Friday, July 29, 2011

எதிர்பார்புள்ள தமிழ் படங்களும் சில கமெண்ட்களும்.



ஒரு கல் ஒரு கண்ணாடி

நம்ம தலைவர் ஹீரோவா நடிக்கிற படம், ராஜேஷ் இயக்கம், உதயநிதி ஸ்டாலின் இன்னொரு ஹீரோ, இந்தவருடத்தின் சூப்பர் டூப்பர் ஹிட்டு, இந்த வருஷ கடைசில படத்த எதிர்பார்க்கலாம், இந்த படத்துல ஹன்சிகா மற்றும் ஆண்ட்ரியா இருக்காங்க. ஆண்ட்ரியா நம்ம தலைக்கு ஜோடியா நடிக்குராங்கன்னு காத்து வாக்குல கேள்விப்பட்டோம். அப்புறம் நட்புக்காக ஆர்யாவும் இந்த படத்துல இருக்காரு. இந்த படத்துக்கு இருக்கற எதிர்பார்ப்ப பத்தி நாம சொல்லவே தேவையில்ல, கலெக்ஷன்ல இது எப்பிடியும் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் ஆகிடும், ஆனா இந்த படத்துக்கு போட்டியா வசூலிக்க கூடிய படங்கள்னு நாங்க நெனக்கிற படங்களோட ஒரு பட்டியல் இதோ.........




1 . ஏழாம் அறிவு  

இது ஒரு சூர்யா படம், அந்த ஒரு விஷயம் போதும் இந்த படத்துக்கு உள்ள எதிர்பார்ப்ப பத்தி சொல்றதுக்கு. அதுக்கும் மேல, இது முருகதாஸ் படம், சுருதிஹாசனோட மொத தமிழ் படம்(என்ன பொண்ணு சூர்யாவ விட கொஞ்சம் ஒசரம் ஜாஸ்தி, ஆனா சிங்கம் சமாளிச்சிருமில்ல), கஜினி கம்போ சேர்ந்து பண்ணுற படம் இப்படி நெறைய எதிர்பார்ப்பு இருக்கு. ரோபோவுக்கு அடுத்தபடியா அதிக எதிர்பார்ப்பு உள்ள தமிழ் படம் இதுதான். (ராணாவ மறந்துட்டேன்னு நெனக்காதிங்க, ராணா பில்டப் ஆக்டோபர்க்கு பிறகுதான்  ஆரம்பிக்க போகுது). இந்தபடத்துக்கு தமிழ்நாட்டுல மட்டுமில்ல, இந்தில இருந்து ஹாலிவூட் வரைக்கும் எதிர்பார்ப்பு இருக்குன்னா பார்துங்கங்களேன் (இது கொஞ்சம் ஓவர் பில்டப் தான், ஆனா இந்த பயபுள்ள சூர்யாவுக்கு இந்தில செம மவுசு, இவரு படம் பண்ற வரைக்கும்தான் பாத்துகிட்டு இருக்காங்க ரீமேக் பண்றதுக்கு). இது ஒரு கஜினி, அயன் வரிசையில உள்ள படம், நம்ம தலைவர் சந்தானம் இல்ல, சந்தானம் இல்லாம ஓடுற ஒரு சில படங்கள் லிஸ்டுல இதுவும் சேர்ந்தா சந்தோசம்தானே. கூடுதல் தகவல் இந்த படத்துல அபினயாவும் இருக்காங்க. இந்த படத்தோட ஓகே ஓகே பட trailer வர இருக்குறதல படத்துக்கு செம எதிர்பார்ப்பு. ஆகஸ்ட்ல இல்லனா செப்டெம்பர்ல படம் ரிலீஸ் ஆகும்னு எதிர்பார்க்கலாம். 


2 . மங்காத்தா 

இது தலையோட ஐம்பதாவது படம். வெங்கட்பிரபு படம். அத விட மொத முறையா  பிரேம்ஜி அமரன், வைபவ் ரெட்டி, அரவிந்த் ஆகாஷ்,  அர்ஜுன் அப்பிடின்னு பெரிய பட்டாளமே தல படத்துல இருக்கு (அப்பிடியா இல்லனா மொத முறையா அவங்க படத்துல தல இருக்காரா?). VTV க்கு அப்புறம் திரிஷா நடிச்சிருக்காங்க. வெங்கட் பிரபுன்னாலே காமடிக்கு பஞ்சம் இருக்காது. ஆக்சன் த்ரில்லர் அப்பிடின்னு  சொல்றாங்க, அந்த ஏரியாவுல தலையும் ஆக்சன் கிங்கும் கலக்குவாங்கன்னு எதிர்பார்க்கலாம். (தலைக்கு வரிசையா வந்த தலையே இல்லாத படங்களுக்கு அடுத்து இந்த படம் வருது). பாடல்கள்  ஆகஸ்ட் 10 ரிலீஸ். அப்புறம் இன்னும் ரெண்டு வாரத்துக்கு பெறகு  படம் ரிலீசுங்குறாங்க. இந்த படத்துலயும் சந்தானம் சார் இல்ல, ஆனாலும் அஜித்தின் நல்ல  மனசுக்காக  இந்த படம் நல்லபடியா ஓடனும். கூடுதல் தகவல், இந்த படத்துல லக்சுமி ராய், ஆண்ட்ரியா கூட அஞ்சலியும் இருக்காங்க. யுவன் சங்கர் ராஜா இசையமைச்சிருக்கார். பாடல்கள் சுமார் ரகம்தான்.
எமது  மங்காத்தா ட்ரைலர் விமர்சனம் இங்கே


