Showing posts with label படு மொக்க. Show all posts
Showing posts with label படு மொக்க. Show all posts

Wednesday, September 19, 2012

நாங்க நினைப்பது என்னன்னா, ஆனா நடப்பது என்னன்னா!!

வாழ்க்கைல  எப்பவுமே நாங்க நினைக்கிற விடயங்களுக்கும், ஆனா உண்மையா நமக்கு நடக்குற விடயங்களுக்கும்   இடையில் பாரியளவிலான வித்தியாசங்கள் இருக்கும் . அது போன்ற சில விடயங்களின் தொகுப்பே இப்பதிவு.....


1.  நாங்க யாருன்னா: யாரவது ஒரு  பிரபல நடிகரின் அதி தீவிர ரசிகர்கள்.

மேட்டர் என்னன்னா: நம்ம தலீவர் சமீபத்துல நடிச்ச எல்லா படங்களும் படு-மொக்கை படு-தோல்வி படங்கள். நம்ம தலீவர் அடுத்த தீபாவளிக்கோ, பொங்கலுக்கோ ஒரு படத்துல தீவிரமா(!!)  நடிச்சிகிட்டு இருப்பாரு. ஒலக மகா டைரக்டர் அந்த படத்த எடுத்துகிட்டு இருப்பாரு. அந்த படத்தோட புரோட்யூசர்  படத்துக்கு செமையா பில்டப் குடுத்து ப்ரோமோஷன் பண்ணிக்கிட்டு இருப்பாரு.

நாங்க நினைப்பது என்னன்னா: இந்த படம் மட்டும் வரட்டும், நம்ம தலீவர் ரேஞ்ஜே மாறபோகுது. கோலிவுட்ல நம்ம தலீவர்க்கு இருக்குற   அத்தன போட்டி நடிகர்களும் ஒட்டுமொத்தமா ஒம்போது நாளைக்கு கக்கூஸே கதின்னு கழிச்சிகிட்டு இருக்க போறங்கெ. எந்திரன், 3-இடியட்ஸ்ன்னு அத்தன பட கலெக்ஷன் ரெக்கார்ட்ஸையும் நம்ம தலீவர் படம் ஒரே வாரத்துல பீட் பண்ணிரும். இந்த படத்துக்கு பிறகு  தலிவர்க்கும் அரசியல்ல ஒரு நிலையான இடம் கெடைச்சிடும். நாங்களும் பொண்டாட்டி கொழந்த குட்டின்னு அப்புடியே செட்டில் ஆயிடலாம்.

ஆனா நடப்பது என்னன்னா: இதுக்கு முன்னாடி நம்ம தலிவர் நடிச்ச அந்த நாலு படு-மொக்கை படு-தோல்வி படங்களும் எவ்வளவோ மேல். இந்த புது படம் அந்த நாலத்தயும்  விட படு மொக்கையா, படு கேவலமா, நாறத்தனமா இருக்கும்.

*************************************************
2. நாங்க யாருன்னா:  சாப்ட்டுவேரு புடுங்குற கம்பேனிலயோ இல்ல அது மாதிரி வேற எதாவது ஒக்காந்துகிட்டே வேலை செய்ற 27,28+ வயசு இளைஞர்கள்.

மேட்டர் என்னன்னா: நாம ஒக்கந்துகிட்டே வேல செய்றோமா, அப்புறம் தினம் நாலு வேளை புல் மீல்சும் , இடையிடையில ஸ்னேக்ஸும் திங்கிறோமா, இப்ப நமக்கு லேசா இள-தொந்தி(தொப்பை) வந்துருக்கு.

நாங்க நினைப்பது என்னன்னா: இந்த தொந்திய குறைக்கிறதுக்காக (மறைக்கிறதுக்காக)  ஒலகத்துல இருக்குற அத்தன தில்லாலங்கடி வேலையையும் செய்வோம். காத்தாலயே ஜாகிங், வாக்கிங் போக ட்ரை பண்ணுவோம். கம்பெனில ஜிம் இருந்தா அதுக்கு போகயும் ட்ரை பண்ணுவோம். பக்கத்து தெருல இருக்குற சூப்பர் மார்க்கட்டுக்கு நடந்தே போவோம். அப்புடி நடந்து போனா, நம்ம தொந்தி அடுத்த நாளே கரைஞ்சிடும்னு நெனச்சுப்போம். பிரபல சேனல்கள்ள மிட் நைட்ல போடுற டெலி-பை புரோகிராம்ஸ எல்லாம் ஒன்னு விடாம பார்த்து அதுல சொல்ற  நம்ம பட்ஜெட்டுக்கு ஏத்த எக்ஸர்ஸைஸ் ஈக்விப்மென்ட எல்லாம் வாங்கிருவோம். அப்புடி அதுல எக்ஸேர்ஸைஸ் செஞ்சா ஒரே  மாசத்துல சல்மான்கானுக்கு போட்டியா  சிக்ஸ் பேக்ஸ்கோ, இல்ல அமீர்கானுக்கு போட்டியா எயிட்  பேக்ஸ்கோ கொண்டுவந்துரலாம்ன்னு நெனச்சிக்கிட்டு இருப்போம். எக்ஸேர்ஸைஸ் செஞ்சி முடிச்சிட்டு யாரும் இல்லாதப்போ, கண்ணாடி முன்னாடி ஷர்ட்ட தூக்கி தொந்திய அளந்து பார்போம். 2mm கொரஞ்சிருக்குன்னு நெனச்சுப்போம்.

ஆனா நடப்பது என்னன்னா: மேல சொன்ன ட்ரை பண்ணுற சமாச்சாரங்க எல்லாம் ட்ரை பண்ற லெவல்ல தாண்டியே இருக்காது. வாங்கிபோட்ட எக்ஸேர்ஸைஸ் ஈக்விப்மென்ட்ஸ நம்ம வீட்டு பொம்மனாட்டிக துணி காய போடுறதுக்கு யூஸ் பண்ணிக்கிட்டு இருப்பாங்க. நாங்க 35+ வயசுல  "ஜி" படத்துல வர்ற தல-ய மாதிரி ஆகுறதையும் , 45+ வயசுல தமிழ்நாட்டு போலீஸ்ல சேர்றதுக்கான தகுதிகள உருவாக்கிக்கிறதயும் யாராலுமே தடுக்க முடியாது.

*************************************************



3.  நாங்க யாருன்னா: தொழில் செய்துகொண்டே பதிவெழுதும் பதிவர்கள்

மேட்டர் என்னன்னா: நம்ம ஆபிஸ்ல நமக்கு மேல இருக்குற மேனேஜர்/சூப்பர்வைசர்/ஹெட்னுன்னு யாராவது ஒரு மேலதிகாரி இந்த வாரத்துக்குள்ள முடிக்க சொல்லி நமக்கு பல ப்ராஜக்ட்ஸ் கொடுத்துருப்பாரு. எல்லா ப்ராஜக்ட்ஸ்க்கும் இன்னும் ரெண்டு நாள் டெட்லைனே இருக்கும். எப்புடிடா இத்தினி வேலையையும் ரெண்டே நாள்ல முடிக்கிறதுன்னு செம டென்ஷன்ல இருப்போம்.

நாங்க நினைப்பது என்னன்னா: இந்த டென்ஷன எல்லாம் குறைக்கிரதுக்கு ஒரு செம காமெடி பதிவு எழுதுனா மனசு ரிலாக்ஸ் ஆகிடும்னு நெனச்சிப்போம். தமிழில் சமகாலத்தில் பதிவெழுதும் தலைச்சிறந்த பின்நவீனத்துவவாதியான நம்மளோட பதிவுகள் ஏதும் சமீபத்துல வரலையேன்னு நமது வாசககோடிகள்   பீல் பணிகிட்டு இருப்பாங்களே, அவங்கள திருப்தி படுத்துறதுக்காகயேனும் ஒரு செம காமெடி பதிவு போடனும்னு நினைப்போம். ஏற்கனவே பிரபல பதிவரா இருக்குற நாங்க, இந்த பதிவ மட்டும் பப்ளிஷ் பண்ணிட்டா, விக்ரமன் பட ஹீரோ மாதிரி ஒரே நைட்ல பத்து லட்சம் ஹிட்ஸ்ங்குற நம்ம டார்கெட்ட அச்சீவ் பண்ணி, கேபிள்,சி.பி,உ.த அண்ணாச்சிகள் எல்லாரையும் தாண்டி  டாப் டென் தமிழ் பதிவர்கள்ள இடம்பிடிச்சிடலாம்ன்னு கன்போர்மா நெனச்சிப்போம்.


