Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Monday, March 3, 2014

அமெரிக்க மாப்பிள்ளை - இது பெண்களுக்கும் பெண்ணைப் பெற்றவர்களுக்குமான பதிவு

கல்யாணம் அண்ணன் நம்ம லௌ மேரேஜ் பதிவ படிச்சிட்டு செம டென்ஷன் ஆகிட்டாரு. ஏற்கனவே எனக்கு பொண்ணு கெடைக்கறது குதிரைக் கொம்பா இருக்கு, இதுல நீங்க வேற இப்படி ஒரு பதிவு போட்டா என் நிலைமை என்னவாகுறதுன்னு ஒரு கேள்வி கேட்டு நம்மள சிந்திக்க வச்சிட்டாரு. அவரைப் பொறுத்தமட்டும் அவருக்கு பொண்ணு கெடைக்காததுக்கு ஒரே காரணம் தமிழ் சினிமா. வெளிநாட்டு வாழ் எலிஜிபில் பேட்சுலர்சை தமிழ் சினிமா "அமெரிக்க மாப்பிள்ளை" என்னும் பெயரில் அசிங்கப்படுத்தி பொண்ணு கிடைக்காம பண்ணிடுதுங்கறது அண்ணன் வைக்கிற குற்றச்சாட்டு. ஒரு சமூக ஆர்வலரா, இந்த அவல நிலையைப் போக்க நாமளும் ஏதாவது செய்யணுமே, அதுதான் இந்தப் பதிவு.


நம்ம பசங்கள நம்ம ஊரோட தொடர்ப்பு படுத்தற விஷயங்கள் மூணுங்க, ஒன்னு தமிழ் சினிமா, ரெண்டாவது விஜய் டிவி, மூணாவது சமூக வலைத் தளங்கள். நம்ம ஊருலயெல்லாம் பசங்க ஒண்ணா சேர்ந்தா தண்ணி அடிப்பாங்க, தம் அடிப்பாங்க, பொண்ணுங்கள பத்தி டிஸ்கஸ் பண்ணுவாங்க, இங்கயெல்லாம் பசங்க ஒண்ணா சேர்ந்தா சந்தானம், சிவகார்த்திகேயன் காமெடில தொடங்கி, சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் ப்லூபெர்ஸ்ன்னு எதையாவது பார்த்து சிரிச்சிக்கிட்டே, ப்ரிட்ஜுல இருந்த பழைய சாதத்தையும் சாம்பாரையும் மைக்ரோ வேவுல சூடு பண்ணி சாப்பிட்டு மல்லாக்க படுத்து தூங்கிடுவாங்க. அந்தளவு அப்பிராணிகளான பசங்க. 

அமெரிக்க மாப்பிள்ளைன்னா அவ்வளவு இளக்காரமாங்க, அவுங்க திறமை, பெருமை என்னன்னு உங்களுக்கு தெரியுமா? புருஷ லட்சணம் மொத்தமா அமையப் பெற்ற ஆண் வர்க்கமுங்க நம்ம பசங்க. சாம்பிளுக்கு நாலு அஞ்சு எடுத்து விடுறேன் கேட்டுக்கங்க.

1. அமெரிக்க மாப்பிள்ளைகள் எல்லாருமே கண்டிப்பா சமையல் எக்ஸ்பேர்டா இருப்பாங்க. ஏன்னா தினமும் இட்லி தோசைக்காகவோ இல்ல ஒரு பிரியானிக்காகவோ நூறு இருநூறு மைல் தூரம் அலையை முடியாது, எது வேணும்னாலும் நாமளா சமைச்சாதான் உண்டு, சோ கண்டிப்பா சமையல் தெரிஞ்சிருக்கும். அதுலயும் வெரைட்டி வெரைட்டியா சமையல் பண்ணுவாங்க. இன்னும் முக்கியமா "நேத்து சமைச்சதுதான் இன்னிக்குமா?" ன்னு ஒருநாளும் சண்ட போட மாட்டாங்க, போன வாரம் சமச்சத இந்தவாரம் சூடு பண்ணிக் குடுத்தாக்கூட சப்புக் கொட்டி சாப்பிட்டுட்டு போய்க்கிட்டே இருப்பாங்க.

2. நீங்க மணிக்கணக்கா ஷாப்பிங் பண்ணாலும் பொறுமையா உங்ககூட கம்பெனி குடுப்பாங்க. இந்த நாட்டுல பேங்க்ல ஒரு செக்கு டெபாசிட் பண்ணனும்னாலோ இல்ல முடி வெட்டிக்கனும்னாலோ கூட அபாயின்மென்ட் எடுத்து மூணு நாலு மணிநேரம் காத்திருந்துதான் பண்ணனும். சோ இந்த வரிசையில நிக்கறதோ இல்ல பார்கிங் லாட்ல மணிக்கணக்கா காத்திருக்கறதோ நம்ம பசங்களுக்கு சப்ப மேட்டர், அதனால ஷாப்பிங் போறீங்கன்னா உங்களுக்கு போர்ட்டரும் டிரைவரும் கன்பர்ம். 


3. மணிக்கணக்கா ஃபோன் கால் பேசுறது நம்ம பசங்களுக்கு ஜுஜுபி. ஏன்னா வீடோ, நட்போ பெரும்பாலும் சர்வதேச தொடர்பாத்தான் இருக்கும். சிக்கன் சமைக்கறதுக்கு தக்காளி போடனுமால தொடங்கி ஒன்னாம்புல கூடப் படிச்ச கோகிலா புருஷன் இப்ப யார வச்சிருக்கான் வரைக்கும், போன்ல தான் பேசியாகனும். நா எல்லாம் ராசு மாமாவுக்கு ஸ்கைப்புனேன்னா ஃபைவ், சிக்ஸ் ஹவர்ஸ் சும்மா பேசிக்கிட்டே இருப்பேன். நம்ம நண்பர் ஒருத்தர் சும்மா ஒரு நாளைக்கு பத்து பதினோரு மணிநேரம் அவரேஜா ஃபோன் பேசுவாருன்னா பார்த்துக்கங்களேன். சோ நீங்க ஃபோன் பேசினாலோ இல்ல பக்கத்துவீட்டு பொண்டுகளோட மணிக்கணக்கா ஊர் வம்பு பேசினாலோ நோ ப்ராப்ளம்.

4. ட்ராபிக் ரூல்சுக்கு கட்டுப்பட்டு எப்பவுமே கவனமா வண்டி ஓட்டுவாங்க, டூ வீலர்ன்னா கொஞ்சம் தள்ளியே நிப்பாங்க. போர் வீலர்ல எப்பவுமே ஓவர் ஸ்பீடுல போகமாட்டாங்க. என்ன காரணம்ணா இங்க ட்ராபிக் ரூல்ஸ் அப்புடி, மாட்டிக்கிட்டா கமிஷனர் எங்க சித்தப்பான்னு சொல்லி எஸ்கேப் ஆகவும் முடியாது, ஃபயின் போட்டான்னா அதுவேற பெரிய தொகையா இருக்கும், அதையும் தாண்டி, இன்சூரன்ஸ்ல இருந்து எல்லாமே ஜாஸ்தி ஆகி நம்ம பரம்பரையையே பாதிச்சுடும். சோ நம்ம பசங்க வண்டி ஓட்டரதுல எப்பவுமே அந்நியன் அம்பி தான்.  