3 .  ரௌத்திரம் மற்றும் வந்தான் வென்றான்

ரெண்டுமே பெரிய இடைவெளி இல்லாமல் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக போகின்றன.
மொதல்ல ரௌத்திரத்த பாப்போம். இது நம்ம ஜீவா தம்பியோட படம் (மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன்). கோ படதுக்கப்புரம் வரப்போறது.  ஸ்ரேயா சரண் ஜோடியா நடிச்சிருக்காங்க. பிரகாஷ் ராஜ் இருக்காருங்க, கூடுதல் தகவல் இந்த படத்துல ப்ரீத்தி Jhangiani (எதுக்கு வம்புன்னு அந்த பேர இங்கிலீஷ்லேயே போட்டுட்டோம்) இருக்காங்க, இது ஒரு பாலிவூட் பிகர், ஹலோ படத்துக்கப்புறம் மறுபடியும் தமிழ்ல நடிச்சிருக்கு. இது ஆகஸ்ட்டு 12 ரிலீஸ்.

அப்புறம்  வந்தான் வென்றான்.இது ஜீவாவின் ரௌத்திரத்திற்க்கு பெறகு ரிலீசாகும் படம்.  ஆனா இதுல உள்ள முக்கியமான விஷயம் என்னான்னா தலைவர் சந்தானம் மும்பைல பாணி பூரி விற்பவறாக கலக்குகிறார், ஏற்கனவே ட்ரெய்லரில் இருக்கும் சந்தானத்தின் டான் ஸ்பூப்(spoof) காமெடி கலக்கிக்கிட்டு இருக்கு. அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் இது ஜெயம் கொண்டான் , கண்டேன் காதலை கண்ணன் இயக்கும் படம். அந்த ரெண்டு படத்துலயும் சந்தானம் காமெடி செம ஹிட்.ஜீவா+சந்தானம் திரும்பவும் கூட்டணி சேரும் இந்த படமும் ஹிட்டாகனும்னு வாழ்த்துவோம். ஆங் இன்னொரு மேட்டர், வெள்ளாவி வச்சு வெளுத்த பிகர் நடிக்கும் ரெண்டாவது தமிழ் படம் இது. செப்டெம்பர் இறுதிக்குள் ரிலீஸ் ஆகிரும்.


4. வேலாயுதம் 

இது ராஜா இயக்கத்துல தளபதியும் தல-தளபதியும் சேர்ந்து நடிக்கற படம். ஆசாத் தெலுங்கு படத்தின்  நாட்டை எடுத்து   ராஜா இயக்குர மொத நேரடி படம், (இதுவரைக்கும் ரீமேக்தான் பண்ணிக்கிட்டு இருந்தாரு, திரைக்கதையையும் சுட்டு, வசனங்களை மொழிபெயர்ப்பு மட்டும் செஞ்சிட்டு, திரைகதை, வசனம், இயக்கம் ராஜான்னு போட்டுக்குவாரு, ஆனா அதுல கூட ஒரு நேர்மை இருந்திச்சு, சில பேர் இங்கிலீஷ் படத்தையும் ராபின் ஹூட் பாட்டையுமே சுட்டுட்டு, இது சொந்த முயற்சின்னு சொல்லிகிராங்க. (இது பத்தின மேலதிக தகவல்கள்) . இந்த  படத்துல   சந்தானம் சொல்லும் "எந்த ஹீரோவும் இப்புடி பழி வாங்கி பார்த்ததில்லடா" செம டைமிங் பன்ச்(ஆனா போஸ்டர பார்த்தா தான் என்னமோ குருவி ரெண்டாம் பாகம் மாதிரி தோணுது). பயந்துராதேங்க, இந்த படத்துல சில ஆறுதலான விசயங்களும் இருக்கு, ஜெனிலியா (அதுதாங்க நம்ம ஹரினி), ஹன்சிகான்னு ரெண்டு பொண்ணுங்க, சரண்யா மோகனும்(தங்கச்சி) இருக்காங்க, அப்புறமா நம்ம M.S பாஸ்கரும் இருக்காரு. (தேரோட்றவன் கேனயனா இருந்தா மாடும் மச்சான்னு சொல்லுமா?)  டாகுட்டருக்கு இந்த படமாவது கைகொடுக்குமான்னு பாப்பம். இதுவும் ஆகஸ்ட் ரிலீசாம். இந்த படமும் ஓடுவதற்கு வாழ்த்துக்கள்.சந்தானம் விஜய் காமெடி போர்ஷன் செமையா வந்திருப்பதாக கேள்வி.



