Showing posts with label மொக்கராசு மாமா போட்டது. Show all posts
Showing posts with label மொக்கராசு மாமா போட்டது. Show all posts

Monday, September 19, 2011

வந்தான் வென்றான் -சந்தானத்தால் கொஞ்சம் தப்பிச்சுது


எல்லாருக்கும் நன்றியுடன் கலந்த வணக்கம்ங்க!! என்னடா இவிங்க திரும்பவும் வணக்கம் சொல்லி கூடவே நன்றியும் சொல்றானேன்னு பார்க்குறீங்களா? இல்லீங்க இந்த பதிவ எழுதுற நானு வழக்கமான , உங்களுக்கு பழக்கமான பதிவர் Dr. Butti Paul இல்லீங்க. அவருதான் இதுநாள் வரைக்கும் Real Santhanam Fanz ங்குற பொதுவான பேர்ல எழுதிகிட்டு வந்தாரு. மொக்கராசு மாமா  ஆன நானு கடைசியா மங்காத்தா போஸ்ட் எழுதுன அப்புறம் ஒரு விபத்துல சிக்கி இப்பதான் கொஞ்சம் சகஜ நிலைக்கு வந்துருக்கேன். இன்னும் ஒடம்பு வலி குறையாமலிருந்தாலும் நம்ம தலைவர் சந்தானம் நடிச்ச வந்தான் வென்றான் படத்த போய் பார்த்துட்டு விமர்சனத்துடன் திரும்பவும் மொக்க போட ஆரம்பிக்கிறேன்.  காயமடைந்து இருக்கும் போது பேஸ்புக், ட்விட்டர் மற்றும் பிளாக் வாயிலாக என்னிடம் நலம் விசாரிச்ச எல்லா நண்பர்களுக்கும் என்னோட நன்றியதான் மொத வரில சொன்னேன். அப்புறம் இனிமே நம்ம பதிவுகள், கமெண்ட்கள் எல்லாமே Dr. Butti Paul அண்ட் மொக்கராசு மாமா ன்னு ரெண்டு வெவ்வேறு பேர்லதான் இருக்கும்னு பப்ளிக்கா அறிவிச்சிறோங்க. இப்ப  படத்தோட விமர்சனம்....
இந்த போஸ்டர்லயே வெளங்குது, எத நம்பி படத்த எடுத்து இருக்காங்கன்னு.
படம் ஆரம்பிச்சி ஒரு அரை மணி நேரம் ஹீரோவ திரைல காட்டவே இல்லேங்க. ஏதேதோ மொக்கையா சில காட்சிகள். ஏன்டா இந்த படத்துக்கு வந்தோம்னு செம காண்டுல ஒக்காந்து இருந்தேன். அப்புறம்தான் ஹீரோ இன்ட்ரோடக்சன் வந்துச்சு. நம்ம ஹீரோ ஒரு டான் மாதிரி அறிமுகமாகுறாரு, இந்தி பில்லா பட பிண்ணனி இசை அவருக்கு செமையா மேட்ச் ஆகுது அந்த காட்சில. அவரு வர்ற வரைக்கும் அடிபொடி அல்லைகைகள் எல்லாம் சாப்பிடாமா இருக்காங்க. அப்டியே வெளில வந்தா ஹீரோவுக்கு ஒரு புது பிரெண்டு (யாரோ ஜீவாவாம்) அறிமுகமாகுறாரு. அந்த பிரெண்டு தமிழ்நாட்டுல எதோ  ஒரு ஊர்ல இருந்து அவுங்க அண்ணன தேடி மும்பை வந்தவராம் (அவரு கதை நமக்கு எதுக்குங்க). அந்த பிரெண்டுகிட்ட ஹீரோ ஹிந்தில பேசுறாரு. ஆனா ஹீரோ பேசுற ஸ்டைல வச்சே அவரு பிரெண்டு "நீங்க தமிழ்தானே ?" ன்னு கேட்டுறாரு. அதுக்கான காரணத்தை நீங்க திரைல பாருங்க. அப்புறம் ஹீரோ தன்ன பத்தி சொல்ல ஆரம்பிக்கிறாரு. உண்மைலேயே அவரு டான் இல்லையாம், ஒரு டான் க்ரூப்ல அடிமை சமையல்காரரா இருக்காராம், நம்ம ஹீரோ சாப்பிட்ட பிறகு அடிபொடி அல்லைகைகள் சாப்பிடுவதற்கான காரணம் நம்ம ஹீரோ விஷம் கிஷம் கலக்கலன்னு உறுதி செஞ்சிக்கிறதுக்காகவாம். அப்டின்னா ஹீரோ எப்புடி இந்த டான் க்ரூப்ல சேர்ந்தாரு? இந்த எடத்துலதான் ஒரு பிளாஷ்பேக்.

பாணிபூரி விக்கிற ஹீரோ..
 நம்ம ஹீரோ ஒரு ஆறு வருசத்துக்கு முன்னாடி பாம்பைல  பாணிபூரி  கடை வச்சிருக்காரு. அவருக்கு போட்டியா பக்கத்துல இன்னொரு ஆள் பாணிபூரி விக்க வர்றாரு.  அவர விரட்டுரதுக்காக நம்ம ஹீரோ இந்த டான் க்ரூப்கிட்ட வர்றாரு. பிறகு நடந்த சில கலவரங்களால நம்ம ஹீரோவுக்கு அந்த டான் க்ரூப்லையே இருக்க வேண்டிய கட்டாயம். இவருக்கு சமையல் குறிப்பு குடுக்குறதுக்காக தராசு மணி ன்னு ஒருத்தர் மார்கெட்ல கட வச்சிருக்காரு.