5. இங்க உள்ள பசங்க எல்லாருமே அட்லீஸ்ட் ஒரு ரெண்டு சீரியல் கண்டிப்பா பார்பாங்க. விஜய் டிவில வாற தமிழ் சீரியல்ல தொடங்கி, பிக் பங்க் தியரி, பிரண்ட்ஸ், டூ அண்ட் அ ஹால்ப் மேன், ப்ரேகிங் பேட் ன்னு எல்லா சீரியலும் அத்துப் பொடியா இருக்கும். சோ நீங்க சீரியல் பார்கறத கண்டுக்கவே மாட்டாங்க. கூட சேர்ந்து பார்கலைனாலும், நீங்க சீரியல் கதை சொன்னா ரொம்ப இன்டரஸ்டா கேப்பாங்க. 


6.அமேரிக்கா மனுஷன டென்ஷன் பண்ணி டிப்ரஷன் சப்ரஷனுக்கு ஆளாக்கி மெண்டலாக்கி அலையை விடுறதுல நம்பர் ஒன்னு. அதனால இந்த ப்ராஷர ஹாண்டில் பண்றதுக்காகவே நம்ம பசங்க, பதிவு எழுதறது, ஃபோட்டோ கிராபி, ஜிம் ட்ரைனிங், சமையல் அது இதுன்னு பல எக்ஸ்ட்ரா காரிகியுலர் ஆக்டிவிடீஸ் கைவசம் வச்சிருப்பாங்க. அதோட இந்த நாட்டுல ஒரு ஆணி புடுங்கறதுக்கு ஆள் வச்சாக்கூட மணிக்கு அறுபது டாலர்ன்னு இருநூறு முன்னூறு டாலர் புடிங்கிக்குவாங்க, சோ இந்த வண்டி ரிப்பேர் பண்றது, ப்ளம்பிங், எலக்ரிகல் ரிபேர்னு எதுன்னாலும் நம்ம பசங்களே பாத்துடுவாங்க. இதனால ரெண்டு நன்மை இருக்கு, ஒன்னு எதிர்காலத்துல வீட்டுல எவ்வளவு பெரிய பிரச்சினை வந்தாலும் சூசயிட் பண்ணிக்கறதோ அல்லது மெண்டல் ஆகிறதோ நடக்காது, நீங்க எவ்வளவு டென்ஷன் படுத்தினாலும் எந்த பிரச்சினையும் இல்லாம தாங்கிக்குவாங்க, அம்புட்டு நல்ல பசங்க. ரெண்டாவது கைவசம் ஏகப்பட்ட தொழில் இருக்கும். ரிஷஷன் அது இதுன்னு வந்து வேல இல்லாம போச்சின்னா ஒரு ரெஸ்டூரன்டோ இல்ல மெக்கானிக்கல் ஷாப்போ வச்சு பொழச்சுக்குவாங்க.

7. முக்கியமா "எப்ப பாரு ரேடியோ பெட்டி மாதிரி தொண தொணன்னு பேசிக்கிட்டே இருக்கே" வகையறா குற்றச்சாட்டுக்கள் ஒரு போதும் உங்க மேல வராது. ஏன்னா தமிழ நேர்ல கேட்டு வருஷக்கணக்கா ஆகியிருக்கும், மொக்கையா நாலு வார்த்த தமிழ்ல பேசக்கூட யாருமே இல்லையான்னு ஏங்கிப் போயிருப்பாங்க, சமயத்துல இன்னொரு மனுஷன் பேசுறதக் கேட்டே, அது என்னங்க இன்னொரு மனுஷன் தன்னோட மயிண்டு வாயிச கேட்டே வாரக் கணக்கா ஆகியிருக்கும். இந்த நிலமையில நீங்க என்ன பேசினாலும்  எவ்வளவு மொக்கையா இருந்தாலும் ரசிச்சுக் கேப்பாங்க.

இவ்வளவு புருஷ லட்சணமும் ஒருங்கே சேர்ந்து வரப்பெற்ற இந்தப் பசங்கள அமெரிக்க மாப்பிள்ளைன்னு அரைக்கால் டவுசரும் காதுல ஒரு செவுட்டு மிஷினுமா தமிழ் சினிமா அசிங்கப் படுத்தறத நான் எதிர்ப்பதோடு, கல்யாணம் அண்ணன் போன்ற எங்க பசங்கள நம் சமூகம் முப்பது நாற்பது தாண்டியும் பிரம்மச்சாரிகளாகவே வாழ வைக்கற கொடுமையையும் வன்மையா கண்டிக்கறேன்.

டிஸ்கி: காலத்தின் கட்டாயத்தினால் தேவை ஏற்பட்டால் இந்தப் பதிவினை மேலும் தொடர்வதர்க்கு இடமுண்டு. 

Monday, January 13, 2014

ஜில்லா - திரை விமர்சனம்

நம்ம கடை திறக்கனும்னா, ஒரு தமிழ்படம் நம்ம ஏரியாவுல ரிலீஸ் ஆகனும். அதாவது ஒரு நல்ல நாள், பண்டிகைன்னு ஏதாவது வரனும். அந்த சட்டத்துக்கு அமைய, பொங்கல் நாள் வர்றதால, நம்ம கடை சார்பாக இந்தமுறை ஜில்லா விமர்சனம்.


துப்பாக்கி எனும் மெகா ஹிட்டுக்கும், தலைவா எனும் ஏமாற்றத்துக்கும் பின்னர் இளைய தளபதி நடிப்பில், காஜல் அகர்வால், மோகன்லால் உட்பட பல நட்சத்திர கூட்டணியில், தலையின் வீரத்துடன் போட்டியிட, RB சவுத்ரியின் தயாரிப்பில் களமிறங்கியிருக்கும் மாஸ் ஆக்ஷன் மசாலா இந்த ஜில்லா. தப்பு பண்ணினதுக்காக அடிக்கல, அந்த தப்ப நாங்க மட்டுமே பண்ணணும், அதுதான் அடிச்சேன், என்கிற அழகிய கொள்கையோடு, குடும்பமாக வுடியிஸம் பண்ணும் ஒருவன், எதிர் முனையில் இருந்து தன்கூட்டத்தார் செய்யும் தப்புக்களை காண நேர்ந்தால்... எனும் கற்பனையே ஜில்லா. இது ஒரு நல்ல இயக்குனர் கையில் நாயகன் இரண்டாம் பாகமாகவோ, அல்லது ஒரு ஆர்வக்கோளாறு இயக்குனர் கையில் தலைவா இரண்டாம் பாகமாகவோ ஆக சாத்தியமுள்ள கற்பனைதான். நல்ல வேளையாக ஜில்லா டீமுக்கு உலகப்படம் எடுக்கும் விபரீத ஆசை இல்லாததால், இது ஒரு ஆக்ஷன் என்டர்டைனர் வரிசையில் சேர்க்கிறது.  இந்த மசாலாவை எப்படிப் பறிமாறி இருக்கிறார்கள், அதில் வெற்றி பெற்றார்களா இல்லையா என்பதை இனி பார்க்கலாம்.

