Thursday, February 20, 2014

முற்போக்கு வாதம் பேசுவது எப்படி?

சமீபத்தில் திருமணமான எனது நண்பர் ஒருவர் முகப் புத்தகத்தில் ஒரு ஸ்டில் பகிர்ந்திருந்தார். ஒரு குழந்தையின் கிறுக்கல் போன்ற ஒரு ஓவியம் அது. அது தவிர வேறு எந்த குறிப்புக்களோ, விளக்கங்களோ இல்லை. அந்த பகிர்வு உணர்த்தும் பின்நவீனத்துவ குறியீடு என்ன என தீவிர ஆய்வில் ஈடுபட்டிருந்தபோது எனக்கு உதித்த சில சிந்தனைகளின் தொகுப்பே இது. 


சித்தாத்தங்கள் பேசும் ஒரு முற்போக்கு வாதியாக அடையாளம் காட்டிக் கொள்வது எப்படி? இன்று ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளும் இரு பெரும் இடதுசாரி முற்போக்கு சித்தாந்தங்களாக மார்க்ஸியமும், பின்நவீனத்துவமும் இருக்கின்றன. நம்ம நோக்கத்துக்கு இது பத்தின டீடையில் அலசல் எதுவும் அவசியமில்லை. பின்னவீனத்துவமாகட்டும் மார்க்ஸியம் ஆகட்டும் எதிர்ப்பு அல்லது புறக்கணிப்பு என்கின்ற புரிதலே போதுமானது. அத்துடன் சில கலைச் சொற்களும் அவசியம். இவை இருந்தால் இலகுவில் தன்னை ஒரு சித்தாந்த வாதியாக காட்டிக் கொள்ளலாம்.

கலைச் சொற்கள்: விளிம்புநிலை, மரபு, தனித்தன்மை, பொதுப் புத்தி, அறிவியக்கவாதி, முன்னகர்வு, பண்பாட்டரசியல், முரணியக்கம், பொருள்முதல் வாதம்.

தற்காப்பு: எப்போதுமே எதைப் பேசும்போதும் நான் அதுவல்ல என அறிவிப்புப் போட்டுக்கொள்ள வேண்டும். உதாரணமாக மார்க்ஸியம் பேசும் போது நான் மார்க்ஸிய வாதி அல்ல என பலமாக சொல்லிக்கொள்ள வேண்டும், இது முரண்பாடுகளில் இருந்து உங்களைக் காக்க உதவும்.

விதிமுறைகள்:

01. எந்த விஷயமா இருந்தாலும் மிகைப் படுத்தல் என்பது மிக அவசியம். உதாரணமா சிறுநீர் கழித்தல் என்பதை அவ்வாறு சொல்லாமல் "உயிரியலின் அடிப்படையான திரவ கழிவு சுத்திகரிப்பு" என்று சொல்லவேண்டும், ஆணுறுப்பு/பெண் துவாரம் போன்ற வார்த்தைகளை கோர்க்கும் வெளிப்படை பிரயோக லாவகங்கள் வரவேற்கப்படுகின்றன.

02. பொதுமைப் படுத்தல், உதாரணமாக ஒரு ஊழியரை தனி மனிதனாக பார்க்காது ஒரு நிறுவன அமைப்பாக அலது வர்க்கமாக பார்க்க வேண்டும். காற்றுப் பிரித்தல் போன்ற சப்ப மேட்டரா இருந்தா கூட "அடிப்படை உரிமை", "தனி மனித சுதந்திரம்" என்று வகைப் படுத்த வேண்டும்.

03. எப்போதும் கடுமையான வார்த்தைகளை அல்லது இழிவான வார்த்தைகளை பிரயோகிக்க வேண்டும். உதாரணமாக அராஜகம், அடக்குமுறை, அரைகுறை, உமிழ்தல். எதையும் எளிமையான மொழியில் சொல்லாமல் சற்று கடினமான, முரணான நடையில் சொல்ல வேண்டும். உதாரணமாக, ஒரு பிகரு கொஞ்சம் கலரா இருந்திட கூடாதே, உடனே பார்த்திடுவீங்களேன்னு சொல்வதற்குப் பதில் "வெண் தோல் ஏந்திய மகளிரை நோக்கும் சராசரி ஆணாதிக்க மனப்பான்மை" அப்பிடின்னு சொல்லணும்.

04. அடிக்கடி ஏதாவது ஒரு பெயர் புரியாத எழுத்தாளரையோ, சிந்தனையாளரையோ மேற்கோள் காட்டவேண்டும். அல்லது ஏதாவது ஒரு கவிதை வரி, செய்யுளை எடுத்துரைக்க வேண்டும். பெயர் புரியாத எழுத்தாளர்களின் பெயர்கள் எதுவும் உங்களுக்கு தெரியாது எனில் குறைந்த பட்சம் "உனக்கு புரியற மாதிரி சொல்லனும்ன்னா.... ஹ்ம்ம், பாரதி கூட ....." அப்பிடின்னு கொஞ்சம் பிரபலமான பெயர்களை எதோ அவர்கள் நீங்கள் படிக்கும் எழுத்தாளர்களில் இரண்டாம் தர எழுத்தாளர்கள் போன்ற தொனியில் உச்சரிக்க வேண்டும். 


05. மிக முக்கியமானது, உலகத்தில் பரவலாக ஏற்கப்பட்ட விடயமாக எது இருந்தாலும் அதை கண்மூடித்தனமாக எதிர்க்க வேண்டும், சற்று நலிவடைந்த சிந்தனையாக எது இருந்தாலும் அதை கண்மூடித்தனமாக ஆதரிக்க வேண்டும். உதாரணமாக திருமணம் குடும்பம் என்பது தனிமனித சுதந்திரத்தை மறுக்கும் பழமை வாய்ந்த சமூக அமைப்பு கட்டுமானங்கள், விஞ்ஞான ரீதியான மனித உணர்வுகளை, இச்சைகளை கட்டுப் படுத்த நினைக்கும் முரண் விதிகள் என கூற வேண்டும். மருத்துவ கருக்கலைப்பு என்பது பெண்ணின் அவளது உடல் மீதான தனிமனித உரிமை மட்டுமே, அதில் கருவுக்கு காரணமான ஆணுக்கோ, அல்லாது உயிராக துடிக்கும் அந்த சிசுவுக்கோ எந்த உரிமையும் இல்லை என எவ்வித சந்தேகமும் இன்றி வாதிக்க வேண்டும். கடவுள் மறுப்பு என்பது மிகவும் அடிப்படை.