5 . ஒஸ்த்தி
இது ஹிந்தில ஒங்க வீட்டு ஓட்டம், எங்க வீட்டு ஓட்டம் இல்ல ங்கொக்காமக்கா ஓட்டம் ஓடுன தபாங் படத்தின் ரீமேக். சிம்பு அலைஸ் எஸ்.டி.ஆர் நடிக்கிறார். வெற்றி பெற்ற ஒரு படத்தை அத விட சூப்பரா ரீமேக் பண்ணும் வித்தை தெரிந்த தரணி இந்த படத்த இயக்குறாரு. ஜித்தன் ரமேஷ் சிம்புவின் அண்ணன் பாத்திரத்திலும் ரிச்சா கங்கோபத்யை, மதுஷாலினி. மற்றும் சரண்யா மோகன் (திருப்பியும் அதே அண்ணனுக்கு தங்கச்சி ரோல்) போன்றோரும் நடிக்கிறாங்க. ஆனா அது எல்லாத்தையும் விட இப்போது கோலிவுட்டில் டெம்போவை எகிற வைக்கிற செய்தி இந்த படத்தில் சந்தானம் இணைந்து இருப்பது. சந்தானம்+சிம்பு+vtv கணேஷ் திரும்பவும் கூட்டணி சேர்ந்தால் நிச்சய ஹிட்டுதான். எந்த ஒரு காமெடி நடிகரும் நல்ல பார்மில் உள்ளபோது ஒரு போலிஸ் படத்தில் நடித்து கலக்குவது வழமை(வடிவேல்=மருதமலை, விவேக்=மே.பா ராசக்காபாளையம்) அதே போல் இப்போது பீக்கில் இருக்கும் சந்தானம் இந்த படத்தில் போலீஸ் ஏட்டு/கான்ஸ்டபிள் ரோலில் நடிப்பதாக கேள்வி. சந்தானத்திற்கு இது இன்னொரு மைல்கள்ளாக இருக்கும் . இது தீபாவளி ரிலீஸ்.


அப்புறம் இந்த வருஷத்தில் சந்தானம் நடிப்பில் முப்பொழுதும் உன் கற்பனைகள்(அதர்வா), யுவன்யுவதி(பரத், முழு நீள காமெடி), வேலூர் மாவட்டம்(நந்தா), கள்ள சிரிப்பழகா(ஷக்தி) போன்ற படங்களும் ரிலீஸ் ஆகின்றன. ஆனால் இந்த படங்களிற்கான  எதிர்பார்ப்பு ரொம்ப கம்மி. கண்டேன், உதயன் படங்களை போல இந்த படங்களிலும் சந்தானத்தின் காமெடி மட்டுமே ஹிட்டாக கூடிய வாய்ப்புக்களே அதிகம். நம்ம இன்னொரு நண்பன்ஆரியாவோட வேட்டைன்குற படமும் லிஸ்ட்ல இருக்கு.


Tuesday, July 19, 2011

தெய்வதிருமகள் : ஒரு சந்தானம் ரசிகனின் மாற்று பார்வை


 

