Tuesday, November 29, 2011

காதலில் சொதப்புவது எப்புடி?

இந்த காதல் இருக்கே காதல், அது ஒரு வீணா போனதுங்க, காதல் இல்லாத ஒரு தமிழ் சினிமாவ பாக்க முடியாது, ஏன் இந்திய சினிமாவே கெடயாதுன்னு சொல்லலாம். இந்த உலகத்துல பிறந்த எல்லா ஜீவராசிகளும் பண்ணுற ஒன்றுதான் இந்த பாழாப்போன காதல். காதல்ன்னா என்னாங்குற டவுட்டே நமக்கு இன்னும் தீரல, ஆனா நெறைய காதல் பஞ்சாயத்து மட்டும் நம்ம கோர்ட்டுக்கு அடிக்கடி வருது. இதுல பஞ்சாயத்து பண்ணி மூக்க ஓடச்சுக்கரதுக்கு நாம என்ன விமலகாசனா, அதனால நம்ம நண்பர்கள் எல்லாருக்கும் சேர்த்து காதல்ல எப்புடி சொதப்புரதுன்னு ஒரு பதிவு போட்டு அவுங்க வாழ்க்கைல ஒளி ஏத்தி வைக்கலாம்ன்னு முடிவு பண்ணி எறங்குனதுதான் இந்த பதிவு.


காதல்ல சொதப்புறதுக்கான வழிகள் நெறயவே இருக்கு, ஒவ்வொன்னா சொல்றோம், நல்லா கேட்டுக்குங்க மக்களே...

பேமானியா இருந்துக்கிட்டு அம்பானி பொண்ணுக்கு ரூட் விடுறது: நம்ம தகுதிக்கு மீறி ஆசைப்பட கூடாது. காதல்ங்குறது இயல்பா வரணும், ஒரு பொண்ணோட அழகையோ அந்தஸ்த்தையோ பார்த்து நாமாக வலிந்து ஏற்படுத்திக்க கூடாது, அப்புடி ஏற்படுத்திக்கிட்டோம்னா அது நிலைக்காது. பண்ணையார் பொண்ணுங்கள சினிமாவுல வேணும்னா வேலகாரன் காதலிக்கலாம் நிஜத்துல அது செட் ஆகாது. ஒததான் விழும்...

மொக்க பிகருக்கு நூல் விடுறது (சப்ப பிகருக்கு இல்லீங்க மொக்க பிகருக்கு): நானும் எப்படியாச்சு லவ் பண்ணனும்ன்னு அடம்புடிச்சி நெறயப்பேர் மொக்க பிகருங்களுக்கு நூல் விடுவாங்க, அப்புறம் லேட்டா புரிஞ்சுக்கிட்டு குத்துதே குடையுதேன்னு அலறுவாங்க, நம்ம சிம்பு சொல்ற மாதிரி காதல நாம தேடி போகக்கூடாது, அதுவா நடக்கணும், நம்மள தலைகீழா போட்டு திருப்பனும். உச்சந்தலைல நச்சுன்னு கொட்டனும்.

மொக்கயா நாலு பிரண்ட்ஸ கூட வச்சிகிட்டு லவ் பண்றது: கூட இருக்கறவன் எப்படிப்பட்டவன்னு தெரிஞ்சுக்காம லவ் பண்ண கூடாது. காதல்னாலே மேட்டர முடிக்கறதுன்னு சில பேர் நெனச்சிட்டு இருப்பாங்க, அது வேலை வெட்டி இல்லாதவன் பண்றதுன்னு சில பேர் நெனப்பாங்க, காதலே ஆப்புதான்னு சிலபேர் நினைப்பாங்க, இப்படி நினைக்கரவங்கள கூட வச்சிட்டு லவ் பண்ணினா நமக்கு எந்த ஆபத்தும் இல்ல, ஆனா நாம லவ் பண்ணின பொண்ணு நடு தெருவுலதான் நிக்கும்.


நாட்டாமைக்கு ஆள் சேர்க்குறது: லவ்வுல என்ன பிரச்சின வந்தாலும் அத நாம தனியாளாதான் ஹான்டில் பண்ணனும் நாட்டாமைக்கு ஆள் புடிக்க கூடாது, இதுக்கு பல காரணம் இருக்கு. ஒன்னு மின்சார கனவு மாதிரி ஆகிடலாம், இல்லனா அந்த பொண்ணு லவ்வ கூட சொல்ல தைரியம் இல்லாதவன் நம்மள எப்புடி வாழ் நாள் முழுவதும் வச்சு காப்பாத்த போறான்னு யோசிக்கலாம், நாளைக்கு ஒரு பிரச்சின வந்தா நாட்டாம தலையும் சேர்ந்து உருளும்,அப்புறம் அவன் வீணா நம்மள முறைப்பான்.

தெய்வீக காதல்னு பீலா விடுறது: ஒரு காதலுக்கு அடிப்படையே காமம்தான், அப்புறம் என்ன தெய்வீக காதல்? எந்த விடயத்தையும் உண்மையோட பார்த்தாதான் அது நிலைச்சு இருக்கும், சும்மா தெய்வீகம் அது இதுன்னு பீலா விட்டா அது சீக்கிரமா புட்டுக்கும். காதல் பண்ணிட்டு அந்த பொண்ண என்ன மியுசியத்துல இருக்கற பொம்ம கணக்கா பாத்துக்கிட்டு இருக்கவா போறீங்க, அப்புறம் என்ன தெய்வீக காதல், மண்ணாங்கட்டி காதல்?