06. சற்று கண்மூடித்தனமான விஞ்ஞானம் பேச வேண்டும். உதாரணமாக தன்னினச் சேர்கையினை ஆதரிக்கிறேன் பேர்வழி என கூறிக்கொண்டு, homosexuality என்பதும் Gender Identity Dissorder என்பதும் ஒன்றே என்பது போன்ற மருத்துவ விளக்கங்கள் கூறவேண்டும். பௌதீகவியல் கூறும் தத்துவங்களை அவை என்ன என்பதையே விட்டு விட்டு சித்தாந்தமாக பார்க்க வேண்டும். பெரு வெடிப்புக் கொள்கை, சார்புத் தத்துவத்தை தாண்டி ஸ்ட்ரிங் தியரி,  குவாண்டம் கிராவிட்டி என நகர்வது சிறந்தது. சில பௌதீகவியல், உயரியல் அறிஞர்களை தெரிந்து வைத்திருப்பதும், கடவுள், மதங்கள் போன்றவற்றை விஞ்ஞான ஒளியில் ஆராய்வதும் கூடுதல் சிறப்பு. 

இப்போ ஒரு சிட்சுவேசனயும், சித்தாந்தம் பேசும் ஒரு முற்போக்கு வாதியாக எப்படி நம்மை அங்கு அடையாளம் காட்டிக் கொள்வது எனவும் பார்ப்போம்.   

சிட்சுவேசன்: பசங்ககூட ஒண்ணா தலைவர் படத்துக்கு போக முடியாம மேனேஜெர் முட்டுக்கட்டை போடுதல்

சராசரி: மச்சான் மங்கூஸ் மண்டையன் படத்துக்கு ஆப்பு வச்சிட்டாண்டா, 

பின்நவீனத்துவம்: கார்பரேட் அமைப்புக்கள் தனிமனித சுதந்திரத்தை சூறையாடுகின்றன.

மார்க்ஸியம்: அதிகாரவர்கம் அடித்தட்டு ஊழியனின் அபிலாஷைகளை அனுமதிப்பதில்லை.


இப்போ முற்போக்குவாதம் பேசுவது எப்படி என தெரிந்து கொண்டீர்களா? இனி பயப்படாமல் அடித்து நொறுக்குங்கள். முக்கியமாக கவனிக்க வேண்டியது, உங்கள் சொந்த நிலைப்பாடு என்ன என்ற புரிதலை நோக்கி கடைசிவரை நீங்கள் பயணிக்கவே கூடாது, அது உங்களை ஒரு பிற்போக்கு வாதியாக மாற்றிவிடலாம். முன்னுக்குப் பின் முரணாக இருந்தாலும், கவலையே படாமல் சமூக அமைப்பில் குற்றம் காண்பதையும், அடுத்தவர் கருத்தை எதிர்பதயும் மட்டுமே குறியாகக் கொண்டிருந்தால் நீங்களும் ஒரு முற்போக்கு வாதியே, "சராசரி" மறுப்பு என்பதே முற்போக்கு வதம் ஆகும்.

டிஸ்கி: "மார்க்ஸியம், பின்நவீனத்துவம் என்றால் என்ன என்றே தெரியாது முற்போக்கு வாதிகள் மீது வெறுப்பை உமிழ்ந்திருப்பது, ஆசிரியரின் காழ்ப்புணர்ச்சியை காட்டுகின்றது", "கட்டுரையாளர், பல வேறுபட்ட சித்தாந்தங்களை போட்டு குழப்பியிருப்பது தெரிகிறது, எங்குமே ஒரு அடிப்படை தெளிவு, நேர்த்தி இல்லை" போன்ற விமர்சனங்கள் வரவேர்க்கப் படுகின்றன. 

டிஸ்கி: ஒருவேள முதல் பத்தியில் சொன்ன நம்ம நண்பர் அப்பாவாகப் போறாரோ? அந்த குறியீட்டுக்கு அர்த்தம் அதுவாக இருக்குமோ? அப்படி இருந்தால் வாழ்த்துக்கள்.

Wednesday, February 12, 2014

இசையும் நானும் எனது நண்பனும்......

சின்ன வயசு முதலே இசையின்னா எனக்கு ரொம்ப ஆர்வம். ரேடியோ பெட்டியில இருந்து, சோனி வாக்மேன், சீ டி பிளேயர், MP3 பிளேயர் என பல பரிமாணங்களை(!) கண்ட இசை உலகில், எம் எஸ் வி, இளையராஜா, ஏ ஆர் ரஹ்மான்,  மைக்கல் ஜாக்சன், ஷகீரா என கிராமியம் முதல் மேற்கத்தியம் வரையும் இசை கேட்கவும் அதன் நுணுக்கங்களை தெளிவாக அறியவும் என நான் மேற்கொண்ட முயற்சிகள் ஏராளம். அதையும் தாண்டி, இசை கருவிகளின் மீது எனக்கு இருந்த நாட்டமும் அவற்றை கற்றுக்கொள்ள நான் செய்த முயற்சிகளும் ஏராளம். எனது இசை ஆர்வத்தின் வெளிப்பாடே இந்த பதிவு.

எனது இசை அறிவு, ஞானம் பற்றி சொல்ல முன், எனது நண்பனது இசை ஞானம் பற்றி சொல்கிறேன். ஏன் என்றால் ஒருவரது நண்பர்கள் என்பவர்கள் அவரது விம்பமே. "எவனோ ஒருவன் வாசிக்கிறான்..." பாடல் கேட்ட நாளில் இருந்து எனது நண்பன் ஒருவனுக்கு புல்லாங்குழல் இசை மீது தீராக் காதல். சாலை ஓரத்தில் யாராவது புல்லாங்குழல் வாசித்தால் கூட மணிக்கணக்கில் அவர்கள் அருகில் இருந்து ரசித்துக் கொண்டிருப்பான். அந்த இசைக் கருவியை கற்பதில் அவனுக்கு அப்படி ஒரு ஆர்வம். எப்பப் பார்த்தாலும் "என்னைக்காவது ஒரு நாள், ஒரு புல்லாங்குழல் வாங்கிடனும் மச்சான், அதுதான் என் வாழ்க்கை லட்சியம்" ன்னு சொல்லிக்கிட்டே இருப்பான். இவ்வாறாக பல நாட்களாக தீராத முயற்சி எடுத்து கற்றுக் கொண்ட அவன் ஒருநாள் திடீர் என என்னிடம் வந்து, "மச்சான், இப்போ நான் செம்மையா புல்லாங்குழல் வாசிப்பேன், இனிமேல் அடுத்த கட்டத்துக்கு போகவேண்டியதுதான், நீ எனக்கு ஒரு புல்லாங்குழல் வாங்கித்தா" ன்னான்.