விஜய், மகேஷ் பாபு, சல்மான் கான் இந்த மூவருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. அதாகப்பட்டது, கதையோ, திரைக்கதையோ எப்படி இருந்தாலும் இவர்கள் புல் ஃபோர்மில் இருந்தால் படம் தப்பிக்கும். இங்கும் அப்படித்தான். படம் முழுவதும் விஜய் ஆட்சி. ரொம்ப நாளைக்கு அப்புறமா விஜய் புல் ப்ரீயா நடிச்சிருக்காரு. வழக்கமான சேட்டைகள், டைமிங், சின்னச் சின்ன ரியாக்ஷன், முக்கியமா அந்த விஜய் ஸ்மையில் எல்லாமே முழு வீச்சுல இருக்கு. படம் முதல் பாதி பார்க்கும் போது, மறுபடியும் விஜய்க்கே மாறிடலாமான்னு ஒரு கணம் தோணினாலும், இரண்டாம் பாதி அந்த விபரீத முடிவுல இருந்து நம்மள காப்பாத்துது. ரொம்பவே ஸ்ட்றாங்கா இருந்திருக்கக் கூடிய, அல்லது குறைந்த பட்சம் சிவகாசி மாதிரி வந்திருக்க வேண்டிய இரண்டாம் பாதி, அது யாரு தப்புன்னு தெரியல, மறுபடியும் ஒரு வில்லு ரேஞ்சுல, ஒரு பைட் சீன், அப்புறமா மொக்கையா ஒரு பாட்டு, அப்புறம் மொக்கையா ஒரு கமெடி சீன், மறுபடியும் ஒரு மொக்கையா அக்ஷன் ப்ளாக்ன்னு, ஒரு நேர் கோட்டுல ரொம்ப மொக்கையா போய்க்கிட்டே இருக்கு. விஜய் எவ்வளவு ட்ரை பண்ணியும் காப்பாத்த முடியாத கட்டத்துல இருக்கு இரண்டாம் பாதி படம். இதுல சோகம் என்னன்னா ரெண்டாம் பாதி முடியறப்போ, ஒரு செம ஜாலியான முதல் பாதி படத்துல இருந்ததே நமக்கு மறந்திடுது.


பிளாஸ் அண்ட் மைனஸ்

1.    விஜய் விஜய் விஜய். முதல் பாதி முழுவதும் செம அட்டகாசம், அந்த அறிமுக காட்ச்சியில இருந்து போலீஸ் ஆகும் வரைக்கும் மனுஷன் பிச்சி வாங்கி இருக்காரு. அப்புறமும் ரெண்டாம் பாதியிலதான் என்ன பண்றது, எப்படி பண்றதுன்னு குழம்பிப் போனாலும், ஃபயிட், டான்ஸ் என தனது ஏரியாவுல செமையா ஸ்கோர் பண்ணிட்டதால ஹார்ட்கோர் விஜய் ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி.2.  மோகன்லால் எதுக்கு இந்தப் படத்துக்குங்கற கேள்விக்கு கடைசிவரை எனக்கு விடை கிடைக்கவே இல்லை. மோகன்லால் அவரு பணிய சரியாவே செஞ்சிருக்காரு, அதுல எந்த குறையும் இல்ல, குறிப்பா, ஒபெனிங்க் சாங்க்ல விஜய் முன்னாடி, தனது ப்ரசன்சை மெயிண்டயின் பண்ணும் போதே ஒரு நடிகராக நம்ம மனசுல நின்னுடறார். போதுமான ஸ்டையில், அளவான எமோசன்ஸ் என கச்சிதமான நடிப்பு. பட் மோகன் லால் இருப்பதாலோ என்னவோ, இரண்டாம் பாதி படம் கொஞ்சம் டல் அடிக்கிறது. விஜயின் ப்ரீ ஃபாலுக்கு இணையாக சத்தியராஜ் போன்ற ஒரு லொள்ளுப் பார்ட்டி கூட இருந்திருந்தால் படம் இன்னும் அட்டகாசமாக இருந்திருக்குமோ என்னவோ. படத்தை ஒரு மசாலா படமாவே கொண்டு செல்வாதா இல்லை ஒரு உலகப் படமாக எடுப்பாதா என்ற இயக்குனரின் குழப்பத்துக்கு ஒரு வேளை இதுவே காரணாமாக இருந்திருக்கலாம்.


3.     காஜல் அகர்வால் கொஞ்சமும் மாற்றமே இல்லாம அப்பிடியே இருக்காங்க, இது ஒரு பிளாஸ் போன்று தோன்றினாலும், 2007ல இருந்து இன்னிக்கி வரைக்கும் தொடர்ந்து பார்த்து வந்ததுல, எந்த ஒரு சீன் வரும்போது சீனோட அட்மாஸ்பியர் பார்த்தே காஜல், ரியாக்ஷன் நம்பார் 12 குடுப்பாங்களா இல்ல, 17 குடுப்பாங்களான்னு சொல்லிடக் கூடியதா இருக்கறது பெரியவே மைனஸ். என்ன ஒரே ஆறுதல், இப்போவெல்லாம் இந்தப் பொண்ணு சேலை கட்டி வந்தா அது இடுப்புல நிக்கவே மாட்டேங்குது, சோ நாமெல்லாம் ரொம்ப ஹேப்பி அண்ணாச்சி.

5.    செகண்ட் ஆப் ஆரம்பித்ததும் விஜயின் மன மாற்றத்துக்கு காரணமாக வரும் காட்சி வலு இல்லாமல் இருப்பது ரொம்பவே சொதப்பல். ரொம்பவும் உருக்கமான காட்சிதான் அது, அதில் சந்தேகம் இல்லை, ஆனா விஜய் போலீஸ் ஆக முதல் நல்லம நாயக்கர் போன்றிருக்கும் சிவன்,  விஜய் போலீஸ் ஆன மறு கணமே, சிங்கம் மயில் வாகனம் ரேஞ்சுக்கு தெரிவது கொஞ்சமும் ஏற்றுக்கொள்ள முடியாததாக ஆகிறது. ஒரு மாஸ் படமாகவே இருந்த போதும் இந்த மன மாற்றம் இன்னும் கொஞ்சம் கவனமாக கையாளப்படிருக்க வேண்டுமோ என்னமோ.

6.  தம்பி செண்டிமென்ட், தங்கச்சி செண்டிமெண்ட், அம்மா செண்டிமெண்ட், அப்பா செண்டிமெண்ட் ன்னு ஒரே குடும்ப பாச மழை. நட்புக்கு சூரியும், ஊறுகாய்க்கு காஜலும், வில்லனாக சம்பத்தும், என ஒரே நடச்சத்திரப் பட்டளமாகவும், விஸ்தாரனமகாவும் இருக்கும் படம், சில நேரங்களில் எதுக்கு இம்ம்புட்டு பேர், ஒரு மூணு காரக்டர தூக்கி இருந்தா இன்னும் முப்பது நிமிசத்த மிச்சம் புடிச்சிருக்கலாமேன்னு யோசிக்க வைக்குது. போதாக் குறைக்கு ரெண்டே சீனுக்காக தலைவர் சந்தானத்துக்கே ஜோடியா நடிச்ச ரெண்டு ஹீரோயின்கள தேவையே இல்லாம வேஸ்ட் பண்ணி, நம்ம கடுப்ப வேற கெளப்பி, இதெல்லாம் தேவையா?

7.  செம என்டேர்டைனிங்கான முதல் பாதிக்காக இந்தப் படம் கண்டிப்பாக பார்க்கலாம். விஜய் புல் ஸ்விங்குல இருக்கார், ரொம்ப நாளைக்கு அப்புறம், கில்லி, சச்சின்ல பார்த்த அதே இளமைத் துள்ளல், அட்டகாசம், செமயா இருக்காரு மனுஷன். கொஞ்சம் தொப்பை எட்டிப் பார்க்கிறது, அடுத்த படத்துல அதையும் கவனிச்சிட்டா, இன்றைய சினிமாவின் மார்கண்டேயனா வருவதற்கான எல்லா தகுதியும் இந்த ஆளுக்கிட்டதான் இருக்கு.

8.  இசை, ஒளிப்பதிவு இதர விதரங்கள் சொல்லிக்கொள்ளும் படி எதுவும் இல்லை. குறையும் இல்லை, நிறையும் இல்லை.