அப்புறம் நம்ம ஹீரோ அவரு பிரெண்டுக்கு உதவுரதுக்கு வேறு சில கட்டாயங்களினால் கமிட் ஆகுராறு. அப்புறம் தன்னால் ஆனா எல்லா ஹெல்பையும் அந்த பிரெண்டுக்கு செய்றாரு. நடுவுல ஒரு சீன்ல அவருக்கு போட்டியா வந்த அந்த பாணிபூரி விக்கிறவனுக்கு ஒரு போலீஸ் காரர் மூலமா வைக்கிறாரு பாருங்க ஒரு ஆப்பு , தியேட்டர்ல செம அப்ளாஸ். அது மட்டும் இல்ல இந்த படத்துலேயே நம்ம ஹீரோ வர்ற காட்சிகள்ல மட்டும்தான் மக்கள் கொஞ்சம் உற்சாகமா பார்க்குறாங்க. அப்புறம் திரும்பவும் தூங்கிறாங்க.அப்டியே பிரெண்டுக்கு உதவி செஞ்சிகிட்டு இருக்கும்போது  ஒரு மொக்க சீன்ல நம்ம ஹீரோவுக்கு ஒரு பாட்டும் வருது, "முடிவில்லா மழையோடு விளையாடும் நம்ம கூட்டம்னு " ஒரு குத்து பாட்டு. ஹீரோவோட நடன திறமைகள அந்த பாட்டுல ஒரளவுக்கு காட்டி இருக்காங்க. அந்த பாட்டுக்கு அப்புறம் வர்ற கிளைமாக்ஸ் காட்சில அந்த பிரெண்டும் அவுங்க அண்ணனும் சண்ட போட்டு அண்ணன் தம்பிய குத்திர்றாரு. அப்ப அந்த எடத்துக்கு வந்து சேரும் நம்ம ஹீரோ படத்துல இருக்குற முக்கியமான ட்விஸ்ட அண்ணன்கிட்ட சொல்லி அவுங்க அண்ணனையும் தம்பியையும்   சேர்த்து வச்சிட்டு போயிறாரு (ஷாஜஹான் படத்துல ஹீரோ லவ்வர்ஸ சேர்த்து வைப்பாரே, அந்த மாதிரி இல்ல). அந்த காட்சில நம்ம ஹீரோ  நகைச்சுவைல மட்டும் இல்ல, குணசித்திரத்துலயும் தன்னால வெளுத்து வாங்க முடியும்னு நிருபிக்கிராரு. (அப்புறம் நா வெளிநடப்பு செஞ்சிடேங்க).

என்னடா இவன்? படத்துக்கு சம்பந்தமே இல்லாம என்னென்னமோ சொல்றான்னு பார்க்குறீங்களா? இல்லேங்க. இந்த படத்த நான் பார்க்க போனதே தல சந்தானதிற்காக. அவரு வர்ற காட்சிகள மட்டும் பார்த்தேன்.

ஏன்னா  முன்னாடி, நமக்கு கெடச்ச ரிப்போர்ட்படி  படம் சுமார்  ரகம். சூப்பரா வந்திருக்க வேண்டிய ஒரு படம் திரைக்கதை சொதப்பலால் சுமார் ரகம் ஆயிடிச்சு. ஜீவாவும் நந்தாவும் அவங்க அவங்க பங்க சிறப்பாவே செஞ்சிருந்தாலும், நம்ம தலைவர் வழக்கம் போலவே அவரால முடிஞ்சவரை படத்த தூக்கி நிறுத்த முயர்ச்சித்திருந்தாலும் திரைக்கதை சொதப்பலின் நிலவரம் ரொம்பவே சீரியஸ், அதாவது ICU ல வச்சி பாத்துக்கிட்டாலும் பொளக்கிறது  கஷ்டம். தலைவருக்காக இந்த படம் ஓடிச்சுன்னானும் அது கூட 'இட் இஸ் எ மிராக்கில்" வகையறாதான். இப்ப படத்தில் தலைவர் நடிப்பு பத்தி பிரபல விமர்சகர்களும், விமர்சக பிரபலங்களும் என்ன சொல்றாங்கன்னு பார்போம். 

டைட்டில் கார்ட இவங்க பேருதான் ஹீரோ - ஹீரோயின் அப்புடின்னு போட்டிருக்காம் 

அட்ராசக்க சி.பி 

"வந்தான் வென்றான்  - சந்தானம் பகிடி + தப்சியின் ஜகிடி"

தலைப்புலேயே அமர்களப்படுத்தறாரே, அதுவே சொல்லுது தலைவரோட பவர, இதுக்கு மேல என்னையா வேணும், தலைவர் ரசிகர்கள் எல்லாரும் ஒரு வாட்டி படம் பாக்கலாம். 

"படத்தில் சிக்சர் அடிப்பது சந்தானம் தான். கேப் கிடைக்கும் இடம் எல்லாம் கிடாதான்..."


தலைவர் நிச்சயமா புகுந்து விளையாடியிருக்கார். அப்புறம் என்ன காமெடி நிகழ்சிகளுக்கும், யுட்டுயூப் பிரியர்களுக்கும் செம விருந்து ரெடி.

"சி.பி கமெண்ட்: வந்தான் வென்றான் - நொந்தான் சென்றான் என்று சொல்ல வழியில்லாமல் சந்தானம் காப்பாற்றுகிறார்"


இதுக்கும் மேல உங்களுக்கு ஏதாச்சும் சொல்லனுமா? இப்ப சொல்லுங்க இந்த படத்தோட ஹீரோ யாரு?


கேபிள் ஷங்கர் 

"படத்தில் இருக்கும் ஒரே ஒரு ரிலாக்ஷேஷன் சந்தானம் தான் ஆனால் அவரும் எதோ ஓட்ட வைத்த காமெடியாய் அங்காங்கே கிச்சு கிச்சு மூட்டுகிறார் அவ்வளவே"  

ஒன்னும் தப்பா நினச்சுக்கதீங்கப்பா, திரைக்கதை அமைப்புல உள்ள சொதப்பலதான் அப்புடி சொல்றாரு. நாமெல்லாம் யாரு, சந்தானம் போஸ்டரையே மூணு மணி நேரம் பாக்குறவங்க, இந்த படத்துல நிச்சயம் தலைவர் நம்மள ஏமாத்த மாட்டாரு. 
 