நானும் அவனுமா சேர்ந்து புல்லாங்குழல் வாங்கறதுக்காக டவுனுக்கு கடைக்குப் போனேம். நாங்க போன தெருவுல வரிசையா பல இசைக் கருவிகள் விற்கும் கடைகள் இருந்தாலும் நம்மாளு குறிப்பா ஒரு கடைக்குத்தான் போகணும்ன்னு விடாப் பிடியா இருந்தான். அந்த கடை, சிவாஜி படத்துல வார்ர கடை செட்டப்ன்னு வச்சுக்கங்களேன், அங்கேயும் தமிழ் செல்வி மாதிரி ஒரு செம பிகரு இருந்திச்சி. நம்மாளு அந்த பிகருக்கிட்ட போயி புல்லாங்குழல் குடுங்கன்னு கேட்டான், அந்த பிகரும் என்னன்ன பெயர் எல்லாமோ சொல்லி அது வேணுமா, இது வேணுமான்னு ஏராளமா கேள்வி மேல கேள்வி கேட்டுக்கிட்டே இருந்திச்சு, நம்மாளும் சலிக்காம என்னெல்லாமோ பேசினான், அவனோட ஞானத்த கண்டு நான் மெய் சிலிர்க்க நின்னிட்டு இருந்தேன். கடைசியா அந்த பொண்ணும் போயி எதோ ஒரு புல்லாங்குழல் கொண்டு வந்திச்சு, நம்ம மாப்ள அத கையில வாங்கிட்டு, அப்படியே எங்கிட்ட வந்தான், கிட்ட வந்தவன் புல்லங்குழல ஒரு வாட்டி உத்துப் பார்த்தான், அப்புறம் என்னப் பார்த்து "என்ன மச்சான் இந்த குழல்ல இத்தன ஓட்டை இருக்கு, இதுல நான் எதுல வாய் வச்சு ஊதுரது" ன்னு கேட்டான், நான் செம டென்ஷன் ஆகிட்டேன், காண்டுல அவன்கிட்ட கேட்டேன், மச்சான் நெசமா சொல்லு, உன்னோட ஆர்வம் புல்லங்குழல் மேலயா இல்ல அந்த தமிழ் செல்வி மேலயான்னு, அதுக்கு நம்ம நண்பன் என்னைப் பார்த்து திமிராக் கேட்டானே ஒரு கேள்வி,

"இன்னுமாடா உனக்கு இது புரியல?"


இதற்கும் எனது இசை ஞானத்துக்கும் என்ன சம்பந்தம்ன்னு கேக்கிறீங்களா? சொல்றேன், கொஞ்ச நாளாவே இந்த சுப்பர் சிங்கர் நிகழ்ச்சிய பார்த்துக்கிட்டு இருக்கேன், அதுல யாராவது "ரெண்டாவது சரணத்துல மூணாவது வரியில அந்த "ச ரி த ம, க த ப நி" ல ஸ்ருதி கொஞ்சம் விலகிறிச்சின்னு சொல்றப்போ எனக்கு மேல உள்ள படம்தான் ஞாபகம் வரும். ஏன்னா நம்ம இசை ஞானம் அப்படி. 

படிப்பினை: ஆர்வத்துக்கும் அறிவுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும், ஆர்வம் எதனால வேணும்னாலும் வரலாம், அறிவு வரணும்னா ஆர்வம் மட்டும் இருந்து பத்தாது, தேடல், புரிதல், முயற்சி, கற்றல் என பல விடயமும் இருக்கணும், இல்லையின்னா எப்பவும் என்னையும் என் நண்பனைப் போலவும் ஆர்வக் கோளாறுதான்.

டிஸ்கி: இந்த பதிவு எழுதினதே, கொஞ்ச நாளாவே மனசக் கொடஞ்சிக்கிட்டு இருக்கற ஒரு விஷயத்த உங்க கூட பகிர்ந்துக்கத்தான். அது என்னன்னு கேக்கறீங்களா, கீழே பாருங்க. எதுவுமே புரியலன்னா பெருசு படுத்தி பாருங்கய்யா, நான் படத்தைச் சொன்னேன்.

குழந்தைகள், இருதய நோயாளிகளுக்கு உகந்ததல்ல. 



Monday, January 13, 2014

ஜில்லா - திரை விமர்சனம்

நம்ம கடை திறக்கனும்னா, ஒரு தமிழ்படம் நம்ம ஏரியாவுல ரிலீஸ் ஆகனும். அதாவது ஒரு நல்ல நாள், பண்டிகைன்னு ஏதாவது வரனும். அந்த சட்டத்துக்கு அமைய, பொங்கல் நாள் வர்றதால, நம்ம கடை சார்பாக இந்தமுறை ஜில்லா விமர்சனம்.


துப்பாக்கி எனும் மெகா ஹிட்டுக்கும், தலைவா எனும் ஏமாற்றத்துக்கும் பின்னர் இளைய தளபதி நடிப்பில், காஜல் அகர்வால், மோகன்லால் உட்பட பல நட்சத்திர கூட்டணியில், தலையின் வீரத்துடன் போட்டியிட, RB சவுத்ரியின் தயாரிப்பில் களமிறங்கியிருக்கும் மாஸ் ஆக்ஷன் மசாலா இந்த ஜில்லா. தப்பு பண்ணினதுக்காக அடிக்கல, அந்த தப்ப நாங்க மட்டுமே பண்ணணும், அதுதான் அடிச்சேன், என்கிற அழகிய கொள்கையோடு, குடும்பமாக வுடியிஸம் பண்ணும் ஒருவன், எதிர் முனையில் இருந்து தன்கூட்டத்தார் செய்யும் தப்புக்களை காண நேர்ந்தால்... எனும் கற்பனையே ஜில்லா. இது ஒரு நல்ல இயக்குனர் கையில் நாயகன் இரண்டாம் பாகமாகவோ, அல்லது ஒரு ஆர்வக்கோளாறு இயக்குனர் கையில் தலைவா இரண்டாம் பாகமாகவோ ஆக சாத்தியமுள்ள கற்பனைதான். நல்ல வேளையாக ஜில்லா டீமுக்கு உலகப்படம் எடுக்கும் விபரீத ஆசை இல்லாததால், இது ஒரு ஆக்ஷன் என்டர்டைனர் வரிசையில் சேர்க்கிறது.  இந்த மசாலாவை எப்படிப் பறிமாறி இருக்கிறார்கள், அதில் வெற்றி பெற்றார்களா இல்லையா என்பதை இனி பார்க்கலாம்.

