Sunday, February 23, 2014

இயக்குனர் ம.தி.சுதா வின் மிச்சக்காசு - ஒரு பின்நவீனத்துவ பார்வை.

தமிழில் பல குறும்படங்கள் வந்திருந்தபோதும், மிச்சக்காசு படம் பேசும் அளவு நுணுக்கமான சமூக கருத்துக்களையோ குறியீடுகளையோ உள்ளடக்கியதாய் சமீபத்தில் எந்த குறும் படமும் வந்ததாய் நினைவில்லை. இரண்டு அல்லது மூன்று வசனங்கள், நான்கே நான்கு கதாபாத்திரம், ஆர்ப்பாட்டமில்லாத மிகவும் அடக்கமான ஒரு இசை, ஒரே வரி கதை, இவை அனைத்தையும் தாண்டி திரைக்கதையோட்டத்தில் ஆங்காங்கே தூவிக் கிடக்கும் பின்நவீனத்துவக் குறியீடுகளே இந்தப் படைப்பை உயர்த்திப் பிடிக்கிறது. 


இந்தக் குறும் படத்தில் என்னை மிகவும் கவர்ந்தது குரல் வழி மட்டுமே ஒலித்து முடிவுறும் அந்த தாயின் கதாபாத்திரம். அத்தோடு பையன் கடைக்குசென்று வாங்குவதாக காட்டப்படும் பொருட்கள். சமயலறையிலும், சலவை அறையிலும், பூஜை அறையிலும் மட்டுமே என அடக்கி ஒடுக்கப்பட்ட நம் சமூதாயப் பெண்களின் கண்ணீர் காவியத்தை இவ்வளவு தெளிவாக பக்கம் பக்கமாக வசனம் வைத்துக் கூட காட்டியிருக்க முடியாது. அவ்வளவு நுட்பமான ஒரு காட்ச்சியமைப்பு. அந்த நாய் கதாபாத்திரம் இந்த இடத்தில் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. முச்சக்கர வண்டியில் விளையாடும் அந்த நாயினை நமக்கு காட்டும் இயக்குனர், அந்த தாய் கதாபாத்திரத்தை நமக்கு காட்டாமல் வீட்டுக்குள் எங்கோ இருந்து ஒலிக்கும் குரலினூடு மட்டுமே கையாண்டிருப்பது எமது சமூகப் பெண்களுக்கு, சமூகத்தில் நாய்களுக்கு இருக்கும் அங்கீகாரம் கூட கிடைப்பதில்லை என்பதை முகத்தில் அறைந்தால்போல் சொல்கிறது.

இந்த குறும் படத்தினை படத்தின் அடி நாதமாக இருக்கும் அரசியல் மற்றும் பொருளாதாரத்தை தவிர்த்துவிட்டு, வெறும் சிறுபிராயத்து அனுபவம் மட்டுமே என்றோ, சிறு கடை முதலாளிகளின் ஏமாற்று என்றோ மட்டுமே பார்த்துவிட முடியாது. இதை சிறுவர் துஷ்பிரயோகத்தின் ஒரு பகுதியாகவும் பார்க்க வேண்டி இருக்கிறது. சிறுவனுக்கு மிட்டாய் கொடுக்கும் அந்த கடைக்காரர் ஒரு வயது வந்தவருக்கு மிட்டாய் கொடுத்துவிடுவாரா என சிந்திக்க வேண்டி உள்ளது. ஒரு சிறுவனை ஒரு கடைக்காரர் மீதி காசு கொடுப்பதற்குப் பதில் மிட்டாய் கொடுத்து ஏமாற்றுவதை, பன்னாட்டு கார்பரேட் கம்பெனிகள் நம் பாமர மக்களை ஏமாற்றுவதுடன் தொடர்ப்பு படுத்திப் பார்க்கவேண்டியதாகவும் உள்ளது. "தள்ளுபடி", "தவணை முறைக் கட்டணங்கள்", "இலவச இணைப்பு" என நகர்புற மக்கள்கூட பல மிட்டாய்களை வாங்கிய வண்ணமே இருக்கிறார்கள். குறும் படத்தின் இறுதியில் நமது கதையின் நாயகன் பணத்திற்குப் பதில் மிட்டாய்களை கொடுப்பதாக காட்டுவதன் மூலம் சுதாகரித்துவிட்ட எமது சமூதாயத்தினை காட்டுகிறார் இயக்குனர். அத்துடன் கடை முதலாளி கொடுக்கும் அந்த கடைசி முக பாவனை, பன்னாட்டு வணிக முதலைகளின் கையறுநிலையை சுட்டிக்காட்டுகிறது.


மிச்சக்காசு என பெயர் போடும் இடத்தில் ஆரம்பிக்கிறது இயக்குனரின் குறியீட்டு வித்தைகள். மிசசககாசு என எழுதி, இரு புள்ளிகள் இட்டு மிச்சக்காசு என மாற்றுகிறார். இந்த உலகில் எதுவுமே அற்பமானதோ பயனற்றதோ அல்ல, ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பயன் உள்ளது, சில தனித்தும் சில இணைந்தும் அப்பயனைத் தரும் எனும் ஆழ்ந்த குறியீடு அங்கு பொதிந்துள்ளது. மீன்தொட்டியில் மீன்கள் இரை உண்ணும் காட்ச்சிப் படிமத்துடன் படம் ஆரம்பிக்கிறது. இதே போன்று படம் முழுவதும் பல காட்ச்சிப் படிமங்கள். ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பட்ட இரு நாற்காலிகளில் ஒரு சிறுவன் அமர்ந்திருந்து ஓய்வு நேரத்தில் ஓவியம் வரைவதான ஆரம்ப காட்ச்சிப் படிமம், நமது கதையின் நாயகனின் மதி நுட்பத்தையும் அவனது சமூக அக்கறையையும் ஒருங்கே கோடிட்டு காட்டுகிறது. 

ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு குறியீட்டை புதைத்து வைத்திருக்கிறார் ம.தி. சுதா. எப்போதும் திறந்தே இருக்கும் வீட்டுக் கதவு மூலம் கதை மாந்தரின் அயலவருடன் நட்ப்பு பாராட்டும் குணத்தை உணர்த்துகிறார், சிறுவனின் பொறுப்புணர்ச்சியை அவன் செருப்பு அணிந்துகொள்ளும் காட்ச்சிமூலம் காட்டுகிறார். இப்படி எத்தனையோ சொல்லலாம். இதுக்கும் மேல நான் ஏதாவது சொன்னா கண்டிப்பா எனக்கு அடிக்க வருவீங்கன்னு தெரியும், அதனால இந்த பின்நவீனத்துவ பார்வையை இங்கயே முடிச்சுக்கலாம். 