வெட்டி பந்தா காட்டுறது: லவ்வர இம்ப்ரெஸ் பண்றதா நெனச்சு வெட்டியா பந்தா காட்டுறது, அப்புறம் லவ் பண்ண ஆரம்பிச்சதும் அத கண்டின்யூ பண்ண முடியாம விட்டிடுறது, பந்தாவ நம்பி வந்தவனா ரிலேஷன்ஷிப் அங்கேயே கட், இல்லன்னா இவன் ஒரு ஏமாத்து பித்தலாட்டக்காரனோன்னு ஒரு சந்தேகம் வரும், அது நீண்ட காலத்துல பெரிய பிரச்சினையா வெடிக்கலாம். ரஜினிதான் சிகரெட்ட மேல தூக்கி போட்டு பிடிக்கணும், மைக் மோகனுக்கு அது தேவையில்லாத வேல.


முனியம்மாவ லவ் பண்ணிட்டு எமி ஜாக்சன் லெவலுக்கு வர்ணிக்கறது: சுமாரான ஒரு பிகர லவ் பண்ண வேண்டியது, அவள இம்ப்ரெஸ் பண்ணறேன் பேர்வழின்னு கிளியோபேட்ரா ரேஞ்சுக்கு கவிதயாலையே வர்ணிக்க வேண்டியது, இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி அவளுக்கும் நாமதான் உலக அழகியோன்னு ஒரு நெனப்ப வரவைக்க வேண்டியது. அப்புறமா அவ பந்தா தாங்க முடியலடான்னு பிரெண்ஸ்க்கிட்ட புலம்ப வேண்டியது, இல்லனா அவளே நாம எதுக்கு இந்த சப்ப பையன் கூட இருக்கனும்ன்னு நெனச்சு ஒரு அலெக்சாண்டர தேடிப்போனா சட்டி சுட்டதடான்னு பாட வேண்டியது, தேவையா இந்த மானங்கெட்ட பொழப்பு

ரெண்டு மூணு பொண்ணுக்கு ஒரே நேரத்துல நூல் விட்டுகிட்டு, மாறி மாறி உளர்றது: நெறைய அப்பாவிங்க, அப்புறம் சில அடப்பாவிங்க பண்ணுற தப்புதான் இது. சீரியஸா பண்றோமா விளையாட்டா பண்ரோமான்னே தெரியாம மூணு நாலு பொண்ணுக்கு மாறி மாறி நூல்விட்டுட்டு, இங்க அனுப்ப வேண்டிய மெச்செஜ அங்க அனுப்புறது, அங்க சொல்ல வேண்டியது இங்க சொல்றதுன்னு சொதப்பிக்கறது. சுள்ளானுக்கு எதுக்கு மன்மதன் வேல..

லவ்வர கூட வச்சுக்கிட்டு கேத்ரீனா கைப் பத்தி பேசுறது: இந்த பொண்ணுங்க இருக்காளுங்களே ரொம்பவே எக்கோ புடிச்ச கழுதைங்க(அது எக்கோவா ஈகோவா, #டவுட்டு). தப்பி தவறியும் இன்னொரு பொண்ணு ரொம்ப அழகுன்னு சொல்லி வீண் வம்ப விலைக்கு வாங்கிடாதீங்க, ரொம்பவே உஷாரா இருக்கணும். ஒருத்திய கூட வச்சுக்கிட்டு இன்னொருத்திய அறிவுன்னு சொன்னாலும் தாங்கிக்குவாளுங்க ஆனா அழகுன்னு சொன்னீங்கன்னு வைங்க, உடனே இல்லாட்டியும் ரெண்டு நாள் கழிச்சின்னாலும் ரிவீட்டு கன்பர்ம். 

பட்டினில இருந்தவன் பிரியாணி பொட்டலத்த பார்க்குற மாதிரி பொண்ண வெறிக்க வெறிக்க பார்க்குறது: காதலுக்கு அடிப்படையே காமம்தான்னு சொல்லிட்டோம், ஆனா அதுக்காக மட்டுமேதான் பண்றதுன்னா அதுக்குன்னே வேற நெறைய விஷயங்கள் இருக்கு. பொண்ணுனா பூப்போல பாத்துக்கணும், அத விட்டுட்டு விழுங்குறாப்போல பாத்தா எந்த பொண்ணுக்குதான் கூச்சம் வராது, கூச்சம் எரிச்சலா மாற நெறைய நாள் இல்லிங்க, அதனால பாக்குறப்போ கூட கொஞ்சம் ஜாக்கிரதையாவே பாருங்க.


நான் வெஜ் சாப்பிட்டிட்டு அத பிரெண்ட்சுங்க கிட்ட சொல்றது: லவ் பண்றப்போ அப்பப்போ சின்னதா நான் வெஜ் சாப்ட்ரதெல்லாம் சகஜம்தானே, அதுக்காக அத போயி பிரெண்ட்சுங்க கிட்ட சொல்லி ஒங்க வீரதீரத்த காட்டமுற்பட்டீங்கன்னு வைங்க, ரெண்டு சிக்கல் இருக்கு. ஒன்னு அந்த பொண்ண பத்தி அவங்க பார்வையே ரொம்ப தப்பா இருக்கும். அப்புறம் எப்புடி அந்த பொண்ண கட்டிக்கிட்டு பிரெண்ட்சுங்க முன்னாடி தைரியமா நிக்கறது? சீரியஸா தான் நீங்க லவ் பண்ணினாலும் ஆட்டோமெட்டிக்கா அது மேட்டர முடிச்சிட்டு கழட்டி விடுற லவ்வா மாறிடும். இல்ல நீங்க சொன்னது எல்லாமே அந்த பொண்ணுக்கு தெரிய வந்திச்சின்னு வைங்க அதவிட பெரிய ஒரு துரோகத்த அந்த பொண்ணுக்கு நீங்க பண்ணிட முடியாது. அப்புறம் உங்க காதல் பெப்பே தான். 