விஜய், மகேஷ் பாபு, சல்மான் கான் இந்த மூவருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. அதாகப்பட்டது, கதையோ, திரைக்கதையோ எப்படி இருந்தாலும் இவர்கள் புல் ஃபோர்மில் இருந்தால் படம் தப்பிக்கும். இங்கும் அப்படித்தான். படம் முழுவதும் விஜய் ஆட்சி. ரொம்ப நாளைக்கு அப்புறமா விஜய் புல் ப்ரீயா நடிச்சிருக்காரு. வழக்கமான சேட்டைகள், டைமிங், சின்னச் சின்ன ரியாக்ஷன், முக்கியமா அந்த விஜய் ஸ்மையில் எல்லாமே முழு வீச்சுல இருக்கு. படம் முதல் பாதி பார்க்கும் போது, மறுபடியும் விஜய்க்கே மாறிடலாமான்னு ஒரு கணம் தோணினாலும், இரண்டாம் பாதி அந்த விபரீத முடிவுல இருந்து நம்மள காப்பாத்துது. ரொம்பவே ஸ்ட்றாங்கா இருந்திருக்கக் கூடிய, அல்லது குறைந்த பட்சம் சிவகாசி மாதிரி வந்திருக்க வேண்டிய இரண்டாம் பாதி, அது யாரு தப்புன்னு தெரியல, மறுபடியும் ஒரு வில்லு ரேஞ்சுல, ஒரு பைட் சீன், அப்புறமா மொக்கையா ஒரு பாட்டு, அப்புறம் மொக்கையா ஒரு கமெடி சீன், மறுபடியும் ஒரு மொக்கையா அக்ஷன் ப்ளாக்ன்னு, ஒரு நேர் கோட்டுல ரொம்ப மொக்கையா போய்க்கிட்டே இருக்கு. விஜய் எவ்வளவு ட்ரை பண்ணியும் காப்பாத்த முடியாத கட்டத்துல இருக்கு இரண்டாம் பாதி படம். இதுல சோகம் என்னன்னா ரெண்டாம் பாதி முடியறப்போ, ஒரு செம ஜாலியான முதல் பாதி படத்துல இருந்ததே நமக்கு மறந்திடுது.


பிளாஸ் அண்ட் மைனஸ்

1.    விஜய் விஜய் விஜய். முதல் பாதி முழுவதும் செம அட்டகாசம், அந்த அறிமுக காட்ச்சியில இருந்து போலீஸ் ஆகும் வரைக்கும் மனுஷன் பிச்சி வாங்கி இருக்காரு. அப்புறமும் ரெண்டாம் பாதியிலதான் என்ன பண்றது, எப்படி பண்றதுன்னு குழம்பிப் போனாலும், ஃபயிட், டான்ஸ் என தனது ஏரியாவுல செமையா ஸ்கோர் பண்ணிட்டதால ஹார்ட்கோர் விஜய் ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி.2.  மோகன்லால் எதுக்கு இந்தப் படத்துக்குங்கற கேள்விக்கு கடைசிவரை எனக்கு விடை கிடைக்கவே இல்லை. மோகன்லால் அவரு பணிய சரியாவே செஞ்சிருக்காரு, அதுல எந்த குறையும் இல்ல, குறிப்பா, ஒபெனிங்க் சாங்க்ல விஜய் முன்னாடி, தனது ப்ரசன்சை மெயிண்டயின் பண்ணும் போதே ஒரு நடிகராக நம்ம மனசுல நின்னுடறார். போதுமான ஸ்டையில், அளவான எமோசன்ஸ் என கச்சிதமான நடிப்பு. பட் மோகன் லால் இருப்பதாலோ என்னவோ, இரண்டாம் பாதி படம் கொஞ்சம் டல் அடிக்கிறது. விஜயின் ப்ரீ ஃபாலுக்கு இணையாக சத்தியராஜ் போன்ற ஒரு லொள்ளுப் பார்ட்டி கூட இருந்திருந்தால் படம் இன்னும் அட்டகாசமாக இருந்திருக்குமோ என்னவோ. படத்தை ஒரு மசாலா படமாவே கொண்டு செல்வாதா இல்லை ஒரு உலகப் படமாக எடுப்பாதா என்ற இயக்குனரின் குழப்பத்துக்கு ஒரு வேளை இதுவே காரணாமாக இருந்திருக்கலாம்.


3.     காஜல் அகர்வால் கொஞ்சமும் மாற்றமே இல்லாம அப்பிடியே இருக்காங்க, இது ஒரு பிளாஸ் போன்று தோன்றினாலும், 2007ல இருந்து இன்னிக்கி வரைக்கும் தொடர்ந்து பார்த்து வந்ததுல, எந்த ஒரு சீன் வரும்போது சீனோட அட்மாஸ்பியர் பார்த்தே காஜல், ரியாக்ஷன் நம்பார் 12 குடுப்பாங்களா இல்ல, 17 குடுப்பாங்களான்னு சொல்லிடக் கூடியதா இருக்கறது பெரியவே மைனஸ். என்ன ஒரே ஆறுதல், இப்போவெல்லாம் இந்தப் பொண்ணு சேலை கட்டி வந்தா அது இடுப்புல நிக்கவே மாட்டேங்குது, சோ நாமெல்லாம் ரொம்ப ஹேப்பி அண்ணாச்சி.

5.    செகண்ட் ஆப் ஆரம்பித்ததும் விஜயின் மன மாற்றத்துக்கு காரணமாக வரும் காட்சி வலு இல்லாமல் இருப்பது ரொம்பவே சொதப்பல். ரொம்பவும் உருக்கமான காட்சிதான் அது, அதில் சந்தேகம் இல்லை, ஆனா விஜய் போலீஸ் ஆக முதல் நல்லம நாயக்கர் போன்றிருக்கும் சிவன்,  விஜய் போலீஸ் ஆன மறு கணமே, சிங்கம் மயில் வாகனம் ரேஞ்சுக்கு தெரிவது கொஞ்சமும் ஏற்றுக்கொள்ள முடியாததாக ஆகிறது. ஒரு மாஸ் படமாகவே இருந்த போதும் இந்த மன மாற்றம் இன்னும் கொஞ்சம் கவனமாக கையாளப்படிருக்க வேண்டுமோ என்னமோ.

6.  தம்பி செண்டிமென்ட், தங்கச்சி செண்டிமெண்ட், அம்மா செண்டிமெண்ட், அப்பா செண்டிமெண்ட் ன்னு ஒரே குடும்ப பாச மழை. நட்புக்கு சூரியும், ஊறுகாய்க்கு காஜலும், வில்லனாக சம்பத்தும், என ஒரே நடச்சத்திரப் பட்டளமாகவும், விஸ்தாரனமகாவும் இருக்கும் படம், சில நேரங்களில் எதுக்கு இம்ம்புட்டு பேர், ஒரு மூணு காரக்டர தூக்கி இருந்தா இன்னும் முப்பது நிமிசத்த மிச்சம் புடிச்சிருக்கலாமேன்னு யோசிக்க வைக்குது. போதாக் குறைக்கு ரெண்டே சீனுக்காக தலைவர் சந்தானத்துக்கே ஜோடியா நடிச்ச ரெண்டு ஹீரோயின்கள தேவையே இல்லாம வேஸ்ட் பண்ணி, நம்ம கடுப்ப வேற கெளப்பி, இதெல்லாம் தேவையா?