சமீபத்தில் பார்த்த குறும் படங்களில் என்னை கவர்ந்த ஒரு படம் இது. படத்தின் நிறைகளை இதுவரை பல பதிவுகளில் பல நண்பர்கள் சொல்லியாச்சி. படத்தில் எனக்குப் பட்ட ஒரே குறை ஒலிச்சேர்ப்பு (sound mixing). மவுனத்துக்கும் இசைக்கும், மவுனத்துக்கும் வசனங்களுக்கும் இடையே வரும் அந்த மைக் ஆன் ஆவதுபோன்ற ஒரு ஒலி, அது தவிர்க்கப் பட்டிருந்தால் குறும் படம் இன்னும் ரொம்ப நேர்த்தியாக வந்திருக்கலாம்.

பட உதவி முகப்புத்தகம் : https://www.facebook.com/actormathisutha

டிஸ்கி: நீண்டநாளாக ஏதாச்சும் ஒரு படத்துக்கு இப்படி அறிவுஜீவித்தனமான ஒரு விமர்சனம் எழுதனும்னு ஒரு ஆசை இருந்திச்சு, அத நிறைவேத்திக்க இது ஒரு சந்தர்ப்பம், அம்புட்டுதான். மற்றும்படி இது எங்க மொக்கைப் பதிவு லிஸ்டுல பத்தோட பதினொன்னு.

டிஸ்கி:  AAA International Award நிகழ்வில் சிறந்த திரைக்கதைக்கான விருது பெற்ற குறும்படம் இது. படத்தில் பணியாற்றிய  அனைவருக்கும், இயக்குனர் ம.தி. சுதாவுக்கும் நமது வாழ்த்துக்கள்.

Thursday, February 20, 2014

முற்போக்கு வாதம் பேசுவது எப்படி?

சமீபத்தில் திருமணமான எனது நண்பர் ஒருவர் முகப் புத்தகத்தில் ஒரு ஸ்டில் பகிர்ந்திருந்தார். ஒரு குழந்தையின் கிறுக்கல் போன்ற ஒரு ஓவியம் அது. அது தவிர வேறு எந்த குறிப்புக்களோ, விளக்கங்களோ இல்லை. அந்த பகிர்வு உணர்த்தும் பின்நவீனத்துவ குறியீடு என்ன என தீவிர ஆய்வில் ஈடுபட்டிருந்தபோது எனக்கு உதித்த சில சிந்தனைகளின் தொகுப்பே இது. 


சித்தாத்தங்கள் பேசும் ஒரு முற்போக்கு வாதியாக அடையாளம் காட்டிக் கொள்வது எப்படி? இன்று ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளும் இரு பெரும் இடதுசாரி முற்போக்கு சித்தாந்தங்களாக மார்க்ஸியமும், பின்நவீனத்துவமும் இருக்கின்றன. நம்ம நோக்கத்துக்கு இது பத்தின டீடையில் அலசல் எதுவும் அவசியமில்லை. பின்னவீனத்துவமாகட்டும் மார்க்ஸியம் ஆகட்டும் எதிர்ப்பு அல்லது புறக்கணிப்பு என்கின்ற புரிதலே போதுமானது. அத்துடன் சில கலைச் சொற்களும் அவசியம். இவை இருந்தால் இலகுவில் தன்னை ஒரு சித்தாந்த வாதியாக காட்டிக் கொள்ளலாம்.

கலைச் சொற்கள்: விளிம்புநிலை, மரபு, தனித்தன்மை, பொதுப் புத்தி, அறிவியக்கவாதி, முன்னகர்வு, பண்பாட்டரசியல், முரணியக்கம், பொருள்முதல் வாதம்.

தற்காப்பு: எப்போதுமே எதைப் பேசும்போதும் நான் அதுவல்ல என அறிவிப்புப் போட்டுக்கொள்ள வேண்டும். உதாரணமாக மார்க்ஸியம் பேசும் போது நான் மார்க்ஸிய வாதி அல்ல என பலமாக சொல்லிக்கொள்ள வேண்டும், இது முரண்பாடுகளில் இருந்து உங்களைக் காக்க உதவும்.

விதிமுறைகள்:

01. எந்த விஷயமா இருந்தாலும் மிகைப் படுத்தல் என்பது மிக அவசியம். உதாரணமா சிறுநீர் கழித்தல் என்பதை அவ்வாறு சொல்லாமல் "உயிரியலின் அடிப்படையான திரவ கழிவு சுத்திகரிப்பு" என்று சொல்லவேண்டும், ஆணுறுப்பு/பெண் துவாரம் போன்ற வார்த்தைகளை கோர்க்கும் வெளிப்படை பிரயோக லாவகங்கள் வரவேற்கப்படுகின்றன.

02. பொதுமைப் படுத்தல், உதாரணமாக ஒரு ஊழியரை தனி மனிதனாக பார்க்காது ஒரு நிறுவன அமைப்பாக அலது வர்க்கமாக பார்க்க வேண்டும். காற்றுப் பிரித்தல் போன்ற சப்ப மேட்டரா இருந்தா கூட "அடிப்படை உரிமை", "தனி மனித சுதந்திரம்" என்று வகைப் படுத்த வேண்டும்.

03. எப்போதும் கடுமையான வார்த்தைகளை அல்லது இழிவான வார்த்தைகளை பிரயோகிக்க வேண்டும். உதாரணமாக அராஜகம், அடக்குமுறை, அரைகுறை, உமிழ்தல். எதையும் எளிமையான மொழியில் சொல்லாமல் சற்று கடினமான, முரணான நடையில் சொல்ல வேண்டும். உதாரணமாக, ஒரு பிகரு கொஞ்சம் கலரா இருந்திட கூடாதே, உடனே பார்த்திடுவீங்களேன்னு சொல்வதற்குப் பதில் "வெண் தோல் ஏந்திய மகளிரை நோக்கும் சராசரி ஆணாதிக்க மனப்பான்மை" அப்பிடின்னு சொல்லணும்.

04. அடிக்கடி ஏதாவது ஒரு பெயர் புரியாத எழுத்தாளரையோ, சிந்தனையாளரையோ மேற்கோள் காட்டவேண்டும். அல்லது ஏதாவது ஒரு கவிதை வரி, செய்யுளை எடுத்துரைக்க வேண்டும். பெயர் புரியாத எழுத்தாளர்களின் பெயர்கள் எதுவும் உங்களுக்கு தெரியாது எனில் குறைந்த பட்சம் "உனக்கு புரியற மாதிரி சொல்லனும்ன்னா.... ஹ்ம்ம், பாரதி கூட ....." அப்பிடின்னு கொஞ்சம் பிரபலமான பெயர்களை எதோ அவர்கள் நீங்கள் படிக்கும் எழுத்தாளர்களில் இரண்டாம் தர எழுத்தாளர்கள் போன்ற தொனியில் உச்சரிக்க வேண்டும். 