சொந்தப் பேருல ப்ளாக் எழுதறது: இதுல பெருசா சொல்றதுக்கு என்னங்க இருக்கு, நாங்க சொந்த பேருல ப்ளாக் எழுதினா இப்புடி ஒரு பதிவு போட முடியுமா இல்ல போட்டுட்டுதான் ஒரு பொண்ண லவ் பண்ண முடியுமா?

சொல்றத சொல்லிட்டேம், இதுக்கும் மேல காதலிச்சு சொதப்பிக்கிட்டு தாடி வளர்க்கனும்ங்குறது உங்க தலையெழுத்துன்னா விமலகாசன் என்ன கமலகாசனால கூட உங்கள காப்பாத்த முடியாது 


டிஸ்கி 1: டைட்டில் "காதலில் சொதப்புவது எப்புடி?" என்னும் குறும்படத்தில் இருந்து சுட்டோம்,ஆனா அதுக்கும் இந்த பதிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல,, ஆனாலும் அந்த பட இயக்குனரு பாலாஜிக்கு நன்றியையும், அவரோட முதல் பட முயற்சிக்கு வாழ்த்துகளையும் தெரிவிச்சிகிறோம்.

டிஸ்கி 2: உடனுக்குடன் பல பாயிண்டுகள் எடுத்துக்குடுத்த அனுபவசாலி மொக்கராசு மாமாவுக்கு எப்புடி நன்றி சொல்றதுன்னே தெரியல, ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி. 

டிஸ்கி 3: போனஸா லவ் புரபோஸ் பண்றது எப்புடின்னு ரெண்டு வீடியோ தர்றோம், பார்த்துட்டு உங்களுக்கு எது செட் ஆகும்னு நீங்களே முடிவு பண்ணிக்குங்க...

Saturday, November 19, 2011

ஆணி ஜாஸ்தியானா - (சுய புராணம் I)

என்னன்னே தெரியலப்பா, ஹாலிடே சீசன் ஆபர்ன்னு ஒவ்வொரு நாளும் ஏழெட்டு ஈமெயில் மட்டும் வருது, ஆனா அந்த ஹாலிடேஸ் எப்பன்னே தெரியல, ஆபிஸ்ல வேல மட்டும் கொறஞ்ச பாடில்ல. ஊருக்குள்ள அவன் அவன் ஒரே ஒரு பாஸ வச்சிக்கிட்டே சங்க அத்துக்கிட்டு திரியறானுக, நாலு பாஸ் இருக்கற நான் படுற அவஸ்த இருக்கே..... 


கொலாபரேசன் வோர்க்குன்னுட்டு நாலு காம்பெனில இருந்து நாலு பாசு நமக்கு, அதுல ஒருத்தரு நம்ம மேல பிரியப்பட்டு ஒரு பார்டிக்கு கூப்பிட்டாரு, பார்ட்டின்னா அந்த பார்ட்டி இல்லங்க, வேல விசயமா எதோ ஒரு டிஸ்கஷனாம், அது முடிஞ்சதும் பார்டியாம்னு சொல்லியிருந்தாரு, மறந்துடாம இருக்கனும்ன்னு ஒரு மெமோ வேற அடிச்சு குடுத்திருந்தாரு. நமக்குதான் எந்த எடத்துக்கும் நேரத்துக்கு போற பழக்கம் இல்லையே, ஆனா பார்டிக்கு நேரத்துக்கு போயிரனும்ன்னு கூட வேல பாக்குற நம்ம நண்பருக்கிட்டையும் சொல்லி வச்சிருந்தேன். பார்ட்டி சரியா ராத்திரி எட்டு மணிக்கு ஆரம்பிக்குது, நாம போற எடம் ஒரு மணி நேர வண்டி ஓட்டம், சரி அப்போ ஆறு மணிக்கெல்லாம் புறப்படனும்னு சரியா நேரத்துக்கே வண்டில ஏறிட்டோம், எல்லாம் ஒரு முன்ஜாக்கிரததான்.