விஜய் ரசிகர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். மற்றயவர்கள் ஒரு முறை பார்க்கலாம், அல்லது குறைந்த பட்சம்,  டிவிலயாவது ஃபர்ஸ்ட் ஆப் கண்டிப்பாக பார்க்கணும்.

நம்ம ரேட்டிங் 6.5/10. (ஃபர்ஸ்ட் ஆப் 9/10, செகண்ட் ஆப் 4/10)

எல்லோருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள். 

டிஸ்கி: ஒன்ஸ் மோர் படத்துல அப்பன தத்தெடுத்த நம்ம இளைய தளபதி, இந்தப் படத்துல தாத்தாவையே தத்தெடுத்து சாதனை படைச்சிருக்காரு. அதுக்காகவேனும் பாருங்கள்.

டிஸ்கி:  ஏற்கனவே, சிவன்-சக்தி சண்டைய வச்சி, ஒரு பிரபு-சத்யராஜ் படம், ராஜேஷ் படம்,   அப்புறம்    இந்த படம், அதுல டாப்பு "ஒரு குவார்ட்டர் சொல்லேன் மச்சி" தான்!

டிஸ்கி: இங்கு நாம படம் பார்க்கப் போன காம்ப்ளெக்ஸ்ல எதிர் எதிரே ரெண்டு ஸ்க்ரீன்ஸ், ஒன்னுல ஜில்லா, மத்ததுல வீரம். ஜில்லா பார்த்துட்டு வீரம் பார்கலாம்ன்னுதான் இருந்தோம், பட், ஜில்லா முடியும் போது அந்த எண்ணம் சுத்தமா போயிட்டதால, வீரம் பார்க்க முடியல. என்ன ஒரு கவலை, தலைவர் காமெடி செமையா இருக்குன்னு எல்லாருமே, சொல்லும்போது, ஜில்லாவ விட, வீரம் பார்த்திருக்கலாமோன்னு ஒரு எண்ணம் வருது.

**********************************************

பதிவுக் குறிப்பு: 

ஆரம்பத்துலையே சொன்னது போன்று, ஒரே செயல்பாட்டினை இரு வேறு கோணங்களில் இருந்து பார்க்கவும், விவாதிக்கவும், தன்னையும், தன்சார்ந்தவர்களையும் பற்றி சுய பரீசீலனை செய்யவும் என பல வாய்ப்புக்களை கொண்டது படத்தின் கரு. ஒரு நல்ல இயக்குனர் கையில் நாயகன் இரண்டாம் பாகமாக அல்லது நாயகன் படத்தின் மறுபக்கமாக அமைந்திருக்கக் கூடியது. அது ஒரு பொருட்டன்று. அந்த படத்தை ஒரு மாஸ் ஆக்ஷன் படமாக கொடுக்க நினைக்கும் போது, அந்த எல்லைகளுக்குள் மட்டுமே பூரணமாக பயனித்திருந்தால், ஒரு சிவகாசி போன்றோ, அல்லது, ஒரு சிறுத்தை போன்றோ செம ஜாலியான ஒரு இரண்டாம் பாதியை கொடுத்திருந்தால், விஜயின் பாக்ஸ் ஆபீஸ் சரித்திரத்தில் முக்கிய இடம் பிடித்திருக்கக் கூடிய ஒரு படம். இரண்டாம் பாதியில் ஏற்பட்ட சில குறைகளும், இயக்குனரின் அனுபவம் இன்மையும், படத்தை சற்றே பாதித்து விட்டது. 



Saturday, November 2, 2013

ஆரம்பம், ஆல் இன் ஆல் அழகுராஜா -இந்த தீபாவளிக்கும் இரட்டை விமர்சனம்.

தீபாவளியும் அதுவுமா தமிழ் படம் பார்க்கலைனா தெய்வ குத்தமாகிடுமேங்கற ஒரே காரணுத்துக்காக, பல தடைகளையும் கடந்து, ராசு மாமா பேச்சையும் மீறி, வழக்கம் போலவே மொக்க வாங்கிட்டு, நான் பெற்ற துன்பம் பெறுக  இவ்வையம்ங்கர தாரக மந்திரத்துக்கமைய உங்க உசுரையும் எடுக்கலாம்ன்னு ரொம்ப நாளைக்கு அப்புறமா ப்ளாக்கர் பக்கம் வந்திருக்கேன். இனிமே நம்ம விமர்சனத்த பார்க்கலாம்.

ஆரம்பம். 

ஒவ்வொருத்தர் வாழ்கையிலும் ஒரே ஒரு தடவைதான் தல தீபாவளி வரும், ஆனா தல ரசிகர்களுக்கு மட்டும்தான் ஒன்னுக்கு அதிகமா தல தீபாவளி கொண்டாடுற பாக்கியம் கெடைக்கும். இது அப்படி ஒரு தல தீபாவளி. அஜித்-விஷ்ணு-நயன் கூட்டணி, கூடவே ஆர்யா-தாப்சி-கிஷோர்-அதுல் குல்கர்னி-ராணா டகுபதின்னு ஏகப்பட்ட கூட்டம். மாஸ்க்கு அஜித்தும், காமெடிக்கு ஆர்யாவும், கண்ணுக்கு நயனும், மொக்கைக்கு தாப்சியும்ன்னு பார்ட் பார்டா பிரிச்சு கத எழுதியிருப்பாரு விஷ்ணுன்னு நினைக்கறேன். 

இப்பெல்லாம் தல கால் ஷீட் கெடச்சதும் மொத வேலையா, தல கையில ஒரு பைக், கார், அப்புறம் ஏதாவது இன்னுமொரு வண்டிய குடுத்து வேகமா ஓட்டவச்சு ஷூட்  பண்ணிக்கறாங்க, அப்புறம் அவர கொஞ்சம் தனியா நடக்கவச்சு, படத்துல இருக்கற மத்த ஒவ்வொரு நடிகர் கூடவும் தனித்தனியாகவும் கூட்டமாவும் சேர்த்து நடக்கவச்சி சூட் பண்ணிக்கறாங்க, அப்புறம் படத்துல வர்ர வில்லன் நடிகர், தலையோட தலையில துப்பாக்கி வச்சிருக்கறப்போ, தல ஒரு டயாலாக் பேசுற மாதிரி ஷூட் பண்ணிக்கறாங்க, கடைசியில அந்த ஒவ்வொரு சீனையும் பிரிச்சுப் பிரிச்சுப் போட்டு கொஞ்சம் காரம், ஸ்வீட் ஆங்காங்கே போட்டு எடிட் பண்ணி ஒரு படம்ன்னு ரிலீஸ் பண்ணிடறாங்க, இங்கயும் அதுவே நடந்திருக்கு. இருந்தாலும் ஒரு ஆர்டர்ல கரெக்டா அந்த சீன்ஸ் வர்ரதனாலயும், அங்காங்கே கதைன்னு ஒன்னு தல காட்டரதனாலயும், ஆர்யாவோட காமெடி, தலையோட எக்ஸ்ட்ரா ஆர்டினரி ஸ்க்ரீன் ப்ரெசென்ஸ் இருக்கறதனாலயும், அங்காங்கே எட்டிப் பார்க்கும் சில நிஜ சம்பவங்களும், அதை படத்துல கோர்திருக்கற விதமும் சேர்த்து, ஒருவேள படம் நல்லாத்தான் இருக்கோன்னு நமக்கே ஒரு டவுட்டு வாறமாதிரி ஒரு படம்.

