.வல சந்தானம் காமெடியும் சமந்தாவும்....

9.அட்டகத்தி/காதலில் சொதப்புவது எப்புடி
ரெண்டுமே புது டைரக்டர்ஸ் படம். ரெண்டுக்குமே காதலில் சொதப்புறதுதான் களம். காமெடியான களம். அட்டகத்தி சென்னை புறநகர் பேஸ்ட் இளைஞர்களின் அடாவடிகளுடன் கூடிய காமெடி, கொஞ்சம் சீரியஸா பார்த்தா சிரிக்கலாம். ஆனால், கா.சொ.எ எல்லாருக்கும் பொதுவான காமெடி. கா.சொ.எக்கு இன்னும் கொஞ்சம் அதிக ரேன்க் கொடுக்கலாம்ன்னாலும், இங்க ஜஸ்ட் காமெடிய வச்சி மட்டும் ரேன்க் பண்ணுறதால 9.

8.சுந்தரபாண்டியன்
சூப்பர்  ஹிட்டு படம். எல்லா மேட்டரையும் சரியா மிக்ஸ் பண்ணிருந்தாங்க. சூரியோட கவுன்டர்ஸ் மட்டுமில்லாம, முக்காவாசி படம் பூராவே காமெடி டோன் இருந்துச்சு.

7. 3/சகுனி
ரெண்டுமே  ரொம்பவும் பில்ட்அப் கொடுத்து மொக்க வாங்குன படங்கள். 3ல சைக்கோ, தற்கொலைன்னு பயம் காட்டுனாங்க. சகுனில ஸ்க்ரீன்பிளே  சறுக்கிடுச்சு. ஆனா ரெண்டு படத்துலயும் காமெடி போர்ஷன் சூப்பர். மெரீனால டைரக்டர் சொன்னத மட்டும் செஞ்ச சிவகார்த்திகேயன், 3ல டைமிங் காமெடில  கலக்கிருந்தாரு. அதே மாதிரி, சகுனி படத்துல ஆட்டோ சவாரில சந்தானமும்-கார்த்தியும் அடிக்கிற லூட்டிகள் ஆதித்தியால பார்க்கும்போது நல்லாவே இருக்கு. யூரின் பாஸ் பண்ணி பைன் கட்டுற சீக்வென்ஸ் செம காமெடி!

6.நான் ஈ
 மக்கள என்டர்டேய்ன் பண்ணுறதுக்காகவே அளவெடுத்து செஞ்ச படம். "ஈ"பண்ணுற காமெடிகள் அட்டகாசம். போனஸ்ஸா நட்புக்காக(!) சந்தானம்.. கிளைமேக்ஸ்க்கு அப்புறம் வர்ற காமெடி சீன்ஸ்க்காக ரெண்டு மூணு வாட்டி ரிப்பீட் பார்த்த படம்.

5.மனம் கொத்தி பறவை
 சிவகார்த்திகேயனோட முழுநீள ஹீரோ அவதார படம்.  மிச்ச சொச்ச, சொச்ச மிச்ச காமெடி நடிகர்கள் பலபேர கூட்டணி சேர்த்துகிட்டு படம் பூரா எதோ ஒரு விதத்துல சிரிப்பு வர்ற மாதிரி சீன்ஸ் இருந்துச்சு. பட்,  சிவகார்த்திகேயன் கிட்ட இருந்து நாங்க இன்னும் நிறைய எதிரபார்குறோம் பாஸ்.

4.நண்பன்
 ஷங்கர் படம்னா எப்பவுமே காமெடி அளவா இருக்கும். ஹிந்தில ஹிட்டான அந்த படிப்ஸ் ஸ்டுடண்ட் கேரக்டருக்கு சத்தியன் செமையா பொருந்தினாரு. சத்தியனின் பாடி லேங்க்வேஜ், டயலாக் டெலிவரி எல்லாமே சூப்பர். கூடவே மாஸ் ஹீரோக்கள்ள காமெடி சரியா வர்க்அவுட் ஆகுற விஜய், அப்கமிங்ல ஜீவான்னு எல்லாரும் இருந்ததுனால, என்ஜாய் பண்ணி பார்த்த படம். 

3. கலகலப்பு
உள்ளதை  அள்ளித்தா, உனக்காக எல்லாம் உனக்காக போன்ற படங்கள்ல கவுண்டமணி எனும் லெஜன்ட், அப்புறம் வின்னர், கிரி பீரியட்ல வடிவேலுன்னு கூட்டணி வச்சி காமேடில கலக்குன சுந்தர்.சி அப்பால காணமல் போயிட்டாரு. அப்புறம் சுந்தர்.சி இயக்கி, நடிச்சி வெளிவந்த சில படங்கள பார்த்தப்புறம், இந்த மனுஷனுக்குன்னு பெருசா காமடி நாலெட்ஜ் இல்ல, அந்தந்த பீரியட்ஸ்ல அசிஸ்டென்ட்ஸ்ஸா இருந்த சுராஜ், பூபதி பாண்டியன் மாதிரி ஆட்கள் தான் எடுத்து கொடுத்துருக்காங்கன்னு ஒருமுடிவுல இருந்தப்ப, சுந்தர்.சியின் கம் பேக் பிலிம். பர்ஸ்ட் ஆப் "அகில உலக சூப்பர்ஸ்டார்" சிவா, செகன்ட் ஆப் "காமெடி சூப்பர்ஸ்டார்" சந்தானம், அப்புறம்  இளவரசு மாதிரி துணை கேரக்டர்ஸ்ன்னு நிஜமாவே கலகலப்புதான். 
ஒரு வேளை, இப்போ வசன அசிஸ்டென்ட்டா இருந்த கேபிள்சங்கர் அண்ணன்தான் இந்தவாட்டி கலகலப்புக்கு காரணமா இருந்துருப்பாரோ?

2. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்
"என்னாச்சி?" சந்தானம் ஃபேன்ஸ்ன்னு சொல்லிட்டு சந்தானம் இல்லாத ஒரு படத்துக்கு  லீட் பொசிஷன் கொடுத்துருகீங்க?ன்னு கேட்டிங்கன்னா, அதுதான் பாஸ், இந்த படத்தோட வெற்றியே. செமையா என்ஜாய் பண்ணி பார்த்த படம். பிரேம், சரஸ், பக்ஸ், பஜ்ஜி ஆக்டிங், சான்ஸ்லெஸ்!! டயலாக் டெலிவரி, பாடி மாடுலேஷன் எல்லாத்தையும் விட்டுருங்க, ஒவ்வொரு சீனுக்கும் அந்த மூணு பிரெண்ட்ஸ்மூஞ்சில கொடுக்குற எக்ஸ்பிரெஷன்ஸ் இருக்கே.. செம செம!!  டைரக்டர் வேலைக்காரர்ன்னு தோணுது, இவருகிட்ட இருந்தும், இவரு மாதிரி புதுசா வர்ற டைரக்டர்ஸ் கிட்ட இருந்தும், நாங்க இன்னும் நிறைய எதிர் பார்க்கலாம்ன்னு தோணுது!

1. ஒரு கல் ஒரு கண்ணாடி
 குறிப்பிட்ட ஒரு வருசத்துல, ராஜேஷ்-சந்தானம் கூட்டணில ஒரு படம் வந்துருக்குன்னா, அந்த வருசத்துல அத தாண்டி இன்னொரு படம் எப்புடிங்க பர்ஸ்ட் ப்ளேஸ்ல வரும்? சோ, நீங்க எதிர்பார்த்த மாதிரியே ஓகே ஓகே பர்ஸ்ட்டு. ஒவ்வொரு ராஜேஷ் படமும் சந்தானத்துக்கு ஒவ்வொரு டர்னிங் பாயிண்ட்ஸ். இந்த படத்த பத்தி நாங்க பலவாட்டி எழுதியாச்சி.. பல வாட்டி பார்த்தும் இன்னும் அலுக்கல! இனிமேலும் அலுக்காது! அடிச்சி சொல்லுறோங்க, "ஆல் இன் அழகுராஜா" மட்டுமில்ல, அதுக்கு பிறகும் ராஜேஷ்-சந்தானம் கூட்டணில வரபோற படங்கள் எல்லாமே பிளாக்பஸ்டர்ஸ்தான்.
***************************************


ஆக, கடந்த சில வருஷங்கள விட இந்த  2012 வருஷம் காமெடி ரசிகர்களுக்கு  சிறப்பாவே இருந்துச்சு. இது 2013ல யும் தொடரும்னு தெரியுது! 2013 வருட ஆரம்பத்துலையே  சந்தானம், பவர்ஸ்டார் காம்பினேஷன்ல லட்டு தின்ன ரெடியா  இருங்க காமெடி ரசிகர்களே!!