05. மிக முக்கியமானது, உலகத்தில் பரவலாக ஏற்கப்பட்ட விடயமாக எது இருந்தாலும் அதை கண்மூடித்தனமாக எதிர்க்க வேண்டும், சற்று நலிவடைந்த சிந்தனையாக எது இருந்தாலும் அதை கண்மூடித்தனமாக ஆதரிக்க வேண்டும். உதாரணமாக திருமணம் குடும்பம் என்பது தனிமனித சுதந்திரத்தை மறுக்கும் பழமை வாய்ந்த சமூக அமைப்பு கட்டுமானங்கள், விஞ்ஞான ரீதியான மனித உணர்வுகளை, இச்சைகளை கட்டுப் படுத்த நினைக்கும் முரண் விதிகள் என கூற வேண்டும். மருத்துவ கருக்கலைப்பு என்பது பெண்ணின் அவளது உடல் மீதான தனிமனித உரிமை மட்டுமே, அதில் கருவுக்கு காரணமான ஆணுக்கோ, அல்லாது உயிராக துடிக்கும் அந்த சிசுவுக்கோ எந்த உரிமையும் இல்லை என எவ்வித சந்தேகமும் இன்றி வாதிக்க வேண்டும். கடவுள் மறுப்பு என்பது மிகவும் அடிப்படை.

06. சற்று கண்மூடித்தனமான விஞ்ஞானம் பேச வேண்டும். உதாரணமாக தன்னினச் சேர்கையினை ஆதரிக்கிறேன் பேர்வழி என கூறிக்கொண்டு, homosexuality என்பதும் Gender Identity Dissorder என்பதும் ஒன்றே என்பது போன்ற மருத்துவ விளக்கங்கள் கூறவேண்டும். பௌதீகவியல் கூறும் தத்துவங்களை அவை என்ன என்பதையே விட்டு விட்டு சித்தாந்தமாக பார்க்க வேண்டும். பெரு வெடிப்புக் கொள்கை, சார்புத் தத்துவத்தை தாண்டி ஸ்ட்ரிங் தியரி,  குவாண்டம் கிராவிட்டி என நகர்வது சிறந்தது. சில பௌதீகவியல், உயரியல் அறிஞர்களை தெரிந்து வைத்திருப்பதும், கடவுள், மதங்கள் போன்றவற்றை விஞ்ஞான ஒளியில் ஆராய்வதும் கூடுதல் சிறப்பு. 

இப்போ ஒரு சிட்சுவேசனயும், சித்தாந்தம் பேசும் ஒரு முற்போக்கு வாதியாக எப்படி நம்மை அங்கு அடையாளம் காட்டிக் கொள்வது எனவும் பார்ப்போம்.   

சிட்சுவேசன்: பசங்ககூட ஒண்ணா தலைவர் படத்துக்கு போக முடியாம மேனேஜெர் முட்டுக்கட்டை போடுதல்

சராசரி: மச்சான் மங்கூஸ் மண்டையன் படத்துக்கு ஆப்பு வச்சிட்டாண்டா, 

பின்நவீனத்துவம்: கார்பரேட் அமைப்புக்கள் தனிமனித சுதந்திரத்தை சூறையாடுகின்றன.

மார்க்ஸியம்: அதிகாரவர்கம் அடித்தட்டு ஊழியனின் அபிலாஷைகளை அனுமதிப்பதில்லை.


இப்போ முற்போக்குவாதம் பேசுவது எப்படி என தெரிந்து கொண்டீர்களா? இனி பயப்படாமல் அடித்து நொறுக்குங்கள். முக்கியமாக கவனிக்க வேண்டியது, உங்கள் சொந்த நிலைப்பாடு என்ன என்ற புரிதலை நோக்கி கடைசிவரை நீங்கள் பயணிக்கவே கூடாது, அது உங்களை ஒரு பிற்போக்கு வாதியாக மாற்றிவிடலாம். முன்னுக்குப் பின் முரணாக இருந்தாலும், கவலையே படாமல் சமூக அமைப்பில் குற்றம் காண்பதையும், அடுத்தவர் கருத்தை எதிர்பதயும் மட்டுமே குறியாகக் கொண்டிருந்தால் நீங்களும் ஒரு முற்போக்கு வாதியே, "சராசரி" மறுப்பு என்பதே முற்போக்கு வதம் ஆகும்.

டிஸ்கி: "மார்க்ஸியம், பின்நவீனத்துவம் என்றால் என்ன என்றே தெரியாது முற்போக்கு வாதிகள் மீது வெறுப்பை உமிழ்ந்திருப்பது, ஆசிரியரின் காழ்ப்புணர்ச்சியை காட்டுகின்றது", "கட்டுரையாளர், பல வேறுபட்ட சித்தாந்தங்களை போட்டு குழப்பியிருப்பது தெரிகிறது, எங்குமே ஒரு அடிப்படை தெளிவு, நேர்த்தி இல்லை" போன்ற விமர்சனங்கள் வரவேர்க்கப் படுகின்றன. 

டிஸ்கி: ஒருவேள முதல் பத்தியில் சொன்ன நம்ம நண்பர் அப்பாவாகப் போறாரோ? அந்த குறியீட்டுக்கு அர்த்தம் அதுவாக இருக்குமோ? அப்படி இருந்தால் வாழ்த்துக்கள்.

Wednesday, February 12, 2014

இசையும் நானும் எனது நண்பனும்......

சின்ன வயசு முதலே இசையின்னா எனக்கு ரொம்ப ஆர்வம். ரேடியோ பெட்டியில இருந்து, சோனி வாக்மேன், சீ டி பிளேயர், MP3 பிளேயர் என பல பரிமாணங்களை(!) கண்ட இசை உலகில், எம் எஸ் வி, இளையராஜா, ஏ ஆர் ரஹ்மான்,  மைக்கல் ஜாக்சன், ஷகீரா என கிராமியம் முதல் மேற்கத்தியம் வரையும் இசை கேட்கவும் அதன் நுணுக்கங்களை தெளிவாக அறியவும் என நான் மேற்கொண்ட முயற்சிகள் ஏராளம். அதையும் தாண்டி, இசை கருவிகளின் மீது எனக்கு இருந்த நாட்டமும் அவற்றை கற்றுக்கொள்ள நான் செய்த முயற்சிகளும் ஏராளம். எனது இசை ஆர்வத்தின் வெளிப்பாடே இந்த பதிவு.