படத்துல குறைன்னு சொல்றதுக்குன்னா ரெண்டே விஷயம், ஒன்னு நயன் கொஞ்சம் வயசா தெரியறாங்க, நயனுக்கு அழகே சுடிதார்தான், அது இங்க மிஸ்ஸிங். ரெண்டாவது அத்துல் குல்கர்னி போன்ற ஒரு எக்ஸ்ட்ரா ஆர்டினரி நடிகரையும், கிருஷ்ணா போன்ற ஒரு ரொம்ப கேப்பபில் நடிகரையும் கொஞ்சம் கூட ஈவு இரக்கமே இல்லாம வேஸ்ட் பண்ணியிருக்கறது. இன்னும் ஒன்னு சொல்லனும்ன்னா தமிழ் சினிமா VFX ஐ கொஞ்சம் ரொம்ப சீரியஸா எடுத்துக்க வேண்டிய நேரம் வந்திரிச்சு, குண்டு வெடிக்கற காட்ச்சிகள் VFX சுத்த சொதப்பல். மற்றும்படி இது கண்டிப்பாக மொக்கை இல்லை. கொடுத்த காசோ, செலவளிச்ச நேரமோ வேஸ்ட்டுன்னு சொல்லற படமும் இல்லை.  மிஸ் பண்ணிடாம கண்டிப்பா பாருங்கன்னு சொல்லற படமும் இல்லை. இந்த தீபாவளிக்கு தமிழ் படம் பார்க்கணும்னா ஆரம்பம் பாருங்க. அம்புட்டுத்தான் சொல்லலாம்.


ஆல் இன் ஆல்  அழகுராஜா

எல்லா பண்டிகையும் நமக்கு கொண்டாட்டமாவே அமைஞ்சுடுதா என்ன, எப்போவாவது குடும்பத்துல ஒரு பெருசு மண்டயப் போட்டோ, இல்ல நமக்கு ஒடம்பு சரியில்லாம போயோ, பண்டிக பனாலாகிடுறதில்லையா, அந்த மாதிரி ஒரு அசம்பாவிதம் தான் இந்த படம். இது நிஜமாவே ராஜேஷ் படமா, இல்ல ராஜேஷ்கிட்ட சரக்கு தீர்ந்திடிச்சான்னு என்ன ரொம்பவே யோசிக்க வச்ச படம் இது. ராஜேஷ் படத்துல இருக்கற எல்லாமே இருக்கு, ஆனாலும் இது ராஜேஷ் படம் மாதிரி இல்லாம இருக்கு, அது ஏன்னு எனக்கு கடைசிவர புரியவே இல்ல. படத்துல இருக்கற ஒவ்வொரு சீனும் நமக்கு போரடிச்சு போதை ஏறி அது தெளிஞ்சதுக்கு அப்புறமும் முடியாம ஜவ்வு மாதிரி இழுத்துக்கிட்டே போறதுதான் இந்த படத்தோட முக்கிய குறைன்னு நினைக்கறேன். நெறயவே ஸ்டார் காஸ்ட் இருக்கு படத்துல, எதுவுமே வேர்த்தியா இல்ல, தலைவர் கூட நெறைய இடங்கள்ள நம்மள கவுத்துடுராறு. படம் பார்கறவங்க பாதி நேரத்துக்கு மேல தேட்டர் ஸ்க்ரீன பார்க்காம அவுங்க மொபைல் ஸ்க்ரீனையே பார்த்துக்கிட்டு இருக்காங்க, படத்துல வார ஒவ்வொரு சீனுக்கும், தேட்டர் ஆடியன்ஸ்ல யாராச்சு ஒருத்தர் போதும்யான்னு சொல்லிக்கிட்டே இருக்காங்க.

அப்போ இந்த படத்துல பிளாஸ் பாயிண்டே இல்லையான்னு கேக்காதீங்க, இருக்கு. அதுல முக்கியமா ரெண்டு பாயிண்ட மட்டும் உங்களுக்கு சொல்றேன். ஒன்னு இந்தப் படத்த பார்க்கற ஒவ்வொருத்தருக்கும் அவங்களோட பள்ளி நாட்கள் கண்டிப்பா ஞாபகம் வரும், அதாவது "எப்படா கிளாஸ் முடியும், எப்படா வீட்டுக்கு போவோம்" ன்னு நாம தவிச்ச தவிப்பு இருக்கே, படம் ஓடுற மூணு மணிநேரமும் உங்க கண்ணு முன்னாடியே நிக்கும். ரெண்டாவது, திரை விமர்சனம்ங்கற  பேர்ல படத்தோட கதைய விலாவாரியா எழுதி ஒப்பேத்துற விமர்சகர்களுக்கு ராஜேஷ் சரியான சவால் விடுத்திருக்காரு, முடிஞ்சா படத்துல என்ன நடத்துச்சுன்னு சொல்லுங்கடா பார்க்கலாம்ன்னு நம்ம விமர்சகர்கள பார்த்து கேக்கற கேள்வி இருக்கே, சார் இந்த திமிரு, உங்கள எங்கயோ கொண்டு போகப்போகுது.

ஆன் ஏ சீரியஸ் நாட், படத்தோட ஒன் லைனர் என்னன்னா, அப்பன் செஞ்ச தப்புனால பிரிஞ்சு போன ரெண்டு குடும்பத்த மகன் எப்படி சேர்த்து வைச்சி அப்பன் செஞ்ச தப்ப திருத்திக்கறாருங்கறதுதான். இந்த ஒன் லைனருக்கு வழக்கம் போலவே செம இண்டரஸ்டிங்கான காரக்டர்ஸ் புடிச்ச ராஜேஷ், வழக்கம் போல இண்டரஸ்டிங்கான ஸ்க்ரீன் ப்ளே எழுதறத்துக்கு பதிலா, வெறும் மொக்க சீன்கள் மட்டுமே எழுதி அத தொகுப்பாக்கி ஒரு படமா குடுக்க ட்ரை பண்ணியிருக்காரு. இந்த பருப்பு உள்நாட்டுல மட்டுமில்ல, வெளிநாட்டுல கூட வேகாது பாஸ், சீக்கிரமே முழிச்சுக்கோங்க, இல்லையின்னா S.J சூர்யா நிலைமைதான் உங்களுக்கும். சொல்றத சொல்லிட்டோம், த சாய்ஸ் இஸ் யுவர்ஸ்.

Wednesday, November 21, 2012

துப்பாக்கி, ஜப் தக் ஹேய் ஜான் : இரட்டை பார்வை

பதிவர்னா ஒரு படம், அது தமிழோ, இந்தியோ, தெலுங்கோ, இங்கிலீஷோ இல்ல கொரியன், இந்தோநேஷியனோ, உடனே பார்த்து விமர்சனம் எழுதனும்கறது ஒரு சட்டம், அத மீறி படம் பார்த்துட்டும் விமர்சனம் எழுதலயின்னா சங்கத்துல இருந்து தள்ளி வச்சிடுவாங்கன்னு மொக்கராசு மாமா மிரட்டுனதால, இந்த தீபாவளி ரிலீஸ்ல நான் பார்த்த ரெண்டு படத்துக்கும் ஒரே பதிவுல விமர்சனம் எழுதி சங்க மெம்பர்ஷிப்ப காப்பாத்திக்கலாம்ன்னு இறங்கிட்டேன்.