Wednesday, December 12, 2012

உங்களுக்கெல்லாம் நட்புன்னா என்னன்னு தெரியுமா?

உங்களுக்கெல்லாம் நட்புன்னா என்னன்னு தெரியுமா? நண்பன்னா என்னன்னு தெரியுமா? மொக்கராசு மாமான்னா என்னன்னு தெரியுமா? கடமைன்னா என்னன்னு தெரியுமா? இதோ இப்போ தெரிஞ்சுக்கங்க.

உங்களுக்கெல்லாம் நம்ம சந்தானம் பான்ஸ் ப்ளாகும் அதுல ரெண்டுபேர் ப்ளாகுறதும் மட்டும் தெரிஞ்சிருக்கும், இதுக்கு பின்னால முன்னால எத்தன ரகசியங்கள், கொள்கைகள் இருக்குன்னு தெரியுமா? எவ்வளவு அழகான ஒரு நட்பு இருக்குன்னு தெரியுமா? அதையெல்லாம் விளக்கவே இந்த பதிவு.

எனக்கு ரெண்டு வயசு இருக்கும் போது....
உங்க கற்பனைய கொஞ்சம் நிறுத்துங்க. அப்பல்லாம் எனக்கு ஒன்னுக்கு வருதுன்னு சொல்லவே தெரியாது, மொக்க ராசு மாமாவ எப்படி தெரியப்போகுது. நாங்க சந்திச்சிக்கிட்டது பத்தாம்பு படிக்கறப்போதான், அதுக்காக பள்ளி சிநேகிதம்ன்னு நெனச்சிக்காதீங்க, எப்பவுமே எட்டு மணிக்கு பள்ளி ஆரம்பிக்கும்னா நான் எட்டர மணிக்குத்தான் பஸ்ல ஏறுவேன், அதே பஸ் எட்டே முக்கா மணிக்கு நம்ம மொக்க ராசு மாமா ஸ்டாப்புக்கு வரும், தவறாம அவரும் அந்த பஸ்ல ஏறிக்குவாறு. இப்படி ஆரம்பிச்சதுதான் எங்க சிநேகிதம்.
அவரு பள்ளியும் எங்க பள்ளியும் பரம எதிரிக, அவரு தல ரசிகன், நான் தளபதி ரசிகன், அவரு சூப்பர் ஸ்டார், நான் உலக நாயகன். அவரு சிம்பு, நான் தனுஷ். அவுரு கேபிள் சினிமா, நான் பிலாசபி சினிமா. அவுரு சல்மான், நான் ஷாரூக். சினிமாவுல தொடங்கி வாழ்கையில எல்லாத்துலயுமே நானும் ராசு மாமாவும் எதிரும் புதிரும்தான். அவரு கூட எப்பவுமே ஒரு கூட்டம் இருக்கும், அது அவரா கஷ்டப்பட்டு சேர்த்த கூட்டம், என் கூடவும் ஒரு கூட்டம் இருக்கும், அது தானா சேர்ந்த கூட்டம். ரெண்டுமே வேற வேற கூட்டம். நாங்க ரெண்டுபேரும் போன யூனிவர்சிட்டி வேணும்னா ஒண்ணா இருக்கலாம், ஆனா அவுரு வேற படிப்பு நான் வேற படிப்பு. அவுரு விண்டோஸ், நான் மேக். அவுரு சாம்சுங் ஆன்ட்ராய்ட் நான் ஆப்பில் ஐ.ஓஎஸ். தலைவரு சந்தானம் தவிர எனக்கும் ராசு மாமாவுக்கும் எந்த விஷயத்துலயும் ஒத்துப்போறதே கெடயாது. இப்படி ரெண்டுபேர் ஒண்ணா சேர்ந்து ஒரு ப்ளாக் நடத்துறோம்னா அது எப்படி சாத்தியமாச்சி? இதுக்கெல்லாம் என்ன காரணம்னா எங்க ரெண்டுபேர் நட்பும் இந்த வேற்றுமைகள் எல்லாம் தாண்டிய புனிதமான நடப்பு. 
இங்கதான் நம்ம கதையில ஒரு ட்விஸ்ட்டு. இந்த புனிதமான நட்பு, மூழ்காத ஷிப்பு  ப்ளா ப்ளா ப்ளா... இதெல்லாம் லாரிக்கு பின்னாடி வேணும்னா எழுதலாம், ஆனா லைப்க்கு செட் ஆகாது. நான் என்ன பண்ணினாலும் ராசு மாமா என்ன தாறு மாறா கலாய்ப்பாரு, அதே மாதிரி நானும். இப்படியே எங்க வண்டி ஓடிக்கிட்டு இருந்திச்சு, ஒரு நாள் நாடு ராத்திரி, நான் கழிவறையில் ஒக்காந்திருந்தப்போ கணப்பொழுதில் ஒரு யோசனை உதிச்சது. அதுதான் எத்தன நாளைக்குத்தான் நாமளும் நம்மளையே மாறி மாறி கலாய்ச்சுக்கிட்டிருக்கறது, நாம ஏன் நம்ம வட்டத்துல இருந்து வெளிய வந்து இந்த உலகத்துல இருக்கற ஒருத்தனையும் விடாம கலாய்க்கக்கூடது? இத நான் ராசு மாமாக்கிட்ட சொன்னதும் அவரும் செம குஷி ஆயிட்டாரு, நாம நாளைக்கே ஒரு ப்ளாக் ஆரம்பிக்கறோம், ஆரம்பிச்சு "எவனா இருந்தாலும் கலாய்ப்போம்" ன்னு சொல்லிட்டாரு, அப்புடி ஆரம்பிச்சதுதான் எங்க ப்ளாக்கர் பயணம். அப்புறம் தலைவர் சந்தானம் மேல உள்ள அதீத பிரியத்தினால அவருக்காக ஒரு டிவிட்டர் ஃபேன்ஸ் அக்கவுண்ட் ஓபன் பண்ணோம், அது சக்சஸ் ஆகுனாப்புறம் அதன் தொடர்ச்சியா ஒரு சந்தானம் பிளாக் உருவாக்கனும்ன்னு சொல்லி அந்த பழைய ப்ளாக்க(!) மூடிட்டு ஆரம்பிச்சதுதான் நீங்க இப்போ படிச்சிக்கிட்டு இருக்கற இந்த "அகாதுகா அப்பாடக்கர்ஸ், ரியல் சந்தானம் ஃபேன்ஸ்" ப்ளாக்.

அதுசரி நட்பு, நண்பன், மொக்கராசு மாமா எல்லாம் சொல்லியாச்சு, கடமைன்னு எதோ சொன்னியே அது எங்கன்னு தேடறீங்களா? அதாவது, நம்ம ராசு மாமா ரொம்ப நாளா டாக்டர் ஆகணும்ன்னு படிச்சிக்கிட்டு இருக்காரு. ப்ளாக்கர் ட்விட்டர்ன்னு வெட்டியா சுத்திக்கிட்டு இருக்கறதால அந்த வேல ரொம்ப நாளா இழுத்துக்கிட்டு கெடக்கு. இப்போ என்னன்னா சீகிரமாவே படிப்ப முடிச்சுடனும்ன்னு விடா பிடியா இருக்கார். முதல் வேலையா ப்ளாக்கர் அக்கவுன்ட் டெம்பரரி டீஆக்ட்டிவேட் பண்ணிட்டார். இதுனால உங்க எல்லாருக்கும் தெரியப்படுத்துவது யாதெனில் இன்னும் கொஞ்ச நாளைக்கு  மொக்கராசு தொல்ல இந்த ப்ளாக்கருக்கு இல்ல. அதுனால, அவரு திரும்ப வர்ற  வரைக்கும், நானு மட்டும் (சில பல ஆணி புடுங்கல்கள் எனக்கும் இருந்தாலும்) தனியாளா பதிவுலகத்துல நடமாடலாம்ன்னு இருக்கேன். இதெல்லாம் என்ன பெருமையா, இல்ல...., உன்னதமான நட்புக்கு செய்யுற கடமை!!