தலைவர் சந்தானத்தின் நடிப்பில் வெளியாகி மக்கள் மனதை கவர்ந்த தெய்வ திருமகள் படத்தினை முதல் முறை பார்த்தபோது இது ஒரு அற்புதமான படம் என்ற பிரமையே எனக்கும் ஏற்பட்டது. சந்தானம் ரசிகன் என்கிற வட்டத்தை தாண்டி நடுநிலைமையுடன் இரண்டாவது முறை படத்தை பார்த்தபோதுதான் படத்திலுள்ள குறைகள் கண்களில் பட்டது (ஆரம்பிச்சிட்டான்யா). இந்த திரைப்படம் எண்பதுகளின் கடைசியிலேயோ அல்லது தொண்ணூறுகளின் தொடக்கதிலேயோ கமலின் நடிப்பில்  வெளிவந்திருந்தால்  இதையும் ஒரு காவியம் அல்லது அற்புதமான திரைப்படம் அல்லது செலுலோயிட் கவிதை என்றோ கூட வர்ணித்திருக்கலாம்.(என்னடா ஒன்னோட பிரச்சின?). படத்தின் கதயையோ,திரைகதயையோ,அல்லது காட்சிப்படுத்தலையோ நான் இங்கு விமர்சிக்கப் போவதில்லை. நீரவ் ஷா, அந்தோனி மற்றும் ஜி.வீ பிரகாஷ் படத்திற்கு அழகு சேர்த்திருக்கிறார்கள். making is fine அப்பிடின்னு சொல்லலாம். அனுஷ்காவுக்கு இது ஒரு மைல் கல் (பொண்ணுகிட்ட ஜனங்க எத எதிர்பார்பாங்களோ அது துளிகூட இல்லாம எத எதிர்பார்க்க மாட்டங்களோ அத மட்டுமே நம்பி நடிச்சிருக்கு, வாழ்த்துக்கள்). அமலா பால்(மைனா மைனா நெஞ்சுக்குள்ள வம்பு பண்ணுற), அந்த குட்டி பொண்ணு முதிர்ச்சியான நடிப்பு. நம்ம விக்ரம் சார் வழக்கம் போல ஒரு ஆப் ட்ராக் கதாபாத்திரத்த கைல எடுத்திருக்கார் (நம்ம நாட்டுல இப்பிடி ஒரு கதாபாத்திரத்த கைல எடுத்து நடிச்சாதனே சிறந்த நடிகன்னு சொல்லுறம், ரக்தரித்திரத்துல அவ்வளவு அற்புதமான ஒரு நடிப்பா குடுத்த சூரியாவ நாம கண்டுக்கவே இல்ல, விண்ணை தாண்டி வருவாயா சிம்புவ (சாரி STR) டீல்ல விட்டுட்டோம் , ஆனா அவன் இவன் விஷால கொண்டாடல அதுமாதிரிதான்). அந்த கதா பத்திரத்த மிகச்சிறப்பாக எண்பதுகளுக்கே உரிய நேர்த்தியோட பண்ணியிருக்கார்(ஆனா ஆத்தா சத்தியமா அவன் இவன் விஷால விட ரொம்ப ரொம்ப நல்லா பண்ணி இருக்காரு விக்ரம்).
இப்ப இந்த படம் எங்க எங்க சொதப்புது, எதனால பாஸ் மார்க் வாங்கியிருக்குன்னு பார்ப்போம். படத்துல முதல் சொதப்பல் கிருஷ்ணா பாத்திரப்படைப்பு. (என்னடா நாலு பேரு நல்லதுன்னு சொல்லுறத மொக்கன்னு சொல்லுறதே ஒனக்கு பொழப்பா போச்சி). இத நான் ஏன் சொல்றன்னா, நான் அயன்னு ஒரு படமும் மை நேம் இஸ் கான்னு ஒரு படமும் பார்த்திருக்கன், அயன் படத்துல சாதாரண கடத்தல் காரன் பாத்திரம் அதுக்காக அந்த இயக்குனர் எவ்வளவோ ஆராய்ச்சி செஞ்சிருக்கார், அதே போலதான் மை நேம் இஸ் கானும். ஆடுகளத்துல வாற பாத்திர படைப்பும் அப்பிடித்தான். இந்த எடத்துல நான் ஏன் கோ படத்த சொல்லலைனா அதுல வாற பாத்திரம் கே வி ஆனந்த் சாரோட நிஜ வாழ்க அத சொல்ல அவருக்கு ஆராய்ச்சி எல்லாம் தேவல. இந்த படத்துல ஒரு முக்கியமான விசயத்தைதான் கைல எடுத்திருக்காங்க, ஆனா அத ரொம்பவே சொதப்பியிருக்காங்க. அது எப்பிடின்னா, கிருஷ்ணா பாத்திரம் மன வளர்ச்சி குறைந்த ஒரு பாத்திரம், இவ்வளவு தான் நமக்கு சொல்றாங்க. 
ஆனா மனவளர்ச்சி குறைவுன்னதும் அதுக்குள்ள எல்லாத்தையுமே சேத்துகிட்டாங்க, கிருஷ்ணாவுக்கு சின்ன சின்ன விசயங்களையே ஞாபகம் வச்சிக்க முடியாது, (உதாரணமா அவரு புள்ளயோட ஸ்கூல் பேர் ஞாபகம் இல்ல, அவரு வாழ்ந்த எடத்துக்கு அட்ரஸ் சொல்ல முடியாது, மனைவி வைதியசாலைல இருக்கறதா யாரோதான் ஞாபகப்படுத்துறாங்க). அப்புறமா அவருக்கு நடைமுறை வாழ்கையில உள்ள நெறைய விஷயங்கள் தெரியாது (போலீஸ் ஸ்டேஷன் போய் கம்ப்ளைன் பண்ணறது, வக்கீல் கோர்ட்ல இருப்பாருங்கங்குறது, இத்தியாதி இத்தியாதி). ஒரு சின்ன விஷயம் பத்தி மட்டுமே வாழ்க சுழல்றது, மத்த எத பத்தியுமே கவலை இல்லாதது ( நிலா வேணும்,நிலா வேணும்), அப்புறமா எதையுமே புரிஞ்சுக்க முடியாதது (திருடன் தன்கிட்ட பணத்த புடுங்கிட்டு ஓடுறது புரியாது, தன்ன சுத்தி என்ன நடக்குதுங்குறது புரியாது, இந்த மாதிரி). நிக்க சொன்னா ஒரே எடத்துல நிக்கிறது, நேர்மை (நதண்ணி குழாய மூடுறது, சிக்னல் விழுந்ததுக்கு அப்புறம் யெல்லோ லைன் கிராஸ் பண்றது) அப்புறம் மானரிசம். இதெல்லாம் வச்சி பாக்குறப்போ கிருஷ்ணாவோட பிரச்சின என்னங்குறது புரியவே மாட்டேங்குது. இதுல இருக்குற ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை மனநிலை குறைவோடு சம்பந்தப்பட்டவை. இவருக்கு கண்டிப்பா Asperger syndrome கிடையாது (மை நேம் இஸ் கான்ல ஷாருக் கானுக்கு உள்ள வருத்தம்) ஆனா நடிப்புல பாதிக்கு மேல ஒரே மாதிரி இருக்கு. வேற ஏதாவது autism spectrum disorders இருக்குன்னு பாத்தா அதுவும் கொழப்பமா இருக்கு, Psychosis , உஹூம். அப்ப என்னதான் இவரோட பிரச்சின, ஒண்ணுமே புரியல.