7.  செம என்டேர்டைனிங்கான முதல் பாதிக்காக இந்தப் படம் கண்டிப்பாக பார்க்கலாம். விஜய் புல் ஸ்விங்குல இருக்கார், ரொம்ப நாளைக்கு அப்புறம், கில்லி, சச்சின்ல பார்த்த அதே இளமைத் துள்ளல், அட்டகாசம், செமயா இருக்காரு மனுஷன். கொஞ்சம் தொப்பை எட்டிப் பார்க்கிறது, அடுத்த படத்துல அதையும் கவனிச்சிட்டா, இன்றைய சினிமாவின் மார்கண்டேயனா வருவதற்கான எல்லா தகுதியும் இந்த ஆளுக்கிட்டதான் இருக்கு.

8.  இசை, ஒளிப்பதிவு இதர விதரங்கள் சொல்லிக்கொள்ளும் படி எதுவும் இல்லை. குறையும் இல்லை, நிறையும் இல்லை.


விஜய் ரசிகர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். மற்றயவர்கள் ஒரு முறை பார்க்கலாம், அல்லது குறைந்த பட்சம்,  டிவிலயாவது ஃபர்ஸ்ட் ஆப் கண்டிப்பாக பார்க்கணும்.

நம்ம ரேட்டிங் 6.5/10. (ஃபர்ஸ்ட் ஆப் 9/10, செகண்ட் ஆப் 4/10)

எல்லோருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள். 

டிஸ்கி: ஒன்ஸ் மோர் படத்துல அப்பன தத்தெடுத்த நம்ம இளைய தளபதி, இந்தப் படத்துல தாத்தாவையே தத்தெடுத்து சாதனை படைச்சிருக்காரு. அதுக்காகவேனும் பாருங்கள்.

டிஸ்கி:  ஏற்கனவே, சிவன்-சக்தி சண்டைய வச்சி, ஒரு பிரபு-சத்யராஜ் படம், ராஜேஷ் படம்,   அப்புறம்    இந்த படம், அதுல டாப்பு "ஒரு குவார்ட்டர் சொல்லேன் மச்சி" தான்!

டிஸ்கி: இங்கு நாம படம் பார்க்கப் போன காம்ப்ளெக்ஸ்ல எதிர் எதிரே ரெண்டு ஸ்க்ரீன்ஸ், ஒன்னுல ஜில்லா, மத்ததுல வீரம். ஜில்லா பார்த்துட்டு வீரம் பார்கலாம்ன்னுதான் இருந்தோம், பட், ஜில்லா முடியும் போது அந்த எண்ணம் சுத்தமா போயிட்டதால, வீரம் பார்க்க முடியல. என்ன ஒரு கவலை, தலைவர் காமெடி செமையா இருக்குன்னு எல்லாருமே, சொல்லும்போது, ஜில்லாவ விட, வீரம் பார்த்திருக்கலாமோன்னு ஒரு எண்ணம் வருது.

**********************************************

பதிவுக் குறிப்பு: 

ஆரம்பத்துலையே சொன்னது போன்று, ஒரே செயல்பாட்டினை இரு வேறு கோணங்களில் இருந்து பார்க்கவும், விவாதிக்கவும், தன்னையும், தன்சார்ந்தவர்களையும் பற்றி சுய பரீசீலனை செய்யவும் என பல வாய்ப்புக்களை கொண்டது படத்தின் கரு. ஒரு நல்ல இயக்குனர் கையில் நாயகன் இரண்டாம் பாகமாக அல்லது நாயகன் படத்தின் மறுபக்கமாக அமைந்திருக்கக் கூடியது. அது ஒரு பொருட்டன்று. அந்த படத்தை ஒரு மாஸ் ஆக்ஷன் படமாக கொடுக்க நினைக்கும் போது, அந்த எல்லைகளுக்குள் மட்டுமே பூரணமாக பயனித்திருந்தால், ஒரு சிவகாசி போன்றோ, அல்லது, ஒரு சிறுத்தை போன்றோ செம ஜாலியான ஒரு இரண்டாம் பாதியை கொடுத்திருந்தால், விஜயின் பாக்ஸ் ஆபீஸ் சரித்திரத்தில் முக்கிய இடம் பிடித்திருக்கக் கூடிய ஒரு படம். இரண்டாம் பாதியில் ஏற்பட்ட சில குறைகளும், இயக்குனரின் அனுபவம் இன்மையும், படத்தை சற்றே பாதித்து விட்டது. 



Thursday, November 14, 2013

Krrish 3 சூப்பர் ஹீரோ ஒரு அலசல்

வார்னிங்: ஸ்பாய்லர்ஸ் உண்டு (படம் வந்து எம்புட்டு நாளாச்சி, இதுக்கப்புறம் ஸ்பாய்லர்ஸ் இருந்தா என்ன, இல்லாட்டி என்ன)

வலது பக்கமிருந்து மூணாவதா ஒக்காந்து இருக்கதுதான் நம்ம ஹன்சிகா ஆண்டி.

Koi mil gaya (2003), க்ரிஷ் (2006) வரிசையில் ராகேஷ் ரோஷன், ஹ்ரிதிக் ரோஷன் கூட்டணியின் மூன்றாவது சூப்பர் ஹீரோ படம். Marvel, DC  காமிக்ஸ்களின் சூப்பர் ஹீரோக்களுக்கு இணையான இந்திய சூப்பர் ஹீரோ நம்ம இந்த க்ரிஷ். முதல் படத்தில் ஒரு வேற்றுக் கிரக வாசிக்கு உதவி செய்து அதன் மூலமா சில பல அதீத சக்திகள் ரோஹித் மெஹ்ரா (ஹ்ரித்திக் ரோஷன்) என்னும் மூளை வளர்ச்சி குறைந்த இளைஞனுக்கு கிடைக்கிறது. இது அவனுடன் நின்று விடாது அவன் வழித்தோன்றல்களுக்கும் கடத்தப் படுகிறது. இரண்டாவது படத்தில் ரோஹித் மெஹ்ராவின் மகன் கிருஷ்ணா அதீத உடல் பலம், வேகம் போன்ற ஆற்றல்களுடன் இருக்கிறார். ஒரு தீவிபத்தில் இருந்து மக்களைக் காப்பாற்ற க்ரிஷ் அவதாரம் எடுக்கும் கிருஷ்ணா (கிருஷ்ணாவின் சுருக்கம்தான் இந்த க்ரிஷ்) அதன் பின்னர் தனது தந்தையை ஒரு ஆபத்தில் இருந்து காப்பாற்றுகிறார். இந்த இரண்டு படங்கள் அவை வெளியான காலங்களில் சக்கை போடு போட்ட படங்கள். இப்போ 2013, அதிகப்படியான சூப்பர் ஹீரோ படங்கள் ஹாலிவூட் திரையை துளைக்கும் போது, அவற்றுக்கு இணையாக இந்தியாவில் இருந்து ஒரு படமாக க்ரிஷ்  3 களம் இறங்கியிருக்கிறது. இனிமேல் இந்த படம் பற்றிப் பார்ப்போம்.