முதல்ல ஷார்ட்டா துப்பாக்கி. துப்பாக்கிய பத்தி பலபேர் பல பதிவு போட்டு பல விமர்சனம் போட்டு படம் மெகா ஹிட்டுன்னு ஊரறிய அறிவிப்பும் குடுத்தாச்சு. இதுக்கு மேல இந்த படத்த பத்தி நான் என்ன சொல்றது? ரொம்ப நாளைக்கு அப்புறமா முழு திருப்தியோட ஒரு விஜய் படம் பார்த்தது இந்த தீபாவளிக்குத்தான். அண்ணன் பின்றாரு, நடிப்புல செம முதிர்ச்சி தெரியுது, ஆனா தோற்றதுல செம இளமை தெரியுது. முருகதாஸ் மொத்தமா நாலே நாலு சீன யோசிச்சிட்டு, அத விஜயோட உதவியால ஒரு முழுப்படமா குடுத்திருக்காரு, வழக்கம் போல ஹரிஷ் ஜெயராஜ் செமையா சொதப்பியிருக்காரு. படத்துல வில்லன காட்டறப்போ அந்த ஊ ஊ ஊ  BGM பழைய விஜயகாந்த் பட "பயங்கர வில்லன" ஞாபகப்படுத்தி தொலைக்குது. நாலு சீன விட்டா படத்துல சொல்லிக்கொள்ளும்படியா எதுவுமே இல்ல, ஆனா விஜய் நம்மள சீட்டோட கட்டிப் போட்டு வைக்கிறதால, படம் முடிஞ்சு வெளிய வாரப்போ, ஒரு முழுத் திருப்தி கெடைக்குது, நீண்ட நாளைக்கு அப்புறமா ஒரு செம மாஸ் என்டேர்டைனர் பார்த்த மாதிரி நமக்கு ஒரு பீலிங் வருது. துப்பாக்கி, இட்ஸ் ஆல் அபவுட் விஜய். கிங் ஆப் மாஸ்.


ஜப் தக்  ஹேய் ஜான்:


எட்டு வருஷங்களுக்கு பிறகு யாஷ் சோப்ரா படம் இயக்க வர்றாருன்னு சொன்னதுமே இந்த படத்துக்கான எதிர்பார்ப்பு தொத்திக்கிருச்சி.  "எ யாஷ் சோப்ரா ரொமான்ஸ்" எப்படி இருக்கும்ன்னு தெரிஞ்சவங்களுக்கு படத்தோட கதைய பத்தி எதுவுமே சொல்ல தேவையில்ல, கதைய விட பெர்போர்மான்ஸ் தான் எப்பவுமே அவரோட படத்துல USP.  வழக்கமான யாஷ் சோப்ரா ரொமான்ஸ் தான் படம். ஆனா ரொம்ப நாளைக்கு அப்புறமா பார்க்குறதால ரொம்ப ரீஃப்ரெஷிங்கா இருக்கு படம்.  ஷாருக்க  விட்டா ரொமாண்டிக் பிலிம்ல பெர்ஃபோம் பண்ணறதுக்கு வேற யார தேடுறது? ரொம்ப நாளைக்கு அப்புறமா ஷாரூக் ரொமாண்டிக் ஹீரோவா நடிக்கற படம்,  ரஹ்மான் சார் மியூசிக், முதல் முறையா ஷாரூக்கும் கத்ரீனா கய்ப்பும் ஜோடி சேரும் படம், ஆதித்யா சோப்ரா கதை வசனம்ன்னு சொன்னதுமே எதிர்பார்ப்பு பல மடங்காயிருச்சி. படம் முடிஞ்சு ஃபைனல் பிரிண்ட் வர்ரதுக்கு முன்னாடியே யாஷ்ஜீ திடீரென இறக்க, யாஷ் சோப்ராவோட கடைசி படம்ங்குற டைட்டில் வேற சேர்ந்துடுச்சு. இங்க படம் ரிலீஸ் முதல் நாள் முதல் ஷோவுக்கு முதல் ஆளா போய் நின்னுட்டேன். இனிமே படம் எப்பிடின்னு பார்க்கலாம்.

காதலை பிரிஞ்சு வாழ்றதும், தினம் தினம் செத்து பொழைக்கறதும் ஒண்ணுதான். நம்ம காதலிக்கறவங்க நல்லா இருக்கனும்கறதுக்காக பிரிஞ்சு வாழறதுக்கு பதிலா பேசாமா பினாயில வாயில ஊத்தி கொன்னுடலாம். இவ்வளவுதான் படத்தோட கதை. இந்த கதையை வச்சிக்கிட்டு ஆதித்யா சோப்ரா எழுதியிருக்கற திரைக்கதை முன் பாதி அற்புதம், "கடவுளுக்கு சத்தியம் பண்ணி பிரியற ஒரு காதல்" ன்னு ஒரு சின்ன லைன வச்சி ரொம்ப கன்வின்சிங்கா ஒரு திரைக்கதை எழுதியிருக்காரு, ரெண்டாவது பாதி, தொண்ணூறுகளின் மனம் சார்ந்த காதலுக்கும், ரெண்டாயிரங்களின் உடல் சார்ந்த காதலுக்கும் இடையிலான வித்தியாசம், முக்கோண காதல், காதல் தோல்வி, பெர்போர்மான்ஸ் ஸ்கோப்ன்னு ஏகப்பட்ட விஷயங்கள் இருந்தும் அம்னீசியா, நினைவு திரும்பி வரவழைக்கும் நாடகம்ன்னு 1980 சமாச்சாரத்த தொட்டு திரைக்கதை அமைச்சது படத்தோட நாம ஒன்றிப்போறத கொஞ்சம் கஷ்டமானதா ஆக்கிடுது. தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே, வீர்-சாரா, ரப் னே பனாதி ஜோடி, போன்ற படங்களை எழுதிய ஆதித்யா சோப்ரா இந்த அதர பழைய நாடகத்த தொட்டது கொஞ்சம் வருத்தம் தான், ஆனாலும் பெர்போர்மன்சும், யாஷ் சோப்ராவின் இயக்கமும், ஆதித்யா சோப்ராவின் வசனங்களும் பெருமளவு அதை ஈடு செஞ்சுடுது.


ஷாரூக் கான் ரொம்ப இளமையா இருக்காரு, ஒரு பணக்கார பொண்ணு தினக்கூலிய லவ் பண்ணுவாளான்னு யாருக்காவது டவுட்டு வந்தா அந்த தினக்கூலி இந்தாளு மாதிரி இருந்தா பணக்கார பொண்ணு என்ன தேவலோக ராணியா இருந்தாலும் லவ் பண்ணுவான்னு சொல்ற அளவுக்கு, அவருதான் தி கிங் அப் ரொமான்ஸ்ன்னு மறுபடியும் நிரூபிச்சிருக்காரு. ஆர்மி ஆபிசர் சமர் ஆனந்தா இருக்கட்டும், லண்டன்ல பஞ்சாபி பாட்டு பாடி ஆடுற தெருப்பாட்டு கலைஞரா இருக்கட்டும், ஹோட்டல்ல கொச்சை இங்கிலீஷ்ல பேசி சிரிக்க வைக்கற வெயிட்டரா இருக்கட்டும், குறிப்பா அனுஷ்கா ஷர்மா பந்தயம் கட்டிட்டு ஆத்துல எறங்கி குளிர்ல நடுங்கரப்போ காப்பாத்துற காட்சியிலா இருக்கட்டும், ஷாருக் கான் King Khan தான். ரொம்ப ஜாலியான ஒரு முகம், ரொம்ப இறுக்கமான போரிங்கான ஒரு முகம், ரெண்டயுமே செமயா வெளிப்படுத்தியிருக்காரூ, (ரப் னே பனாதி ஜோடி படத்துல ரெண்டு பாத்திரமும் ரெண்டு எக்ஸ்ட்ரீமா இருக்கும், அதையே சூப்பரா பண்ணியிருப்பாரு, இதுல ரெண்டும் ரொம்ப சட்டிலா இருக்கும், இத ரொம்பவே அற்புதமா தூள் பண்ணியிருக்காரு)

கத்ரீனா கைப், முதல் முறையா முழு நீள ரொமாண்டிக் படத்துல நடிச்சிருக்காங்க, லண்டன்ல வாழ்ற, தம் அடிக்கற, எனக்கு இந்திய மாப்ள வேணாம், அவங்க எல்லாம் கருப்பா இருக்காங்கன்னு ஜீஸஸ் கிட்ட வேண்டிக்கற, ஆனா அதே நேரம் இந்திய பண்பாடு விட்டுப்போகாத பொண்ணா கன கச்சிதமா பொருந்தி இருக்காங்க, இது வரைக்கும் ஒரு கிளாமர் டோலா மட்டுமே படத்துல வந்திட்டு போனவங்க, முதல் முறையா தன்னாலும் நடிக்க முடியும்ன்னு காட்டி இருக்காங்க, அந்த வகையில சுப்பர்.