வண்டில ஏறி நம்ம நண்பருக்கிட்ட மெமோவ பாத்து GPS ல அட்ரெஸ போடுப்பான்னு சொல்லிட்டு, வண்டிய கெளப்பிட்டேன். அவரும் நவிகேசன் எல்லாம் போட்டு வச்சாரா சரியா ஆறு நாப்பதுக்கெல்லாம் லோகேசன் போயிட்டோம். அது நம்ம பாஸோட ஆபிஸ், அங்க பார்த்தா பார்டிக்கான அடையாளம் எதுவுமே இல்ல. என்ன வம்பாபோச்சே நம்ம நேரத்துக்கே வந்துட்டம் போலிருக்கே, இப்போ என்ன செய்யலாம்னுட்டு சரி ஆபிஸ சுத்திப்பார்போம்ன்னு கொஞ்ச நேரம் சுத்தினோம், ஆபீஸ்ல செக்கியூரிட்டிய தவிர ஒரு ஈ காக்கா கூட இல்ல, அப்பத்தான் திடீர்ன்னு ஒரு ஞானம் வந்து அந்த மெமோவ எடுத்து பார்த்தேன். மெமோ ஸ்லிப்புல மேலே ஹெட்டர்ல இருக்கற அட்ரசுக்கு நம்ம மாப்ள நவிகேசன் போட்டிருக்கறது அப்பத்தான் தெரிஞ்சிச்சு, கீழே லோகேசன் அப்புடின்னு வேற ஒரு ஹோட்டல் பெயர் போட்டிருக்கு, மறுபடியும் அதுக்கு நேவிகசன் போட்டோம், ஒரு மணிநேர தூரம்ன்னு வந்திச்சு, நல்ல வேளை நேரத்துக்கே வந்ததுன்னு நெனச்சிக்கிட்டு, மறுபடியும் கெளம்பினோம்.



எப்படியும் எட்டு மணிக்கு கரெக்டா போயி சேந்திடனும்ன்னு , வேகமாவே வண்டி ஓட்டினேன், டான்னு எட்டு மணிக்கு ஹோடெல்ல, நாங்க போறப்போ எல்லாரும் சாப்பிட்டுட்டு இருக்காங்க, நம்ம பாஸூ நம்மள கேவலமா ஒரு லுக்கு விட்டுட்டு, வந்ததுதான் வந்துட்டீங்க சாப்பிடுங்கன்னு சொன்னாரு, என்னாடா இது நாம கரெக்டா நேரத்துக்கு வந்தும் இந்தாளு இப்படி சொல்றாரேன்னு யோசிச்சிக்கிட்டே சாப்டோம். அப்போதான் நம்ம நண்பர் சொன்னாரு, நாம லேட் ஆனதுல டிஸ்கசன சாப்பாட்டு அப்புறம் ஷிபிட் பண்ணிட்டாங்க போல அதுதான் பாஸ் கடுப்பா இருக்காருன்னு, அதுவும் சரிதான்னு நினச்சிக்கிட்டு, சாப்பிடவும் முடியாம விடவும் முடியாம இருந்த ஐட்டங்கள் ஒன்னொன்னா டேஸ்ட் பார்த்திட்டு வந்திட்டோம், அப்புறம் ஒம்பது மணி, பத்து மணி ஆகுது பார்ட்டில தான் இருக்காங்களே தவிர டிஸ்கஷன் பத்தி ஒரு தகவலும் இல்ல, அப்புறம் பதினோரு மணியும் தாண்டிரிச்சு, ஆளாளுக்கு கெளம்பி போய்க்கிட்டே இருக்காங்க, நடுவுல நம்ம பாஸும் கெளம்பிட்டாரு, சரி டிஸ்கசன் காலின்னு நெனச்சிட்டு நாங்களும் வண்டி ஏறிட்டோம். அப்போதான் நம்ம நண்பர் மறுபடியும் மெமோ எடுத்துப் பார்த்தாரு. அதுல

 Project Presentation             6.00 - 7.00
 Discussion on presentation  7.00 - 8.00
Dinner                                8.00-11.00

அப்புடின்னு போட்டிருந்திச்சு, அப்புறம்தான்யா வெளங்கிச்சு பாசு ஏன் நம்மள அப்படி மொறச்சு பார்த்தார்ன்னு. மெமோ நம்ம கையிலேயே ஒரு வாரமா இருந்திருக்கு, ஆனா தலையில இருந்தது எல்லாமே சாப்பாட்டு நேரம் மட்டும்தான், நாங்களும் கரெக்டா அந்த நேரத்துக்கே போய் சேர்ந்திருக்கோம். அப்புறம் உண்மைய எடுத்துச்சொல்லி நம்ம பாஸ சமாளிக்க நாங்க பட்ட பாடு இருக்கே..

 ஈ லோகத்தில் உள்ள பாஸூ எல்லாரும் பொறம்போக்கு பாஸு ஆயி.....  

டிஸ்கி: இந்த கொடுமைய மறக்க படம் பார்க்க போயி பட்ட கொடும அடுத்த வாரம்.  

சமந்தா பின்னாடி நிக்கறது நான்தான்னு சொன்னா நம்பவா போறீங்க...  

Sunday, November 6, 2011

நிர்வாண மிருக நேயமும் இளைய தளபதி பிளாட் ஜெனேரேட்டரும் -: கும்ப்ளிங் கும்ப்ளிங் 6/11/2011