 இது இயக்குனரோட கோளாறா இல்ல நடிகரோட புரிந்துகொள்ளல்ல இருக்கற கோளாறா னு புரியல. இந்த மாதிரி ஒரு விசயத்த நடிகர் கமல்ஹாசன் கையில எடுத்துகிட்டா என்ன செய்வாரோ அதத்தான் விக்ரமும் செஞ்சிருக்கார். நான் ஒரு நடிகன்குற அடையாளத்த முற்படுத்தி, சும்மா பாட்டுக்கு நடிச்சி தொலைக்கிறது, பார்வையாளன ஒரு முட்டாளாவே பாவிச்சு தனது முட்டாள்தனத்த மறைகிறது. (இதைத்தானே கால காலமா செஞ்சிட்டு இருக்கீங்க) மை நேம் இஸ் கான்ல உள்ள அளவுக்கு கூட இந்த பாத்திர படைப்புல நேர்மை இல்லன்குறதுதான் கொடும. இதுல என்ன விசயம்னா இந்த குழப்பத்தால  படமே டம்மி ஆகிடுது. எப்பிடிடா ஒரு கொழந்தக்கி கொழந்த பொறக்கும், எங்க சாதரணமா மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான வன்முறைய காணல இப்படியெல்லாம் கேள்வி கேக்குறதுக்கும், இது டிராமா இல்ல பாண்டசி படம்னு ஒருத்தன் விமர்சனம் எழுதுரத்துக்கும் காரணமாயிடுது. இயக்குனர் விஜய்கிட்ட கேட்டா இது "இது ஐஆம் சாம் , ரெயின் மேன், மை லெப்ட் புட், மற்றும்  அவரோட ஒரு கசின் பிரதர் கிட்ட இருந்து வந்த இன்ஸ்பிரேஷன்னு சொல்றார், அதுதான் எல்லாம் சேர்ந்து ஒரே காக்டெயில் ஆகிருச்சு போல). ஆனாலும் பாராட்டபட வேண்டிய ஒரு விஷயம் மகளுக்கும் தந்தைக்கும் இடையிலான பாசம் ஒரு கவிதைபோல படமாக்கபட்டிருக்கு, ஆனா இது புரியாத கவிதை, அழகா இருக்கு, ஆனா என்னன்னே புரிய மாட்டேன்குதுங்குற நிலைமைதான் நமக்கு. கிருஷ்ணாவின் பாத்திரப்படைப்பும் அதுக்கு உயிர் கொடுத்த விதமும் தான் இதுக்கு முழு காரணம். இன்னம் கொஞ்சம் நேர்த்தியா சொல்லியிருக்கலாமோன்னு தோணுது.
இவ்வளவையும் தாண்டி இந்தப்படம் மக்கள் மனத கவர்ந்திருக்குன்னா அது படத்துல உள்ள நகைச்சுவை இழைதான், அதாவது  வழக்கம்போல  இந்த படத்தையும் நம்ம தலைவர் சந்தானம்தான் காப்பாத்தியிருக்கார். இந்த படத்துக்கு தலைவர் ஒரு மிகப்பெரிய பிளஸ், ஏன்னா சாதரணமா படம் பாக்க போற ரசிகன் நெறைய கேள்வி கேக்காம பாத்துட்டு வாரத்துக்கு தலைவர்தான் முக்கிய காரணம், அவரு மட்டும் இல்லனா இந்த படமும் இந்த வருஷத்தின் ராவணன் (சொதப்பல்) லிஸ்ட்ல சேர்ந்திருக்கும்.
 
முக்கியமான விஷயம், இந்த படம் ஐ ஆம் சாம் படத்தோட காபியாம், அந்த படம் இதவிட அற்புதம்னு சிலரும், அதுவே மொக்க அதுட காப்பி அதவிட மொக்கன்னு சிலபேரும் சொல்லிக்கிட்டு திரியுறாங்க, நான் இன்னமும் அந்த படம் பாக்கல, சில வேள அதுல இன்னும் நெறைய விஷயங்கள் சொல்லியிருக்கலாம், தமிழ் ரசிகர்கள் முட்டளுங்கதானே அப்பிடின்குற இந்த தமிழ் சினிமா படைப்பாளிகளின் எகத்தாளமான போக்கால அதுல சொல்லப்பட்ட நெறைய விசயங்கள இவங்க டம்மி பண்ணியிருக்கலாம், ஆனா நான் ஒன்னு கேக்கணும், ஐ ஆம் சாம் படத்துல சந்தானம் இருக்காரா? இல்லல, அப்பிடின்னா அதவிட இதுதான் பெஸ்டு


சந்தானம் பஞ்ச் 1:  இது படமா , இல்ல ஸ்டேஜ்  ட்ராமாவா? ஒரே அமெச்சூர் பாத்திரங்களா சுத்திகிட்டு இருக்கு?
சந்தானம் பஞ்ச்  2 I am Sam படத்த எடுத்த Jessie Nelsonஅ விடதமிழ் பிளாகர்ஸ்தான் அதிகமா " I am Sam" ," I am Sam" சொல்லி இருப்பாங்க, எதுக்கு எடுத்தாளும் அதயே சொல்றாங்களே.
சந்தானம் பஞ்ச் 3: ஒழுங்கா படிக்காததனாலதான் இவனுக படத்தயெல்லாம் பார்த்து தொலைக்க  வேண்டியதா இருக்கு.