ஆனா நடப்பது என்னன்னா: நாங்க செம காமெடின்னு நெனச்சிட்டு எழுதுன போஸ்ட் வழக்கம் போலவே செம மொக்கையா இருக்கும். பதிவுலகத்துல நமக்கு தெரிஞ்ச , நம்ம மேல பரிதாப பட்டு வர்ற ஒன்னு ரெண்டு நண்பர்கள்ல தவிர வேற யாருமே நம்ம பிளாக் பக்கம் வந்துருக்க மாட்டாங்க. வழக்கம்போலவே  இந்த போஸ்ட்டுக்கும் 200 ஹிட்ஸ்க்கு மேல வராது. ஏற்கனவே இருக்குற வேல டென்ஷன்+இந்த டென்ஷன்னு செம காண்டாகி கம்ப்யூடர் முன்னாடி உட்காந்து ஸ்க்ரீனையே வெறித்து பார்த்துகிட்டு  இருப்போம். நாளைக்கு ஆபிஸ் போய் மேலதிகாரிக்கு என்னெல்லாம் பொய் சொல்லலாம்னு சீரியா ஒக்காந்து யோசிச்சிட்டு இருப்போம்.




*************************************************

தொடரலாம்....

Friday, August 31, 2012

தமிழ்சினிமாவில் அப்பட்டமான காப்பிகள்: முகமூடிகள் கிழிகின்றன!

SPOOF POST 
தமிழ்/இந்திய  படங்கள்ல இருந்து சுட்ட ஹாலிவுட் படங்கள பத்தி நாங்க ஏற்கனவே எழுதுன பதிவுகள்  Avatar - குருவி படத்தின் தழுவலா? மற்றும் Batman ஆன வேலாயுதம் மூலமாக ஹாலிவுட் திருட்டு கலாச்சாரத்தை பற்றிய ஒரு தெளிவான விளக்கத்தை நீங்கள் பெற்றிருப்பீர்கள் என நம்புகிறோம். ஹாலிவூட்காரங்க மட்டும்தான் நம்மூரு படங்கள காப்பி அடிக்கறாங்களா, நம்மாளுக மட்டும் என்ன கொறச்சலா, தமிழ்ல வெளிவர்ற  படங்கள் எல்லாமே எதோ ஒரு உலகப் படத்தோட அப்பட்டமான காப்பிதான்னு நமக்கு நல்லாவே தெரியும். இருந்தாலும் நாங்களும் எங்க பங்குக்கு கொஞ்சம் தமிழ்பட கேரக்டரைசேஷன்களில் உள்ள சில உலகபடங்களின்  அப்பட்டமான காப்பிகள் பத்தி இந்த  பதிவில் சொல்லபோறோம்.

சமீபத்திய சென்சேஷன்  ஹிட்டு ஒரு கல் ஒரு கண்ணாடி படத்துல இருந்து ஆரம்பிப்போம். அதுல சந்தானம் கேரக்டர எடுத்துகிட்டீங்கன்னா அவரு ஒரு கல்யாண கார் ஓட்டுபவர், அதாவது ஒரு ஜானவாச கார வச்சிக்கிட்டு அத சேட்டு வீட்டு திருமணங்களுக்கு வாடகைக்கு ஓட்டிகிட்டு இருப்பாரு. இந்த கேரக்டர் ஸ்கெட்ச் நம்ம இயக்குனர் M.ராஜேஷின் சொந்த சுயபுத்தியில் உதிச்ச ஒரு கேரக்டர்ன்னு நீங்க நெனச்சிங்கன்னா உங்கள விட ஒரு அடிமுட்டாள் யாருமே இந்த உலகத்துல  இருக்க முடியாது. ராஜேஷும்  மத்த எல்லா தமிழ் சினிமா டைரக்டர்ஸ்  மாதிரியே  இத ஒரு உலக படத்துல இருந்து சுட்டு (அதாவது அவுங்க மொழில இன்ஸ்பைர் ஆகி-யாமாம் ) நம்ம முட்டாள் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு குடுத்துருக்காரு. 1988ல வெளிவந்த 奸人本色ங்குற ஹாங்காங் படத்த பத்தி உங்க எல்லாருக்கும் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்ல. 01/01/1988 ல திரையிடப்பட்டு  01/07/1988 வரைக்கும் ஹாங்காங்ல செம ஓட்டம் ஓடுன ஒரு காமெடி படம். இந்த படத்துல பிரபல ஹாங்காங்  நடிகர் சின்-ஹோ-யின்க் (Sin Ho-Ying) கூட ஒரு வெட்டிங் கார் டிரைவராதான்  வருவாரு. அந்த கேரக்டர் அப்புடியே பட்டவர்த்தனமா சுட்டு தமிழ்படுத்தி சந்தானத்த நடிக்க வச்சிட்டாரு ராஜேஷ்.M.

ஹாங்காங் படத்தின் அப்பட்டமான தழுவல்
இல்லையே? ஓகே ஓகேல  சந்தானம் ஒரு தியேட்டர் காண்டீன் டெலிவரி பையன்னு ஒரு சீன்ல அறிமுகபடுத்துவாங்களே?ன்னு கிராஸ் கொஸ்டின் கேக்குறீங்களா? அடப்ப்ப்போங்க சார், ஒரே ஒரு சீன்ல வந்தாலும் அது கூட 1970கள்ள  புகழ்பெற்ற  அமெரிக்கன்-பிரிட்டன் டிவி ப்ரோக்ராம் The Muppet Show ல ரிச்சர்ட் ஹன்ட்ங்குற நடிகை நடித்த க்லேடிஸ் பாத்திரத்தின் ஆம்புள வேர்ஷன்தான். அதுல அவுங்க மப்பெட் தியேட்டர்ல உணவு பரிமாறும் Cafeteria ladyயா வருவாங்க. இதுல நம்ம சந்தானம் சத்யம் தியேட்டர் கேண்டீன்ல "Welcome to Sathyam Cinemas, Enjoy your snacks"ன்னு தமிழ்ல சொல்லிக்கிட்டு வருவாரு. அது ஒன்னுதான் வித்தியாசம். மத்தபடி ரெண்டும் ஒன்னுதான். திருட்டு பசங்க.

மப்பெட் ஷோவின் இன்ஸ்பிரேஷன் கேண்டீன் பாய்

அடுத்ததா  சிறுத்தை படத்தையே எடுத்துக்குங்க. அந்த படத்துல நம்ம சந்தானம் நடிச்ச கேரக்டர ஆராய்ச்சி செய்றதுக்கு முன்னாடி, அந்த  படத்துல சந்தானம் கேரக்டர் பேர பார்திங்கனா "காட்டுபூச்சி"!! இந்த பேர எங்க இருந்து சுட்டாங்க தெரியுமா? எந்த ஆங்கில படத்தின் தழுவல் தெரியுமா? படத்துல அது என்ன பூச்சின்னு சரியா காட்டவில்லை. காட்டுக்குள்ள இருக்குற பூச்சின்னா அநேகமா எட்டுக்கால் பூச்சியதான் மனசுல வச்சி இந்த பேர வச்சிருப்பாங்க. எட்டுக்கால் பூச்சி???!!! அதாவது சிலந்திபூச்சி!! அதாவது ஆங்கிலத்துல ஸ்பைடர்!! ஆமாங்க அந்த கேரக்டருக்கான இன்ஸ்பிரேஷன் ஸ்பைடர்மேன் படத்துல இருந்துதான் சுட்டுருக்காங்க. படம் வந்து அந்த காட்டுபூச்சி கேரக்டர் செம ஹிட்டாகி இவ்வளவு நாள் ஆகிருச்சி , சமீபத்துல விஜய் டிவி அவார்ட் பன்க்ஷனில் கூட இத பத்தி பேசிருக்காரு சந்தானம். யாரோ வீட்டுக்கு பக்கத்துல இருக்குற நிஜ கேரக்டர்ன்னு வாய் கூசாமா பொய் சொல்றாரு. ஆனா எந்த எடத்துலயும் ஸ்பைடர் மேன் திரைப்படத்துக்கு ஒரு சின்ன நன்றிய கூட சொல்லாத சந்தானத்தை இந்த இடத்துல மிக வன்மையாக கண்டிகிறோம்!!!

போட்டோ கூட ஒரே மாதிரின்னா பாருங்களே...

மேல  சொன்ன எல்லாத்துக்கும் ஆதாரம் இருக்கு. தேவைன்னா கமெண்ட்ல கேளுங்க. லிங்க் தர்றோம்.