ராப் னே பனாதி ஜோடி படத்துல பார்த்த அனுஷ்காவுக்கும்,  இதுக்கும் நூறு வீத வித்தியாசம். அந்த பாத்திரத்துக்கு அப்படியே நேர் எதிரா, மேக் அப் - பிரேக் அப் கலாசார இன்ஸ்டன்ட் காதல் உலகத்துல வாழுற, அடிக்கடி இங்கிலீசுல கெட்ட வார்த்த பேசிக்கற நவ நாகரிக பொண்ணா ரொம்ப கான்வின்சிங்கா இருக்காங்க. ப்ரீதி-ராணி, கரீனா-பிரியங்கா வுக்கு அப்புறமா தீபிகா-அனுஷ்கா தான் அடுத்த பாலிவுட் கிளாமர் கம் அக்டிங் ஹீரோயின்ஸ் ஜோடின்னு அடிச்சு சொல்றாங்க.

ரஹ்மான் சாரோட பின்னணி இசை ஒரு ரொமாண்டிக் படத்துக்கு உரிய விதத்துல இருக்கு. திரையில தெரியற காட்சி கண்ணுல தெரியுதா, காதுல தெரியுதான்னு புரியாத அளவுக்கு பின்னணி இசையும் ஒளிப்பதிவும் போட்டி போட்டுக்கிட்டு இருக்கு படம் முழுவதும். பாடல்கள் கேட்டதும் பிடிக்கும் ரகம் கெடயாது. ஆனா படம் பார்த்ததுக்கு அப்புறம் இருந்து இந்த ஒரு வாரமா ஜப் தக் ஹேய் ஜான் பாடல்கள்தான் கேட்டுக்கிட்டே இருக்கேன். சல்லா, சான்ஸ், ஹீரு, இஷ்க் சாவா, ஜியாரே எல்லாமே அற்புதம்.

இயக்குனர் யாஷ் சோப்ரா, தனக்கே உரிய பாணியில, ஒரு காதல் கதைய, ஆனா இன்றைய இளைஞர்களையும் கவரும் வகையில இயக்கி இருப்பது, அதுவும் தனது என்பதாவது வயசுல இவ்வளவு இளமையா ஒரு படத்த இயக்கியிருப்பது வியந்து பார்க்க வைக்குது. சமீபத்திய இந்தி படங்கள் எல்லாமே கொஞ்சம் மேற்கத்தைய கலாசாரத்தையும், முறை தவறிய காதல்களையும் மையப்படுத்தி வரும்போது, 90 களின் அதே பழைய காதல் கதையா கொஞ்சமும் சுவாரஷ்யம் குறையாமல் கொடுத்திருப்பது யாஷ் சோப்ராவின் அனுபவத்தை சொல்கிறது. இனிமேல் "எ யாஷ் சோப்ரா ரொமான்ஸ்" பார்க்க முடியாமல் போகுமே என்கிற ஏக்கம் எழுவதை ஏனோ தவிர்க்க முடியவில்லை.

ஜப் தக் ஹேய் ஜான் - A Yash Chopra Romance Dressed in Modern Outfits.

டிஸ்கி: என்னங்க இது? பதிவ எழுதி பப்ளிஷ் பண்ண பிறகு , திடீர் திடீர்ன்னு காணமா போகுது? "An error occurred while trying to save or publish your post. Please try again. Ignore warning"  ன்னு வருதே? 

Saturday, September 1, 2012

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வாரா இளையதளபதி?

இணையத்தளங்களில் அதிகம் கலாய்க்கப்படும் நடிகர் இளையதளபதி விஜய். ஏன் நாமே கூட நெறைய பதிவுகளில் அவர கலாய்சிருக்கம். இது ஏன்னு நம்ம பார்வையில் ஒரு அலசல்.


ரொம்பத்தான் யோசிக்கிறாரு, கண்டிப்பா கோட்டைய புடிச்சிருவாரு.
இணையத்தளங்களில் விஜய் கலாய்க்கப்படுவதற்கு வேறுபட்ட மூன்று காரணங்கள் இருக்கின்றன

1. பப்ளிசிட்டி - விஜயை கலாய்த்து ஒரு பதிவு போட்டால் நிச்சயம் ஹிட்ஸ் எகுறும். பின்னூட்டப் பெட்டி நிரம்பி வழியும். இலகுவாக பிரபலம் அடையலாம். இது பதிவுலகில் உள்ள அனைவருக்கும் தெரிந்த ஒன்று.  இது ஏன் என யோசிப்பவர்களுக்கு புரியக்கூடிய ஒரு விடயம் விஜய் ஆதரவாளர்களும் விஜய் எதிரிகளும் ஏறக்குறைய சம அளவில் இருப்பதும், மிக அதிக அளவில் இருப்பதும். (ஊரு ரெண்டுபட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் தானே)

2. விஜய்  பண்ணும் அரசியல் - ரசிகர்களை பகடைக்காய்களாக்கும்  அரசியல் அண்ணன்கிட்ட நெறயவே இருக்கு. இதில் முக்கியமாக அப்பா - நம்ம அப்பா இல்லீங் தளபதியோட அப்பா, இந்த அப்பா, மகன் சம்பாதித்த கோடிக்கணக்கான ரசிகர்களை வைத்து பண்ணும் டிராமா. இது பலபேருக்கு பிடிப்பதில்லை. இங்கேயும் நஷ்டம் நம்ம தளபதிக்குதான்.

3. தளபதி கொடுத்த சமீபத்திய படங்கள்: இதுல ரெண்டு வகை இருக்கு. ஒன்னு பனமரம் படுத்தா பம்ப் அடிக்கற வகை. இன்னொன்னு நிஜமானா அன்பின் காரணமாக வருகிற ஏக்கம் (இந்த வசனத்த எழுதினவன் ஒரு கமல் ரசிகன் போல). நேத்து பேஞ்ச மழைக்கி இன்னக்கி மொளச்ச காளான் எல்லாம் ஹிட் குடுக்கறப்போ இவருக்கு  என்னாச்சிங்குற கவலை.