எனது இசை அறிவு, ஞானம் பற்றி சொல்ல முன், எனது நண்பனது இசை ஞானம் பற்றி சொல்கிறேன். ஏன் என்றால் ஒருவரது நண்பர்கள் என்பவர்கள் அவரது விம்பமே. "எவனோ ஒருவன் வாசிக்கிறான்..." பாடல் கேட்ட நாளில் இருந்து எனது நண்பன் ஒருவனுக்கு புல்லாங்குழல் இசை மீது தீராக் காதல். சாலை ஓரத்தில் யாராவது புல்லாங்குழல் வாசித்தால் கூட மணிக்கணக்கில் அவர்கள் அருகில் இருந்து ரசித்துக் கொண்டிருப்பான். அந்த இசைக் கருவியை கற்பதில் அவனுக்கு அப்படி ஒரு ஆர்வம். எப்பப் பார்த்தாலும் "என்னைக்காவது ஒரு நாள், ஒரு புல்லாங்குழல் வாங்கிடனும் மச்சான், அதுதான் என் வாழ்க்கை லட்சியம்" ன்னு சொல்லிக்கிட்டே இருப்பான். இவ்வாறாக பல நாட்களாக தீராத முயற்சி எடுத்து கற்றுக் கொண்ட அவன் ஒருநாள் திடீர் என என்னிடம் வந்து, "மச்சான், இப்போ நான் செம்மையா புல்லாங்குழல் வாசிப்பேன், இனிமேல் அடுத்த கட்டத்துக்கு போகவேண்டியதுதான், நீ எனக்கு ஒரு புல்லாங்குழல் வாங்கித்தா" ன்னான்.


நானும் அவனுமா சேர்ந்து புல்லாங்குழல் வாங்கறதுக்காக டவுனுக்கு கடைக்குப் போனேம். நாங்க போன தெருவுல வரிசையா பல இசைக் கருவிகள் விற்கும் கடைகள் இருந்தாலும் நம்மாளு குறிப்பா ஒரு கடைக்குத்தான் போகணும்ன்னு விடாப் பிடியா இருந்தான். அந்த கடை, சிவாஜி படத்துல வார்ர கடை செட்டப்ன்னு வச்சுக்கங்களேன், அங்கேயும் தமிழ் செல்வி மாதிரி ஒரு செம பிகரு இருந்திச்சி. நம்மாளு அந்த பிகருக்கிட்ட போயி புல்லாங்குழல் குடுங்கன்னு கேட்டான், அந்த பிகரும் என்னன்ன பெயர் எல்லாமோ சொல்லி அது வேணுமா, இது வேணுமான்னு ஏராளமா கேள்வி மேல கேள்வி கேட்டுக்கிட்டே இருந்திச்சு, நம்மாளும் சலிக்காம என்னெல்லாமோ பேசினான், அவனோட ஞானத்த கண்டு நான் மெய் சிலிர்க்க நின்னிட்டு இருந்தேன். கடைசியா அந்த பொண்ணும் போயி எதோ ஒரு புல்லாங்குழல் கொண்டு வந்திச்சு, நம்ம மாப்ள அத கையில வாங்கிட்டு, அப்படியே எங்கிட்ட வந்தான், கிட்ட வந்தவன் புல்லங்குழல ஒரு வாட்டி உத்துப் பார்த்தான், அப்புறம் என்னப் பார்த்து "என்ன மச்சான் இந்த குழல்ல இத்தன ஓட்டை இருக்கு, இதுல நான் எதுல வாய் வச்சு ஊதுரது" ன்னு கேட்டான், நான் செம டென்ஷன் ஆகிட்டேன், காண்டுல அவன்கிட்ட கேட்டேன், மச்சான் நெசமா சொல்லு, உன்னோட ஆர்வம் புல்லங்குழல் மேலயா இல்ல அந்த தமிழ் செல்வி மேலயான்னு, அதுக்கு நம்ம நண்பன் என்னைப் பார்த்து திமிராக் கேட்டானே ஒரு கேள்வி,

"இன்னுமாடா உனக்கு இது புரியல?"


இதற்கும் எனது இசை ஞானத்துக்கும் என்ன சம்பந்தம்ன்னு கேக்கிறீங்களா? சொல்றேன், கொஞ்ச நாளாவே இந்த சுப்பர் சிங்கர் நிகழ்ச்சிய பார்த்துக்கிட்டு இருக்கேன், அதுல யாராவது "ரெண்டாவது சரணத்துல மூணாவது வரியில அந்த "ச ரி த ம, க த ப நி" ல ஸ்ருதி கொஞ்சம் விலகிறிச்சின்னு சொல்றப்போ எனக்கு மேல உள்ள படம்தான் ஞாபகம் வரும். ஏன்னா நம்ம இசை ஞானம் அப்படி. 

படிப்பினை: ஆர்வத்துக்கும் அறிவுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும், ஆர்வம் எதனால வேணும்னாலும் வரலாம், அறிவு வரணும்னா ஆர்வம் மட்டும் இருந்து பத்தாது, தேடல், புரிதல், முயற்சி, கற்றல் என பல விடயமும் இருக்கணும், இல்லையின்னா எப்பவும் என்னையும் என் நண்பனைப் போலவும் ஆர்வக் கோளாறுதான்.

டிஸ்கி: இந்த பதிவு எழுதினதே, கொஞ்ச நாளாவே மனசக் கொடஞ்சிக்கிட்டு இருக்கற ஒரு விஷயத்த உங்க கூட பகிர்ந்துக்கத்தான். அது என்னன்னு கேக்கறீங்களா, கீழே பாருங்க. எதுவுமே புரியலன்னா பெருசு படுத்தி பாருங்கய்யா, நான் படத்தைச் சொன்னேன்.

குழந்தைகள், இருதய நோயாளிகளுக்கு உகந்ததல்ல. 



Monday, January 13, 2014

ஜில்லா - திரை விமர்சனம்

நம்ம கடை திறக்கனும்னா, ஒரு தமிழ்படம் நம்ம ஏரியாவுல ரிலீஸ் ஆகனும். அதாவது ஒரு நல்ல நாள், பண்டிகைன்னு ஏதாவது வரனும். அந்த சட்டத்துக்கு அமைய, பொங்கல் நாள் வர்றதால, நம்ம கடை சார்பாக இந்தமுறை ஜில்லா விமர்சனம்.