செங்கோவி

"சந்தானம் சில நேரங்களில் சிரிக்கவைக்கிறார். பலநேரங்களில் மொக்கை தான். அவ்வப்போது வந்துவிழும் ஒன்லைனர் மட்டுமே ரசிக்க வைக்கிறது"


விடுங்க சார், இவரு இப்புடித்தான் சொல்லுவாரு, ஒன்லைனர் ரசிக்கவக்குதுங்குறாரே அது போதாதா? 

ஹீரோவும் வில்லனும் இவங்களாம், டைட்டில் கார்ட்ல 


லோஷன்
இதுதான் மாஸ்டர் பீஸ், இவரு  இந்தப்படம் பாத்துட்டு ஒரு தீவிர சந்தானம் ரசிகராகவே மாறிட்டாருன்னா பாத்துக்கேங்களேன். அவரே இம்புட்டு சிலாகிச்சு எழுதியிருக்கார்னா நம்ம தலைவர் நிச்சயம் நம்மள கைவிடல்ல. தைரியமா ஒரு சந்தானம் ரசிகனா தலைவரோட எந்த படத்துக்கும் போகலாம்...

சந்தானம் - கண்டேன் படம் போலவே இங்கேயும் இந்தக் குருவி தான் பனங்காயை என்ன, பனை மரத்தையே தாங்குகிறது. சிரிக்க வைப்பதுடன் படத்தில் திருப்பம் ஏற்படுத்தவும் பயன்படுகிறார்"


அட அட அட, தலைவர் தலைவர்தான்யா...


"சந்தானம் தான் படத்தின் ஹீரோ என்று சொன்னாலும் நல்லாவே இருக்கும்"


தலைவருக்கு உண்மையான அங்கீகாரம், லோஷன் சார் உங்களுக்கு ஒரு பெரிய நன்றி. தலைவர் வாழ்க, நாளைய முதல்வர் வாழ்க.... 


அப்புடீன்னா இவங்க ரெண்டுபேருமே டம்மி தானா?


அண்ணன் இந்த படத்துக்கு ஒரு வெர்டிக்ட் குடுக்கறாரு பாருங்க, அதயே நாங்களும் குடுக்கறோம்.

"  சந்தானத்தால் கொஞ்சம் தப்பிச்சுது"  



இவருதான் நிஜ வில்லன், அட படத்தோட டைரக்டர் ...
தலதளபதி ரசிகன்னு சொல்லிக்கறதுல நாங்க என்னைக்குமே பெரும படுறோம் சார். தலைவர் ரசிகர்கள்னா நிச்சயமா இந்த படத்த ஒரு தடவன்னாலும் தியேட்டர்ல பாக்கணும் சார். படத்துக்கு எவ்வளவு நெகடிவா விமர்சனம் வந்தாலும் சோர்ந்துடாதீங்க, தலைவர் ஒருவருக்காகவே இந்த படம் கல்லா கட்டணும். பாஸ் என்கிற பாஸ்கரன், சிறுத்தை ரேஞ்ஜ்ல சிக்சர் அடிக்க முடியாட்டியும் தலைவர் அடிக்கிற ஃபோர்க்காக ஒரு வாட்டி பார்கலாம்.

இன்ட்லி இணைப்பு
தமிழ் 10:

Thursday, September 1, 2011

மங்காத்தா: தல அடிச்ச 200m சிக்ஸர்!!



ஒரு காமெடியான உண்மை என்னன்னா, எந்த ஒரு நடிகருக்கும் 50வது 100வது படங்கள் ரொம்ப முக்கியம். அதுலயும் மாஸ் ஹீரோன்னா சொல்லவே வேணாம். ரஜினி, கமலுக்கே சறுக்குனது இங்கதான். அடுத்தடுத்த வருடங்களில் சூர்யா, ஆர்யா, பூரியான்னு எல்லாருக்கும் 50வது படம் வரும். அவுங்க எல்லாத்துக்கும் நம்ம தலையும் தளபதியும் சேர்ந்து கிளாஸ் எடுத்து இருக்காங்க. ஆமாங்க  ஒரு மாஸ் ஹீரோவின்  50வது படம் எப்புடி இருக்கனும், எப்புடி இருக்கவே கூடாது ரெண்டுக்கும் நம்ம தலையும் தளபதியுமே உதாரணங்கள் ஆகிட்டாங்க, முறையே. 