டிஸ்கி: இது சும்மா ஆரம்பம் மட்டும்தான். அடுத்தடுத்து பாஸ்கரனின் நல்லதம்பி முடிதிருத்துபவர், சகுனி அப்பாதுரை ஆட்டோ டிரைவர்,கலகலப்பு வெட்டுபுலி ,கண்டேன் காதலை மொக்கராசு மாமா, தில்லாலங்கடி புட்டிபால் மெண்டல் பேஷன்ட்...  மாதிரி இன்னும் பல சந்தானம் கேரக்டர்களை எந்தெந்த ஆபிரிக்கன், கொரியன், பிரெஞ்சு, இத்தாலியன், ஹங்கேரியன், ரஷ்யன், உஷ்பெகிஷ்தான், செகோஸ்லோவாக்கியன் படங்கள்ல இருந்து சுட்டு (அதாவது இன்ஸ்பையர் ஆகி) எடுத்து இருக்காங்கன்னு சந்தானத்தின் முகத்திரைய கிழிக்க இருக்கோம்.


***************** ஹீ ஹீ... இது சும்மா.. ஒரு ஸ்பூஃப் பதிவு..*****************

Tuesday, August 7, 2012

ஹாலிவூட் திருட்டு: batman ஆன வேலாயுதம்

டிஸ்கி: இது ஒரு மொக்க பதிவு. பதிவ படிச்சிட்டு நாங்க மொக்க போடுரோம்ன்னு யாரும் சண்டைக்கு வரமாட்டோம்ன்னு சத்தியம் பண்ணி குடுத்துட்டு பதிவ படிங்க.


பஹெலி திரைப்படம் இரண்டாயிரத்து ஐந்தாம் ஆண்டு ஜூன் மாதம் ஷாரூக் கான், ராணி முகர்ஜி நடிப்பில் வெளியாகி படு தோல்வி அடைந்த ஒரு படம். இரண்டாயிரத்து ஐந்தாம் ஆண்டிற்கான சிறந்த வேற்றுமொழி திரைப்பட பிரிவில் போட்டியிட இந்தியாவின் உத்தியோகபூர்வ ஆஸ்கர் பிரவேசமாக அனுப்பிவைக்கப்பட்ட படம். இந்த படத்தினை நீங்கள் சில பேர் பார்த்திருக்கலாம், பலர் பார்கமலும் இருக்கலாம். சிறந்த ஆர்ட் டைரெக்ஷன், சிறந்த நடிப்பு என பல நல்ல விடயங்களை கொண்டுள்ள படம். 1973 இல் வெளியான ஒரு படத்தின் ரீமேக்கான இந்த படம் கதை மக்களுக்குப் பிடிக்காமல் போனதால் பாக்ஸ் ஆபிசில் பணால் ஆகியது. இந்த படத்தின் கதை என்ன? 

புதிதாக திருமணமான ஒரு தம்பதி, கணவன் வியாபார நிமித்தமாக திருமணமான முதல் நாளே மனைவியை பிரிந்து செல்ல நேரிடுகிறது. அந்த பெண்ணை தற்செயலாக காண நேரிடும் ஒரு ஆவி அந்த பெண்ணின் மீது காதல் கொண்டு கணவன் உருவத்தில் பெண்ணின் வீட்டுக்கு வருகிறது. அந்த பெண்ணிடம் மட்டும் உண்மையை சொல்லி சம்மதமும் வாங்கி விடுகிறது, பின்னர் இருவருக்கும் ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. இறுதியில் நிஜ கணவனின் உடலுள் புகுந்துவிடும் ஆவி அந்த பெண்ணுடன் நிரந்தர குடித்தனத்தில் ஈடுபடுகிறது.

இப்போ இந்த மொக்க கதைய உங்களுக்கு இவ்வளவு தெளிவா எதுக்கு சொல்றேன்னா ஒரு ஆவியும் பெண்ணும் காதலிப்பது, குழந்தை பெற்றுக்கொள்வது என்கிற மேட்டர் இருக்கே இது படு இன்டரஸ்டிங் மேட்டர், இத ஹாலிவூட்ல ரீமேக்கனும்னா எப்புடி ரீமேக்கலாம்? திரைக்கதையில என்ன என்ன மாற்றம் செய்யலாம்? நம்ம அறிவுக் கண்ல உதிச்ச திரைக்கதை இதுதான்.


காதல் கதைகள்னா பருவ வயசுல இருக்கறவங்களுக்குத்தான் ரொம்ப பிடிக்கும், அதுவும் காலேஜ் போற பெண்களுக்கு, ஸோ நம்ம ஹீரோ ஹீரோயினுக்கு கல்யாணம் ஆக வேணாம். ரெண்டுபேரையும் காலேஜ் ஸ்டூடெண்ட்ஸ் ஆகவே காட்டனும். ஆவி மனுஷ ரூபத்துல வாரதுங்கரத ஹாலிவூட் ஆடியன்ஸ் ஏத்துக்க மாட்டாங்க படு மொக்கையா இருக்கும். ஆனா ஹாலிவூட்ல சக்க போடு போடுற ஒரு ஆவி இருக்கு, அதுதான் வம்பயர். அப்போ ஒரு வம்பயர் ஒரு பொண்ண காதலிக்கறதா கதைய பின்னலாம். அப்போ கணவன் காரெக்டர என்ன பண்றது? அத அந்த பெண்ணை காதலிக்கற இன்னொரு காரெக்டரா காட்டலாம். அது மனுஷன்னா, எதுக்குடி தேவையில்லாம ஒரு வம்பயர காதலிச்சிக்கிட்டு மனுஷனையே லவ் பண்ணித் தொலைக்கலாமேன்னு பாக்குறவன் கேள்வி கேப்பான், அத்தோட ஆவி வேற வேற உருவம் எடுக்கறதுதான் பஹேலி படத்தோட மெயின் பாயிண்டே, ஸோ கணவன் காரெக்டர ஷேப் ஷிப்ட்டர் ஆன ஒரு வயார் வுல்பா காட்டிடலாம். வயார் வுல்பும் வம்பயரும்தான் ஜென்ம எதிரிகள் ஆச்சே, ஒரு பிகருக்காக ரெண்டு பசங்க காதல் தேசத்துல அடிச்சுக்கற மாதிரி இங்க அவுங்க ரெண்டுபேரையும் அடிச்சிக்க வுட்டா செமையா இருக்கும். இப்போ கொழந்த, ஆவிக்கும் மனுஷனுக்கும் பொறக்குற கொழந்த ஆவியா, இல்ல மனுஷனா? ஏன் ரெண்டும் கலந்த ஒரு புதுவித கலவையா இருக்கக்கூடாது? கடைசியில முடிவ என்ன பண்றது, ஆவி மனுஷனா மாறுதுன்னு சொல்லாம அந்த பொன்னையும் வம்பயரா ஆக்கிடலாம், அப்போ பால கோடி ஆண்டுகள் இருவரும் சந்தோஷமாக வாழ்ந்தார்கள் அப்புடின்னு கதைய முடிக்கலாம். 

அப்பாடா, இம்புட்டு மேட்டர உள்ள நுளைச்சாச்சே அதனால இந்த படத்த ஒரு நாலு அஞ்சு பாகமா எடுக்கலாம்ன்னு ப்ளான் பண்ணிக்கிட்டு இருந்தா அப்புடியே ஒரு படம் ஏற்கனவே எடுத்து வச்சிருக்காங்களாம். படத்தோட பேரு Twilight (series). ஷப்பா முடியல, குருவியதான் அவதார்ன்னு எடுக்கராங்கன்னா இந்த ஹாலிவூட் காரங்க பஹேலி படத்த கூட விட்டு வைக்கல. இதுல கொடும என்னன்னா, இதே பேருல வந்த ஒரு நாவல தளுவித்திதான் நாங்க இந்த படத்த எடுத்தோம்ன்னு சொல்றாங்க, அந்த நாவல் வந்தது 2005 ஆக்டோபர்ல, ஆரிஜினால் கதை எந்த வருஷம்ன்னு தெரியல ஆனா கண்டிப்பா 1973க்கு முதல். பகல் கொள்ளடா சாமி. இது பத்தி நம்ம ராசு மாமாகிட்ட சொன்னப்போ அவரு இன்னுமொரு மேட்டர் சொன்னாரு, இந்த படத்துல ஹீரோ வம்பயரோட சக்தி என்னனா மனுஷங்களோட மனசுல நினைக்கிறது இவருக்கு கேக்கும், இது சந்திர முகி படத்துல நம்ம ரஜினி ஸார்கிட்ட இருக்கற சக்தி. சந்திரமுகி வந்தது 2005 ஏப்ரல். 

இப்போ ஹிந்தில வந்த இன்னுமொரு படம் பத்தி பார்ப்போம். 