Sunday, July 17, 2011

வளரும் சந்தானமும் ஒழிக்க நினைக்கும் சில தமிழ் சினிமா இணையங்களும்

பாஸ் என்கிற பாஸ்கரன் , சிவா மனசுல சக்தி வெற்றிப்பட இயக்குனர் M.ராஜேஷின் ஓகே ஓகே படபிடிப்பில்  கலந்துகொள்ளாமல் சந்தானம் டிமிக்கி கொடுக்குராறாம்.  திமுக தேர்த்தலில் தோத்ததுதான் அதுக்கு காரணமாம். அப்புடின்னு ஒன்னு ரெண்டு தமிழ் சினிமா இணையதளங்கள் சொல்லுது.
  1. http://www.tamilcinema.com/  ஒரு கல்லும் ஒரு கண்ணாடியும் மோதிக் கொண்டால் கண்ணாடிக்குதானே கேடு? அதைதான் ஏற்படுத்தி வருகிறாராம் சந்தானம். உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கும் ஒரு கல் ஒரு கண்ணாடி படப்பிடிப்பு சந்தானத்தால் தடுமாறிக் கொண்டிருப்பதாக தகவல். 
  2. http://mullaivaanamsinema.blogspot.com முந்தைய ஆட்சியின்போது கைநிறைய கால்ஷீட்டை அள்ளிக் கொடுத்த சந்தானம், இப்போது ஆட்சி மாற்றத்தையடுத்து முன்பு காட்டிய தாராளத்தில் ஒரு சிறு பகுதியைக் கூட காட்டவில்லையாம். அநேகமாக ஹீரோ உதயநிதி வருகிற எல்லா காட்சியிலும் சந்தானமும் இருப்பதால், இவர் வந்தால்தான் அவர் நடிக்க முடியும் என்கிற அளவுக்கு நிலைமை. 
 இல்ல தெரியாமதான் கேக்குறோம் இந்த  தமிழ்சினிமா.காம் என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா. இவிங்க இஷ்டத்துக்கு அள்ளி விடுறாங்கே. உண்மையில் நடந்தது என்னன்னா???
ஓகே  ஓகே படத்தின் படபிடிப்புக்காக சந்தானம், உதயநிதி மற்றும் இயக்குனர் M.ராஜேஷ் எல்லாம் ஜூலை 12ம் திகதி மும்பை போய் இருக்காங்க, மும்பை குண்டு வெடிப்பின்போதும் படக்குழுவினர் மும்பைலையே இருந்து இருக்காங்க, ஆனால் குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் இருந்து  சுமார் 70km தூரத்தில் இவர்கள் இருந்ததால் இவர்களுக்கு ஒரு பாதிப்பும் இல்லை.  முன்னரே திட்டமிட்டப்படி ரெண்டே நாளில் ஷூட்டிங்கை முடித்துக்கொண்டு ஜூலை 15ம் திகதியே சென்னைக்கு திரும்பி விட்டார்கள் அத உதயநிதியே  ட்விட்டரில் சொல்லி உள்ளார். 
இது மும்பையில் சந்தானமும் உதயநிதியும் எடுத்துக்கொண்ட படம்.(ஹன்சிகா எடுத்த படம்)
அப்புறம் இன்னொரு விஷயம் , சந்தானமும் உதயநிதியும் தான் இன்னிக்கு டேட்டுக்கு கோடம்பாக்கத்தின் நெருங்கிய நண்பர்கள். விஜய் டிவி அவார்ட் பங்க்ஷனின் போது விழா ஆரம்பித்து முடியும் வரை இருவரும் பக்கத்து பக்கத்து சீட்டிலேயே இருந்தனர். மேலும் இந்த விடயத்தை confirm செய்வதற்கு நாம் உதயநிதியை twitterஇல் தொடர்பு கொண்டு கேட்டோம். அதற்கு அவரின் பதில்கள்.





 சந்தானம் மிக விரைவாக வளர்ச்சி அடைந்துகொண்டு வருகிறார். அடுத்தடுத்து விருதுகளையும் அள்ளிகொண்டு வருகிறார். அவரின் வளர்ச்சியை பொறுக்க முடியாமலே தமிழ்சினிமா.காம் போன்ற சில மூன்றாம் தர இணையங்கள் இவ்வாறான அவதூறுகளை பரப்பிக்கொண்டு போய் வதந்திகளை கிளப்புகின்றன. அரசியல்  காரணங்களுக்காக வரவிருக்கும் ஒரு நல்ல படத்தை நசுக்க பார்க்காதீர்கள்.

சந்தானத்த என்ன அகா துகானு நினைச்சிடீங்களா?



Friday, July 8, 2011

அவன் இவன், மாயைகளும் நிதர்சனமும்.