டிஸ்கி 1: இம்புட்டு நேரமா பொறுமையா ஒக்காந்து இந்த பதிவ படிச்ச உங்களுக்கு நம்ம மனமார்ந்த நன்றிகள். பதிவு எழுதி ரொம்ப நாளாச்சா, சங்கம் நம்மள மறந்துட கூடாதுன்னதான் சின்னதா ஒரு சுய பதிவு. வழமையா, இது மாதிரி பதிவு எல்லாம் நூறாவது பதிவு மாதிரி எதாவது ஸ்பெஷல் பதிவாதான் போடுவாங்க, ஆனா நாங்க போற ஸ்பீட்க்கு நூறாவது பதிவு எல்லாம்?? அட போங்க சார்!! 

டிஸ்கி 2: எவ்வளவு உயரத்துக்கு போனாலும், நட்புக்கு மரியாத செஞ்சு, நட்பு மாறாமா இருக்குற சூப்பர் ஸ்டாருக்கு இந்த பதிவு சமர்ப்பணம். எங்க ரெண்டு பேர் சார்புலையும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லிக்கறோம்.

Wednesday, November 21, 2012

துப்பாக்கி, ஜப் தக் ஹேய் ஜான் : இரட்டை பார்வை

பதிவர்னா ஒரு படம், அது தமிழோ, இந்தியோ, தெலுங்கோ, இங்கிலீஷோ இல்ல கொரியன், இந்தோநேஷியனோ, உடனே பார்த்து விமர்சனம் எழுதனும்கறது ஒரு சட்டம், அத மீறி படம் பார்த்துட்டும் விமர்சனம் எழுதலயின்னா சங்கத்துல இருந்து தள்ளி வச்சிடுவாங்கன்னு மொக்கராசு மாமா மிரட்டுனதால, இந்த தீபாவளி ரிலீஸ்ல நான் பார்த்த ரெண்டு படத்துக்கும் ஒரே பதிவுல விமர்சனம் எழுதி சங்க மெம்பர்ஷிப்ப காப்பாத்திக்கலாம்ன்னு இறங்கிட்டேன்.

முதல்ல ஷார்ட்டா துப்பாக்கி. துப்பாக்கிய பத்தி பலபேர் பல பதிவு போட்டு பல விமர்சனம் போட்டு படம் மெகா ஹிட்டுன்னு ஊரறிய அறிவிப்பும் குடுத்தாச்சு. இதுக்கு மேல இந்த படத்த பத்தி நான் என்ன சொல்றது? ரொம்ப நாளைக்கு அப்புறமா முழு திருப்தியோட ஒரு விஜய் படம் பார்த்தது இந்த தீபாவளிக்குத்தான். அண்ணன் பின்றாரு, நடிப்புல செம முதிர்ச்சி தெரியுது, ஆனா தோற்றதுல செம இளமை தெரியுது. முருகதாஸ் மொத்தமா நாலே நாலு சீன யோசிச்சிட்டு, அத விஜயோட உதவியால ஒரு முழுப்படமா குடுத்திருக்காரு, வழக்கம் போல ஹரிஷ் ஜெயராஜ் செமையா சொதப்பியிருக்காரு. படத்துல வில்லன காட்டறப்போ அந்த ஊ ஊ ஊ  BGM பழைய விஜயகாந்த் பட "பயங்கர வில்லன" ஞாபகப்படுத்தி தொலைக்குது. நாலு சீன விட்டா படத்துல சொல்லிக்கொள்ளும்படியா எதுவுமே இல்ல, ஆனா விஜய் நம்மள சீட்டோட கட்டிப் போட்டு வைக்கிறதால, படம் முடிஞ்சு வெளிய வாரப்போ, ஒரு முழுத் திருப்தி கெடைக்குது, நீண்ட நாளைக்கு அப்புறமா ஒரு செம மாஸ் என்டேர்டைனர் பார்த்த மாதிரி நமக்கு ஒரு பீலிங் வருது. துப்பாக்கி, இட்ஸ் ஆல் அபவுட் விஜய். கிங் ஆப் மாஸ்.


ஜப் தக்  ஹேய் ஜான்:


எட்டு வருஷங்களுக்கு பிறகு யாஷ் சோப்ரா படம் இயக்க வர்றாருன்னு சொன்னதுமே இந்த படத்துக்கான எதிர்பார்ப்பு தொத்திக்கிருச்சி.  "எ யாஷ் சோப்ரா ரொமான்ஸ்" எப்படி இருக்கும்ன்னு தெரிஞ்சவங்களுக்கு படத்தோட கதைய பத்தி எதுவுமே சொல்ல தேவையில்ல, கதைய விட பெர்போர்மான்ஸ் தான் எப்பவுமே அவரோட படத்துல USP.  வழக்கமான யாஷ் சோப்ரா ரொமான்ஸ் தான் படம். ஆனா ரொம்ப நாளைக்கு அப்புறமா பார்க்குறதால ரொம்ப ரீஃப்ரெஷிங்கா இருக்கு படம்.  ஷாருக்க  விட்டா ரொமாண்டிக் பிலிம்ல பெர்ஃபோம் பண்ணறதுக்கு வேற யார தேடுறது? ரொம்ப நாளைக்கு அப்புறமா ஷாரூக் ரொமாண்டிக் ஹீரோவா நடிக்கற படம்,  ரஹ்மான் சார் மியூசிக், முதல் முறையா ஷாரூக்கும் கத்ரீனா கய்ப்பும் ஜோடி சேரும் படம், ஆதித்யா சோப்ரா கதை வசனம்ன்னு சொன்னதுமே எதிர்பார்ப்பு பல மடங்காயிருச்சி. படம் முடிஞ்சு ஃபைனல் பிரிண்ட் வர்ரதுக்கு முன்னாடியே யாஷ்ஜீ திடீரென இறக்க, யாஷ் சோப்ராவோட கடைசி படம்ங்குற டைட்டில் வேற சேர்ந்துடுச்சு. இங்க படம் ரிலீஸ் முதல் நாள் முதல் ஷோவுக்கு முதல் ஆளா போய் நின்னுட்டேன். இனிமே படம் எப்பிடின்னு பார்க்கலாம்.

காதலை பிரிஞ்சு வாழ்றதும், தினம் தினம் செத்து பொழைக்கறதும் ஒண்ணுதான். நம்ம காதலிக்கறவங்க நல்லா இருக்கனும்கறதுக்காக பிரிஞ்சு வாழறதுக்கு பதிலா பேசாமா பினாயில வாயில ஊத்தி கொன்னுடலாம். இவ்வளவுதான் படத்தோட கதை. இந்த கதையை வச்சிக்கிட்டு ஆதித்யா சோப்ரா எழுதியிருக்கற திரைக்கதை முன் பாதி அற்புதம், "கடவுளுக்கு சத்தியம் பண்ணி பிரியற ஒரு காதல்" ன்னு ஒரு சின்ன லைன வச்சி ரொம்ப கன்வின்சிங்கா ஒரு திரைக்கதை எழுதியிருக்காரு, ரெண்டாவது பாதி, தொண்ணூறுகளின் மனம் சார்ந்த காதலுக்கும், ரெண்டாயிரங்களின் உடல் சார்ந்த காதலுக்கும் இடையிலான வித்தியாசம், முக்கோண காதல், காதல் தோல்வி, பெர்போர்மான்ஸ் ஸ்கோப்ன்னு ஏகப்பட்ட விஷயங்கள் இருந்தும் அம்னீசியா, நினைவு திரும்பி வரவழைக்கும் நாடகம்ன்னு 1980 சமாச்சாரத்த தொட்டு திரைக்கதை அமைச்சது படத்தோட நாம ஒன்றிப்போறத கொஞ்சம் கஷ்டமானதா ஆக்கிடுது. தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே, வீர்-சாரா, ரப் னே பனாதி ஜோடி, போன்ற படங்களை எழுதிய ஆதித்யா சோப்ரா இந்த அதர பழைய நாடகத்த தொட்டது கொஞ்சம் வருத்தம் தான், ஆனாலும் பெர்போர்மன்சும், யாஷ் சோப்ராவின் இயக்கமும், ஆதித்யா சோப்ராவின் வசனங்களும் பெருமளவு அதை ஈடு செஞ்சுடுது.