வலது பக்கமா இருக்கற சின்ன பொண்ணுதான் ஹன்சிகா
கோயி மில் கயா: இந்த படத்தோட நாட் என்னன்னா, வேற்றுக்கிரகத்தில் அறிவுள்ள ஜீவராசிகள் இருந்தா நாம வேற்றுக்கிரக வாசிகள தேடுற மாதிரி அவுங்களும் தேடிக்கிட்டு இருக்கலாம், ஸோ நாம இங்க இருக்கறதா அவுங்களுக்கு மெசேஜ் அனுப்பினா ஒருவேள அவுங்க நம்மள தேடி வரலாம். இங்க ஒரு ஸயன்டிஸ்ட் "ஓம்" எனும் மந்திரத்த அனுப்பரதாவும் அப்புடி தேடி வாற வேற்றுக்கிர வாசி ஒருவரு ஆபத்துல சிக்கிக்கரதாகவும், நம்ம ஹீரோ அவர காப்பத்தறதாகவும் கதைய அமைச்சி இருப்பாங்க. 

இப்போ இந்த படத்த ஹாலிவூட்ல எடுத்தா எப்புடி எடுக்கலாம்? நம்ம ஒத்த ஸயன்டிஸ்ட்டுக்கு பதிலா அங்க நாஸா விண்வெளிக்கு மெசேஜ் அனுப்பறாங்க. ஆனா ஹீரோ வேற்றுக்கிரக வாசிகள திருப்பி அனுப்பறதா எடுக்கறது மனிதம் மனுஷத்தன்மைன்னு சொல்றதெல்லாம் அங்க எடுபடாது, அதனால வேற்றுக்கிரக வாசிகள் முழு உலகத்தையும் கைப்பற்ற வாறாங்கன்னு சொல்லி, அத நம்ம ஹீரோ தனியாளா நின்னு அமெரிக்க ராணுவ ஆயுதங்கள வச்சு உலகத்தையே காப்பாத்துறதா காமிச்சா செமயா ஓடும் படம். படத்தோட பேரு பாட்டில் ஷிப், வெளியானது ஜஸ்ட் ஒரு மாசத்துக்கு முன்பு.


சென்ற வருடம் தமிழில் வெளியாகி துரத்தி அடித்த வெற்றியை ஈட்டிய மெகா ஹிட் படம் வேலாயுதம். இந்த படத்தோட நாட் என்னன்னா சூப்பர் ஹீரோங்குறது அசாத்திய சக்தியோ, ஆமானுஷ்யமோ இல்ல, உங்களுக்குள்ள ஒளிஞ்சிருக்கற அநியாயத்தை கண்டால் பொங்கும், குற்றத்தை எதிர்க்கும் ஒரு உணர்வே. அது சரியாக வெளிப்ப்படுமிடத்து நீங்க ஒவ்வொருவரும்தான் வேலாயுதம் அப்புடிங்கரதுதான். இது 2000 ஆம் ஆண்டு வெளியான ஆசாத்படத்தோட தழுவல். இந்த படத்தோட நாட்ட எடுத்துக்கிட்டு DC காமிக்ஸ் BATMAN கதைய வச்சு நம்ம கிறிஸ்டோபர் நோலன் எடுத்திருக்கற காவியம்தான் DARK KNIGHT SERIES. இதுக்கு ஆதாரம் இறுதிப் பாகத்தில் வரும் கால்பந்தாட்ட மைதானம் தகர்க்கப்படும் காட்சி. தமிழ் படத்துல அங்க வேலாயுதம் வந்து மைதானத்துல குண்டு வெடிக்காம தடுத்து ஒரு பெரிய லெக்டர் குடுப்பாரு, ஆனா இங்க batman தவற விட்டுடுவாரு. அவ்வளவுதான் வித்தியாசம். அப்புறம் க்ளைமாக்ஸ் சீன், அப்புடியே பயணம் படத்தோட கிளைமாக்சுல இருந்து உருவியிருக்காங்க. இங்க குண்ட கார்ல வச்சிக்கிட்டு தூரமா கொண்டுபோய் வெடிக்கவைப்பாரு நாகர்ஜுன், அங்க பாட்ல பறந்து போவாரு batman. முதல் பாகத்துல வார ட்ரைன் சீகுவேன்ஸ் அப்புடியே வேலாயுதம் ட்ரைன் சீகுவன்சொட காப்பி (ஆசாத் படத்துல அந்த சீன் இருந்தா வேலாயுதம் ஆரிஜினால் இல்லன்னா batman ஆரிஜினால்). சிட்டி முழுக்க அங்கங்க குண்டு வைக்கிற கான்செப்ட ரெண்டாம் பாகத்துல பயன்படுத்தியிருக்காறு. மொத்தமா வேலாயுதம்குற ஒத்த படத்த மூணு பாகமா எடுத்ததுதான் இந்த DARK KNIGHT SERIES.


இன்னும் சொல்ல நிறைய இருக்கு, பதிவோட நீளம் கருதி இத்தோட நிறுத்திக்கறோம். ஹாலிவூட் படங்கள்ல இருந்து நம்ம தமிழ்ல காப்பி பண்ணின படங்கள் பத்தி இன்னொரு பதிவில் பார்க்கலாம்.


Monday, July 23, 2012

சூர்யா என்கிற சரவணன்: பிறந்தநாள் ஸ்பெஷல் பதிவு

இன்னிக்கி தேதில ஒரே சமயத்தில அதிகம் பேருக்கு  அதிகம் பிடித்தவரும் அதிகம் பேருக்கு அறவே பிடிக்காதவருமான ஒரே தமிழ் சினிமா பிரபலம் சூர்யா. அண்ணன் பத்தி நமக்கு பிடிச்ச, பிடிக்காத, சில விடயங்களின் தொகுப்பே இந்த பதிவு. அண்ணனோட பிறந்தநாள் சிறப்பு பதிவா இன்னிக்கி போடுறோம்.



சூர்யா மேல நமக்கு எப்பவுமே ஒரு சாப்ட் கார்னர் உண்டு. அதுக்கு என்ன காரணம்ன்னா சூர்யாவ விட சரவணன் என்கிற தனிமனிதன் சாதித்து காட்டிய ஒரு விஷயம்தான். எல்லாரும் ஒவ்வொருத்தர் கிட்டயும் ஒவ்வொரு திறமை ஒழிஞ்சிருக்கும், அது என்னன்னு கண்டுபிடிச்சு,வளர்த்து அதன் வழியே போறவன் ஜெயிப்பான்னு சொல்லுவாங்க. திறமை என்பது பிறப்பினால் வருவது என்பதே அனைவரும் ஏற்றுக்கொண்ட உண்மை. உழைப்பு அந்த திறமையை மெருகேற்றும் என்பதே அனைவரும் ஏற்றுக்கொண்ட ஒரு விடயம். ஆனால் திறமை என்பது வளர்த்துக்கொள்ளக்கூடியது மட்டுமல்ல உழைப்பினால் உருவாக்கிக் கொள்ளக்கூடியதும் என்று சாதித்துக் காட்டியவர் சூர்யா என்னும் சரவணன்.

பெரும்பாலும் இந்த பதிவ படிக்கிற நீங்க எல்லோரும் சூர்யா நேருக்கு நேர் படத்துல அறிமுகமான நாள்ல இருந்து அவர வாட்ச் பண்ணிக்கிட்டு இருக்கறவங்களாதான் இருக்கும். உங்களுக்கே தெரிஞ்சிருக்கும் சிவகுமார் குடுத்த மூஞ்சிய தவிர சூர்யா நடிக்க வந்தப்போ அவருக்கிட்ட எதுவுமே இருக்கல.  சரவணன் என்கிற தனி மனிதன் ரஜினி, விஜய், அஜித் போன்ற Born as Super Star கெடயாது, கமல், விக்ரம் போன்ற பிறப்பிலேயே நடிகனும் கிடையாது. உண்மைல சொல்லப்போனா பிலிம் இண்டஸ்றிகின்னு பிறந்த ஒருத்தர் கிடையாது. இன்னும் சொல்லப்போனா தம்பி கார்த்திதான் அந்த Born Star. சரவணன் இயல்பிலேயே ஒரு ரிஸர்வ்ட் பேர்ஸனாலிட்டி. தோல்விகளை கண்டு துவண்டு போகக்கூடியவர். தோல்விகளுக்கு அஞ்சியே எதயும் தொடங்க பயப்படும் ஒருவர். வாழ்கையை பற்றி ஒரு சரியான புரிந்துணர்வோ திட்டமிடலோ இல்லாதவர். சுருக்கமா சொன்னா எந்த வகையிலும் சினிமா துறைக்கு லாயக்கே இல்லாத ஒருத்தர். இன்னிக்கி இருக்கற சூர்யா என்கிற நடிகர பார்க்குறவங்களுக்கு அந்த சரவணனா இதுன்னு ஒரு ஆச்சர்யம் வரும். இது எல்லாமே சரவணனின் உழைப்பினால் வந்தது, தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்தும் தேடலினால் வந்தது.