இது மூணும்தான் இளையதளபதி இணையத்தளங்களிலும், வலைப்பூக்களிலும்,  சோசியல் நெட்வர்க்களிலும் அதிகம் கலாய்க்கப்படுவதற்கு காரணமே. முதல் காரணத்துக்கு நாம ஒன்னும் பண்ண முடியாதது. ஒருவரின் பிரபலத்தில் ஒட்டிக்கொண்டு அவரை போற்றியும் தூற்றியும் பிரபலமாவது தமிழனுடைய மரபு, கலாசாரம். அது மாற்றப்பட முடியாத ஒன்று. இரண்டாவது காரணத்தை அலச நாம் அரசியல் பதிவர்கலில்லை, அந்த வேலைய வேறு நல்ல பதிவர்கள் கையில விட்டுட்டம். நாம நமது பிரச்சினைய மட்டும் விலாவாரியா பேசுவம். (அடங்கொக்காமக்கா, மறுபடியும் ஆரம்ம்பிச்சுட்டானுகளா, ச்சே  இந்த பதிவு இன்னம் முடியலியான்னு யோசிக்கறவங்க தயவு செய்தது ஒரு காப்பி குடித்துவிட்டு தொடரவும்) 

துப்பாக்கி வரட்டும்,  ஒங்கட டங்குவார அத்துபுடுறேன்
தளபதியோட படங்கள்ல நாங்க அதிகம் பார்த்த படம் காதலுக்கு மரியாதையோ, சிவகாசியோ கில்லியோ இல்ல, மாறாக வசீகராவும், சச்சினும்தான். வசீகரா தளபதி ஆக்ஷன் ஹீரோவா முழுசா ஜெயிக்கறதுக்கு முதல் வந்த படம். ரோமன்டிக்கா, ஆக்ஷனான்னு யோசிக்கிட்டு இருந்தப்போ வந்தது. சச்சின் இவரு ஆக்ஷன் ஹீரோவா சக்க போடு போட்டுக்கிட்டுரிந்தப்போ வந்தது. தளபதி பீக்ல இருக்கற நேரம் வந்தது. . சச்சின் (நான் என்ன பண்ண, இது மனுபாக்ச்சரிங் டிபாக்ட் - இந்த டயலக மறந்தவங்க இதுக்குமேல இந்த பதிவ படிக்காம இருக்கறது நலம்) நம்ம தளபதி ரொம்பவே நம்பிக்க வச்சி நடிச்ச படம், அந்த படம் வந்தப்போ தளபதி என்ன சொன்னார்னா "இந்த கதைக்காகதான் நான் இவ்வளவு நாளும் காத்துக்கிட்டிருந்தேன்" (இதேதான் வேட்டைக்காரனுக்கும் சொன்னாரு, சுறாக்கும் சொன்னருங்கிரீங்களா? சரி, டீல்ல விடுங்க). ஆனா அந்த படத்தோட ஒன்லைனர் குஷி படத்தோட ஒன்லைனரா இருந்ததாலேயும், ஸ்க்ரீன்ப்ளே நெறைய ஒற்றுமைகள கொண்டிருந்ததாலேயும் மக்கள் அந்த படத்த ஏத்துக்கல, ஆனா நிஜமாலுமே தளபதியோட காமெடி நடிப்பில் இந்த படம் ஒரு மயில் கல். ஆனா அத நம்ம தளபதி தப்பா புரிஞ்சுகிட்டாரு. மக்கள் நம்மள ஆக்ஷன் ஹீரோவா மட்டும்தான் பாக்குறாங்க ரொமாண்டிக் ஹீரோவா இனிமே நாம நடிக்கவே கூடாதுன்னு முடிவு பண்ணிட்டாரு. தொடர்ச்சியா ஆக்ஷன் படங்கள் குடுத்தாரு, இதுல சிவகாசி சரவெடி.. அப்புறமா ஒரு சறுக்கல், மறுபடியும் போக்கிரி, அப்புறம் சில சறுக்கல்கள், சமீப காலாமாகவே சிவகாசி மாஜிக் மறுபடியும் வர்க்அவுட் ஆகாதான்னு அதே பாணில தொடர் சறுக்கல்கள். அப்புறமா மறுபடியும் ரொமாண்டிக் ஹீரோ சப்ஜெக்ட்ல ஒரு கம்பாக் படம். சச்சின் தோல்வியில தளபதி எடுத்த தப்பான முடிவு இன்னம் அவர பாதிச்சிட்டு இருக்கு. காவலன் படம் பாத்திங்கன்னா இது புரியும், சச்சின்ல இருந்த துள்ளலும், இளமையும், குசும்பும் நிஜமா சொன்னா காவலன்ல இல்ல, கொஞ்சம் பயத்தோடயேதான் ஆக்ஷன் இமேஜ விட்டுகுடுத்திருப்பாரு. இதுதான் ஹிஸ்டரி.

சூப்பரு... தளபதியோட ஹேர் ஸ்டைல சொன்னேன்... 
ஜியாக்ரபி என்னனா (குருவி, வில்லு, வேட்டைக்காரன், சுறா) இதெல்லாம் சரியா ஓடாததுக்கு உண்மையான காரணம் எப்பிடி படம் நடிச்சாலும் ஓடும்னு நெனச்சிட்டு நடிப்புலயும் ஏன் நடனத்திலையும் கூட காட்டின போடுபோக்குதனம்தான். படத்துக்கு ஸ்கிரிப்ட், ஸ்க்ரீன்ப்ளே, டைரக்சன் (இதெல்லாம் எங்க விக்கிது?) முக்கியமே இல்ல நான் ஸ்க்ரீன்ல வந்து பஞ்சு டைலாக் பேசி ஆறு சண்ட போட்டா படம் ஓடும்னு நெனச்ச ஓவர் கான்பிடன்ஸ் (இதனால்தான் தல ஓவர்கான்பிடன்ஸ் ஒடம்புக்கு கெடுதின்னு சொன்னாரோ!). இதுக்கெல்லாம் மேல விஜயின் அரசியல அவரு படங்களுகுள்ளையும் ஓடவிட்டது. "தளபதி" அப்பிடின்குற இமேஜ் இருக்கற மாதிரியே பாத்து பாத்து கதைகள தேடினது, தேவையே இல்லாம அரசியல் அடித்தளம் போட தொடங்கினது இப்படின்னு அடுக்கிகிட்டே போகலாம். விஜயின் தோல்விகளுக்கு காரணம் அவரே ஒழிய வேறில்லை.

இப்ப நீங்க சச்சின் படத்தையும் சுறா படத்தையும் எடுத்து பாத்திங்கன்னா ஒங்களுக்கு புரியும். அக்ஷன் காட்சியா இருக்கட்டும், ரொமாண்டிக் காட்சியா இருக்கட்டும், காமெடியா இருக்கட்டும், நடனக் காட்சிகளா இருக்கட்டும், பாடல்களா இருக்கட்டும், நடிப்பா இருக்கட்டும் எதுலயுமே சச்சின்ல இருக்கற தரம், நேர்த்தி, உழைப்பு இவரோட அண்மை கால படங்கள்ல இல்லைங்குறது மறுக்கமுடியாத உண்மை. மீண்டும் நமக்கு அந்த துடிப்பான விஜய் வேண்டும், அது வரும் வரைக்கும் நாங்க அவர கலாய்க்கிறது தொடர்ந்துகிட்டே இருக்கும் (இது அன்புக்கலாய்).

காவலன், வேலாயுதம், நண்பன் வரிசைகள்ள "துப்பாக்கி"  அவற்றையும் தாண்டி  ஒரு மாபெரும் ஹிட் ஆகி விஜயோட தலையெழுத்த மாத்தும், அவரோட மட்டுமில்ல, தமிழ் சினிமாவோட, ஏன் குளிர்விட்டு போனதால ஆட்டம்  போடும் வேறு சில நடிகர்களோட தலையெழுத்தையும் சேர்த்து தீர்மானிக்கும்,  என்னும் நமது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வாரா  இளையதளபதி?