துப்பாக்கி எனும் மெகா ஹிட்டுக்கும், தலைவா எனும் ஏமாற்றத்துக்கும் பின்னர் இளைய தளபதி நடிப்பில், காஜல் அகர்வால், மோகன்லால் உட்பட பல நட்சத்திர கூட்டணியில், தலையின் வீரத்துடன் போட்டியிட, RB சவுத்ரியின் தயாரிப்பில் களமிறங்கியிருக்கும் மாஸ் ஆக்ஷன் மசாலா இந்த ஜில்லா. தப்பு பண்ணினதுக்காக அடிக்கல, அந்த தப்ப நாங்க மட்டுமே பண்ணணும், அதுதான் அடிச்சேன், என்கிற அழகிய கொள்கையோடு, குடும்பமாக வுடியிஸம் பண்ணும் ஒருவன், எதிர் முனையில் இருந்து தன்கூட்டத்தார் செய்யும் தப்புக்களை காண நேர்ந்தால்... எனும் கற்பனையே ஜில்லா. இது ஒரு நல்ல இயக்குனர் கையில் நாயகன் இரண்டாம் பாகமாகவோ, அல்லது ஒரு ஆர்வக்கோளாறு இயக்குனர் கையில் தலைவா இரண்டாம் பாகமாகவோ ஆக சாத்தியமுள்ள கற்பனைதான். நல்ல வேளையாக ஜில்லா டீமுக்கு உலகப்படம் எடுக்கும் விபரீத ஆசை இல்லாததால், இது ஒரு ஆக்ஷன் என்டர்டைனர் வரிசையில் சேர்க்கிறது.  இந்த மசாலாவை எப்படிப் பறிமாறி இருக்கிறார்கள், அதில் வெற்றி பெற்றார்களா இல்லையா என்பதை இனி பார்க்கலாம்.

விஜய், மகேஷ் பாபு, சல்மான் கான் இந்த மூவருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. அதாகப்பட்டது, கதையோ, திரைக்கதையோ எப்படி இருந்தாலும் இவர்கள் புல் ஃபோர்மில் இருந்தால் படம் தப்பிக்கும். இங்கும் அப்படித்தான். படம் முழுவதும் விஜய் ஆட்சி. ரொம்ப நாளைக்கு அப்புறமா விஜய் புல் ப்ரீயா நடிச்சிருக்காரு. வழக்கமான சேட்டைகள், டைமிங், சின்னச் சின்ன ரியாக்ஷன், முக்கியமா அந்த விஜய் ஸ்மையில் எல்லாமே முழு வீச்சுல இருக்கு. படம் முதல் பாதி பார்க்கும் போது, மறுபடியும் விஜய்க்கே மாறிடலாமான்னு ஒரு கணம் தோணினாலும், இரண்டாம் பாதி அந்த விபரீத முடிவுல இருந்து நம்மள காப்பாத்துது. ரொம்பவே ஸ்ட்றாங்கா இருந்திருக்கக் கூடிய, அல்லது குறைந்த பட்சம் சிவகாசி மாதிரி வந்திருக்க வேண்டிய இரண்டாம் பாதி, அது யாரு தப்புன்னு தெரியல, மறுபடியும் ஒரு வில்லு ரேஞ்சுல, ஒரு பைட் சீன், அப்புறமா மொக்கையா ஒரு பாட்டு, அப்புறம் மொக்கையா ஒரு கமெடி சீன், மறுபடியும் ஒரு மொக்கையா அக்ஷன் ப்ளாக்ன்னு, ஒரு நேர் கோட்டுல ரொம்ப மொக்கையா போய்க்கிட்டே இருக்கு. விஜய் எவ்வளவு ட்ரை பண்ணியும் காப்பாத்த முடியாத கட்டத்துல இருக்கு இரண்டாம் பாதி படம். இதுல சோகம் என்னன்னா ரெண்டாம் பாதி முடியறப்போ, ஒரு செம ஜாலியான முதல் பாதி படத்துல இருந்ததே நமக்கு மறந்திடுது.


பிளாஸ் அண்ட் மைனஸ்

1.    விஜய் விஜய் விஜய். முதல் பாதி முழுவதும் செம அட்டகாசம், அந்த அறிமுக காட்ச்சியில இருந்து போலீஸ் ஆகும் வரைக்கும் மனுஷன் பிச்சி வாங்கி இருக்காரு. அப்புறமும் ரெண்டாம் பாதியிலதான் என்ன பண்றது, எப்படி பண்றதுன்னு குழம்பிப் போனாலும், ஃபயிட், டான்ஸ் என தனது ஏரியாவுல செமையா ஸ்கோர் பண்ணிட்டதால ஹார்ட்கோர் விஜய் ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி.2.  மோகன்லால் எதுக்கு இந்தப் படத்துக்குங்கற கேள்விக்கு கடைசிவரை எனக்கு விடை கிடைக்கவே இல்லை. மோகன்லால் அவரு பணிய சரியாவே செஞ்சிருக்காரு, அதுல எந்த குறையும் இல்ல, குறிப்பா, ஒபெனிங்க் சாங்க்ல விஜய் முன்னாடி, தனது ப்ரசன்சை மெயிண்டயின் பண்ணும் போதே ஒரு நடிகராக நம்ம மனசுல நின்னுடறார். போதுமான ஸ்டையில், அளவான எமோசன்ஸ் என கச்சிதமான நடிப்பு. பட் மோகன் லால் இருப்பதாலோ என்னவோ, இரண்டாம் பாதி படம் கொஞ்சம் டல் அடிக்கிறது. விஜயின் ப்ரீ ஃபாலுக்கு இணையாக சத்தியராஜ் போன்ற ஒரு லொள்ளுப் பார்ட்டி கூட இருந்திருந்தால் படம் இன்னும் அட்டகாசமாக இருந்திருக்குமோ என்னவோ. படத்தை ஒரு மசாலா படமாவே கொண்டு செல்வாதா இல்லை ஒரு உலகப் படமாக எடுப்பாதா என்ற இயக்குனரின் குழப்பத்துக்கு ஒரு வேளை இதுவே காரணாமாக இருந்திருக்கலாம்.


3.     காஜல் அகர்வால் கொஞ்சமும் மாற்றமே இல்லாம அப்பிடியே இருக்காங்க, இது ஒரு பிளாஸ் போன்று தோன்றினாலும், 2007ல இருந்து இன்னிக்கி வரைக்கும் தொடர்ந்து பார்த்து வந்ததுல, எந்த ஒரு சீன் வரும்போது சீனோட அட்மாஸ்பியர் பார்த்தே காஜல், ரியாக்ஷன் நம்பார் 12 குடுப்பாங்களா இல்ல, 17 குடுப்பாங்களான்னு சொல்லிடக் கூடியதா இருக்கறது பெரியவே மைனஸ். என்ன ஒரே ஆறுதல், இப்போவெல்லாம் இந்தப் பொண்ணு சேலை கட்டி வந்தா அது இடுப்புல நிக்கவே மாட்டேங்குது, சோ நாமெல்லாம் ரொம்ப ஹேப்பி அண்ணாச்சி.