நம்ம ஹீரோ கிருஷ் இப்போ இந்தியாவுல மக்களால் கொண்டாடப் படும் ஒரு சூப்பர் ஹீரோ. அங்கங்கே சின்னதா நடக்கும் கொள்ளை, தீவிபத்து, விமான விபத்து என எது எங்க நடந்தாலும் அங்க ஆஜராகி மக்களை காப்பத்தறாரு. இது முழு நேர வேலை. பகுதி நேரமா வேறு நிறைய வேல செய்யறாரு, எங்கயுமே நிரந்தரமா தங்கறது கிடையாது, காரணம் வேலையில ஒழுங்கா கவனம் செலுத்தறது கெடயாது (spiderman - your friendly neighbourhood). திடீரென நம்ம 7 ஆம் அறிவு ஸ்டைல்ல உலகத்துல பல இடங்கள்ள மருந்தே கண்டுபிடிக்க முடியாத ஒரு "கொடிய நோய்" பரவுது. இதற்க்கு இடையில நம்ம Mystique அம்மணி தகவலளிக்க வந்த ஒரு சயின்டிஸ்ட போட்டு தள்ளிடறாங்க. அப்படியே கட் பண்ணினா Professor X  ஒரு வில்லன் வடிவத்துல வார்ராரு, இவரு கண்டிப்பா ஒரு telepath தான்னு நினைச்சா இல்ல, இவரு Jean மாதிரி telekinetic, அப்பப்போ Magneto மாதிரி அட்டகாசம் பண்றாரு, அப்புறம்தான் நமக்கு தெரியுது இவருதான் பிரதர் ஹூட் ஆப் ஈவில் மியுடன்ட் தலைவர்ன்னு. அவரு கூட்டத்துல நமக்கு பரிச்சயமான Toad உட்பட பல காரெக்டர்ஸ் இருக்கு. அப்புறம்தான் நம்ம தலைவர் அவரோட சக்தி எங்கிருந்து வந்துச்சி, அவரோட உடலை எப்படி முழுமையா செயல்பட வக்கிறது போன்ற உன்னதமான கேள்விகளுக்கு விடை தேட ஒரு ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்கறதாவும், அதுக்கு பணம் புரட்டத்தான் இந்த 7 ஆம் அறிவு வேலை செய்யரதாவும் தெரியவருது. அப்புறம் இவுங்க மும்பயில நோயைப் பரப்ப (இதற்க்கு கடவுள் நம்பிக்கையை அழிச்சுட்டு தானே கடவுள் ஆகிடனும்ன்னும் ஒரு வியாக்கியானம் வேற), நம்ம க்ரிஷ் மற்றும் ரோஹித் ஒரு ஆண்டிடோட் கண்டுபிடிச்சு அமேசிங் ஸ்பைடர்மேன் ஸ்டைல்ல ஒரு Dispersion  Device  மூலமா மொத்த மும்பையையும் ஓவர் நைட்ல காப்பாத்திடராங்க (இங்க இவருக்கு சிலை வைப்பு வைபவம்  வேற). அப்புறமா, நம்ம DNAல இருந்து மட்டும்தானே நம்ம வைரசுக்கு மருந்து வரலாம், இது எப்படி வந்திச்சுன்னு வில்லன் ஆராய அப்புறம் என்னவாச்சின்னு avengers, மேன் ஆப் ஸ்டீல் பாணியில விடை சொல்லி முடிச்சிருக்காங்க படத்த. 


ஹாலிவூட் பசங்களுக்கு சூப்பர் ஹீரோ படங்கள் எடுக்கறதுல ஒரு லாபம் என்னன்னா அவங்க கிட்ட நூறு வருஷத்துக்கு மேல பழமையான பல சூப்பர் ஹீரோ - சூப்பர் வில்லன்கள் இருக்காங்க, இன்னாரு இன்னாரு, இவருக்கு இன்ன இன்ன பவர் இருக்கு, அது இப்படித்தான் வந்திச்சுன்னு யாரும் ஒக்காந்து யோசிக்கவும் தேவையில்ல, எப்படிடா இவனால இதெல்லாம் முடியும்ன்னு ரசிகர்கள் கேள்வி கேக்கப் போறதுமில்ல. மேக் அப்,  காஸ்ட்டியூம்லையே இவரு இன்னருதான்னு சொல்லிடுவாங்க. நம்ம இந்திய சினிமாவுல அப்படி கெடயாது. நமக்கு ஒரே சூப்பர் ஹீரோ தலைவர் ரஜினிகாந்த் தான். இல்லையின்னா புராணங்கள புரட்டனும். அதுதவிர என்னன்னாலும் ஆரம்பம் இருந்து முடிவு வரை பார்வையாளனுக்கு விஞ்ஞானபூர்வமா விளக்கனும். கடந்த ரெண்டு படங்கள்லயும் சூப்பர் ஹீரோவ உருவாக்கற பணியில வெற்றி பெற்ற இந்த கூட்டணி, இந்த முறை சூப்பர் வில்லன்கள உருவாக்குறதுல நிச்சயம் தோல்விதான். ஹாலிவூட்ல ஸ்பைடர் மேன்னா  இவுங்க இவுங்க வில்லன், அயன்மேன்ன்னா இவரு இவரு ன்னு எல்லா சூப்பர் ஹீரோக்களுக்கும் வில்லன் இருக்கு, இங்க ராமருக்கு ராவணன் தவிர, க்ரிஷுக்கு எல்லாம் வில்லன் கெடயாதுங்கறது, நமக்கு சூப்பர் ஹீரோ படம் பண்ணுறதுல எப்பவுமே இருக்கற ஒரு சவால் தான். ஆனா அந்த சவால ஒரு Ra.One - G.One  ரேஞ்சுலயாவது கையாண்டு இருக்கலாம்.  அத விட்டுட்டு படம் முழுவதுமே ஒரு மார்வெல் யூனிவேர்ஸ்ல நொழஞ்சிட்ட பீலிங் வர்ரத தவிர்த்திருக்கலாம். அப்புறம் அடுத்தவனுக்கு உதவி செய்ய நினைக்கற மனம்தான் க்ரிஷ்ன்னு "we are robin hood" ஸ்டைல்ல வலிந்து திணிச்ச தீம் கொஞ்சம் நெருடலா இருக்கு. 