PeTA, PeTA ன்னு ஒரு அமைப்பு இருக்கு. "பீபில் பார் எதிக்கள் ட்ரீட்மென்ட் ஆப் அனிமல்ஸ்" என்பதுதான் அதன் விரிவாக்கம். கொஞ்ச நாளுக்கு முன்னாடி நாய்களை தத்து எடுங்கள்ன்னு நம்ம திரிஷாவ வச்சு இந்தியாவுல ஒரு பெரிய காம்பைன் பண்ணினாங்க. அந்தம்மா மிருக நேயம் நெறஞ்சவங்க, அவங்க வளர்க்குற நாய் கூட தத்து எடுத்ததுதான்-பின்ன அவுங்க நாய பெத்தா எடுக்க முடியும்- அதனால அவங்கதான் இதுக்கு மிகப்பொருத்தமாக இருப்பாங்கன்னு சொன்னாங்க, த்ரிஷா பத்தி கிசு கிசு மட்டுமே எழுதற பலபேர் கூட அந்தம்மாவோட மிருக நேயத்த பாராட்டி கட்டுரயெல்லாம் எழுதினாங்க. என்னடா இது புதுசா இருக்கேன்னு யோசிச்சிட்டே இருந்தேம். அப்புறமாதான் நமக்கு  அவுங்க மிருக வதைக்கு எதிராக எல்லோரையும் வெஜிடேரியன் ஆகும்படி ஒரு காம்பைன் நடத்தின சில படங்கள பார்க்க கிடைச்சுது, அதுக்கப்புறமாதான் அவங்க காம்பைன் திட்டங்கள வாசிச்சா, பாதிக்கு மேல நிர்வாணத்த மையப்படுத்தியது. அது ஏன்னு ஒரு அழகான விளக்கம் குடுத்திருக்காங்க, "இலாப நோக்கமற்ற நிறுவனமான எங்களுக்கு விளம்பரம் செய்வதற்கு கோடி கோடியா பணம் கிடைக்கிறது கஷ்டம், ஆனா இவ்வாறான ஒரு காம்பைன் பண்ணினா இலவச விளம்பரம் கிடைக்கும், நாலு பேருக்கு நல்லது நடக்கும்னா எதுவுமே தப்பில்ல" அப்புடின்னு இருக்கு அந்த விளக்கம். இப்ப புரியுதா அவங்க எதுக்கு த்ரிஷாவ தெரிவு செஞ்சாங்கன்னு?

ஒஸ்தி படத்துல நடிக்கிற பொண்ணு..எவன்யா டைரக்டர்?
ஒஸ்தி படம் ரிலீஸ் மறுபடியும் தள்ளி போச்சாம், 11/11/11 க்கு வரும்ன்னு எதிர்பார்க்கப்பட்ட படம், அதேபோல  மயக்கம் என்னவும் 18/11/11தான் ரிலீஸ்ன்னு செல்வா சொல்லிட்டாரு. சித்தார்த்தோட தெலுங்கு படமான ஓ மை ப்ரெண்டு மட்டும்தான் இந்த டேட்டுக்கு வரும் போலிருக்கு. சிதார்த்தோட படம் பத்தி ஏன் சொல்றோம்னா அதுல ரெண்டு ஹீரோயின், ஒன்னு ஸ்ருதி, மத்தது ஹன்சிகா. வேலாயுதம் வெற்றிக்கு அப்புறமா ஹன்சிகா நமக்குதான்னு பதிவுலகத்துல ஒரு பெரிய நம்பிக்க துளிர் விட்டு இருந்தாலும் இந்த படம் ஜெயிச்சா மறுபடியும் தெலுங்கு வாலாக்கள் கொத்திக்கிட்டு போயிட வாய்ப்பு இருக்கு. ஏன்னா ஹன்சிகாவோட ஆகஸ்ட் வெளியீடு தெலுங்கு படம் kandireega பெரிய வெற்றி, அதே போல வேலாயுதமும் வெற்றி, அதனால ஒ மை பிரெண்ட் படத்துக்கு லக்கி சார்ம் ஹன்சிகாதான்னு சித்தார்த் சொல்றாரு.  அதுதான் எதுக்கும்னு சொல்லி வச்சுக்கறோம். என்னென்ன பூஜையெல்லாம் பண்ண இருக்கோ இப்பவே ரெடியாகுங்கப்பா.

எனக்கே எனக்கா?
வேலாயுதமும் ஏழாம் அறிவும் அசாசின் கிரீட் அப்புடின்குற ஒரு வீடியோ கேமோட காப்பின்னு ரெண்டு படமும் ரிலீஸ் ஆக முதல்லையே பெரிய கலவரமே நடந்திச்சு. இது என்னடா அநியாயமா இருக்குன்னு யோசிச்சுக்கிட்டே இருந்தோம், ஹாலிவூட் காரங்க மட்டும் நம்ம தமிழ் படங்கள காப்பி பண்ணலாம் நம்மாளுக பண்ண கூடாதா? ஏற்கனவே குருவி படத்த காப்பி பண்ணி வந்த ரெண்டு ஹாலிவூட் படங்கள பத்தி நாங்க பதிவு போட்டது எல்லாருக்குமே தெரியும், இப்போ புதுசா இன்னுமொன்னு, அதுதாங்க அந்த ஜானி இங்க்லீஷ் படத்துல நம்ம தளபதியோட சிவகாசி இன்ட்ரோடக்ஸன் சீன அப்புடியே காப்பி அடிச்சிருக்காங்க, தளபதி வெல்டிங் பீம் வச்சு கதவ அவரு ஷேப்புக்கே வெட்டி எடுத்து வெளிய வருவாரே, அதே தான் அங்க ஒரு கார் லேசர் பீம் வச்சு காரோட ஷேப்புக்கே கதவ வெட்டி வெளிய வரும். யாருக்கிட்ட, நாங்கெல்லாம் தளபதி படத்த இம வெட்டாம பாக்குறவங்களாச்சே, நம்மள ஏமாத்த முடியுமா, சூரியா படத்த பாலிவூட்ல ரீமேக் பண்றாங்கன்னா தளபதி படத்த ஹாலிவூட் காரங்க சுடுறாங்க, தளபதி மாஸ சொல்ல வேற எதனாச்சு வேணுமா? நிலைமை இப்புடி இருக்க இந்த அநியாயத்த கொஞ்சம் பாருங்க, இளைய தளபதி பிலாட் ஜெனேரேட்டர், இதுல படத்துல தளபதியோட பெயர், கூட நடிக்கற காமெடியன், தங்கச்சி பெயர் அப்புடி கொஞ்சம் விசயங்கள குடுத்தா படத்தோட கதை வர்ற மாதிரி பண்ணி வச்சிருக்காங்க. என்னா ஒரு எகத்தாளம்.அப்புறம் எதுக்கு ஜெயம் ராஜா,பாபு சிவன், பிரபு தேவா எல்லாம் இருக்காங்க?