ஷாரூக் கான் ரொம்ப இளமையா இருக்காரு, ஒரு பணக்கார பொண்ணு தினக்கூலிய லவ் பண்ணுவாளான்னு யாருக்காவது டவுட்டு வந்தா அந்த தினக்கூலி இந்தாளு மாதிரி இருந்தா பணக்கார பொண்ணு என்ன தேவலோக ராணியா இருந்தாலும் லவ் பண்ணுவான்னு சொல்ற அளவுக்கு, அவருதான் தி கிங் அப் ரொமான்ஸ்ன்னு மறுபடியும் நிரூபிச்சிருக்காரு. ஆர்மி ஆபிசர் சமர் ஆனந்தா இருக்கட்டும், லண்டன்ல பஞ்சாபி பாட்டு பாடி ஆடுற தெருப்பாட்டு கலைஞரா இருக்கட்டும், ஹோட்டல்ல கொச்சை இங்கிலீஷ்ல பேசி சிரிக்க வைக்கற வெயிட்டரா இருக்கட்டும், குறிப்பா அனுஷ்கா ஷர்மா பந்தயம் கட்டிட்டு ஆத்துல எறங்கி குளிர்ல நடுங்கரப்போ காப்பாத்துற காட்சியிலா இருக்கட்டும், ஷாருக் கான் King Khan தான். ரொம்ப ஜாலியான ஒரு முகம், ரொம்ப இறுக்கமான போரிங்கான ஒரு முகம், ரெண்டயுமே செமயா வெளிப்படுத்தியிருக்காரூ, (ரப் னே பனாதி ஜோடி படத்துல ரெண்டு பாத்திரமும் ரெண்டு எக்ஸ்ட்ரீமா இருக்கும், அதையே சூப்பரா பண்ணியிருப்பாரு, இதுல ரெண்டும் ரொம்ப சட்டிலா இருக்கும், இத ரொம்பவே அற்புதமா தூள் பண்ணியிருக்காரு)

கத்ரீனா கைப், முதல் முறையா முழு நீள ரொமாண்டிக் படத்துல நடிச்சிருக்காங்க, லண்டன்ல வாழ்ற, தம் அடிக்கற, எனக்கு இந்திய மாப்ள வேணாம், அவங்க எல்லாம் கருப்பா இருக்காங்கன்னு ஜீஸஸ் கிட்ட வேண்டிக்கற, ஆனா அதே நேரம் இந்திய பண்பாடு விட்டுப்போகாத பொண்ணா கன கச்சிதமா பொருந்தி இருக்காங்க, இது வரைக்கும் ஒரு கிளாமர் டோலா மட்டுமே படத்துல வந்திட்டு போனவங்க, முதல் முறையா தன்னாலும் நடிக்க முடியும்ன்னு காட்டி இருக்காங்க, அந்த வகையில சுப்பர்.

ராப் னே பனாதி ஜோடி படத்துல பார்த்த அனுஷ்காவுக்கும்,  இதுக்கும் நூறு வீத வித்தியாசம். அந்த பாத்திரத்துக்கு அப்படியே நேர் எதிரா, மேக் அப் - பிரேக் அப் கலாசார இன்ஸ்டன்ட் காதல் உலகத்துல வாழுற, அடிக்கடி இங்கிலீசுல கெட்ட வார்த்த பேசிக்கற நவ நாகரிக பொண்ணா ரொம்ப கான்வின்சிங்கா இருக்காங்க. ப்ரீதி-ராணி, கரீனா-பிரியங்கா வுக்கு அப்புறமா தீபிகா-அனுஷ்கா தான் அடுத்த பாலிவுட் கிளாமர் கம் அக்டிங் ஹீரோயின்ஸ் ஜோடின்னு அடிச்சு சொல்றாங்க.

ரஹ்மான் சாரோட பின்னணி இசை ஒரு ரொமாண்டிக் படத்துக்கு உரிய விதத்துல இருக்கு. திரையில தெரியற காட்சி கண்ணுல தெரியுதா, காதுல தெரியுதான்னு புரியாத அளவுக்கு பின்னணி இசையும் ஒளிப்பதிவும் போட்டி போட்டுக்கிட்டு இருக்கு படம் முழுவதும். பாடல்கள் கேட்டதும் பிடிக்கும் ரகம் கெடயாது. ஆனா படம் பார்த்ததுக்கு அப்புறம் இருந்து இந்த ஒரு வாரமா ஜப் தக் ஹேய் ஜான் பாடல்கள்தான் கேட்டுக்கிட்டே இருக்கேன். சல்லா, சான்ஸ், ஹீரு, இஷ்க் சாவா, ஜியாரே எல்லாமே அற்புதம்.

இயக்குனர் யாஷ் சோப்ரா, தனக்கே உரிய பாணியில, ஒரு காதல் கதைய, ஆனா இன்றைய இளைஞர்களையும் கவரும் வகையில இயக்கி இருப்பது, அதுவும் தனது என்பதாவது வயசுல இவ்வளவு இளமையா ஒரு படத்த இயக்கியிருப்பது வியந்து பார்க்க வைக்குது. சமீபத்திய இந்தி படங்கள் எல்லாமே கொஞ்சம் மேற்கத்தைய கலாசாரத்தையும், முறை தவறிய காதல்களையும் மையப்படுத்தி வரும்போது, 90 களின் அதே பழைய காதல் கதையா கொஞ்சமும் சுவாரஷ்யம் குறையாமல் கொடுத்திருப்பது யாஷ் சோப்ராவின் அனுபவத்தை சொல்கிறது. இனிமேல் "எ யாஷ் சோப்ரா ரொமான்ஸ்" பார்க்க முடியாமல் போகுமே என்கிற ஏக்கம் எழுவதை ஏனோ தவிர்க்க முடியவில்லை.

ஜப் தக் ஹேய் ஜான் - A Yash Chopra Romance Dressed in Modern Outfits.

டிஸ்கி: என்னங்க இது? பதிவ எழுதி பப்ளிஷ் பண்ண பிறகு , திடீர் திடீர்ன்னு காணமா போகுது? "An error occurred while trying to save or publish your post. Please try again. Ignore warning"  ன்னு வருதே? 

Sunday, November 11, 2012

இந்திய சினிமாவின் நடன ஜாம்பவான்கள் : வீடியோ பதிவு/பகிர்வு

ஆடலும் பாடலும் இந்திய சினிமாவின் ரத்தத்தில் ஊறிப்போன ஒன்று. நாட்டிய பேரொளியில் தொடங்கி சாந்தனு, அதர்வா வரையில் நம்மை நடனத்தால் கட்டிப்போட்டவர்கள் பலர். கமல் ஹாசன், சிம்ரன், மாதுரி தீக்ஷித், கோவிந்தா, பிரபுதேவா, லாரன்ஸ் போன்ற பல காலத்தால் அழியாத நடனக் கலைஞர்களை கண்டது இந்த இந்திய சினிமா. இன்றைய காலகட்டத்தில் சிறந்த சினிமா நடனக் கலைஞர் யார் என்பது பல இடங்களில் ஒரு போட்டியாகவே நடந்து கொண்டிருக்கிறது. என்னை கவர்ந்த சிலரது நடனங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 

இளைய தளபதி:

ஷஹீத் கபூர்: 


ஹ்ரித்திக் ரோஷன்:


அல்லு அர்ஜுன்:


ஜூனியர் NTR:

ஸ்ரேயா சரண்:


லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்:




டிஸ்கி 1: சிம்பு, தனுஷ், பரத், ஜெயம் ரவி, வினீத், ரஹ்மான், பிரசாந்த், அர்ஜுன்,  நிதின், ராம், அனுஷ்கா ஷர்மா (இந்தி), இலியானா இன்னும் பல பேர் பட்டியலில் விடுபட்டிருக்கலாம். எல்லாரோட வீடியோவும் போட்டா அப்புறம் யூடியூப் எதுக்கு இருக்கு?