பர்ஸ்ட்ல தலக்கும் வெங்கட் பிரபுக்கும் ஒரு நன்றிய தெரிவிச்சிகிறேன். ஏன்னா, படத்துல ஒரு சீன்!. வைபவ், பிரேம்ஜி, மஹாத் அப்புறம் அந்த SI போலீஸ் நாலு பேரும் சேர்ந்து 500 கோடிய அமுக்க ப்ளான் பண்றாங்க. அப்ப அந்த விசயத்த எப்புடியோ தெரிஞ்சிகிட்ட தல அந்த எடத்துக்கு வர்றாரு, என்ன நடக்குதுன்னு கேக்குறாரு. ஒவ்வொருத்தரும் ஏதேதோ பொய் சொல்றாங்க. அப்ப தல கேக்குறாரு பாருங்க ஒரு கேள்வி , மரண மாஸ் கேள்வி. தியேட்டர்ல எல்லாரும் விசிலடிச்சு கைதட்டுனாங்க. அப்புடி என்ன கேள்வின்னா;
காமெடி பண்றதுக்கு நா என்னா சந்தானமா?
ன்னு அதாவது இன்னிக்கு டேட்ல காமெடின்னா சந்தானம்தான்னு  இவுங்களே ஒத்துகிட்டாங்க.அப்புறம் இன்னொரு சீன்ல மொக்க காமெடி பண்ற பிரேம்ஜிய சாம் அண்டர்சனுக்கு ஒப்பிடுறாங்க.இன்னொரு சீன், லட்சுமி ராய் தேடிவந்தது நா இல்ல அது சஞ்சய்  ராமசாமின்னு சொல்லி சூர்யாவையும் அஜித் கலாய்கிறாரு. படத்துல விஜயும் இருக்காரு. ஆமா பொதுவா தமிழ் சினிமால்ல எதாவது தியேட்டர் காட்சி இருந்தா ஒன்னு எம்.ஜி.ஆர் இல்ல சூப்பர் ஸ்டார் படம்தான் ஓடும. ஆனா இதுல வர்ற தியேட்டர் காட்சில காவலன் படத்தின் "மண்ணை காப்பான் " பாட்டு ஓடுது. இன்னொரு சீன்ல தண்ணி அடிச்சிட்டு ஆடும்போது எல்லாரும் எதோ ஒரு பாட்ட பாடிகிட்டு இருக்குறாங்க, திடீர்ன்னு தல "ராமன் ஆண்டாளும் ராவணன் ஆண்டாளும் எனக்கு ஒரு கவலை இல்ல" ன்னு படிக்கிறாரு, எல்லாரும் கேக்குறாங்க இப்ப  ஏன் இந்த பாட்ட படிச்சீங்கன்னு , அதுக்கு தல  " அது என்னமோ தெரியல மப்பாகும்போது இசைஞானி பாட்டுதான் கிக்கா இருக்கு"ன்னு சொல்றாரு. இன்னொரு சீன்ல அஜித் நா ஒரு பன்ச் டயலாக சொல்லவான்னு கேட்டுட்டு ஒரு டயலாக விடுறாரு ஆனா என்ன சொல்றாருன்னா " லைட்ட போட்டுட்டு வண்டி ஓட்டலாம் ஆனா லைட்டா போட்டுட்டு வண்டி ஒட்ட கூடாது, டைட்டா போட்டுட்டுத்தான் வண்டி ஓட்டனும்"  ன்னு ஒரு மொக்க பன்ச் டயலாக். ஆக மொத்ததுல சந்தானம், தமிழ்படம் சிவா ரேஞ்சுக்கு எறங்கி  அதகளம் பண்ணி இருக்காரு தல. 



என்னடா ஒரு ஆக்ஷன் படத்த போயி இவனுங்க காமெடி படம் ரேஞ்சுக்கு சொல்றாங்கன்னு நெனைக்கிறீங்களா? இல்லீங்க படத்துல அஜித்தும் ஆக்ஷன் கிங் அர்ஜுனும் இருக்காங்கன்னு உங்களுக்கு தெரியும், சோ ஆக்சன் சீகுவன்ஸ் நல்லா இருக்குன்னு சொல்றது சூரியனுக்கே டார்ச் அடிக்கிற மாதிரிங்க. அதுதான் எப்பவுமே அஜித்க்கு ஒரு வீக் பாயிண்டா இருக்குற காமெடிலயும், துள்ளல் கலந்த உற்சாகமான நடிப்புலையும்  இந்த வாட்டி வெங்கட் பிரபு புண்ணியத்துல பூந்து வெளயாடி இருக்காருன்னு சொல்றோம்.

இப்ப சும்மா இந்த படம் பற்றிய எங்கள் சில குறிப்புக்கள்:


  • தலையோட அம்பது பட கேரியர்ல இதுலதான் சும்மா அடிச்சி ஆடி இருக்காருன்னு சொல்லலாம். இது வரைக்கும் இப்புடி ஒரு பிரஷ் தலய நான் பார்த்ததே இல்ல. அக்ஷன், காமெடி, வில்லத்தனம் , (டுபாக்கூர்) ரொமான்ஸ், குள்ளநரித்தனம், நட்புன்னு எல்லா ஏரியாலயும் ஈஸியா பாஸ் மார்க் வாங்கிட்டாரு சொல்றத விட டிச்டின்க்ஷன்ல பர்ஸ்ட் கிளாஸ் எடுத்துட்டாருன்னே சொல்லலாம். 40 வயசு சஸ்பென்ட் ஆர்டர் வாங்குன போலீஸ்க்கு ஓரளவுக்கு பெப்பர் அண்ட் சால்ட் முடிதான் இருக்கும், லேசா தொப்பையும் இருக்கும். சோ இது எல்லாம் ஒரு குறையா சொல்லி விமர்சனம் எழுதுறவுங்கள நெனைச்சாதான் எங்களுக்கு பாவமா இருக்கு.
  • தலையோட ஒப்பிடும்போது அர்ஜூன்க்கு screen presence கொஞ்சம் கம்மிதான்னாலும், வர்ற ஒவ்வொரு சீன்லையும் இவரு தான் ஒரு ரியல் அக்சன் கிங்ன்னு நிருபிக்கிறாரு. க்ளைமாக்ஸ்ல நீ பெரியனா, நா பெரியவனாங்கிற கேள்விக்கு செமையா ஒரு பதில் சொல்லி இருக்காரு  வெங்கட் பிரபு. 
  • அப்புறம் திரிஷா: இந்த படத்துல அஜித்துக்கு ஜோடி நீங்கதான், ஆனா காட்சிகளும், முக்கியத்துவமும் கம்மின்னு சொல்லியே புக் பண்ணி இருப்பாரு போல வெங்கட் பிரபு. திரிஷாக்கு பெருசா ஒன்னும் இல்ல.
  • வைபவ்,பிரேம்ஜி, மஹாத் அப்புறம் அந்த SI தம்பி, அரவிந்த் ஆகாஷ் .எல்லாருக்கும் அவுங்கவுங்களுக்கான முக்கியத்துவம் இருக்கு படத்துல. வைபவ், SI தம்பி, அரவிந்த் ஆகாஷ் போன்றோர் ஆக்சன்லயும் கலக்கி இருக்காங்க. பிரேம்ஜி கொஞ்சம் மொக்கதனமான காமெடின்னாலும் ஓரளவுக்கு சிரிக்க வைக்கிறாரு. அதுவும் அந்த எந்திரன் spoof கலக்கலா இருந்துச்சு, தியேட்டரே அதிருது.