கார்த்தி கார்த்தின்னு ஒரு மார்கட்டே இல்லாத தமிழ் சினிமா நடிகர் இருக்காராமே, அவரு எதோ சகுனின்னு ஒரு படம் நடிக்கராராமாம். அந்த படத்துல ஹீரோயின்னா ப்ரனிதா பொண்ணு நடிக்குதுன்னும், காமெடிக்கு தலைவர் சந்தானம் இருக்காருன்னும் உங்க எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும், இப்போ என்னடான்னா அந்த படத்துல புதுசா அனுஷ்கா வேற ஒரு முக்கியமான காரெக்டர் பண்றாங்களாம், ஏற்கனவே ராதிகா சரத்குமார், ரோஜா, மும்தாஜ்ன்னு ஒரு பட்டாளமே இருக்கு, போதும் போதாததுக்கு ஸ்ரேயா வேற நடிக்கறதா அரசல் புரசலா ஒரு கத இருக்கு. எதுக்குடா இம்புட்டு பெரிய பட்டாளத்த வச்சு நடிக்க வக்கிராங்கன்னு யோசிச்சிட்டே இருந்தோமா, நேத்துத்தான் அது எதுக்குன்னு வெளங்கிச்சு, ஒன்னுமில்லைங்க, இந்த கார்த்தி பய அவரோட மார்கெட் நிலவரம் தெரியாம தளபதியோட காவலன் படத்துக்கூட சிறுத்தைன்னு எதோ ஒரு படம் ரிலீஸ் பண்ணி அட்ரசே தெரியாம போச்சாமே, இப்பவும் சகுனி பொங்கலுக்குதான் வரும் போல இருக்காம், ஏற்கனவே நண்பன் பொங்கல் ரிலீஸ்னால ரொம்பவே பயந்து போயிதான் இப்படி நட்ச்சத்திர பட்டாளமா போட்டு நிரப்புறதா கோடம்பாக்கத்துல ஒரு பேச்சு இருக்கு. ஆனானப்பட்ட ரஜனிகாந்தே நண்பனுக்கு பயந்து ராணாவ தள்ளிப்போட்டப்போ, கார்த்தி என்ன கார்த்தி... (இத நீங்க நம்பினா முட்டாள், இல்லன்னா சைக்கோ எப்புடி வசதி?)


அழகே உன்பெயர்தான் சமந்தாவோ...


Tuesday, November 1, 2011

நாம் சுதந்திரம் பெற்றோமா அடிமைப் படுத்தப்பட்டோமா? - ஏழாம் அறிவு என்னுள் எழுப்பிய கேள்வி

பதிவுக்குறிப்பு: இது ஒரு ஒழுங்கு படுத்தப்பட்ட பதிவு அல்ல. நீண்ட நாளாகவே மனதிற்குள் விடை தெரியாது இருந்த சில கேள்விகள். ஏழாம் அறிவு படத்தினை பார்த்தபின்பு அவை மீண்டும் நினைவுக்கு வந்தன. உங்கள் முன் வைக்கிறேன். யாராவது பதில் தெரிந்தவர்கள், ஆர்வம் உள்ளவர்கள், அல்லது என்போன்றே கேள்விகள் உள்ளவர்கள் உங்கள் பதிவுகளில் இதை தொடர்ந்து, எனக்கும், என்னைபோன்ற பலருக்கும் தெளிவு ஏற்பட உதவும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.


அமேரிக்கா வந்த புதிதில் அமெரிக்க நண்பர் ஒருவருடன் நடந்த உரையாடல். அவர் என்னிடம் இந்தியாவின் சிறப்புகளையும் பெருமைகளையும் கேட்ட போது நமது கலாசாரத்தையும் குடும்ப உறவுகளையும் தவிர கூறுவதற்கு என்னிடம் எதுவும் இருக்கவில்லை. அதன் பின்னர் இந்தியாவில் இருக்கும் கனியங்களைப் பற்றி நண்பர் கேட்டார், என்ன சொல்வது, வாசனை திரவியங்கள், பட்டு என ஏதேதோ சொன்னேன். கேட்டுக்கொண்டிருந்தார். கடைசியாக என்னிடம் ஒரு கேள்வி கேட்டார், நாங்கள் வாசனை திரவியங்களோ பட்டோ பாவிப்பதில்லை, ஆங்கிலேயர் பாவிப்பதாக தெரியவும் இல்லை, பின்னர் கொலம்பஸ் எதுக்காக இந்தியாவை தேடி பயணம் புறப்பட்டு இங்கே வந்தார்? இந்த கேள்விக்கு அவரை திருப்திப்படுத்தும் எந்த பதிலும் என்னிடம் இல்லை. கூடவே ஒரு விடயம் கூறினார், இந்தியாவை தேடி அவர் ஒரு நீண்ட பயணம் புறப்பட்டாரியின் நிச்சயம் அங்கு எதோ ஒரு சிறப்பம்சம் இருந்திருக்க வேண்டும், ஆனாலும் அது என்ன என்பது இங்குள்ள யாருக்கும் தெரியாது. "India must have played a big role in something those days, but we seems to have lost that" இது கடைசியாக அவர் எனக்கு கூறியது. இந்த கேள்விக்கு இன்று வரை என்னிடம் பதில் இல்லை. 