டிஸ்கி 2:  நெஞ்சுக்குள்ள ஒம்ம முடிஞ்சிருக்கேன் ரஹ்மான் பின்றாருப்பா....


விஷ் யூ ஆல் ஹாப்பி தீபாவளி!!

Monday, October 29, 2012

சின்மயியும் இணைய சுதந்திரமும்


கடந்த சில நாட்களாக வலைப்பூக்களில் எரியும் ஒரு பிரச்சினை இந்த சின்மாயி விவகாரம். இரு தரப்புக்கும் எதிராகவும், ஆதரவாகவும் பல பதிவர்களும், ஜாம்பவான்களும் பல பதிவுகள் இட்டாகிவிட்டது. இந்த பிரச்சினையின் அடிப்படை பற்றிய போதிய புரிந்துணர்வு என்னிடம் இல்லை. எனவே யார் சரி, யார் தவறு, அல்லது எது நியாயமானது போன்ற அதி புத்திசாலித்தனமான கருத்துக்களை நான் சொல்லப்போவதும் இல்லை. ஆயினும் நானும் ஒரு ப்ளாக்கர் என்கிற வகையில் எனக்கும் இது தொடர்பான சில கருத்துக்கள் இருக்கு, அது பற்றிய ஒரு பதிவே இது.

சின்மயி ஒரு சிறு பிள்ளைத் தனமான பிரபலம். சினிமா பிரபலம் என்கிற வகையில் இருப்பவர், பொது வெளியில் தனது குழந்தை தனமான கருத்துக்களை முன்வைக்கிறார். சிலர் அவற்றை கவனிக்காது விட்டு விடுகிறார்கள், சிலர் எதிர்வினை ஆற்றுகிறார்கள். அது அவரவர் எண்ணத்தை பொறுத்தது, அதில் குறை கூற நான் விரும்பவில்லை. சினிமாவுடன் தொடர்புடையவர்கள் சமூக, அரசியல் பிரச்சினைகளில், ஆழ்ந்த ஞானமோ, தெளிவான கருத்துக்களோ அல்லது போதுமான தெளிவோ கொண்டிருக்கவேண்டும் என எதிர்பார்ப்பது தவறானது அல்ல, ஆயினும் அவர்கள் அனைத்து விடயத்திலும் அக்கறை எடுக்கவேண்டும், கருத்து சொல்லவேண்டும் என எதிர்பார்ப்பது நியாயமானதும் அல்ல. பிரபலங்களை அவர்கள் துறை சார்ந்து மட்டுமே நோக்க வேண்டும், சின்மயி நல்லா பாடடுறாரா? நல்லா பின்னணி குரல் கொடுக்கறாரா அவ்வளவுதான், அதையும் தாண்டி சென்சிடிவ்வான விடயங்களில் அவரது பங்களிப்பு எவ்வாறு இருக்கறது, நாங்க ட்விட்டரில் ஒரு போராட்டம் நடத்துறோம் ஆதரவு தா எனக் கேட்பது பொருத்தமானதல்ல.


தவறான கருத்தாயினும் தனது சுய கருத்தினை முன்வைக்கும் சுதந்திரம் ஒருவருக்கு இருக்கிறது. ப்ளாக்கர், ட்விட்டர், பேஸ்புக் இன்னும் இதர விதர சமூக வலைத் தளங்கள் நமக்கு அளித்திருக்கும் பெரும் கொடை அது. அதே நேரம், தனக்கு போதிய அறிவு இல்லாத விடயத்தில் கருத்து தெரிவிக்காது இருக்க வேண்டிய பொறுப்பும் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது, இல்லை அக்கருத்துக்களை குறைந்த பட்ச நாகரீகத்தோடு முன்வைக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு இருக்கிறது. சென்சிடிவ்வான விடயங்களில் கருத்துச் சொல்லும் போது வரக்கூடிய எதிர்வினைகளை கையாளும் மனோ பக்குவமும், கருத்து மோதல்கள் எழும்போது நாகரீகத்தை கடைப்பிடிக்கும் அடிப்படை அறிவும் அவசியமாகிறது. இவை இல்லாத விடத்து கருத்துக்களை தவிர்த்துக் கொள்வது கடமையும் ஆகிறது. உனது கருத்து தவறானது, அதை முன்வைக்கும் உரிமை உனக்கு இல்லை என நாம் வாதாட போனால் அது ஒரு வகை பாசிசமே. தவறான கருத்துக்கள் முன்வைக்கப் படாத விடத்து, அவற்றை திருத்திக் கொள்வதற்கான வாய்ப்பும் மறுக்கப் படுகிறது. பரந்து பட்ட இந்த இணையவெளியின் அவசியமும் அற்றுப் போகிறது. அந்த அடிப்படையில் யார் வேணுமானாலும், (சில விதி விலக்குகள் தவிர) என்ன வேணுமானாலும் பேசலாம், அதுதான் கருத்துச் சுதந்திரம்.

ஆனால் எப்படி வேணும்னாலும் பேசலாம் என்பது கருத்துச் சுதந்திரம் கிடையாது. அது ரவுடியிசம், அல்லது தாதாயிசம். இதுவே இன்று தமிழ் சமூக வலைத்தளங்களில் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு சென்சிடிவ் விடயம் அல்லது ஒரு சமூகம் தொடர்பான கருத்தினை முன்வைக்கும்போது எப்படி முன்வைக்கவேண்டும் என்கிற அடிப்படையை சின்மயி காணத்தவறி விட்டார். அதை எதிர்க்கும் போது அதை எவ்வாறு எதிர்க்கவேண்டும் என்கிற அடிப்படையை எதிர்பவர்களும் காணத் தவறி விட்டார்கள். இருவரும் செய்தது மிகப்பெரிய தவறு. பொது வெளியில் ஒருவர் ஒரு கருத்தினை முன்வைக்கும்போது, ஒருவர் எதிர்வினை ஆற்றுகிறார் என வைத்துக் கொள்ளுங்கள், இப்போது முதல் கருத்துப் பரிமாறியவர் எதிர்வினையாளரின் பக்க நியாங்களை உணர்ந்து தனது கருத்தினை திருத்திக் கொள்ளும்போது, அல்லது எதிர்வினையாளருக்கு தன் பங்கு நியாங்களை எடுத்துரைக்கும் போது, அது கருத்து பரிமாற்றமாக அமைகிறது. 




அதே நேரம் ஒருவரது ஈகோ, ஆணவம், அகந்தை, மாற்றுக் கருத்துக்களுக்கு அனுமதியாளிக்காத தன்மை போன்ற தனிப்பட்ட இயல்புகள் தலை தூக்குமிடத்து அது கருத்து மோதலாக மாறுகிறது. இரு சாராரும் இவ்வகையான தனிப்பட்ட இயல்புகளை கொண்டிருக்கும் இடத்து அந்த கருத்து மோதலானது தீவிரம் அடைந்து வசை பாடல்களாகவும், யாருக்கு அதிகம் கெட்ட வார்த்தை தெரியும் என்பதை பொது வெளியில் பரீட்ச்சித்துப் பார்க்கும் குழந்தை சண்டையாகவும் மாறி விடுகிறது. இதில் ஒருவர் பிரபலமாக இருந்துவிட்டால், பொது வெளியில் கெட்ட வார்த்தை பேசிக்கொள்வதர்க்குப் பதில் அடுத்தவர் சார்ந்த சமூகத்தை அல்லது பிற விடயங்களில் அடுத்தவர் கொண்டிருக்கும் கருத்துக்களை தாக்க ஆரம்பிக்கிறார், பிரபலம் இல்லாதவர்களாயின் அடுத்தவர் குடும்பம், பிறப்புறுப்பு முதல் அனைத்தையும் வசை பாட ஆரம்பிக்கிறார். இதுவே சின்மயி, விவகாரத்தில் நடந்தது, சமீப காலமாக இணையத்தில் நடந்து வருவது. 