நடிக்க வந்ததப்புறம்  தனது வாழ்கையில் வந்த ஒவ்வொரு தோல்வியையும் ஒரு பாடமா எடுத்துக்கிட்டு மறுபடி மறுபடி பல படிகள் முன்னேறிக்கொண்டிருக்காரு சூர்யா. நீ தெரிவு செய்த துறையில் உன் முழு ஈடுபாடுட்டுடன் உழை, வெற்றி உன்னை தேடி வரும் என்பதே சரவணன் நமக்கு கற்றுத்தந்த பாடம். யார் வேணும்னாலும் எந்த துறையில் வேணும்னாலும் சரியான பயிற்சியுடன் முழு ஈடுபாட்டுடன் உழைத்தால் வெற்றி பெறலாம், தனெக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொள்ளலாம். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு ஆசை இருக்கும், ஆசையும் திறமையும் சேர்ந்து வரும்போதே வெற்றியும் வரும். கண்டிப்பாக வெற்றி என்பது அதிர்ஷ்டத்தால் வருவதே. அந்த அதிர்ஷ்டத்தையும் உழைப்பால் உருவாக்கிக் கொள்ளலாம் என்பது சரவணனது வாழ்க்கை நமக்கு சொல்லும் பாடம். இந்த காரணமே சூர்யா என்கிற நடிகர் மீது நமக்கு ஒரு சாப்ட் கார்னர் இருக்க ஒரே காரணம். 

சமீபத்துல முடிவுக்கு வந்த நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி, சூர்யாவோட இன்னுமொரு பக்கத்த காட்டிச்சு(இது தொடர்பான நமது பழைய பதிவு ஒன்று). கார்த்தியோ, இல்ல இன்னுமொரு நடிகரோ, ஏன் சிவகார்த்திகேயனோ கூட அந்த ப்ரோகிராம பண்ணியிருந்தா அந்த ப்ரோக்ராம் ஒருவேள இன்னும் ஜனரஞ்சகமா அமைஞ்சிருக்கும், ஆனா சூர்யா அந்த ப்ரோக்ராம் பண்ணிததாலதான் தமிழ் நாட்டுல எதோ ஒரு மூலையில வாழுற மனிதர்கள் பத்தி, அவங்க வாழ்கைய பத்தி நமக்கு ஈசியா தெரிஞ்சு கொள்ள கூடியதா இருந்தது. அந்த ஷோ ஒரு பெரிய ஸ்டார் நடத்திய ஷோவாக இருந்த போதும், ஒவ்வொரு எப்பிஸோடிலும் கலந்து கொண்ட ஹாட் சீட் கான்ட்டஸ்டன்ஸே உண்மையான ஸ்டார்ஸாக வெளியே தெரிஞ்சதுக்கு சூர்யாவே ஒரு பெரிய காரணம்ங்கறது எனது தனிப்பட்ட கருத்து. அதோட மட்டுமில்லாம செலிப்ரிட்டி எப்பிஸோட் முடிவுல ஜெயிச்ச பணத்த வழக்கம் போல முதியோர் இல்லத்துக்கோ, அநாதை ஆசிரமத்துக்கோ குடுக்காம கல்விக்கும், வைத்தியத்துக்கும் பயன்படச் செய்த்ததிலும் சூர்யா பங்கு அதிகம் இருக்கும் என்பது எனது கருத்து.  இனிமே சூர்யாக்கிட்ட நமக்கு பிடிக்காத விடயங்கள பார்க்கலாம். 



அண்ணனோட சினிமா வெற்றி முழுக்க முழுக்க அண்ணனோட உழைப்பினால வந்ததே ஆனாலும், luck favors the brave என்பதற்கமைவாக அண்ணனோட வெற்றிக்கு அண்ணனோட போட்டி நடிகர்கள் சறுக்கினதும் ஒரு காரணம். இது பத்தி முன்பே ஒரு பதிவுல விரிவாக அலசி இருக்கோம். இந்த மேட்டர கொஞ்ச நாளாவே  அண்ணன் சுத்தமா மறந்துட்டாரு. அது நமக்கு அறவே பிடிக்கல. சமீப காலமா ட்ரெண்டு மாறிக்கிட்டு இருக்கு அண்ணாத்தே. இப்போ நீங்க உஷாராகலன்னா நீங்க இவ்வளவு நாளும் பண்ணினது எல்லாமும் வீணா போயிடும். கமல்ஹாசனிற்கு நடந்தது கூட உங்களுக்கு நடக்கலாம். கொஞ்சம் பார்த்துக்கங்க.  அப்புறம் இப்பொல்லாம் நீங்க நானும் நடிச்சிருக்கேன், நானும் நடிச்சிருக்கேன்னு கொஞ்சம் ஓவராவேதான் அலட்டிக்கறீங்க. அத கொஞ்சம் குறைச்சிக்காங்க. இந்த வாட்டியும் மாற்றான் பட ப்ரோமோஷன் அது இதுன்னு டிவில வந்து, இந்த படத்துல நடிக்கறதுக்காகா வியட்நாம் போனேன், அந்தார்ட்டிக்கா போனேன், அந்த தாய்லாந்து ட்வின்சு என்னோட கனவுல வந்து கோச்சிங் குடுத்தாங்க, ,தமிழ் சினிமா ரசிகனின் ரசனையை இந்த படம் ஒசத்தும்ன்னு கத விட்டீங்க கொல வெறி ஆயிடுவேன். 

இன்னுமொரு மேட்டர், இது அண்ணாத்தே பத்தி கெடயாது, அவரோட விசிறிகள் பத்தி. நிஜமா அண்ணனூட விசிறிகள்ள பாதிப்பேருக்கு மேல முன்னொரு காலத்துல தல அல்லது தளபதி விசிறிகளா இருந்தவங்கதான், இவங்கதான் அடிக்கடி இந்த தல தளபதி விசிறிகள சீண்டிப் பாக்குறவங்க, நீங்க கொஞ்சம் பக்குவமா இருந்துக்கங்க, இல்லன்னா உங்களாலேயே இப்போ அதிகம் பேருக்கு அண்ணாத்தைய புடிக்காம போயிருச்சு, இது நீண்டுச்சுன்னா, இப்போ தல தளபதி இருக்கற பார்முக்கு சூர்யா ரொம்ப கஷ்டப்பட்டு போயிருவாரு, பார்த்துக்கங்க. அப்புறம் சூர்யாவ கேவலமாக கலாய்க்கிற தல தளபதி பான்ஸ், சூர்யா என்கிற தனி மனுஷன், நடிப்புல தல தளபதிக்கு போட்டியா இருந்தாலும், சினிமாவ தாண்டி அவருக்கிட்டையும் எடுத்துக்குறதுக்கு நாலு விஷயம் இருக்கு, அதுக்காகவது கொஞ்சம் மரியாத குடுங்க.


அப்புறம் அண்ணனுக்கு ஒரு சின்ன ரிகுவெஸ்ட், உங்க ஷக்தி(பிதாமகன்), சின்னா(பேரழகன்), பாலையா(மாயாவி) காரெக்டர்ஸ் இன்னும்  அப்புடியே மனசுல நிக்குது, சீக்கிரமா அது போல ஒரு ஜாலி கேரக்டர் பண்ணுங்க சார். ரொம்ப நாளா காத்துக்கிட்டு இருக்கோம். 

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சூர்யா. மாற்றான் வெற்றிக்கும், தொடர்ச்சியான வெற்றிகளுக்கும் வாழ்த்துக்கள். 

டிஸ்கி: என்னோட வாழ்கையில நான் ஆசைப்பட்ட ஒரு துறைய தெரிவு செய்து ஒரு கட்டத்துல தவறான முடிவ எடுத்துட்டோமோ, நமக்கு இந்த துறையில திறமை இல்லையோன்னு யோசிக்கிட்டு இருந்தப்போ சூர்யாவோட வாழ்கதான் ஒரு பெரிய திருப்பு முனையா இருந்திச்சு, அதுக்கு என்றென்றும் கோடி நன்றிகள் சூர்யா. 

Monday, July 16, 2012

பில்லாவும் அஜித்தும் பின்னே ஞானும்...

ம்ம்ம்ம்ம், மேட்டருக்கு போறதுக்கு முன்னாடி ஒரு முக்கியமான மேட்டர்.. இப்பவும் எனக்குள்ளே ஒரு மிருகம், அதாவது "தல ரசிகன்"ங்குற மிருகம் உறங்கி கிடக்கு.. அதே மாதிரி ஒரு மிருகம் உங்களுக்குள்ளேயும் உறங்கி கிடக்குன்னா, நீங்க மேல வாசிக்கலாம்.. இல்லன்னாலும் வாசிக்கலாம்.. ஓகே? ஓகே ஓகே ... 