  • அடுத்ததா சொல்ல வேண்டியது நம்ம லக்ஷ்மி ராய். அக்காக்குதான் படத்துல நிறைய இருக்கு.கொஞ்சம் வில்லத்தனமான ரோல். மொத பாட்டு, கடைசி பாட்டு ரெண்டுமே இவுங்களுக்குதான். அவுங்களால முடிஞ்ச அளவுக்கு நல்லாவே காட்டி இருக்காங்க. 
  •  அஞ்சலி-ஆண்ட்ரியா ரெண்டு பேருமே சும்மா பேருக்குதான். ரெண்டு பேருக்கும் ஒவ்வொரு பாட்டுன்னு சொல்லி நடிக்க வர சொல்லிட்டு ஒரே பாட்ட  ரெண்டு பேருக்கும் பிரிச்சு குடுத்து சமாளிச்சிட்டாரு வெங்கட். ஆனா அஞ்சலிதான் அதுலயும் லீட்ல வர்றாங்க.
  • அப்புறம் ஜெயபிரகாஷ் ஒரு அண்டர்பிளே ரோல்ல வர்றாரு. இன்னொரு ரொம்ப முக்கியமான ரோல்ல நம்ம பாஸ் என்கிறபாஸ்கரன் சரவணா அண்ணன் (அதாங்க பஞ்சு சுப்பு), கிட்டத்தட்ட படத்துல நடிச்ச ஆண் கேரக்டர்களிலேயே இவரு மட்டும்தான் நல்லவன்(ஐயய்யய்யூ முடிச்ச அவுத்துட்டோமா?)
  • யுவன் மியூசிக் சுமார்தான். எதிர்பார்த்த அளவுக்கு இல்லன்னாலும் ஸ்பீட் பீட் பாட்டுகளில் தலயின் வெக்கம் கலந்த கூச்சத்துடனான ஆட்டம் ரசிக்க வைக்குது. வாடா பின்லேடா பாட்டுலயும் தெய்வதிருமகள் "விழிகளில்"பாட்ட விட கொஞ்சம் அசத்தலான CG அண்ட் ஒளிப்பதிவு. ஒளிபதிவுக்கு நம்ம சரவணனுக்கு தனியா ஒரு சல்யூட். இவரும் நம்ம பார்ட்டிதான்(பாஸ் என்கிற பாஸ்கரன்).
  • அடுத்து வெங்கட் பிரபு. இவருக்கு இது ஒரு முக்கியமான மைல்கல்லுன்னே சொல்லலாம். அவரோட திரைகதை உத்திகள் சும்மா அசரடிக்குது. எல்லாருமே சொல்ற மாதிரி பர்ஸ்ட் ஹாப்f கொஞ்சம் தொய்வுதான். ஆனா எல்லா கேரக்டருமே முக்கியமான கேரக்டர்ஸ் என்பதால் அந்த அறிமுக படுத்தல் படலங்களுக்கு அவ்வளவு நேரம் தேவைதான்னு படுத்து.அப்புறம் செகண்ட் ஹாப்f  லகொஞ்சம் கொஞ்சமா வேகம் எடுத்து கிளைமாக்ஸ்ல அவரு ஆடுற ஆட்டம் உங்காத்தா எங்காத்தா ஆட்டமில்ல, மங்காத்தாடான்னு ப்ரூவ் பண்ணுது. ஆனா இவருகிட்ட இருக்குற ஒரே கெட்ட பழக்கம் அவரு தம்பி பிரேம்ஜிக்கு கொஞ்சம் அதிகமாகவே எடம் குடுக்குராறு. அதையும் கம்மி பண்ணி இருந்தா இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பா இருந்துருக்கும்( இதுக்கு மேலயுமா? விறுவிறுப்புன்னு கேட்காதீங்க,சும்மானாச்சும் எல்லாரும் சொல்றாங்களேன்னு சொன்னேன்.)
ஆனா இவ்வளவு விஷயங்கள் இருந்தாலும் இது ஒரு 200%  தல படம். வெங்கட் பிரபுவின் செமையான கோச்சிங்கில் தல அடித்த 200m சிக்ஸர்தான் மங்காத்தா.



அசல்  படத்துல அஜித்த எல்லாருமே தல தலன்னு சொல்லும்போது கடுப்பா இருக்கும். ஆனா இந்த படத்துல "தல"ங்கிற வார்த்த டைமிங்கா இருக்கு. தியேட்டர்ல அட்டகாசமான வரவேற்ப்பு. அப்புறம் நம்ம தலயே அர்ஜூன "என்னா சொல்றான்ஆக்சன் கிங்கு"ன்னு பன்ச்சா கேக்கும்ம்போது தியேட்டர் ரெஸ்பான்ஸ் செம. இது எல்லாம் இந்த எடத்துல இப்புடி ரெஸ்பான்ஸ் வரும்னு பிளான் பண்ணி வைக்கப்பட்ட காட்சி/வசன அமைப்புக்கள்.

இந்த படம் முடிஞ்சாப்புறம், எழுத்தோட்டம் வரும்போது ஷூட்டிங் கலாட்டாகளை தொகுத்து போட்டு இருப்பாங்க. அத மிஸ் பண்ணிராதீங்க. முழு படத்த விட அஜித் செமத்தியா கலக்கி இருக்காரு. அதுலயும் அந்த ஹைதராபாத் போலீஸ் அகெடமில மார்ச்ல நின்னு ஒரு ஆட்டம் போடுவாரு பாருங்க., அம்மோ!!!