இங்கு ஏனைய, அரசியல், சமூக, சமய காரணிகள் சேருமிடத்து, அது குளுப்பிரச்சினயாகி, பின்னர் பொதுப்பிரச்சினயாக உருமாறி, சந்திக்கு வந்துவிடுகிறது. சம்பந்தப்பட்டவர்களின், அரசியல் பின்னணி போன்ற காரணிகள் இவ்வாறான பிரச்சினைகள் எவ்வாறு தீர்க்கப் படுகிறது என்பதில் செல்வாக்கு செலுத்துகிறது. அடிப்படையான கருத்தோ, கருத்து பரிமாற்றமோ முழுதாக மறைந்து பிரச்சினை வேறு பரிமாணத்தை பெறுகிறது. ஒவ்வொருவரும் சுய லாபம் தேடும் நோக்கில் பிரச்சினையை திரிப்பதும், நடக்கிறது. இவ்வாறான ஒரு சுதந்திரமே நாம் இன்று கருத்துச் சுதந்திரம் என்னும் போர்வையில் கொண்டிருப்பதும், காப்பாற்ற போராடுவதும். உண்மையில் கருத்துச் சுதந்திரம் என்பது நமக்கு கிடைத்த ஒரு வரப் பிரசாதம். அதை பேணிப் பாதுகாப்பது நாம் ஒவ்வொருவர் மீதும் உள்ள கடமை. பொது வெளியில் நாம் நமது சுதந்திரத்தை எவ்வாறு பயன் படுத்துகிறோம் என்பதே நாம் இன்னும் எவ்வளவு நாளைக்கு இந்த சுதந்திரத்தை அனுபவிக்கப் போகிறோம் என்பதை தீர்மானிக்கும். 



பின் குறிப்பு: 
இது கருத்துப் போராக மட்டுமே இருக்குமானால் ராஜனை ஆதரிக்க தோன்றிய போதிலும், அவரது ட்வீட்டுக்களின் ஸ்க்ரீன்சாட்டுகள் என சொல்லப்படுனவற்றை படிக்கும் போது அவருக்கு ஆதரவளிக்க மனம் மறுக்கிறது. அதற்காக இந்த விடயத்தில் அவர் மேல் மட்டுமே தவறு இருப்பதாக அர்த்தம் அல்ல, தனது பிரபல்யத்தை துஷ்பிரயோகம் செய்ததது மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த தமிழர்கள் மனதும் புண்படும்படியான குழந்தை தனமான கருத்துக்களை பொது வெளியில் பரப்பியது சின்மயி செய்த மிகப்பெரிய தவறு. அதிகார பலம் காரணமாக பிரச்சினையின் மையத்தையே திசை திருப்பப்பார்பதும் பெரும் தவறு. 

மேலும் படிக்க: 
சின்மயி கைது செய்யப்படுவாரா? - செங்கோவி 
ராஜனின் கைது ; கற்பிக்கப்படும் இணைய சுதந்திரம்? -ஜீ
ட்விட்டர்ஸ் கைது (ராஜன் லீக்ஸ்) - சொல்லும் பாடம் என்ன ? - ராஜ்

Monday, October 22, 2012

மாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]


ஒரு வாரமா எஸ்கேப் ஆகிட்டு இருந்த நான் போன வெள்ளிக்கிழமை நண்பர் ஒருவரின் வற்புறுத்தல் காரணமாக மாற்றான் படம் பார்க்கவேண்டிய துர்பாக்கிய நிலைமைக்கு ஆளானேன். நான் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம் என்னும் நல் எண்ணத்தில் கொஞ்சம் லேட்டா மாற்றான் பற்றிய எனது பார்வை இதோ உங்களுக்காக (சாவுடா...)

மாற்றான் படம் பற்றி ஒரு வரியில் சொல்லனும்னா.....

முதல் பாதி முற்று முழுதாக சூர்யா ரசிகர்களுக்கான விருந்து. இன்டர்வலுக்கு 10 நிமிடம் முதல் இருந்து இண்டர்வலுக்கு அப்புறம் வரும் 10 நிமிடங்கள் பேமிலி ஆடியன்சுக்காக. அதுக்கப்புறம் வருவது எல்லாம், இனிமேலும் இதுமாதிரியெல்லாம் படம் பார்க்க வருவீங்காளான்னு,  வந்த எல்லாருக்கும் சேர்த்து எலிக்கடி ட்ரீட்மென்ட். 

சூர்யா நல்லா நடிக்கறாரு, எந்த ரோல் குடுத்தாலும் நடிக்கரான்டான்னு தெரியாமா அசால்டா நடிக்கறாரு. ஒட்டிப்பிறந்த இரட்டையர்களாக பாடல் காட்சி, சண்டை காட்ச்சி அவுங்களுக்குள்ளேயே கட்டிப் புரண்டு சண்ட போடுறதுன்னு எதைக் குடுத்தாலும் கான்வின்சிங்கா பண்னறாரு, ஆனா அந்த ஒரே காரணுத்துக்காக அவர வச்சு இந்த இயக்குனர்கள் பண்ணற பரிசோதனையில செத்த எலி மாதிரி ஆகுறது அவரு மட்டுமில்ல, படம் பார்க்க போற நாமளும்தான்.





ஜெனெடிக் இன்ஜினியரிங், GM foods, விளையாட்டு வீரர்கள் ஊக்கமருந்து பாவிக்கறது, முடிக்கப்படாத விஞ்ஞான ஆராய்ச்சிகள பணம் சம்பாதிக்கரதுக்காக பாவிக்கறது, ரெட்டை சகோதரர்கள் போட்டி, பாசம் அது இது என ஒரு ஆயிரம் விசயத்த படத்துல சேர்த்து "என்னங்கடா உங்க கத?" ன்னு நம்மள மண்ணடைய பிச்சுக்க விட்டிருக்காரு இயக்குனர். எப்பவுமே இந்த "சராசரிகளுக்கான சராசரி சினிமாவுல" (உபயம் பிலாசபி) லாஜிக்கோ, விவாத கருவோ, கொள்கையோ பார்க்காத நமக்கு இந்த மசாலாவ எப்படி பரிமாறி இருக்காங்கன்னு பார்த்தா, கொஞ்சம் குழப்பம்தான் மிஞ்சுது. எது பிரதான கதைங்கற குழப்பம் நம்மள விட ஆனந்துக்கு அதிகமா இருந்திருக்கும்ன்னு தோணுது. ரெண்டாம் பாதி எனக்கு என்னமோ அயன் படத்த மறுபடியும் (ரீவைண்ட் காட்சிகள் இல்லாம) பார்குற பீலிங் தான். என்ன ஒரு வித்தியாசம் அது போர் அடிக்க முதல் முடிஞ்சிடுது, இது போர் அடிச்சு, போதை ஏறி, அப்புறம் அது தெளிஞ்சதுக்கப்புரமும் ஓடிக்கிட்டு இருக்கு. 

விசுவல் எபெக்ட், கிராபிக்ஸ் டிப்பார்ட்மென்ட் நல்லாவே வேலை செஞ்சி இருக்காங்க, ஒரு ரெண்டு காட்சிகள் தவிர ஒட்டு வேலைப்பாடு வெளியில தெரியல. (தசாவதாரம் க்ளைமாக்ஸ் சண்டை காட்சி எடுத்தவங்க கிட்ட கொஞ்சம் அட்வைஸ் கேட்டிருக்கலாம்). கஷ்டமான முதல் பாதி பாஸ் மார்க் வாங்குறதுக்கு முழுக்காரணமும் இந்த டீமும் சூர்யாவும்தான். ஹாரிஸ் ஜெயராஜ் கொஞ்சம் மெருகேறி இருக்காரு, வேகத்தடையா பாட்டுக்கள் இல்லை, பின்னணி இசை ஓகே. அந்த க்ளைமாக்ஸ் டங்கு டப்பா மியூசிக் தவிர. (அண்ணே ரஹ்மான் சிவாஜி படத்துக்கு அந்த இன்கம் டாக்ஸ் சீனுக்கு அந்த ம்யூசிக் போட்டாருன்னு நீங்க அயன்ல போட்டீங்க ஓகே, இன்னும் விடாம கண்டினியு பண்றீங்களே ஏன்?). மற்றும் படி ஹாரிஸ் படத்துக்கு ஒரு பிளஸ் தான். ஒளிப்பதிவாளர் திறமையானவர்தான், இரட்டையர் காட்சிகள், தீயே தீயே பாடல் இன்னும் பல கஷ்டமான இடங்களில் லைட் மாட்ச்சிங், கலர் மாட்சிங், இன்னும் இதர விதரங்கள் எல்லாம் பக்காவா இருக்கு, அவரால முடிந்த அளவு கேரி பண்ணி இருக்காரு, ஆனா பல இடங்களில் குருவி தலையில பனங்காய வச்சது தெளிவா தெரியுது. கஷ்டமான இடங்களில் ஸ்கோர் பண்ணறவரு லேசான இடங்களில், குறிப்பாக ஒத்த சூர்யா வரும் லாங் ஷாட்களில் (கால் முளைத்த பூவே பாடல்) கோட்டை விட்டிருக்கார். எல்லாமே அவுட் ஆப்  போகஸ். 