என்ன சொல்றது, முந்தி மாதிரி எல்லாம் இல்ல சார், ஏகன் படத்த கூட பர்ஸ்ட் டே பார்த்த பையன் சார் நான்... ஆனா பில்லா-பர்ஸ்ட் டே பார்க்கல!!  எதிர்பார்ப்பு இல்லன்னு சொல்ல முடியாது.. 95% எக்ஸ்பெக்டேஷன் Behindwoodsல கொடுத்து இருந்தாங்க , ஆனா அது ரொம்ப அதிகமோ? அப்புடின்னுதான் இருந்துச்சு!! 

எது எப்புடியோ!! ஒரு வழியா பில்லா-2 பார்த்தாச்சு.. படத்த பத்தி சொல்லனும்னா பல பேர் சொன்ன மாதிரி படம் ஒன்னும் அவ்வளவு மொக்க மொக்க இல்ல.. ஆனா கண்டிப்பா மங்காத்தா அளவுக்கு இல்ல பிரதர், அதுக்காக நீங்க,  ஏகன் மாதிரியா?ன்னு கேட்டீங்கன்னா, நிச்சயமா இல்ல இல்ல இல்ல , அவ்வளவு ஏன், அசல விடவும் பெட்டரா இருக்கு..ஆஞ்சநேயா?, ஜனா?, ஆழ்வார்? ஜி? ஐயய்யோ அது எல்லாத்த விடவும் பெட்டர்! அப்ப எந்த மாதிரி? பில்லா-1 மாதிரின்னு சொல்லலாமா? ஆன்சர் தெரியலயே!!  

சரி யாரோ இது அஜித்தின் ராஜபாட்டை!! ன்னு சொன்னாங்களாமே? ஐயோ சொன்னவரு  வாய் அழுகி போகனும், சாமி சத்தியமா அதவிட 1634 மடங்கு மேல இந்த பில்லா-2.. சகுனி? சந்தானம் இருந்ததுனால தப்பிச்சிச்சி, ஆனா பில்லா-2 க்கு சந்தானம் தேவையே இல்லயே! அது போக எதுக்கு நாங்க ஒரு நடிகரின் படத்த இன்னொரு நடிகர் படத்தோட கேவலமா கம்பேர் பண்ணிக்கிட்டு!!! 

ஸ்க்ரீன்பிளே மோசமா? இல்லையே!! இத விட பெட்டரா இந்த படத்துக்கு செய்ய முடியுமா? எல்லாம் சீனும் சீக்குவன்சா இருக்கு, ஒன்னு ரெண்டு டர்னிங் பாயிண்ட்ஸ் கூட இருக்கு!! கிட்டதட்ட சுவாரஷ்யமா இருக்கு!!  அப்ப எங்க பிழைச்சிச்சி? ஹ்ம்ம்!! ஆனா சக்ரி டோலாட்டி மேல கொஞ்சம் கோவமா இருக்கு!! சரி கடைசியா நீ என்னதான் சொல்ல வர்ற? ம்ம்ம்ம்ம்ம். இப்புடி வேணும்னா சொல்லலாம், தல ரசிகர்கள், தலக்காக இந்த படத்த ஒரு வாட்டி பார்க்கலாம், ஏன் தல ரசிகர்கள் ரெண்டு வாட்டி கூட பார்க்கலாம்!! அப்ப மத்தவங்க? அவுங்க தேவைபட்டா பார்க்கலாம், வேணும்னா பார்க்கமா கூட இருக்கலாம்!!

கடைசியா, தலக்கு ஒரு மேட்டர் (தல இத படிப்பாரா?ன்னு தெர்ல, எதுக்கும் சொல்லி வக்கிறேன்)... எப்பவுமே தல நல்லா பண்ணிருக்காரு, ஸ்டைலிஷா! இருக்காரு.. ஸ்மார்ட்டா இருக்காரு, கெத்தா இருக்காரு! ஆனா டைரக்டர் தான் சொதப்பிடாருன்னு சொல்ல வைக்காத தல, ரொம்ப கஷ்டமா இருக்கு.. இப்ப நீ இருக்குற ரேஞ்சுக்கு வாலி மாதிரி படம் பண்ண முடியாது, அது ஓகே.. ஆனா ஒரு வில்லன், வரலாறு மாதிரி பெர்போர்மன்ஸ் ஒரியண்டட் மாஸ் படம் ஒன்னு கொடு தல,உன்னால முடியும். கண்டிப்பா ப்ளாக்புஸ்ட்டர் ஆகும்.. ஒரு விஷயம் புரிஞ்சிக்கனும் நீ! எப்பவுமே தல வெறியன் ரசிகன் உன்கிட்ட எதிர்பார்குறதுக்கும் , சாதாரண நல்ல சினிமா ரசிகர்கள் உன்கிட்ட எதிர்பார்குறதுக்கும், ஒரு நூலிழை தான் வித்தியாசம் இருக்கு(தேங்க்ஸ் டு முருகதாஸ்). அந்த நூலிழைய விட்டு கொஞ்சம் இறங்கி வந்து சாதாரண சினிமா ரசிகர்கள்காக நீ படம் பண்ணாலும், நாங்க அவுங்கள விட அதிகமாவே ரசிப்போம்!!!! 

டிஸ்கி: தல ரசிகர்கள் இல்லாதவுங்க இத படிச்சி குழம்பி , என்ன திட்ட வந்தீங்கன்னா!! அது தான் மொத பெரக்ராப்லையே சொல்லிட்டேனே, அப்புறம்  தலய பார்த்தா உங்களுக்கு இப்புடி தெரியுதா? இல்ல என்ன பார்த்தா உங்களுக்கு அப்புடி தெரியுதா?

Wednesday, June 27, 2012

ஒரு கோடி உங்களுக்கே - ஆரியாவும் சந்தானமும் (Part II)

சந்தானம்: சில மாதங்களுக்கு முன்னர்  நாம ஆர்யா கூட ஒரு கோடி உங்களுக்கே விளையாடிக்கிட்டு இருக்கோம். பய ஜெயிச்ச ஆயிரம் ரூபாவுல சரக்கடிச்சிட்டு மட்டயாகிட்டதனால நிகழ்ச்சியின் ரெண்டாம் பாகம் கொஞ்சம் லேட் ஆகிடிச்சு. இருந்தாலும் எல்லாரும் அண்ணனுக்கு ஜோரா ஒரு வாட்டி கைதட்டுங்க.


சந்தானம்: வணக்கம் பாசு, ஹாட் சீட்ல ஒக்காரு, போட்டிக்கு போறதுக்கு முதல்ல, நன் ஒன்கிட்ட ஒரு கேள்வி கேக்குறேன், நிதானமா யோசிச்சு பதில் சொல்லு,

ஆர்யா: ஓகே என்ன கேள்வி வேணும்னாலும் கேளு, சும்மா டான் டான்னு பதில் சொல்றேன்.

சந்தானம்: உனக்கே நல்லா தெரியும், இப்போ இந்த பொண்ணுங்க எல்லாரும் லோ நெக் ஆடைகள்தான் அணியறாங்க, சப்போஸ் ஒரு பொண்ணு, லோ நெக் ஆடையில, துப்பட்டா போடாம ஒன்கிட்ட வந்து, குனிஞ்சு, ஓன் கால தொட்டு கும்பிட்டா உனக்கு என்ன தெரியும்?

ஆர்யா: ராஸ்கல், இப்படி ஆபாசமாவா கேள்வி கேக்கறது, இதுக்கு நான் பதில் சொன்னா நாளைக்கு பத்திரிகைகள்ல என்னோட பெயர நாறடிச்சுட மாட்டாங்க?

சந்தானம்: யோவ், இதுல என்னயா ஆபாசம் இருக்கு? அந்த பொண்ணோட கலாசார உணர்வு தெரியும், பாரம்பரியம் தெரியும், மரியாதை தெரியும், இதுல எங்கிருந்து ஆபாசம் வந்தது?

ஆர்யா: ஒத்துக்கறேன், என்னைவிட நீ பெரிய ஆளுதான்.. போட்டியில இந்தமாதிரி அறிவாளித்தனமான கேள்வி கேக்காம நம்ம லெவலுக்கு கேள்வி கேளுப்பா,


சந்தானம்: உனக்கான ரெண்டாவது கேள்வி,

2011 இல் தமிழ்நாட்டை தாக்கிய புயலின் பெயர் என்ன?