மங்காத்தா: மரண மாஸ். கண்டிப்பா 500 கோடிய அடிச்சிரும், வசூல்ல.

Saturday, August 27, 2011

Avatar - குருவி படத்தின் தழுவலா? : பிரிச்சு மேயுறோம்


டிஸ்கி 1:  இந்த விஜய் பய (இது டைரக்டர் விஜய்) ஐ ஆம் சாம் படத்த அட்ட காப்பி அடிச்சாலும் அடிச்சாரு, கொஞ்ச நாளாவே இந்த பதிவுலக நண்பர்கள் தமிழ் சினிமா காப்பி பத்தி  நெறயவே எழுதுறாங்க. இந்த நேரத்துலதான் நமக்கு இப்பிடி ஒரு மேட்டர் மாட்டிச்சு. இது திருட்டு கலாசாரத்துக்கு எதிரான காத்திரமான பதிவு இல்ல. நம்ம பாணில களாய் கம் மொக்க பதிவு. "இது யார் மனதையும் காயப்படுத்துவதற்காக அல்ல".



2009 ம் ஆண்டு வெளியாகி உலகம் முழுக்க சக்க போடு போட்ட அவதார் படத்த பத்தி நான் சொல்லி உங்களுக்கு தெரிய தேவையில்ல. அதுக்கும் மேல வேணும்னா நான் அந்த படத்தோட கதை சுருக்கத்த நம்ம பாணியில சொல்லிடறேன். சுரங்கம் அகழ்வு தொழில் செய்யும் ஒரு கம்பெனி (கோச்சா அண்ட் கோ, ரெண்டுபேரு மட்டுமே இருந்து ஒரு கிரகத்தையே ஆட்ராங்கன்னு சொன்னா மொக்கயாகிடுங்குறதால  "கம்பெனி") விலையுயர்ந்த ஒரு கனிமம் (வைரக்கல்லுக்காக கிரகம் தாண்டி எல்லாம் போகமுடியாது, அதனால இது வேற "கனிமம்") இருக்கறத கண்டுபிடிச்சி வேற்று கிரகத்துக்கு போறாங்க (ஹை பட்ஜெட்ல படம் எடுக்கனும்னா கடப்பாவுக்கு போறதவிட வேற்றுக்கிரகம்தான் சரியா வரும்). அங்க இருக்கற மக்களை வேற இடத்துக்கு நகர வச்சாதான் அவங்களால அந்த கனிமத்த எடுக்க முடியும் (அங்க இருக்கறவங்கள கொத்தடிமைகளா பிடிக்க வேண்டிய அவசியம் இல்ல, ஏன்னா இது ஹை பட்ஜெட் படம், அவங்களுக்கிட்டயே நெறைய நவீன ஆயுதம் முதல் கருவிகள் வரை இருக்கு, ஆனாலும் பிரச்சின வேணுமில்ல அதுக்காகத்தான் நகர்த்துறது).  அப்பத்தான் நம்ம ஹீரோ கடவுள் மாதிரி வந்து கனரக ஆயுதங்கள அம்பு வில் கொண்டு (ஹாலிவூட்ல வெறும் கையால அடிச்சா ஏத்துக்க மாட்டாங்க அதனாலதான் அம்பு வில்லு) எதிர்த்து மக்களை காப்பாத்துவாரு. கொள்ளைகார கும்பல பூரா பேரையும் கிரகத்த விட்டே வெளியேத்துவாறு. இதுதான் கத சுருக்கம். இத எங்கயோ பார்த்த மாதிரி இருக்கா? 

அதுதாங்க நம்ம இளையதளபதி நடிப்பில், உதயநிதி ஸ்டாலின்  தயாரிப்பில், தரணி இயக்கத்தில் 2008 லையே வெளிவந்த குருவி படம். இத எப்பிடி லவட்டி இருக்காங்க பாருங்க. சுடச்சுட காப்பிங்குறது இதுதான். இந்த லட்சணத்துல இந்த படத்துக்காக பத்துவருஷம் தவமிருந்தேன்னு வேற பீலா. (யாருக்கிட்ட). கதையத்தான் சுட்டங்கன்னு பாத்தா கதைய மட்டுமில்ல காட்சிகள அப்பிடியே சுட்டிருக்காங்க. உதாரணமா நம்ம இளையதளபதி ஒரு பில்டிங் மேல இருந்து ஓடுற ட்ரயினுக்கு பாய்வாரே ஒரு ஆயிரம் அடிப் பாய்ச்சல், அத மட்டும் ரெண்டு எடத்துல வச்சிருக்காங்க, எங்கன்னு யோசிக்கறீங்களா? அதுதாங்க ஜாக் சாலி நூறடி ஒசரத்துல இருந்து நிலத்துக்கு குதிபாரே, பயிற்சிக்காக ஒரு தடவையும்

சண்டையில அடிபட்டு ஒரு தடவையும் (இதுல கொடும என்னனா நம்ம தளபதி சும்மாவே பாய்வாரு, ஆனா அத  நியாயப்படுத்துறேன் பேர்வழின்னு  நாவியோட எலும்பு பைபர், விழுந்தாலும் நொறுங்காது அது இதுன்னு ஜேம்ஸ் கேமரூன் கத விட்டுருப்பாரு). அப்புறம் இன்னொரு காட்சி, நம்ம தளபதி வில்லன் வீட்டுக்கு போறப்போ அங்க மாட்டிகிறுவாரு, அப்ப தேனிக்களோட எதிர்பாராத உதவி கெடச்சி தப்பிப்பாறு, அதே காட்சியதான் சண்டையில அடிபட்டு பின்வாங்குறப்போ வன விலங்குகளோட உதவி கிடைப்பது  மாதிரி மாத்தி வச்சிருப்பாங்க அவதார்ல. இப்படி கதையையும் சுட்டு காட்சியையும் சுட்டு படம் எடுக்கற இவன்(ஜேம்ஸ் கேமரூன்) எல்லாம் ஒரு மனுஷனா? இத தட்டி கேக்கவே யாரும் இல்லையா?