இயக்குனர் பல இடங்களில் ப்ரீ பிளானிங்ல அசத்தி இருக்காரு, நிறைய கஷ்டமான ஷாட் எல்லாம் யோசிச்சது மட்டுமில்லாம அத எப்படி திரையில கொண்டுவரலாம்ன்னு ரொம்பவே மெனக்கெட்டு இருக்காரு. அதுக்கு கண்டிப்பா பாராட்டுக்கள். ஆனா போஸ்ட் ப்ரோடக்ஷன்ல கோட்டை விட்டுட்டாரு. படம் ரப்பர் மாதிரி இழுவையா இருக்கறது கொஞ்சம் கூடவா உங்க கண்ணுக்கு படல சார்? (படம் திரைக்கு வரும் முன் ஒரு முழு படமா தேவையான காட்சி எது தேவையில்லாத காட்சி எதுன்னு பார்க்காம படம் ரிலீஸ் பண்ணி விமர்சனம் பார்த்துட்டு ட்ரிம் பண்றதுன்னா நீங்க எதுக்கு, எடிட்டர் ஒருத்தரே போதுமே). சூர்யா இல்லாம படத்துல வரும் காட்சிகளில் சச்சின் கடேக்கார் காட்சிகள் தவிர வேறு எதுவுமே கான்வின்சிங்கா இல்லை, எல்லாமே ரெண்டாம்பு பசங்க ஸ்டேஜ் டிராமா போட்ட கணக்கா செயற்கையா ஒட்டாம இருக்கு. இதனால்தான் சூர்யா நோ சொல்லியிருந்தா இந்த படத்த பண்ணி இருக்கமாட்டேன்னு சொன்னீங்களா? (நானும் எதோ இப்போ அதுதான் பாஷன், அதனாலதான் சொல்றீங்கன்னு நினைச்சேன்).

காஜல் அகர்வால், ரொம்ப குண்டாகி, வயசாகி ஆன்டி மாதிரி இருக்கா. டிரெஸ்ஸிங் சென்ஸ் கொஞ்சம் கூட சரி இல்ல, இன்னும் ஸ்டாண்டர்ட் எக்ஸ்பிரஷன்ஸ் எதையுமே மாத்தல. செம பிகரா இருக்கப்போ தெலுங்கு படமா நடிச்சிட்டு மொக்க ஆன்டியா ஆனதுக்கப்புறம் மட்டும் ஏந்தான் தமிழ் படம் நடிக்க வாராங்கன்னு தெரியல. (இந்த பொண்ணுக்காக நான் டார்லிங், பிருந்தாவனம், சாந்தமாமா, ஆர்யா 2 ன்னு பல தெலுங்குப்படம் பார்த்தேன்னு வெளியில சொன்னா என்ன கேவலமா பார்க்க மாட்டாங்களா?)

சூர்யா, எத்தன நாளைக்குத்தான் இவரு நல்லா நடிகாராருன்னு மட்டுமே சொல்லிக்கிட்டு இருக்கறது. அகிலன் கரெக்டர் செம, முன்பாதியில ரொம்ப கான்வின்சிங்கா அகிலன், விமலன்னு வித்தியாசம் காட்டின நீங்க ஏன் ரெண்டாவது பாதியில கோட்ட விட்டுட்டீங்க? அகிலன் மட்டும் உசிரோட இருந்தா படம் முழுக்க நீங்க அகிலன தானே கொன்டினியு பண்ணியிருக்கணும் அது ஏன் பாதியில விமலனா மாறி, அப்புறம் சூர்யாவா மாறிடுது? ஒரே ஆள்தான் மிச்சமிருக்கான் எப்படி பண்ணினாலும் ஒண்ணுதான்னு நினைச்சிட்டீங்களா? 

திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தி, படத்துல இருக்கற படு மொக்க காட்சிகள் இல்லாம பண்ணியிருந்தா ஒரு ஜாலியான சினிமா கெடச்சிருக்கும். படத்தோட மெயின் கதை என்னாதுங்குற குழப்பத்துனால பல நல்ல காட்சிகள் இருந்தும் வீரியம் இல்லாம இருக்கு. தேவையே இல்லாத பல மொக்க காட்சிகளுக்கு அதிக நேரம் செலவழிக்கப்பட்டு இருக்கு. அதெல்லாம் தவிர்த்து விட்டு பார்பதா இருந்தா படம் ஓகே. (ஒரு வேளை அந்த 23 நிமிஷம் ட்ரிம் பண்ணின புதிய படம் ஓகே வா இருக்கலாம்).
மற்றும் படி மொக்க படம் கெடயாது, சூப்பர் படமும் கெடயாது.

நம்ம ரேட்டிங்: 6/10.
டிஸ்கி: மெயின் ஸ்ட்ரீம் படங்கள்ல கதை என்கிற வஸ்துவ தேடுற கெட்ட பழக்கம் இல்லாததனால அத பத்தி எதுவும் பேச தேவையில்லைன்னு நினைக்கிறேன். படம் ரொம்ப நீளமா இருக்கறது எடிட்டர் தவறா, இயக்குனர் தவறான்னு தெரியல அதனால எடிட்டிங் பத்தியும் பேசல.


டிஸ்கி: கொடுத்த காசுக்கு படம் நஷ்டமில்ல. சூர்யா, டெக்னாலஜி, விசுவலைஷேஷனுக்காக ஒரு வாட்டி பார்க்க வேண்டிய படம், DVDல பார்க்குறது பெட்டர், போர்வார்ட் பட்டன் கைல இருக்கும்ல.



தொடர்புடைய பதிவுகள்

சூர்யா என்கிற சரவணன்: பிறந்தநாள் ஸ்பெஷல் பதிவு
ஏழாம் அறிவு - திரை விமர்சனம் (செமி போஸ் மார்டம்)
குள்ளப்பயலும் அவனது குள்ள நரித்தனமும்: ஒரு குட்டி கதை  
சூர்யாவின் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி: ஒரு பார்வை 

Wednesday, September 19, 2012

நாங்க நினைப்பது என்னன்னா, ஆனா நடப்பது என்னன்னா!!

வாழ்க்கைல  எப்பவுமே நாங்க நினைக்கிற விடயங்களுக்கும், ஆனா உண்மையா நமக்கு நடக்குற விடயங்களுக்கும்   இடையில் பாரியளவிலான வித்தியாசங்கள் இருக்கும் . அது போன்ற சில விடயங்களின் தொகுப்பே இப்பதிவு.....


1.  நாங்க யாருன்னா: யாரவது ஒரு  பிரபல நடிகரின் அதி தீவிர ரசிகர்கள்.

மேட்டர் என்னன்னா: நம்ம தலீவர் சமீபத்துல நடிச்ச எல்லா படங்களும் படு-மொக்கை படு-தோல்வி படங்கள். நம்ம தலீவர் அடுத்த தீபாவளிக்கோ, பொங்கலுக்கோ ஒரு படத்துல தீவிரமா(!!)  நடிச்சிகிட்டு இருப்பாரு. ஒலக மகா டைரக்டர் அந்த படத்த எடுத்துகிட்டு இருப்பாரு. அந்த படத்தோட புரோட்யூசர்  படத்துக்கு செமையா பில்டப் குடுத்து ப்ரோமோஷன் பண்ணிக்கிட்டு இருப்பாரு.