ஆர்யா: என்னையா இப்புடி லூசுத்தனமான கேள்வி கேக்குற, ஆமலா பால் தான் சரியான பதில், ஆப்சன் நம்பர் என்னன்னு பார்த்து நீயே லாக் பண்ணிக்க.


சந்தானம்: நீ இன்னும் அந்த மேட்டர்ல இருந்து வெளிய வரலியா? சரி விடு, உனக்கு நான் ஆப்சன் சொல்றேன் இதுல ஒண்ண நீயே தெரிவு செய்துக்கோ.

A) பூனே                                                           B) தானே
C) மெட்ராஸ்                                                D) டெல்லி

ஆர்யா: ஓ, அப்போ அது அமலா பால் இல்லியா? மெட்ராஸ், டெல்லி, பூனே எல்லாம் ஊரு பெயரா இருக்கு, அப்போ சரியான பதில் தானேயாதான் இருக்கணும். ஆப்ஷன் B, தானே.

சந்தானம்: யோவ், நான் உன்கிட்ட கேள்வி கேட்டா, ஆப்ஷன் B தானேன்னு நீ என்கிட்டயே திருப்பி கேக்குறியா? சீக்கிரமா ஒரு பதில சொல்லுப்பா.

ஆர்யா: பதிலதான்யா சொன்னேன் , ஆப்ஷன் B, லாக் பண்ணிடு.

சந்தானம்: சரியான பதில், உங்க அக்கவுண்டுல இப்போ ரெண்டாயிரம் ரூபா இருக்கு. நீங்க எப்புடி பீல் பண்றீங்க?

ஆர்யா: என்னோட சந்தோசத்துக்கு அளவே இல்ல, இது எனக்கு ஒரு ஆஸ்கார் கெடச்ச சந்தோசத்துக்கு நிகரானது, கண்டிப்பா இதுக்கு நான் என்னோட ரசிகர்கர்களுக்குதான் நன்றி சொல்லணும்.

சந்தானம்: ஆடியன்ஸ் இல்லன்னா முதலாவது கேள்விலேயே அவுட் ஆகியிருப்பான், ஆஸ்கார் லெவலுக்கு பீல் பண்றானே, சரி, ஓகே, உங்களுக்கான மூணாவது கேள்வி, ரொம்ப கவனமா ஆடுங்க, இந்தக் கேள்விக்கு சரியான பதில் சொன்னா நாங்க உனக்கு மூவாயிரம் குடுப்போம், தப்பா பதில் சொன்னா குடுத்த ரெண்டாயிரத்த புடிங்கிக்கிருவோம், டீலா நோ டீலா?

ஆர்யா: கொஞ்சம் நம்ம லெவெலுக்கு எறங்கி வந்து கேள்வி கேளுங்க பாசு, நல்லதம்பி மனசு வச்சா முடியும்.

சந்தானம்: நல்லதம்பி மனசு என்ன LKG கொஸ்டீன் பேப்பரா, அத வச்சு உன்னோட லெவலுக்கு கேள்வி கேக்குறதுக்கு? காம்புட்டர் ஜி, நம்ம அண்ணனுக்கு மூணாவது கேள்விய எடுத்து விடுங்க. ஓகே உங்களுக்கான மூணாவது கேள்வி, "Pardon" என்னும் ஆங்கில வார்த்தையின், நல்லா கேளு,"Pardon" என்னும் ஆங்கில வார்த்தையின், தமிழ் அர்த்தம் என்ன? உங்களுக்கான ஆப்ஷன்ஸ்.

A) பாட்டு பாடு                                                                     B) டான்ஸ் ஆடு
C) ரொமான்ஸ் பண்ணு                                                  D) புரியல, திருப்பி சொல்லு

யுவர் டைம் ஸ்டார்ட்ஸ் நவ் Mr.ஆர்யா.

ஆர்யா: (மனசுக்குள்ள:நமக்கு ஒண்ணாம் கிளாஸ் இங்கிலிசே வராது, இதுல இது வேறய!!!!!!) ............................................................

சந்தானம்: செக்கண்ட்ஸ் ஓடிகிட்டு இருக்கு Mr.ஆர்யா... இன்னும் பத்தே செக்கண்ட்ஸ்.

ஆர்யா: பிரதர், லைப் லைன் யூஸ் பண்ணிக்கிறேன் பிரதர்.

சந்தானம்: ஓகே. மணி அண்ணே. நில்லுங்க.. நீங்க ஏற்கனவே ஆடியன்ஸ் போல் யூஸ் பண்ணிடீங்க Mr.ஆர்யா.. மிச்சம் இருக்குற ரெண்டு லைப் லைன்ல எத யூஸ் பண்ண போறீங்க?

ஆர்யா: ம்ம்ம்.. கேர்ல் பிரண்டு..

சந்தானம்: ஹங்!!!..அடேய், அது போனோ பிரண்டுடா... நல்லா வருது வாயில... சரி இதோ உங்களுக்கு ஹெல்ப்பண்ண இருகுறவுங்க லிஸ்ட்.
             1. சென்னைல இருந்து உங்க பிரண்டு ஜீவா சௌத்ரி
             2. கும்பகோணத்துல இருந்து மாட்டு டாக்டர் சரவணன்.
             3. எக்ஸ் பிரபுதேவா வைப், எக்ஸ் எக்ஸ் சிம்பு லவ்வர், மிஸ்.நயன்தாரா

ஆர்யா: இதுல இங்கிலீஸ் தெரிஞ்சவுங்க, நயன்தாராதான், அவுங்களயே கூப்டுங்க..

சந்தானம்: ஓகே. டிரிங் டிரிங்.. மிஸ்/மிசஸ் நயன்தாரா நா ஒரு கோடி உங்களுக்கே நிகழ்ச்சில இருந்து சந்தானம் பேசுறேன், Mr.ஆர்யாகிட்ட கேட்ட கேள்விக்கு அவரு உங்க ஹெல்ப்ப எதிர்பார்குறாரு. இதோ அவரே அவர் வாயால கேள்வியையும் ஆப்ஷன்சையும் சொல்வாரு. உங்களுக்கான நேரம் முப்பது வினாடிகள்

ஆர்யா: ஹாய் நயன் சேச்சி. அப்புறம் எப்புடி இருக்க! பிரபு மாஸ்டர் கழட்டி வுட்டுட்டானாமே (நோ சில்லி பீலிங்).. நா அப்பவே ஷூட்டிங்ப்போ சொன்னேன், நீ தான் கேக்கல.. சரி இப்பதான் கிரீம்ஸ் ரோட்ல புது வீடு வாங்கிட்டேனே. நீ அங்கேயே வந்து செட்ல் ஆகிரு..

சந்தானம்: டேய், கேள்விய கேட்க சொன்னா, பிகர கரெக்ட் பண்ணுறியா.. அது ஏற்கனவே பல வாட்டி பஞ்சர் ஆகி, பேட்ச் போட்ட டயருடா.. ஒழுங்கு மரியாதையா கேள்விய கேளு..

ஆர்யா: ஓகே ஓகே.. நயன், நல்லா கேட்டுக்க, "பாடேன்"னா தமிழ்ல என்ன அர்த்தம்?

நயன்: என்னாது? "பாடேன்"னா?

ஆர்யா: ஆமா, பாடேன்...

நயன்தாரா: ஓகே. "எக்ஸ் மச்சி, வை மச்சி, எப் எம் மச்சி.. "

ஆர்யா: ஐயோ, அது ஆப்சன்ஸ்ல இல்லையே.. இல்ல சேச்சி, "ப்பாடேன்"..

நயன்தாரா: லூசா இருப்பானோ!!ஓகே. இத கேளு. "கோடம்பாக்கம் ஏரியா, குத்தாட்டம் என்னோட ஆட ரெடியா?"

ஆர்யா: ஐயோ, இல்லீங்க, பா.....டே.....ன்....(சத்தமா கத்துறாரு)

சந்தானம்: டைம்ஸ்அப் .. உங்க முப்பது வினாடிகள் முடிஞ்சிருச்சி ஆர்யா. பதில சொல்லுங்க.

ஆர்யா: என்னாது பதிலா? அவுங்க ஒன்னுமே சொல்லலியே.. குருவே சந்தானம்.. கேள்வி புரியல திருப்பி சொல்லு...

சந்தானம்: கன்பார்மா?
ஆர்யா: ஆமா. புரியல, திருப்பி சொல்லு.

சந்தானம்: ஓகே. ஜீனியஸ். அதையே லாக் பண்ணுங்க.

ஆர்யா: நான் இன்னும் பதிலையே சொல்லலியே. கொஸ்டின ரிப்பீட் பண்ண சொன்னா, இவன் லாக் பண்றானே..சரியான மாங்கா மடையனா இருப்பான் போல இருக்கு.