இனி இந்த ரெண்டு படத்துக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைய ஒரு அலசு அலசுவோம் 

குருவி படத்துல பிரதானமான பிரச்சினை வைரக்கல்ல அகழ்வு செஞ்சா அந்த எடத்துல நிலச்சரிவு ஏற்படும், இயற்கை சமநிலை பாதிக்கப்ப்படும்னுதான் மணிவண்ணனும் இந்திய அரசும் வைரக்கல் அகழ்வ எதிர்பாங்க, அதே பிரச்சினைதான் இங்கயும், கனிமத்த அகழ்றதால இயற்கை சமநிலை பாதிக்கப்படும்னுதான் போராட்டமே (இதுக்கு ஈவா, மரங்களுக்கிடயான நெட்வொர்கிங் அது இதுன்னு பந்தா வேறு. அப்புறமா மரம் செடி கொடில இருந்து மிருகங்கள் வரைக்கும் ஒரு லிங்காம், குருவியோட ஆரம்ப காட்சில நம்ம தளபதிக்கும் அவரு காருக்கும் இல்லாத லிங்கா?).

கதாபாத்திரங்களின் ஒற்றுமை
அப்புடியே இருக்கும் கதாபாத்திரங்கள்
  • குருவி/வேலு   - ஜாக் சாலி (அதே ரெண்டு ஷேடு - இன்னொருத்தர் பேருல கடப்பாக்குள்ள போற ஒரு பாத்திரம், குருவியா ஊர்சுத்துற ஒரு பாத்திரம் - இததான் ஆர்மியில இருந்தவர்னு மனுஷனாவும், அவதார இயங்குற நாவின்னும் வச்சிருக்காங்க)
  • கோச்சா -  பாகர் செல்ப்பிட்ஜ் (கார்பரேட் அதிகாரி, இவருதான் மெயின் வில்லன், இவரு சொல்றபடிதான் இந்த கூட்டமே இயங்குது, நம்ம சுமன், இது இந்தியாவுலயும் கெடக்குது அப்பிடின்னு வைரக்கல்ல வச்சி அடிக்கற அதே லெக்சர இவரு அந்த கணிமத்தோட ஒரு துண்ட கையில வச்சிக்கிட்டு அடிப்பாரு)
  • கொண்டா ரெட்டி/ கடப்பா ராஜா - கேர்னல் மில்ஸ் (பாதுகாப்பு உயர் அதிகாரி, எதுக்கு ரெண்டு வேற வேற பாதிரமுன்னு ரெண்டையும் ஒன்னாவே மாத்திட்டாங்க, இவங்கள கொல்றதுதான் மிக முக்கியமான போர்சன் படத்துலையே)
  • இளவரசு - த்ருடி (அதாங்க அந்த பொம்பள பைலட், ஒரே ஆம்புளங்களா இருக்குன்னு ஒரு பெண் கதாபாத்திரம், ரெண்டுபேருமே வில்லன்களுக்கு நெருங்கிய எடத்துல கையாள்களாக இருந்து ஹீரோவுக்கு உதவுறவங்க, ஆனா கடசில வில்லன்களுக்கு தெரியவந்து ரெண்டுபெரையுமே கொன்னுடுவாங்க)
சில மாற்றங்களுடன் இருக்கற கதாபாத்திரங்கள்
  • த்ரிஷா - நெய்த்திரி (வில்லன் தங்கச்சி ஹீரோயின் இங்க, மணிவண்ணன் கேரக்டர் பண்ணுபவரோட பொண்ணு ஹீரோயின் அங்க, நெய்த்திரி பாதி த்ரிஷா பாதி குருவி கலந்த கதாபாத்திரம், நம்ம தளபதி Zoro ஆக்ட் குடுத்து அங்கயும் இங்கயும் தாவுரத இந்த நாவி பொண்ணு பண்ணுது, அத பாத்து த்ரிஷா காதல் வயப்படுறத இதுல ஹீரோ பண்ணுறாரு, அதுதான் வித்தியாசம். அப்புறமா சென்னையில நம்ம தளபதி த்ரிஷாவ காப்பாத்துறது கம் வைரத்த எடுக்க முயர்ச்சிக்கிற சீனைத்தான் இந்த பொண்ணு வன விலங்குகள் கிட்ட இருந்து ஹீரோவ காப்பாத்துறது, ஹீரோகிட்ட இருந்து நாவிக்கள் போர் தந்திரத்தை  கத்துக்க முயர்ச்சிக்கிறதுன்னு வச்சிருக்காங்க)
  • விவேக் - நார்ம் ச்பெல்மேன் (இது காமெடிக்கு பயன்படல்லன்னாலும் விவேக்கோட பாத்திரத்ததான் கொஞ்சம் டெவலப் பண்ணி ஒரு ஆராய்ச்சியாளரா வச்சிருக்காங்க. இவரைத்தான் குடும்பத்த பாத்துகன்னு ஜாக் விட்டுட்டு போவாரு சாரி உள்ள இருந்து உளவுபார்க்கன்னு)
  • சரண்யா - Dr கிரேஸ் (சரண்யா காரக்டர் படு  மொக்கங்குரதால விஞ்ஞானி ஆக்கி டெவலாப் பண்ணியிருக்கராம் ஜேம்ஸ் கேமரூன். கெட்டவங்க கூட்டத்துல இருந்து ஹீரோக்கும் ஹீரோயினுக்கும் உதவி செய்யற ஒரு பொம்பள, குருவியில கணவனையே எதிர்த்து அப்பிடிங்குரத இங்க ஆராச்சிக்காக பணம் குடுக்கற கம்பனியையே எதிர்த்து அப்பிடின்னு திரிச்சிருக்காங்க)
  • கொண்டா ரெட்டி தம்பி - நாவி போராளி (இவரு முன்பாதில கொண்டா ரெட்டிதம்பி மாதிரி வில்லத்தனம் பண்ணுவாரு, த்ரிஷா கூட நடந்த நிச்சயதார்த்தம் கூட பங்கம் இல்லாம அப்பிடியே வச்சிருப்பாங்க, பின் பாதில அப்பிடியே ரிவேர்ஸ் அடிச்சு கடப்பா நண்பர்கள் கதாபாத்திரமா மாறியிருப்பாரு, இவரோட இன்னும் ரெண்டு மூணு கொசுறு பாத்திரங்கள் வேற) 