5.    செகண்ட் ஆப் ஆரம்பித்ததும் விஜயின் மன மாற்றத்துக்கு காரணமாக வரும் காட்சி வலு இல்லாமல் இருப்பது ரொம்பவே சொதப்பல். ரொம்பவும் உருக்கமான காட்சிதான் அது, அதில் சந்தேகம் இல்லை, ஆனா விஜய் போலீஸ் ஆக முதல் நல்லம நாயக்கர் போன்றிருக்கும் சிவன்,  விஜய் போலீஸ் ஆன மறு கணமே, சிங்கம் மயில் வாகனம் ரேஞ்சுக்கு தெரிவது கொஞ்சமும் ஏற்றுக்கொள்ள முடியாததாக ஆகிறது. ஒரு மாஸ் படமாகவே இருந்த போதும் இந்த மன மாற்றம் இன்னும் கொஞ்சம் கவனமாக கையாளப்படிருக்க வேண்டுமோ என்னமோ.

6.  தம்பி செண்டிமென்ட், தங்கச்சி செண்டிமெண்ட், அம்மா செண்டிமெண்ட், அப்பா செண்டிமெண்ட் ன்னு ஒரே குடும்ப பாச மழை. நட்புக்கு சூரியும், ஊறுகாய்க்கு காஜலும், வில்லனாக சம்பத்தும், என ஒரே நடச்சத்திரப் பட்டளமாகவும், விஸ்தாரனமகாவும் இருக்கும் படம், சில நேரங்களில் எதுக்கு இம்ம்புட்டு பேர், ஒரு மூணு காரக்டர தூக்கி இருந்தா இன்னும் முப்பது நிமிசத்த மிச்சம் புடிச்சிருக்கலாமேன்னு யோசிக்க வைக்குது. போதாக் குறைக்கு ரெண்டே சீனுக்காக தலைவர் சந்தானத்துக்கே ஜோடியா நடிச்ச ரெண்டு ஹீரோயின்கள தேவையே இல்லாம வேஸ்ட் பண்ணி, நம்ம கடுப்ப வேற கெளப்பி, இதெல்லாம் தேவையா?

7.  செம என்டேர்டைனிங்கான முதல் பாதிக்காக இந்தப் படம் கண்டிப்பாக பார்க்கலாம். விஜய் புல் ஸ்விங்குல இருக்கார், ரொம்ப நாளைக்கு அப்புறம், கில்லி, சச்சின்ல பார்த்த அதே இளமைத் துள்ளல், அட்டகாசம், செமயா இருக்காரு மனுஷன். கொஞ்சம் தொப்பை எட்டிப் பார்க்கிறது, அடுத்த படத்துல அதையும் கவனிச்சிட்டா, இன்றைய சினிமாவின் மார்கண்டேயனா வருவதற்கான எல்லா தகுதியும் இந்த ஆளுக்கிட்டதான் இருக்கு.

8.  இசை, ஒளிப்பதிவு இதர விதரங்கள் சொல்லிக்கொள்ளும் படி எதுவும் இல்லை. குறையும் இல்லை, நிறையும் இல்லை.


விஜய் ரசிகர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். மற்றயவர்கள் ஒரு முறை பார்க்கலாம், அல்லது குறைந்த பட்சம்,  டிவிலயாவது ஃபர்ஸ்ட் ஆப் கண்டிப்பாக பார்க்கணும்.

நம்ம ரேட்டிங் 6.5/10. (ஃபர்ஸ்ட் ஆப் 9/10, செகண்ட் ஆப் 4/10)

எல்லோருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள். 

டிஸ்கி: ஒன்ஸ் மோர் படத்துல அப்பன தத்தெடுத்த நம்ம இளைய தளபதி, இந்தப் படத்துல தாத்தாவையே தத்தெடுத்து சாதனை படைச்சிருக்காரு. அதுக்காகவேனும் பாருங்கள்.

டிஸ்கி:  ஏற்கனவே, சிவன்-சக்தி சண்டைய வச்சி, ஒரு பிரபு-சத்யராஜ் படம், ராஜேஷ் படம்,   அப்புறம்    இந்த படம், அதுல டாப்பு "ஒரு குவார்ட்டர் சொல்லேன் மச்சி" தான்!

டிஸ்கி: இங்கு நாம படம் பார்க்கப் போன காம்ப்ளெக்ஸ்ல எதிர் எதிரே ரெண்டு ஸ்க்ரீன்ஸ், ஒன்னுல ஜில்லா, மத்ததுல வீரம். ஜில்லா பார்த்துட்டு வீரம் பார்கலாம்ன்னுதான் இருந்தோம், பட், ஜில்லா முடியும் போது அந்த எண்ணம் சுத்தமா போயிட்டதால, வீரம் பார்க்க முடியல. என்ன ஒரு கவலை, தலைவர் காமெடி செமையா இருக்குன்னு எல்லாருமே, சொல்லும்போது, ஜில்லாவ விட, வீரம் பார்த்திருக்கலாமோன்னு ஒரு எண்ணம் வருது.

**********************************************

பதிவுக் குறிப்பு: 

ஆரம்பத்துலையே சொன்னது போன்று, ஒரே செயல்பாட்டினை இரு வேறு கோணங்களில் இருந்து பார்க்கவும், விவாதிக்கவும், தன்னையும், தன்சார்ந்தவர்களையும் பற்றி சுய பரீசீலனை செய்யவும் என பல வாய்ப்புக்களை கொண்டது படத்தின் கரு. ஒரு நல்ல இயக்குனர் கையில் நாயகன் இரண்டாம் பாகமாக அல்லது நாயகன் படத்தின் மறுபக்கமாக அமைந்திருக்கக் கூடியது. அது ஒரு பொருட்டன்று. அந்த படத்தை ஒரு மாஸ் ஆக்ஷன் படமாக கொடுக்க நினைக்கும் போது, அந்த எல்லைகளுக்குள் மட்டுமே பூரணமாக பயனித்திருந்தால், ஒரு சிவகாசி போன்றோ, அல்லது, ஒரு சிறுத்தை போன்றோ செம ஜாலியான ஒரு இரண்டாம் பாதியை கொடுத்திருந்தால், விஜயின் பாக்ஸ் ஆபீஸ் சரித்திரத்தில் முக்கிய இடம் பிடித்திருக்கக் கூடிய ஒரு படம். இரண்டாம் பாதியில் ஏற்பட்ட சில குறைகளும், இயக்குனரின் அனுபவம் இன்மையும், படத்தை சற்றே பாதித்து விட்டது. 