அவன் இவன் திரைப்படம் சமீபத்தைய தமிழ் திரைப்படங்களில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம், காரணம் பாலா. பாலாவினுடைய படைப்பு பற்றி விமர்சிக்கும் அளவுக்கு ஞானமோ அறிவோ (ரெண்டுமே ஒன்னுதானோ) நமக்கு கிடையாது, எனவே அதை வேறு நபர்களிடம் விட்டுவிடுவோம்(அப்புறம் ஒனக்கு என்ன ம......க்கு இந்த வேல அப்பிடின்னு நீங்க கேட்டாலும்) ஒன்றரை வருடங்களுக்கு மேலாக எதிர்பார்ப்புடன் காத்திருந்து பார்த்த ஒரு திரைப்படம் பற்றி எனது அபிப்பிராயங்களையும் பதிவு செய்துவிட வேண்டும் என்கிற நப்பாசையில் இந்த பதிவு. 

யதார்த்த சினிமாவுக்கு வழிகாட்டியாக தரமான திரைப்படங்களின் அடையாளமாக திகழ்ந்த பாலாவின் திரைப்படங்கள் எப்போதுமே வாழ்வில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் கதாபாத்திரங்களை சுற்றியே பின்னப்பட்டிருக்கும். உதாரணமாக நந்தா, அல்லது பிதாமகனை எடுத்துக்கொண்டால் நந்தாவோ அல்லது சித்தனோ நாம் அன்றாடம் காணும் ஒரு கதாபாத்திரம் அல்ல. எனினும் சூரியா மற்றும் விக்ரமின் நடிப்பினால் அந்த கதாபாத்திரங்கள் செயற்கை தன்மை அற்று நம்மை படத்துடன் ஒன்றிப்போக வைத்துவிடுபவை. அவன் இவனில் பாலா கண்டிருக்கும் முதல் தோல்வி வால்டர் வணங்காமுடி கதாபத்திரத்தின் செயற்கை தன்மையே ஆகும். இரண்டாவது இடையிடையே எட்டிப்பார்க்கும் யதார்த்த மீறல்கள். மூன்றாவது காரணம் கூறப்படாத ஹைனஸ்  மற்றும் அவன்-இவன் குடும்பத்திற்கான நட்பு. நான்காவது இறுதியாக படம் பேசும் அடிமாடு சந்தை அரசியல். இதில் முதல் காரணம் தவிர்த்து மற்றயவை பற்றி பல விமர்சகர்களும் போதுமான அளவுக்கு விமர்சித்து விட்டதால் அவற்றை விட்டு விட்டு, அவன்-இவன் படம் தோற்றுவித்த மாயையான விஷால் நடிப்புடன் தொடர்புடைய முதல் காரணத்தை மட்டும் இங்கே அலசுவோம்.

அம்பிகாவின் நடிப்பில் தொடங்கி அந்த பெரியவர் வரை அத்தனை பேரும் நேர்த்தியாக கொடுக்கப்பட்ட வேலையே செய்திருக்கிறார்கள். ஆர்யா பற்றி சொல்லவே வேண்டாம் அவர் பாத்திரம் அறிந்து நடித்திருக்கிறார். ஆர்யாவுடநிருக்கும் அந்த பய்யன் கூட மிக இயல்பான நடிப்பை அழகாக வெளிக்கொணர்ந்திருக்கிறார். விஷால் ரொம்பவே கஷ்டப்பட்டு உடலை வருத்தி நடித்திருக்கிறார், அது கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டிய விஷயம். அடுத்தது ஒரு மாஸ் ஹீரோ என்கிற வட்டத்தை தாண்டி நடிக்க முயற்சி செய்ய அவர் அடுத்துக்கொண்ட பிரயர்தனங்களையும் பாரட்டியாகவேண்டும். ஹீரோவுக்கான ஈகோவை விட்டுக்கொடுக்க வேண்டிய ஒரு கதாபத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதையும் பாராட்டவேண்டும் (எல்லாமே நல்லம்னு சொல்றியே அப்புறம் ஏன் நடிப்பு செயற்கைங்குரன்னு நீங்க கேக்குறது புரியுது). ஆனால் அவர் இந்த படத்துக்கும் அந்த கதாபாத்திரத்துக்கும் எவ்வளவு அழகு சேர்த்திருக்கிறார் அல்லது நியாயம் சேர்த்திருக்கிறார் என்பது கேள்விக்குறியே. விஷாலின் நடிப்பில் முதல் பிரேமிலிருந்து ஒரு செயற்கைத்தனம் ஓட்டிக்கொண்டே இருக்கிறது. அதுவே நம்மை படத்துடன் ஒன்றிப்போக முடியாதபடி செய்துவிடுகிறது (விஷால் நடிக்கிறார்னு தெளிவா புரியுதுங்க, அதுதான் மேட்டர்) விஷாலின் வாய்ஸ் மாடுலேஷன் இன்னமும் திமிரு லெவலை தாண்டவில்லை (படு மொக்க அப்பிடின்னு வாசிச்சிக்கோங்க) அது இந்த படத்தில் அவர் செய்யும் கரெக்டரை ரொம்பவே பாதிக்கிறது. செயற்கை தன்மையை மேலும் பறை சாற்றுகிறது.