நாங்க நினைப்பது என்னன்னா: இந்த படம் மட்டும் வரட்டும், நம்ம தலீவர் ரேஞ்ஜே மாறபோகுது. கோலிவுட்ல நம்ம தலீவர்க்கு இருக்குற   அத்தன போட்டி நடிகர்களும் ஒட்டுமொத்தமா ஒம்போது நாளைக்கு கக்கூஸே கதின்னு கழிச்சிகிட்டு இருக்க போறங்கெ. எந்திரன், 3-இடியட்ஸ்ன்னு அத்தன பட கலெக்ஷன் ரெக்கார்ட்ஸையும் நம்ம தலீவர் படம் ஒரே வாரத்துல பீட் பண்ணிரும். இந்த படத்துக்கு பிறகு  தலிவர்க்கும் அரசியல்ல ஒரு நிலையான இடம் கெடைச்சிடும். நாங்களும் பொண்டாட்டி கொழந்த குட்டின்னு அப்புடியே செட்டில் ஆயிடலாம்.

ஆனா நடப்பது என்னன்னா: இதுக்கு முன்னாடி நம்ம தலிவர் நடிச்ச அந்த நாலு படு-மொக்கை படு-தோல்வி படங்களும் எவ்வளவோ மேல். இந்த புது படம் அந்த நாலத்தயும்  விட படு மொக்கையா, படு கேவலமா, நாறத்தனமா இருக்கும்.

*************************************************
2. நாங்க யாருன்னா:  சாப்ட்டுவேரு புடுங்குற கம்பேனிலயோ இல்ல அது மாதிரி வேற எதாவது ஒக்காந்துகிட்டே வேலை செய்ற 27,28+ வயசு இளைஞர்கள்.

மேட்டர் என்னன்னா: நாம ஒக்கந்துகிட்டே வேல செய்றோமா, அப்புறம் தினம் நாலு வேளை புல் மீல்சும் , இடையிடையில ஸ்னேக்ஸும் திங்கிறோமா, இப்ப நமக்கு லேசா இள-தொந்தி(தொப்பை) வந்துருக்கு.

நாங்க நினைப்பது என்னன்னா: இந்த தொந்திய குறைக்கிறதுக்காக (மறைக்கிறதுக்காக)  ஒலகத்துல இருக்குற அத்தன தில்லாலங்கடி வேலையையும் செய்வோம். காத்தாலயே ஜாகிங், வாக்கிங் போக ட்ரை பண்ணுவோம். கம்பெனில ஜிம் இருந்தா அதுக்கு போகயும் ட்ரை பண்ணுவோம். பக்கத்து தெருல இருக்குற சூப்பர் மார்க்கட்டுக்கு நடந்தே போவோம். அப்புடி நடந்து போனா, நம்ம தொந்தி அடுத்த நாளே கரைஞ்சிடும்னு நெனச்சுப்போம். பிரபல சேனல்கள்ள மிட் நைட்ல போடுற டெலி-பை புரோகிராம்ஸ எல்லாம் ஒன்னு விடாம பார்த்து அதுல சொல்ற  நம்ம பட்ஜெட்டுக்கு ஏத்த எக்ஸர்ஸைஸ் ஈக்விப்மென்ட எல்லாம் வாங்கிருவோம். அப்புடி அதுல எக்ஸேர்ஸைஸ் செஞ்சா ஒரே  மாசத்துல சல்மான்கானுக்கு போட்டியா  சிக்ஸ் பேக்ஸ்கோ, இல்ல அமீர்கானுக்கு போட்டியா எயிட்  பேக்ஸ்கோ கொண்டுவந்துரலாம்ன்னு நெனச்சிக்கிட்டு இருப்போம். எக்ஸேர்ஸைஸ் செஞ்சி முடிச்சிட்டு யாரும் இல்லாதப்போ, கண்ணாடி முன்னாடி ஷர்ட்ட தூக்கி தொந்திய அளந்து பார்போம். 2mm கொரஞ்சிருக்குன்னு நெனச்சுப்போம்.

ஆனா நடப்பது என்னன்னா: மேல சொன்ன ட்ரை பண்ணுற சமாச்சாரங்க எல்லாம் ட்ரை பண்ற லெவல்ல தாண்டியே இருக்காது. வாங்கிபோட்ட எக்ஸேர்ஸைஸ் ஈக்விப்மென்ட்ஸ நம்ம வீட்டு பொம்மனாட்டிக துணி காய போடுறதுக்கு யூஸ் பண்ணிக்கிட்டு இருப்பாங்க. நாங்க 35+ வயசுல  "ஜி" படத்துல வர்ற தல-ய மாதிரி ஆகுறதையும் , 45+ வயசுல தமிழ்நாட்டு போலீஸ்ல சேர்றதுக்கான தகுதிகள உருவாக்கிக்கிறதயும் யாராலுமே தடுக்க முடியாது.

*************************************************



3.  நாங்க யாருன்னா: தொழில் செய்துகொண்டே பதிவெழுதும் பதிவர்கள்

மேட்டர் என்னன்னா: நம்ம ஆபிஸ்ல நமக்கு மேல இருக்குற மேனேஜர்/சூப்பர்வைசர்/ஹெட்னுன்னு யாராவது ஒரு மேலதிகாரி இந்த வாரத்துக்குள்ள முடிக்க சொல்லி நமக்கு பல ப்ராஜக்ட்ஸ் கொடுத்துருப்பாரு. எல்லா ப்ராஜக்ட்ஸ்க்கும் இன்னும் ரெண்டு நாள் டெட்லைனே இருக்கும். எப்புடிடா இத்தினி வேலையையும் ரெண்டே நாள்ல முடிக்கிறதுன்னு செம டென்ஷன்ல இருப்போம்.

நாங்க நினைப்பது என்னன்னா: இந்த டென்ஷன எல்லாம் குறைக்கிரதுக்கு ஒரு செம காமெடி பதிவு எழுதுனா மனசு ரிலாக்ஸ் ஆகிடும்னு நெனச்சிப்போம். தமிழில் சமகாலத்தில் பதிவெழுதும் தலைச்சிறந்த பின்நவீனத்துவவாதியான நம்மளோட பதிவுகள் ஏதும் சமீபத்துல வரலையேன்னு நமது வாசககோடிகள்   பீல் பணிகிட்டு இருப்பாங்களே, அவங்கள திருப்தி படுத்துறதுக்காகயேனும் ஒரு செம காமெடி பதிவு போடனும்னு நினைப்போம். ஏற்கனவே பிரபல பதிவரா இருக்குற நாங்க, இந்த பதிவ மட்டும் பப்ளிஷ் பண்ணிட்டா, விக்ரமன் பட ஹீரோ மாதிரி ஒரே நைட்ல பத்து லட்சம் ஹிட்ஸ்ங்குற நம்ம டார்கெட்ட அச்சீவ் பண்ணி, கேபிள்,சி.பி,உ.த அண்ணாச்சிகள் எல்லாரையும் தாண்டி  டாப் டென் தமிழ் பதிவர்கள்ள இடம்பிடிச்சிடலாம்ன்னு கன்போர்மா நெனச்சிப்போம்.


ஆனா நடப்பது என்னன்னா: நாங்க செம காமெடின்னு நெனச்சிட்டு எழுதுன போஸ்ட் வழக்கம் போலவே செம மொக்கையா இருக்கும். பதிவுலகத்துல நமக்கு தெரிஞ்ச , நம்ம மேல பரிதாப பட்டு வர்ற ஒன்னு ரெண்டு நண்பர்கள்ல தவிர வேற யாருமே நம்ம பிளாக் பக்கம் வந்துருக்க மாட்டாங்க. வழக்கம்போலவே  இந்த போஸ்ட்டுக்கும் 200 ஹிட்ஸ்க்கு மேல வராது. ஏற்கனவே இருக்குற வேல டென்ஷன்+இந்த டென்ஷன்னு செம காண்டாகி கம்ப்யூடர் முன்னாடி உட்காந்து ஸ்க்ரீனையே வெறித்து பார்த்துகிட்டு  இருப்போம். நாளைக்கு ஆபிஸ் போய் மேலதிகாரிக்கு என்னெல்லாம் பொய் சொல்லலாம்னு சீரியா ஒக்காந்து யோசிச்சிட்டு இருப்போம்.




*************************************************

தொடரலாம்....