தொலைத் தொடர்புகள் எதுவும் அற்ற, நாடு தாண்டிய பயணங்கள் அற்றிருந்த ஒரு காலத்தில் இந்தியாவை தேடி ஒருவர் பயணிக்கிறார் என்றால், இந்தியாவின் பெருமைகள் நிறையவே இருந்திருக்க வேண்டும் என்பது அவரது எண்ணம். இதுபற்றி சிந்தித்துக்கொண்டிருந்த போதுதான் ஒரு சந்தேகம் வந்தது. ராவணனிடம் இருந்ததாக கூறும் புட்பக விமானம், ஒரு வேளை நாம் கவனிக்க தவறிய ஒன்றா? ஒருவேளை நமது மூதாதையர்கள் பறக்கும் சக்தி கொண்ட வாகனங்களை உருவாக்கக் கூடியவர்களாக இருந்தார்களா? அது மூலமாக இந்தியாவில் இருந்து இங்கிலாந்து போயிருப்பார்களோ? அல்லது கற்பனையில் தோய்ந்துபோன ஒரு விடயமா அது? பத்து தலைநகரங்களை ஆண்டதாலே பத்துத்தலை ராவணன் என பெயர்வந்தது என்றும் ஒரு கருத்து இருக்கிறதே. இது எப்போதோ நடந்த ஒரு சம்பவத்தின் அடிப்படையில் தோன்றியது. 


சுமார் ஒரு ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரியில் காலடி எடுத்துவைத்த முதல் வாரம், சயின்ஸ் எஜுகேசன் என்றொரு பாடம் படிக்க நேர்ந்தது, அதில் நமது ஆசிரியர் கீழைதேய  விஞ்ஞானம் பற்றி கூறியது ரொம்பவும் பிரமிக்க வைத்தது. சித்த வைத்தியம், நாட்டு மருத்துவம், நமது கட்டடக்கலை, நீர்பாசனத் திட்டங்கள் அது இது என பல விடயங்கள் கூறினார். ஆங்கிலேய மருத்துவம் பற்றியும் கூறினார்.  நமது கலைகள் அதன் பெருமைகள், நம்மவர்கள் உணவு பதபடுத்தும் வித்தைகள் பற்றியும் கூறினார். கீழைத்தேய விஞ்ஞானம் என பொதுப்படையாக இருந்ததால் இந்தியா தவிர்த்தும் சில விடயங்கள் கூறினார். சீனாவில் ஒன்பது கற்களை  ஒரு வரிசையில் அடுக்கிய ஒரு எந்திரம் இருந்ததாம், அதில் கற்கள் விழுவதை வைத்து பூமி அதிர்வு ஏற்படுவதை முன்கூட்டியே அறிந்துகொள்ள முடியுமாம். புட்பக விமானம் பற்றிய நமது சந்தேகத்தை தூண்டிவிட்டதும் அவரே. அவர் கூறிய பல விடயங்கள் பிரமிப்பூட்டுவதாக இருந்தது. இவை எல்லாம் ஏன் இன்று நம்மிடையே இல்லை என்பது அப்போது வியப்பாகவும் அதே நேரம் கவலையாகவும் இருந்தது. 

கீழைத்தேய விஞ்ஞானம், மருத்துவம், கலைகள் என்பன எவ்வாறு திட்டமிட்டு அழிக்கப்பட்டு அவற்றிற்கு  மாற்றாக மேலைத்தேய மருத்துவம், விஞ்ஞானம் என வந்தது, நாம் எப்படி ஒரு சந்தையாக மட்டும் ஆக்கப்பட்டோம், நம்மிடம் இருந்து எது எதை எல்லாம் அவர்கள் எடுத்துச்சென்றார்கள் என்று அவர் விவரித்தபோது கொட்டாவிதான் வந்தது. அந்த பாடத்துக்கு பரீட்சை இல்லை, எனவே அப்போதே  அதை மறந்துவிட்டேன். இன்று அது பற்றி சிந்திக்கும் போது எனது அலட்ச்சியத்தை நினைத்து எதோ ஒரு குற்ற உணர்வு என்னுள் இருக்கிறது. 

தமிழர் வரலாற்றில் "நீண்ட இரவு" என்று ஒன்று இருக்கிறது. இது ஐரோப்பிய நாடுகள் இந்தியாவை ஆழ முன்பே உள்ள ஒரு காலகட்டம் (போதிதர்மன் வாழ்ந்ததாக கூறும் காலகட்டம்), அந்த காலகட்டத்தில் உள்ள எதுவும் நமக்கு தெரியவில்லை, என்ன நடந்தது என்பதை அறிய எந்தவொரு சான்றுகளும் நம்மிடையே இல்லை. (கஜினி படத்துல சூரியாவோட உடம்புல குத்தியிருந்த பச்சையை அழிப்பது போல யாரோ அளித்திருக்கிறார்கள், அல்லது அவை தாமாகவே அழிந்து போயிருக்கின்றன)