பாசிடிவ் சைடுன்னா, VFX எக்ஸ்ட்ரா ஆர்டினரியா இருக்கு. ஹ்ரித்திக் ரோஷன் எப்பவும் போலவே படத்துக்காக ரொம்பவே உழைச்சிருக்காரு, க்ரிஷ்ன்னா இந்தாளுதான்யான்னு கன கச்சிதமா பொருந்திப் போறாரு. ரொம்ப நாளைக்கு அப்புறம் கங்கனா ரேனவாத்,  அப்புறம் தொட்டுக்க பிரியங்கா சோப்பரா. தொழில்நுட்ப ரீதியா படம் பட்டய கெளப்புது. அதே கவனத்த கதையிலும் செலுத்தியிருந்தா படம் சூப்பரா இருந்திருக்கும். நீங்க ஒரு மார்வல் பேனா இருந்தீங்கன்னா இந்த படம் உங்களுக்கு ஒரு வேலாயுதம் மாதிரி இருக்கும், படத்துல புதுசுன்னு சொல்லிக்க எதுவுமே இல்ல, எல்லாமே இதற்க்கு முன்னாடி நீங்க எங்கயாவது பார்த்த ஒன்னாதான் இருக்கும். இல்ல, மார்வல் யுனிவேர்சுக்கும் உங்களுக்கும் சம்பந்தமே இல்லையின்னு வச்சுக்கங்க, அப்பவும் இந்த படம் உங்களுக்கு ஒரு வேலாயுதம் மாதிரிதான்  இருக்கும். இந்திய சினிமாவுக்கு கொஞ்சமும் பழக்கம் இல்லாத கதைக் களம், மியுடன்ட்களின் விதவிதமான சக்தி, கலர் புல்லான ரெண்டு ஹீரோயின், பவர் புல்லான ஹீரோ, எக்ஸ்ட்ரா ஆர்டினரி மேக்கிங், லார்ஜெர் தான் லைப் ஆக்ஷன் சீக்குவன்ஸ்ன்னு செம இன்டரஸ்டிங்கான படம்.


டிஸ்கி 1: தீபாவளிக்கு மறுநாளே படம் பார்த்திருந்தாலும், படத்துக்கு விமர்சனம் எழுதற ஐடியா கொஞ்சமும் இருக்கல. என்னக்கி இந்த படம் இந்தியாவுல மட்டுமே இருநூறு கோடி வசூல தாண்டி, சென்னை எக்ஸ்பிரஸ் படத்தோட சாதனையை முறியடிக்கபோகுதுன்னு தெரிஞ்சிச்சோ, அன்னைக்கே இந்த படத்துக்கு விமர்சனம் எழுதணும்ன்னு முடிவு பண்ணிக்கிட்டேன். ஏன்னா வரலாறுல நம்ம பெயரும் வரனுமே.

டிஸ்கி 2: நீங்க ஒரு சூப்பர் ஹீரோ பட விசிறியா இருந்தா தயவு செய்து இந்த படத்த தவிர்த்துட்டு Thor: The Dark World பாருங்க. நம்ம பசங்க என்னதான் பண்ணியிருக்காங்க பார்ப்போமேன்னு க்ரிஷ் 3 பார்த்திங்கன்னா அதனால வார எந்த மன உளைச்சலுக்கும் கம்பெனி பொறுப்பேற்காது. சும்மா தமாசுக்கு ஒரு படம் பார்க்கணும்னா தாராளமா பாருங்க, தீபாவளி தமிழ் ரிலீசுக்கு இது எவ்வளவோ தேவல.  

டிஸ்கி 3: இந்தப் படம் ஒரு குடும்பப்படமான்னு சந்தேகமே வேணாம். கதை, திரைக்கதை, வசனம் இயக்கம், தயாரிப்பு அப்பா; ஹீரோ பையன், இசை சித்தப்பு, இதுக்கும் மேல ஒரு குடும்பப் படம் விசுவால கூட எடுக்க முடியாது. (டி ஆர் தவிர) 

Saturday, November 2, 2013

ஆரம்பம், ஆல் இன் ஆல் அழகுராஜா -இந்த தீபாவளிக்கும் இரட்டை விமர்சனம்.

தீபாவளியும் அதுவுமா தமிழ் படம் பார்க்கலைனா தெய்வ குத்தமாகிடுமேங்கற ஒரே காரணுத்துக்காக, பல தடைகளையும் கடந்து, ராசு மாமா பேச்சையும் மீறி, வழக்கம் போலவே மொக்க வாங்கிட்டு, நான் பெற்ற துன்பம் பெறுக  இவ்வையம்ங்கர தாரக மந்திரத்துக்கமைய உங்க உசுரையும் எடுக்கலாம்ன்னு ரொம்ப நாளைக்கு அப்புறமா ப்ளாக்கர் பக்கம் வந்திருக்கேன். இனிமே நம்ம விமர்சனத்த பார்க்கலாம்.

ஆரம்பம். 

ஒவ்வொருத்தர் வாழ்கையிலும் ஒரே ஒரு தடவைதான் தல தீபாவளி வரும், ஆனா தல ரசிகர்களுக்கு மட்டும்தான் ஒன்னுக்கு அதிகமா தல தீபாவளி கொண்டாடுற பாக்கியம் கெடைக்கும். இது அப்படி ஒரு தல தீபாவளி. அஜித்-விஷ்ணு-நயன் கூட்டணி, கூடவே ஆர்யா-தாப்சி-கிஷோர்-அதுல் குல்கர்னி-ராணா டகுபதின்னு ஏகப்பட்ட கூட்டம். மாஸ்க்கு அஜித்தும், காமெடிக்கு ஆர்யாவும், கண்ணுக்கு நயனும், மொக்கைக்கு தாப்சியும்ன்னு பார்ட் பார்டா பிரிச்சு கத எழுதியிருப்பாரு விஷ்ணுன்னு நினைக்கறேன். 

இப்பெல்லாம் தல கால் ஷீட் கெடச்சதும் மொத வேலையா, தல கையில ஒரு பைக், கார், அப்புறம் ஏதாவது இன்னுமொரு வண்டிய குடுத்து வேகமா ஓட்டவச்சு ஷூட்  பண்ணிக்கறாங்க, அப்புறம் அவர கொஞ்சம் தனியா நடக்கவச்சு, படத்துல இருக்கற மத்த ஒவ்வொரு நடிகர் கூடவும் தனித்தனியாகவும் கூட்டமாவும் சேர்த்து நடக்கவச்சி சூட் பண்ணிக்கறாங்க, அப்புறம் படத்துல வர்ர வில்லன் நடிகர், தலையோட தலையில துப்பாக்கி வச்சிருக்கறப்போ, தல ஒரு டயாலாக் பேசுற மாதிரி ஷூட் பண்ணிக்கறாங்க, கடைசியில அந்த ஒவ்வொரு சீனையும் பிரிச்சுப் பிரிச்சுப் போட்டு கொஞ்சம் காரம், ஸ்வீட் ஆங்காங்கே போட்டு எடிட் பண்ணி ஒரு படம்ன்னு ரிலீஸ் பண்ணிடறாங்க, இங்கயும் அதுவே நடந்திருக்கு. இருந்தாலும் ஒரு ஆர்டர்ல கரெக்டா அந்த சீன்ஸ் வர்ரதனாலயும், அங்காங்கே கதைன்னு ஒன்னு தல காட்டரதனாலயும், ஆர்யாவோட காமெடி, தலையோட எக்ஸ்ட்ரா ஆர்டினரி ஸ்க்ரீன் ப்ரெசென்ஸ் இருக்கறதனாலயும், அங்காங்கே எட்டிப் பார்க்கும் சில நிஜ சம்பவங்களும், அதை படத்துல கோர்திருக்கற விதமும் சேர்த்து, ஒருவேள படம் நல்லாத்தான் இருக்கோன்னு நமக்கே ஒரு டவுட்டு வாறமாதிரி ஒரு படம்.