Thursday, November 14, 2013

Krrish 3 சூப்பர் ஹீரோ ஒரு அலசல்

வார்னிங்: ஸ்பாய்லர்ஸ் உண்டு (படம் வந்து எம்புட்டு நாளாச்சி, இதுக்கப்புறம் ஸ்பாய்லர்ஸ் இருந்தா என்ன, இல்லாட்டி என்ன)

வலது பக்கமிருந்து மூணாவதா ஒக்காந்து இருக்கதுதான் நம்ம ஹன்சிகா ஆண்டி.

Koi mil gaya (2003), க்ரிஷ் (2006) வரிசையில் ராகேஷ் ரோஷன், ஹ்ரிதிக் ரோஷன் கூட்டணியின் மூன்றாவது சூப்பர் ஹீரோ படம். Marvel, DC  காமிக்ஸ்களின் சூப்பர் ஹீரோக்களுக்கு இணையான இந்திய சூப்பர் ஹீரோ நம்ம இந்த க்ரிஷ். முதல் படத்தில் ஒரு வேற்றுக் கிரக வாசிக்கு உதவி செய்து அதன் மூலமா சில பல அதீத சக்திகள் ரோஹித் மெஹ்ரா (ஹ்ரித்திக் ரோஷன்) என்னும் மூளை வளர்ச்சி குறைந்த இளைஞனுக்கு கிடைக்கிறது. இது அவனுடன் நின்று விடாது அவன் வழித்தோன்றல்களுக்கும் கடத்தப் படுகிறது. இரண்டாவது படத்தில் ரோஹித் மெஹ்ராவின் மகன் கிருஷ்ணா அதீத உடல் பலம், வேகம் போன்ற ஆற்றல்களுடன் இருக்கிறார். ஒரு தீவிபத்தில் இருந்து மக்களைக் காப்பாற்ற க்ரிஷ் அவதாரம் எடுக்கும் கிருஷ்ணா (கிருஷ்ணாவின் சுருக்கம்தான் இந்த க்ரிஷ்) அதன் பின்னர் தனது தந்தையை ஒரு ஆபத்தில் இருந்து காப்பாற்றுகிறார். இந்த இரண்டு படங்கள் அவை வெளியான காலங்களில் சக்கை போடு போட்ட படங்கள். இப்போ 2013, அதிகப்படியான சூப்பர் ஹீரோ படங்கள் ஹாலிவூட் திரையை துளைக்கும் போது, அவற்றுக்கு இணையாக இந்தியாவில் இருந்து ஒரு படமாக க்ரிஷ்  3 களம் இறங்கியிருக்கிறது. இனிமேல் இந்த படம் பற்றிப் பார்ப்போம்.


நம்ம ஹீரோ கிருஷ் இப்போ இந்தியாவுல மக்களால் கொண்டாடப் படும் ஒரு சூப்பர் ஹீரோ. அங்கங்கே சின்னதா நடக்கும் கொள்ளை, தீவிபத்து, விமான விபத்து என எது எங்க நடந்தாலும் அங்க ஆஜராகி மக்களை காப்பத்தறாரு. இது முழு நேர வேலை. பகுதி நேரமா வேறு நிறைய வேல செய்யறாரு, எங்கயுமே நிரந்தரமா தங்கறது கிடையாது, காரணம் வேலையில ஒழுங்கா கவனம் செலுத்தறது கெடயாது (spiderman - your friendly neighbourhood). திடீரென நம்ம 7 ஆம் அறிவு ஸ்டைல்ல உலகத்துல பல இடங்கள்ள மருந்தே கண்டுபிடிக்க முடியாத ஒரு "கொடிய நோய்" பரவுது. இதற்க்கு இடையில நம்ம Mystique அம்மணி தகவலளிக்க வந்த ஒரு சயின்டிஸ்ட போட்டு தள்ளிடறாங்க. அப்படியே கட் பண்ணினா Professor X  ஒரு வில்லன் வடிவத்துல வார்ராரு, இவரு கண்டிப்பா ஒரு telepath தான்னு நினைச்சா இல்ல, இவரு Jean மாதிரி telekinetic, அப்பப்போ Magneto மாதிரி அட்டகாசம் பண்றாரு, அப்புறம்தான் நமக்கு தெரியுது இவருதான் பிரதர் ஹூட் ஆப் ஈவில் மியுடன்ட் தலைவர்ன்னு. அவரு கூட்டத்துல நமக்கு பரிச்சயமான Toad உட்பட பல காரெக்டர்ஸ் இருக்கு. அப்புறம்தான் நம்ம தலைவர் அவரோட சக்தி எங்கிருந்து வந்துச்சி, அவரோட உடலை எப்படி முழுமையா செயல்பட வக்கிறது போன்ற உன்னதமான கேள்விகளுக்கு விடை தேட ஒரு ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்கறதாவும், அதுக்கு பணம் புரட்டத்தான் இந்த 7 ஆம் அறிவு வேலை செய்யரதாவும் தெரியவருது. அப்புறம் இவுங்க மும்பயில நோயைப் பரப்ப (இதற்க்கு கடவுள் நம்பிக்கையை அழிச்சுட்டு தானே கடவுள் ஆகிடனும்ன்னும் ஒரு வியாக்கியானம் வேற), நம்ம க்ரிஷ் மற்றும் ரோஹித் ஒரு ஆண்டிடோட் கண்டுபிடிச்சு அமேசிங் ஸ்பைடர்மேன் ஸ்டைல்ல ஒரு Dispersion  Device  மூலமா மொத்த மும்பையையும் ஓவர் நைட்ல காப்பாத்திடராங்க (இங்க இவருக்கு சிலை வைப்பு வைபவம்  வேற). அப்புறமா, நம்ம DNAல இருந்து மட்டும்தானே நம்ம வைரசுக்கு மருந்து வரலாம், இது எப்படி வந்திச்சுன்னு வில்லன் ஆராய அப்புறம் என்னவாச்சின்னு avengers, மேன் ஆப் ஸ்டீல் பாணியில விடை சொல்லி முடிச்சிருக்காங்க படத்த. 