விஷால் நடிப்பதற்கான கதவுகளை பாலா முற்றாகவே திறந்துவிட்டிருக்கிறார். அதை அவர் எந்த அளவு பிரயோசனப் படுத்தியிருக்கிறார் என்பதை அறிய ஒரு காட்சியை அலசுவோம். சூர்யா வரும் அந்த நவரச காட்சி. இந்த காட்சியை நான் குறைந்தது எழு தடவை பார்த்திருப்பேன். காட்சி முடிந்ததும் மனசில் நிற்பது சூரியாவும் ஆரியாவும் தான் (அங்கேயே நம்ம மாப்புள கோட்ட விட்டுடாபுல). இந்த காட்சி பிதாமகன் திரைப்படத்தில் சிம்ரன் - சூரியா பங்கேற்கும் நடனக்காட்சிக்கு ஒப்பானது. இரண்டையும் பாருங்கள். சிம்ரன் நடனத்தையும் சூர்யா நடனத்தையும் பற்றி நான் சொல்லவேண்டியதில்லை  முழு தமிழ்நாடே அறியும். ( புள்ளயாண்டான் அந்த டிபட்மன்ட்ல படு வீக்கு). ஆயினும் அந்த காட்சி முடிந்ததும் எல்லார் மனதிலும் சூர்யாவே நிறைந்திருப்பார், அவர் உடல் மொழி அவ்வளவு தூரம் பேசியிருக்கும். சிம்ரன் சூர்யா இருவருமே சம அளவில்தான் திரை நேரத்தை பங்குபோட்டிருப்பர்கள். அவன் இவன் காட்சியில் முழு நேரத்தையும் விஷால் பயன்படுத்திக்கொள்ள அவகாசம் வழங்கியிருப்பார் பாலா. இடையிடையே சில நொடிகள் மட்டுமே சூர்யாவையும் ஆரியாவையும் காட்டியிருப்பார். அனால் அவர்கள் இருவரும் நெறயவே ஸ்கோர் பண்ணியிருப்பாங்க. உதாரணமா கருணையை வெளிக்கொணர ஏறக்குறைய ஒன்றரை நிமிடங்கள் விஷால் முயற்சித்திருப்பார், ஆனால் சூரியா அதனை ஒரு வினாடியில் காட்டுவார் (விஷாலோட கண்ண டொக்காக்கி பயல மக்காகிட்டாங்களோ - அவரு கண்ண காட்டி நடிச்சிருந்தா இன்னமும் மொக்கயாகியிருக்கும்). ஆர்யா, முகத்தில் பெருமிதத்தையும் பாசத்தையும் ஒன்று சேர சில வினாடிகளியே காட்டுவார். இது விஷால் தவறவிட்ட தருணங்களின் தொகுப்பு.
நீங்களும்  அத இன்னொருவாட்டி கொஞ்சம் பாருங்க:



ப்ளேட முளிங்கிட்டதா சொல்லி வைத்தியசாலை போகும்போதும் சரி (எப்படியா மூணு டிபாட்மன்ட் தேடிக்கிட்டிருக்கிற திருடன ஆஸ்பிடல்ல இருந்து நேரா வீட்டுக்கு அனுப்பினீங்க, அய்யா பாலா இத ஒங்ககிட்ட இருந்து எதிர்பார்கல) , விஷாலின் நவரசத்துக்கு மயங்கி ஹைனசிடம் புலம்பும் போதும் சரி, பூட்டு திறக்கும் போதும் சரி, அப்புறமா விஷால வெறுப்பேத்தும்போதும் சரி இன்னம் பல இடங்களில் ஆர்யா ஆர்பாட்டமில்லாமல் நெறயவே ஸ்கோர் பண்ணியிருக்கார் (நண்பேன்டா). 

பாலா இயக்கத்தில் எங்கயோ கோட்ட விட்டுருக்கார், விஷால் நடிப்பில் மொத்தமா கோட்ட விட்டுருக்கார் (சாமி, நீங்க அம்மா பாருங்க அய்யா பாருங்க நானும் நடிச்சிருக்கான் நானும் நடிச்சிருக்கன்னு சொல்றது தாங்கல). தரம் பற்றி யோசிக்காமல் பொழுதுபோக்காக பார்க்க இது ஒரு நல்ல படம் (ஆர்யா இருந்ததால தப்பிச்ச படம்) 

டிஸ்கி: ஆமா இதுக்கு எதுக்கு ஜெயம் ரவி படத்த போட்டு இருக்கனு நீங்க கேப்பீங்க, அதுக்கும் ஒரு காரணம் இருக்கு ,அதாவது இந்த படத்துல விஷால் செஞ்ச மாறுகண் வேஷம் ஓலகதுலையே மொத மொறையானு கின்னஸ்ல போடுறதுக்கு விஷால்&family TRY பண்றாங்களாம், ஆனா இத இந்த ஜெயம் ரவி S/O மகாலக்ஷ்மி காலத்துலேயே செஞ்சிட்டாறு
இதாங்க அந்த பாட்டு லிங்க் http://youtu.be/d2VJW5CHxhQ