படத்தைதான் சுட்டாங்கன்ன போஸ்டரையும் விட்டு வாக்கல்ல, நாம மேல போட்டிருக்கற ரெண்டு ஒப்பீட்டு படங்களையும் நல்லா குறுகுறுன்னு உத்துப்பாருங்க, உங்களுக்கே புரியும். முதல் படத்துல நம்ம தளபதி சேத்துல இருந்து எந்திரிச்சு வாரதால அவரு முகத்துல ஓடுற கோடுகளகூட  அப்பிடியே வச்சிருக்காங்க (இது நாவிக்களோட ஒடம்புல இருக்கறதாம் அப்புடின்னு ஒரு வெளக்கம் வேற). அப்புறம் அந்த பாயுற படங்கள். மூணாவது படத்துல ஹீரோ ஹீரோயின்ன கொஞ்சம் முன்னுக்குப் பின்னுக்குன்னு ஆர்டர மாத்தி தப்பிச்சிருக்காங்க. அதுல கூட த்ரிஷா குடுக்கற லுக்கையும் கழுத்துக்கு முன்னால முடிய போட்டிருக்கறதையும் கூட விட்டு வக்கல.

குருவி படத்த சுடுறதுன்னு முடிவு பண்ணினதுக்கப்புறம் கதைய கொஞ்சம் டெவலப் பண்ணறதா நெனச்சி இவங்க இந்த கதைக்கு கொஞ்சம்  கிட்டவா வாற இன்னொரு தமிழ் படத்தோட (இது ஒரு மலையாளப்பட ரீமேக்) கதைய அப்பட்டாமா தழுவியும்  இருக்காங்கன்னு சில பதிவுகள் சொல்லுது. (1 2 )

இதுக்கும் மேல வேணும்னா நீங்களே ரெண்டு படத்தையும் எடுத்து பாத்துட்டு ஒரு முடிவுக்கு வாங்க. என்னதான் இண்டேளிஜண்டா பண்ண முயற்ச்சித்தாலும் எங்க கண்ணுக்கு என்னவோ குருவி படத்தோட அட்ட காபிதான் அவதார்னு படுது

அவதார் படம் எது எதோட தாக்கம்னு இயக்குனர் ஜேம்ஸ் கமரூன் இப்படிசொல்லியிருக்காரு "It owes a lot to good, old-fashioned, adolescent adventure storytelling like Rudyard Kipling's The Man Who Would Be King, Lawrence Of Arabia and John Carter Of Mars. There are also a lot of very recognizable archetypes in the story: the American frontier and the conflict between a technical, military civilization and a nature-aligned indigenous population" இதுல குருவி படத்தோட பெயரே இல்லைங்கிறது மிகவும் கவலை தருவது.

இந்த திருட்ட பத்தி  நாங்க உதயநிதி சாருக்கு tweet பண்ணி இருக்கோம். அவரு இத கண்டுக்கலனாலும் இந்தமாதிரி திருட்டுக்கள் ஒழியும்வரை இந்த முயற்சி தொடரும்.


டிஸ்கி 2 : ஒருவேள கிறிஸ்தோபர் நோலன் சொன்னதுபோல ஜேம்ஸ் கமரூன் கனவுல நம்ம ஆளுங்க புகுந்து அவதார் கதைய திருடினாலும் திருடியிருப்பாங்க (எதோ ஒரு வலைப்பூவில் முருகதாஸ் பற்றி இவ்வாறு படித்ததாக ஞாபகம் - நான் திருடலப்பா)

டிஸ்கி 3 : அவதார் படம் 1995 ல் வெளியான Pocahontas என்கிற காட்டூன் படத்தின் அட்ட காப்பின்னு fail blog கூறுகிறது.  இத வச்சிக்கிட்டு குருவி படம் அந்த கார்டூன் படத்தோட காபின்னு நம்ம பதிவுலக நண்பர்கள் சத்தியம் பண்ணி சூடம் ஏத்தினாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை. (வியட்நாம் காலனி தப்பிச்சுது, ஏன்னா இது 1992 வந்தது)

Real Santhanam Fanz குறிப்பு: இத படிச்சிட்டு இந்த திருட்டு கலாசாரத்துக்கு நாங்க ஆதரவாளர்கள் என்ற முடிவுக்கு வர வேண்டாம். எமது வலைப்பூவில் திருட்டுக்கு எதிரான போராட்டம் ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டது. விரைவில் இது பற்றிய ஒரு முழு நீள பதிவோடு உத்தியோகபூர்வ(???) யுத்தம் ஆரம்பிக்கும். வரவிருக்கும் முக்கிய படங்கள் மூணும் திருடப்பட்டவையாக இருக்கலாம் என்ற அச்சம் பதிவுலக நண்பர்கள் மத்தியில் இருக்கிறது, எதிர்கொள்ள நாங்களும் தயாராகிக்கிறோம்.

உங்கள் ஓட்டும் கமெண்டும்தான் எங்களுக்கான உற்சாக டானிக், so please VOTE&COMMENT.