ஹாலிவூட் பசங்களுக்கு சூப்பர் ஹீரோ படங்கள் எடுக்கறதுல ஒரு லாபம் என்னன்னா அவங்க கிட்ட நூறு வருஷத்துக்கு மேல பழமையான பல சூப்பர் ஹீரோ - சூப்பர் வில்லன்கள் இருக்காங்க, இன்னாரு இன்னாரு, இவருக்கு இன்ன இன்ன பவர் இருக்கு, அது இப்படித்தான் வந்திச்சுன்னு யாரும் ஒக்காந்து யோசிக்கவும் தேவையில்ல, எப்படிடா இவனால இதெல்லாம் முடியும்ன்னு ரசிகர்கள் கேள்வி கேக்கப் போறதுமில்ல. மேக் அப்,  காஸ்ட்டியூம்லையே இவரு இன்னருதான்னு சொல்லிடுவாங்க. நம்ம இந்திய சினிமாவுல அப்படி கெடயாது. நமக்கு ஒரே சூப்பர் ஹீரோ தலைவர் ரஜினிகாந்த் தான். இல்லையின்னா புராணங்கள புரட்டனும். அதுதவிர என்னன்னாலும் ஆரம்பம் இருந்து முடிவு வரை பார்வையாளனுக்கு விஞ்ஞானபூர்வமா விளக்கனும். கடந்த ரெண்டு படங்கள்லயும் சூப்பர் ஹீரோவ உருவாக்கற பணியில வெற்றி பெற்ற இந்த கூட்டணி, இந்த முறை சூப்பர் வில்லன்கள உருவாக்குறதுல நிச்சயம் தோல்விதான். ஹாலிவூட்ல ஸ்பைடர் மேன்னா  இவுங்க இவுங்க வில்லன், அயன்மேன்ன்னா இவரு இவரு ன்னு எல்லா சூப்பர் ஹீரோக்களுக்கும் வில்லன் இருக்கு, இங்க ராமருக்கு ராவணன் தவிர, க்ரிஷுக்கு எல்லாம் வில்லன் கெடயாதுங்கறது, நமக்கு சூப்பர் ஹீரோ படம் பண்ணுறதுல எப்பவுமே இருக்கற ஒரு சவால் தான். ஆனா அந்த சவால ஒரு Ra.One - G.One  ரேஞ்சுலயாவது கையாண்டு இருக்கலாம்.  அத விட்டுட்டு படம் முழுவதுமே ஒரு மார்வெல் யூனிவேர்ஸ்ல நொழஞ்சிட்ட பீலிங் வர்ரத தவிர்த்திருக்கலாம். அப்புறம் அடுத்தவனுக்கு உதவி செய்ய நினைக்கற மனம்தான் க்ரிஷ்ன்னு "we are robin hood" ஸ்டைல்ல வலிந்து திணிச்ச தீம் கொஞ்சம் நெருடலா இருக்கு. 


பாசிடிவ் சைடுன்னா, VFX எக்ஸ்ட்ரா ஆர்டினரியா இருக்கு. ஹ்ரித்திக் ரோஷன் எப்பவும் போலவே படத்துக்காக ரொம்பவே உழைச்சிருக்காரு, க்ரிஷ்ன்னா இந்தாளுதான்யான்னு கன கச்சிதமா பொருந்திப் போறாரு. ரொம்ப நாளைக்கு அப்புறம் கங்கனா ரேனவாத்,  அப்புறம் தொட்டுக்க பிரியங்கா சோப்பரா. தொழில்நுட்ப ரீதியா படம் பட்டய கெளப்புது. அதே கவனத்த கதையிலும் செலுத்தியிருந்தா படம் சூப்பரா இருந்திருக்கும். நீங்க ஒரு மார்வல் பேனா இருந்தீங்கன்னா இந்த படம் உங்களுக்கு ஒரு வேலாயுதம் மாதிரி இருக்கும், படத்துல புதுசுன்னு சொல்லிக்க எதுவுமே இல்ல, எல்லாமே இதற்க்கு முன்னாடி நீங்க எங்கயாவது பார்த்த ஒன்னாதான் இருக்கும். இல்ல, மார்வல் யுனிவேர்சுக்கும் உங்களுக்கும் சம்பந்தமே இல்லையின்னு வச்சுக்கங்க, அப்பவும் இந்த படம் உங்களுக்கு ஒரு வேலாயுதம் மாதிரிதான்  இருக்கும். இந்திய சினிமாவுக்கு கொஞ்சமும் பழக்கம் இல்லாத கதைக் களம், மியுடன்ட்களின் விதவிதமான சக்தி, கலர் புல்லான ரெண்டு ஹீரோயின், பவர் புல்லான ஹீரோ, எக்ஸ்ட்ரா ஆர்டினரி மேக்கிங், லார்ஜெர் தான் லைப் ஆக்ஷன் சீக்குவன்ஸ்ன்னு செம இன்டரஸ்டிங்கான படம்.


டிஸ்கி 1: தீபாவளிக்கு மறுநாளே படம் பார்த்திருந்தாலும், படத்துக்கு விமர்சனம் எழுதற ஐடியா கொஞ்சமும் இருக்கல. என்னக்கி இந்த படம் இந்தியாவுல மட்டுமே இருநூறு கோடி வசூல தாண்டி, சென்னை எக்ஸ்பிரஸ் படத்தோட சாதனையை முறியடிக்கபோகுதுன்னு தெரிஞ்சிச்சோ, அன்னைக்கே இந்த படத்துக்கு விமர்சனம் எழுதணும்ன்னு முடிவு பண்ணிக்கிட்டேன். ஏன்னா வரலாறுல நம்ம பெயரும் வரனுமே.

டிஸ்கி 2: நீங்க ஒரு சூப்பர் ஹீரோ பட விசிறியா இருந்தா தயவு செய்து இந்த படத்த தவிர்த்துட்டு Thor: The Dark World பாருங்க. நம்ம பசங்க என்னதான் பண்ணியிருக்காங்க பார்ப்போமேன்னு க்ரிஷ் 3 பார்த்திங்கன்னா அதனால வார எந்த மன உளைச்சலுக்கும் கம்பெனி பொறுப்பேற்காது. சும்மா தமாசுக்கு ஒரு படம் பார்க்கணும்னா தாராளமா பாருங்க, தீபாவளி தமிழ் ரிலீசுக்கு இது எவ்வளவோ தேவல.  

டிஸ்கி 3: இந்தப் படம் ஒரு குடும்பப்படமான்னு சந்தேகமே வேணாம். கதை, திரைக்கதை, வசனம் இயக்கம், தயாரிப்பு அப்பா; ஹீரோ பையன், இசை சித்தப்பு, இதுக்கும் மேல ஒரு குடும்பப் படம் விசுவால கூட எடுக்க முடியாது. (டி ஆர் தவிர)