சந்தானம்: கங்ராட்ஸ்.. Mr.ஆர்யா. நீங்க பத்தாயிரம் ரூவா ஜெயிச்சிட்டீங்க. ஆனா மூணு கேள்வியிலேயே ரெண்டு லைப் லைன் யூஸ் பண்ணின முதல் ஆளும் நீங்கதான். அதனால நாம போட்டிய இதோட முடிச்சிட்டு கெளம்பலாமா?

ஆர்யா: ஆமா ஆமா, இதுக்கு மேல விளையாடினா அப்புறம் என்னோட இமேஜ் பணால் தான் நான் இதோட விடைபெற்றுக்கிறேன்.



டிஸ்கி: ரொம்பநாளுக்கு முதல்லேயே எழுதி ட்ராப்டுல வச்சிருந்த பதிவு. இன்னிக்கிதான் ஞாபகம் வந்துச்சி, அதுனாலதான் ரொம்ப லேட் ஆனாலும் பப்ளிஷ் பண்றோம். 

Sunday, August 7, 2011

தெய்வத்திருமகள் மறுபடியும் ஒரு பதிவு


தெய்வத்திருமகள் படம் பற்றி ஏற்கனவே நம்ம பார்வையை இங்க பதிவு செஞ்சிருந்தோம் (தெய்வதிருமகள் : ஒரு சந்தானம் ரசிகனின் மாற்று பார்வை) . நாம அது ஒரு மொக்க படம் (மூணாவது வகை - இண்டலக்சுவல் சீட்டிங் - தமிழ் சினிமா நேர்மையான புரிதல்) அப்பிடின்னு தெளிவா சொன்னபோது நம்ம வாசகர்கள்ள பலபேர் கோபப்பட்டிருக்கலாம் (உண்மைய வேற எப்பிடித்தான் சொல்றது?). உயிர்மை ஆகஸ்ட் இதழ்ல பிரபல இசை விமர்சகர் ஷாஜி எழுதிய தெய்வத்திருமகள்: இது நகல் அல்ல போலி அப்பிடின்குற விமர்சனத்த மிக அண்மையில்தான் அவரது ப்ளாகில் வாசிக்க முடிந்தது. இவரது பதிவு நூத்துக்கு தொன்னூத்தி எழு விழுக்காடு நம்ம கருத்தோட ஒன்றிப்போகுது . தமிழ் சினிமா அபத்தங்கள புரிந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள் நேரமிருந்தா இவரது நீண்ட பதிவ வாசித்து பாருங்கன்னு கேட்டுக்கொள்கிறோம் (லிங்க்தெய்வத் திருமகள் நகல் அல்ல. போலி!

இப்ப மிச்சமுள்ள மூணு விழுக்காடுகளுக்கு வருவோம். இவரு நம்ம தலைவர் சந்தானம் வக்கீல்கள அவமானப்படுத்துற மாதிரி நடிச்சிருக்கருன்னு சொல்றாரு. இவரோட விமர்சனத்த வாசிச்சிட்டு வக்கீலுங்க போராட்டம் நடத்தினாங்கள இல்ல அவங்க போராட்டம் நடத்தினதுக்காக இவரு இப்பிடி எழுதினாரான்னு தெரியல. ஆனா நாம நமது விமர்சனத்துல ஒரு விஷயம் சொல்லியிருந்தம். தலைவரோட நடிப்புதான் இந்த படத்த காப்பதுதுன்னு, இப்ப அதுக்குரிய உண்மைப் பொருள சொல்லவேண்டிய தருணம் வந்திருச்சி. தலைவர் நடிப்புதான் இந்த படத்த நூறு விழுக்காடு அபத்தம்ங்குறசீடிங்) வகையறால இருந்து முப்பது விழுக்காடு சென்சிபெல் என்டேர்டைனர் எங்கிற வகையராவுக்கு சமீபத்துல கொண்டுவந்து வக்கிதுங்குரதுதான் நாம அன்னக்கி சொன்ன அந்த உண்மை. அந்த வகையில பாக்குறப்போ ஒரு நடிகரா நம்ம தலைவர் மேல வைக்கிர அந்த விமர்சனத்த நம்மால ஒத்துக்க முடியாது, (இது பத்தின ஒரு விரிவான பதிவு இங்கே)


இதுக்கும் மேல விக்ரம் சுப்பரா நடிச்சிருக்காரு தேசியவிருது நிச்சயம் அவருக்கு கெடக்கணும் அப்பிடின்னு யாரவது நெனச்சிங்கன்னா நாம ஒங்ககிட்ட ஒரு விசயம் கேக்கணும். ஒங்கள்ள எத்தனைபேருக்கு  ரெண்டு தடவக்கி மேல இந்த படத்துல இருக்கற விக்ரம் - சாரா மட்டும் வாற ப்ளாஷ் பாக் காட்சிகள முழுசா பாக்குற தைரியம் இருக்கு? இன்றைய தேதில கமல் சாருக்கு அப்புறம் விக்ரம்தான் பெஸ்டுன்னு நெனச்சிங்கன்னா ஒங்ககிட்ட ஒரு கேள்வி. ஒங்கள்ள எத்தன பேர் சித்தனுக்காக பிதாமகனும் க்ரிஷ்ணாவுக்காக தெய்வதிருமகளும் பாப்பீங்க?  அதே நேரம் ஒங்கள்ள எத்தன பேர் சக்திக்காக பிதாமகனும் சின்னாவுக்காக பேரழகனும்  பாப்பீங்க? இதுக்கு மேல நீங்களே முடிவு பண்ணிக்கங்க. 



லேட்டஸ்ட் பின்னிணைப்பு.: மக்களே எல்லாரும் நெட்ல நல்லா தேடி பாருங்க, ஐஆம் சாம்இன் ரெண்டாம் பாகம் எதுனாச்சும் வந்து இருக்குதான்னு? ஏன்னா டைரக்டர் விஜய் இந்த படத்தின் ரெண்டாம் பாகத்தையும் எடுக்க போறாராம் 2013ல.
http://www.filmics.com/tamil/Tamil-Movie-News-in-tamil/director-vijay-said-deivathirumagal-part-ii-soon.html

Thursday, June 23, 2011

அப்பாடக்கர்னா என்னா ? சந்தானம் விளக்கம்




இன்னிக்கு டேட்ல எவன பார்த்தாலும் நீ என்ன பெரிய அப்பாடக்கரா , நீ என்ன அவ்வளவு பெரிய அப்படக்கரானு வயசு வித்தியாசம் இல்லாம அர்த்தமே புரியாம சொல்லிக்கிட்டு திரியுதுங்க. இந்த அப்பாடக்கர்ங்கிற வார்த்தைய பேமஸ் ஆக்குன பெரும எல்லாம் சந்தானத்தையே சேரும்.

கேக்குறதுக்கு பார்க்குறதுக்கு க்ளிக் பண்ணுங்க:





அப்பாடக்கர்னா என்ன? குழந்தை கவிஞர் புதுகை அப்துல்லா ஒரு விளக்கம் கொடுத்துருகாரு.

இது சென்னையைச் சேர்ந்த செந்தமிழ். மகான் தக்கர் பாபா சென்னையில் சிலகால இருந்தபோது சென்னைவாழ் மக்கள் அவரை அன்புடன் அப்பா தக்கர் பாபா என்று அன்போடு அழைத்து இருக்கின்றனர். வேதங்களிலும்,ஞானங்களிலும் கரைகண்ட அவரிடம் ஆன்மீகம் தொடர்பாக எந்தக் கேள்வி கேட்டாலும் தெளிவான பதில் கிடைக்கும். அதேபோல ஒருவன் அவன் துறையில் தெளிவாக அனைத்தையும் தெரிந்தவனாக இருந்தால் அவன் பெரிய அப்பாதக்கர் என்று சொல்லபட்டு பின்னர் சென்னை உச்சரிப்பில் அப்பாடக்கர் ஆகிவிட்டது. அப்பா தக்கர் பாபா வித்யாலயான்னு டிநகர்ல ஒரு ஸ்கூல் இருக்கு. இப்படி சொல்லிக் கேட்டீங்கன்னா அங்க ஒரு பயலுக்கும் தெரியாது. அப்பாடக்கர் ஸ்கோலு எங்கருக்குன்னு கேளுங்க, டக்குனு காட்டுவானுங்க :)


- குழந்தை கவிஞர் புதுகை அப்துல்லா ..


 அப்புறம் இந்த அப்பாடக்கர்ங்குற வார்த்தைய அர்பன் டிக்ஷனரிலயும் சேர்த்துட்டாங்கே. கிளிக்  பண்ணுங்க