நோபெல் பரிசு பெற்ற விஞ்ஞானிகளுள் மூவர் தமிழர். Sir C V  ராமன் (பௌதீகவியலாளர்), சுப்பிரமணியம் சந்திரசேகர் (அஸ்ட்ரோ பிசிக்ஸ், CV ராமனின் உறவினர்), வெங்கடராமன் ராமகிருஷ்ணன் (Structural biologist). C V ராமனை தெரிந்த அளவுக்கு நமக்கு ஏனைய இருவரையும் தெரியாது, இவர்கள் இருவரும் முறையே 1983 மற்றும் 2009 களில் நோபெல் பரிசு பெற்றவர்கள். அவர்கள் பரிசுகள் பெற்ற போது நாம் அவர்களை கொண்டாடினோம், ஆனால் அவர்களுக்கு உரிய மரியாதையை நாம் வளங்கியிருக்கியிருக்குறோமா அல்லது அவர்கள் முயற்சிகளயாவது நாம் தொடர்ந்திருக்கிரோமா? (கஜினி சூர்யா போல ஷார்ட் டேர்ம் மெமரி லாஸ்ல தான் நாம இருக்கோமா?)

முன்னைய காலங்கள் போன்று இப்போது நேரடி யுத்தங்கள் நடப்பதில்லை,  ஆனால் பொருளாதார யுத்தம் நடக்கிறது. வளர்ச்சியடைந்த நாடுகள் எனப்படுபவை தமக்கென எதோ ஒரு துறையில் முன்னேறி அதனை சந்தைப்படுத்துவன் மூலம் மூன்றாம் உலக நாடுகளை அடிமை படுத்தி வைத்திருக்கின்றன. காகேநெட் ஆயிலில் காலஸ்ற்றால் இல்லை என்றும் அமெரிக்காவிலும் மேலை நாடுகளிலும் தயாரிக்கப்படும் சண் ப்லவேர் ஆயிலை பிரபலப்படுத்தவே இவ்வாறு ஒன்று கொண்டுவரப்பட்டது என்றும் ஒரு கருத்து இருக்கிறது. இவ்வாறே விஞ்ஞானம் எனும் பெயரால் நாமது ஏற்றுமதிப் பொருள்கள் பல முடக்கப்படுகிறது. கணணி சந்தை முழுதும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில், இப்போது இரண்டாவது பெரிய சந்தையான தொலைபேசிகளும் முழுதும் அவர்களின் கட்டுப்பாட்டில். எஜுகேசன் என்பது எப்போதோ அமரிகாவினதும் பிருத்தானினதும் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது என்பதை நாம் இன்னும் உணர்து கொள்ளாமலே இருக்கிறோம்.

பிருத்தானிய காலனிகளில் இருந்து அவர்கள் விட்டுச்சென்ற போது, சிவில் யுத்தங்களையும் சேர்த்தே விட்டுச்சென்றார்கள் என்றொரு குற்றச்சாட்டும் இருக்கிறது. இந்தியா, இலங்கை, அமேரிக்கா என்பவை இவற்றிற்கு சிறந்த உதாரணங்கள். பல சிறு மாநிலங்களை ஒரே நாடாக இணைத்து அங்கு பிரச்சனைகளை விட்டுச் சென்றார்கள் என்பது அந்த குற்றச்சாட்டு. சிவில் யுத்தத்தை முடித்து வெற்றிகண்ட ஒரே நாடு அமெரிக்காதான், அவர்களும் அவர்கள் பங்குக்கு ஏனைய நாடுகளில் சிவில் யுத்தங்களை தூண்டிக்கொண்டே இருக்கிறார்கள். நாம் மீண்டும் அடிமைப் படுத்தப்பட்டுக்கொண்டே இருக்கிறோம்.

இன்று நம்மை எடுத்துப்பாருங்கள், நம்மை சுற்றி உள்ள எத்தனையோ பொருட்கள் மேலைத்தேய நாடுகளின் பெயர்களைத்தான் சொல்லிக்கொண்டிருக்கின்றன. நமது பாடத்திட்டம், ஜனநாயக அரசியல், முகாமைத்துவம், தொலைதொடர்பு சாதனங்கள், மருத்துவம், கணணி அறிவு, போதாக்குறைக்கு உணவு வகைகளில் இருந்து ஆடைகள் வரை எதுவுமே நமக்கு சொந்தமானது இல்லை. "நமது" என பெருமைப்பட்டுக்கொள்ள நம்மிடம் எதுவும் இல்லை. மேற்கத்தைய கலாசாரம் சிறந்ததா இந்திய கலாசாரம் சிறந்ததா என சேலையையும் குட்டைப்பாவடயையும் வைத்து பட்டிமன்றம் நடத்தும் நிலையில்தான் நாம் இருக்கிறோம். இவற்றுக்கு நடுவே தொக்கி நிற்கும் ஒரு கேள்வி. வெள்ளைக்காரன் மட்டுமல்ல, ஐரோப்பாவில் இருந்து எத்தனையோ நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு ஏன் இங்கு வந்தன, அவை நம்மிடம் எதை விட்டுச் சென்றன? உண்மையில் நாம் சுதந்திரம் பெற்றோமா அல்லது அடிமைப்படுத்தப்பட்டோமா?

இந்த பதிவினை தொடருமாறு  பன்னிக்குட்டி ராம்சாமி அண்ணன், செங்கோவி அண்ணன், ரெவெரி, ஜீ மற்றும் நிரூபன் அண்ணனை அழைக்கிறேன்.