படத்துல குறைன்னு சொல்றதுக்குன்னா ரெண்டே விஷயம், ஒன்னு நயன் கொஞ்சம் வயசா தெரியறாங்க, நயனுக்கு அழகே சுடிதார்தான், அது இங்க மிஸ்ஸிங். ரெண்டாவது அத்துல் குல்கர்னி போன்ற ஒரு எக்ஸ்ட்ரா ஆர்டினரி நடிகரையும், கிருஷ்ணா போன்ற ஒரு ரொம்ப கேப்பபில் நடிகரையும் கொஞ்சம் கூட ஈவு இரக்கமே இல்லாம வேஸ்ட் பண்ணியிருக்கறது. இன்னும் ஒன்னு சொல்லனும்ன்னா தமிழ் சினிமா VFX ஐ கொஞ்சம் ரொம்ப சீரியஸா எடுத்துக்க வேண்டிய நேரம் வந்திரிச்சு, குண்டு வெடிக்கற காட்ச்சிகள் VFX சுத்த சொதப்பல். மற்றும்படி இது கண்டிப்பாக மொக்கை இல்லை. கொடுத்த காசோ, செலவளிச்ச நேரமோ வேஸ்ட்டுன்னு சொல்லற படமும் இல்லை.  மிஸ் பண்ணிடாம கண்டிப்பா பாருங்கன்னு சொல்லற படமும் இல்லை. இந்த தீபாவளிக்கு தமிழ் படம் பார்க்கணும்னா ஆரம்பம் பாருங்க. அம்புட்டுத்தான் சொல்லலாம்.


ஆல் இன் ஆல்  அழகுராஜா

எல்லா பண்டிகையும் நமக்கு கொண்டாட்டமாவே அமைஞ்சுடுதா என்ன, எப்போவாவது குடும்பத்துல ஒரு பெருசு மண்டயப் போட்டோ, இல்ல நமக்கு ஒடம்பு சரியில்லாம போயோ, பண்டிக பனாலாகிடுறதில்லையா, அந்த மாதிரி ஒரு அசம்பாவிதம் தான் இந்த படம். இது நிஜமாவே ராஜேஷ் படமா, இல்ல ராஜேஷ்கிட்ட சரக்கு தீர்ந்திடிச்சான்னு என்ன ரொம்பவே யோசிக்க வச்ச படம் இது. ராஜேஷ் படத்துல இருக்கற எல்லாமே இருக்கு, ஆனாலும் இது ராஜேஷ் படம் மாதிரி இல்லாம இருக்கு, அது ஏன்னு எனக்கு கடைசிவர புரியவே இல்ல. படத்துல இருக்கற ஒவ்வொரு சீனும் நமக்கு போரடிச்சு போதை ஏறி அது தெளிஞ்சதுக்கு அப்புறமும் முடியாம ஜவ்வு மாதிரி இழுத்துக்கிட்டே போறதுதான் இந்த படத்தோட முக்கிய குறைன்னு நினைக்கறேன். நெறயவே ஸ்டார் காஸ்ட் இருக்கு படத்துல, எதுவுமே வேர்த்தியா இல்ல, தலைவர் கூட நெறைய இடங்கள்ள நம்மள கவுத்துடுராறு. படம் பார்கறவங்க பாதி நேரத்துக்கு மேல தேட்டர் ஸ்க்ரீன பார்க்காம அவுங்க மொபைல் ஸ்க்ரீனையே பார்த்துக்கிட்டு இருக்காங்க, படத்துல வார ஒவ்வொரு சீனுக்கும், தேட்டர் ஆடியன்ஸ்ல யாராச்சு ஒருத்தர் போதும்யான்னு சொல்லிக்கிட்டே இருக்காங்க.

அப்போ இந்த படத்துல பிளாஸ் பாயிண்டே இல்லையான்னு கேக்காதீங்க, இருக்கு. அதுல முக்கியமா ரெண்டு பாயிண்ட மட்டும் உங்களுக்கு சொல்றேன். ஒன்னு இந்தப் படத்த பார்க்கற ஒவ்வொருத்தருக்கும் அவங்களோட பள்ளி நாட்கள் கண்டிப்பா ஞாபகம் வரும், அதாவது "எப்படா கிளாஸ் முடியும், எப்படா வீட்டுக்கு போவோம்" ன்னு நாம தவிச்ச தவிப்பு இருக்கே, படம் ஓடுற மூணு மணிநேரமும் உங்க கண்ணு முன்னாடியே நிக்கும். ரெண்டாவது, திரை விமர்சனம்ங்கற  பேர்ல படத்தோட கதைய விலாவாரியா எழுதி ஒப்பேத்துற விமர்சகர்களுக்கு ராஜேஷ் சரியான சவால் விடுத்திருக்காரு, முடிஞ்சா படத்துல என்ன நடத்துச்சுன்னு சொல்லுங்கடா பார்க்கலாம்ன்னு நம்ம விமர்சகர்கள பார்த்து கேக்கற கேள்வி இருக்கே, சார் இந்த திமிரு, உங்கள எங்கயோ கொண்டு போகப்போகுது.

ஆன் ஏ சீரியஸ் நாட், படத்தோட ஒன் லைனர் என்னன்னா, அப்பன் செஞ்ச தப்புனால பிரிஞ்சு போன ரெண்டு குடும்பத்த மகன் எப்படி சேர்த்து வைச்சி அப்பன் செஞ்ச தப்ப திருத்திக்கறாருங்கறதுதான். இந்த ஒன் லைனருக்கு வழக்கம் போலவே செம இண்டரஸ்டிங்கான காரக்டர்ஸ் புடிச்ச ராஜேஷ், வழக்கம் போல இண்டரஸ்டிங்கான ஸ்க்ரீன் ப்ளே எழுதறத்துக்கு பதிலா, வெறும் மொக்க சீன்கள் மட்டுமே எழுதி அத தொகுப்பாக்கி ஒரு படமா குடுக்க ட்ரை பண்ணியிருக்காரு. இந்த பருப்பு உள்நாட்டுல மட்டுமில்ல, வெளிநாட்டுல கூட வேகாது பாஸ், சீக்கிரமே முழிச்சுக்கோங்க, இல்லையின்னா S.J சூர்யா நிலைமைதான் உங்களுக்கும். சொல்றத சொல்லிட்டோம், த சாய்ஸ் இஸ் யுவர்ஸ்.